13/03/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் *2026 நோன்பு பெருநாள் தர்மமான ஃபித்ராவை விரைந்து வழங்கிடுங்கள்!*
*
நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
(அபூதாவூத் 1371)
இந்த அடிப்படையில் கடந்த பல வருடங்களாக நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஹபூப்பாளையம் கிளை சார்பாக ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மத்திற்கான பொருளாதாரங்களை திரட்டி உரிய முறையில் சம்பந்தப்பட்ட ஏழை மக்களுக்கு கொடுத்து வருகிறோம்.
முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்குரிய கொண்டாட்ட நாளான பெருநாள் தினத்தன்று யாரும் உணவின்றி சிரமப்படக்கூடாது என்பதற்காக இஸ்லாமிய மார்க்கம் நமக்கு வழிகாட்டுகிறது.
பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஃபித்ராவை) நிர்ணயித்தார்கள்.
நூல்: புகாரி 1503
மேற்கண்ட நபிமொழியின் படி குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபக்கும் தலா இரண்டை கிலோ தரமான அரிசி விலையை கணக்கிட்டு ஃபித்ராவை வழங்க வேண்டும்.
இந்த ஆண்டிற்கான *ஃபித்ரா தொகை நபர் ஒருவருக்கு ₹150/-* என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
(புகாரி 1503)
எனவே, குடும்பத்தின் பொறுப்பாளர்கள் தங்கள் இல்லங்களில் அன்றைய தினம் பிறக்கின்ற குழத்தையையும் கணக்கிட்டு கட்டாயமாக்கப்பட்ட ஃபித்ரா தொகையை விரைந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
*தொடர்புக்கு
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
மஹபூப் பாளையம் கிளை
மதுரை.
99436 70199
GPay