03/11/2025
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலைய வளாகத்தினுள் உணர்வுகள் குழு சார்பாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
சென்ற மாதம் பழைய பேருந்து நிலையத்தில் உருவாக்கப்பட்ட மூங்கில் வனத்தை தொடர்ந்து, புறநகர் பேருந்து நிலைய வளாகத்தினுள் சமூக காடு உருவாக்க திட்டமிடப்பட்டது. பேருந்து நிலைய மத்தியில் முன்பே இருக்கும் பூங்கா அமைப்பு சில பயணிகளுக்கு சிறுநீர் கழிக்க வசதியாகவும், சில பயணிகளுக்கு மரங்களின் நிழலில் இளைப்பாறும் இடமாகவும் உள்ளது.
இந்த சுகாதார சீர்கேடு தடுக்கவும், குருங்காடு உருவாக்கவும் முதற்படியாக நான்கில் மூன்று சதுக்கங்களில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
ஒரு சதுக்கம் அடர் வனமாகவும்,
இரண்டாவது சதுக்கம் பூக்கள் நிறைந்த கவிகைக்காகவும்,
மூன்றாவது சதுக்கம் அறிய வகை மரங்களுக்கும்,
நான்காவது சதுக்கம் மூங்கில் வனத்திற்கு என பிரித்துள்ளோம். தொடர்ந்து மரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இவை அனைத்தும் மரங்கள் ஆகும் வரை பராமரிப்பு பொறுப்பு எங்களுடையது. பசுமையான கிருஷ்ணகிரி நோக்கிய பயணத்தில் இந்த சிறுபகுதி, நிச்சயம் பெரும் பங்களிக்கும். தற்காலிகமாக கால்நடையிடம் இருந்து பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் உறுதியான வேலி அமைக்க முயற்சிக்கப்படும்.
இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கி ஒத்துழைப்பு வழங்கிய கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலர்களுக்கும், தொடர்ந்து எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தரும் நல்லுள்ளங்களும், உணர்வுகள் குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது..
பயணம் தொடரும்.
- உணர்வுகள்