Unarvugal

Unarvugal Unarvugal is a NGO founded by youngsters of Krishnagiri.

This is formed to benefit the people and Students of Krishnagiri District, TN by providing educational and environmental awareness and make the Krishnagiri a better place to live.

கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலைய வளாகத்தினுள் உணர்வுகள் குழு சார்பாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. சென்ற மாதம் பழைய பேர...
03/11/2025

கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலைய வளாகத்தினுள் உணர்வுகள் குழு சார்பாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

சென்ற மாதம் பழைய பேருந்து நிலையத்தில் உருவாக்கப்பட்ட மூங்கில் வனத்தை தொடர்ந்து, புறநகர் பேருந்து நிலைய வளாகத்தினுள் சமூக காடு உருவாக்க திட்டமிடப்பட்டது. பேருந்து நிலைய மத்தியில் முன்பே இருக்கும் பூங்கா அமைப்பு சில பயணிகளுக்கு சிறுநீர் கழிக்க வசதியாகவும், சில பயணிகளுக்கு மரங்களின் நிழலில் இளைப்பாறும் இடமாகவும் உள்ளது.

இந்த சுகாதார சீர்கேடு தடுக்கவும், குருங்காடு உருவாக்கவும் முதற்படியாக நான்கில் மூன்று சதுக்கங்களில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
ஒரு சதுக்கம் அடர் வனமாகவும்,
இரண்டாவது சதுக்கம் பூக்கள் நிறைந்த கவிகைக்காகவும்,
மூன்றாவது சதுக்கம் அறிய வகை மரங்களுக்கும்,
நான்காவது சதுக்கம் மூங்கில் வனத்திற்கு என பிரித்துள்ளோம். தொடர்ந்து மரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இவை அனைத்தும் மரங்கள் ஆகும் வரை பராமரிப்பு பொறுப்பு எங்களுடையது. பசுமையான கிருஷ்ணகிரி நோக்கிய பயணத்தில் இந்த சிறுபகுதி, நிச்சயம் பெரும் பங்களிக்கும். தற்காலிகமாக கால்நடையிடம் இருந்து பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் உறுதியான வேலி அமைக்க முயற்சிக்கப்படும்.

இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கி ஒத்துழைப்பு வழங்கிய கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலர்களுக்கும், தொடர்ந்து எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தரும் நல்லுள்ளங்களும், உணர்வுகள் குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது..

பயணம் தொடரும்.
- உணர்வுகள்

கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா, கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைந்து நடைபெற்றது. கிருஷ்ணகிரி...
28/09/2025

கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா, கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைந்து நடைபெற்றது.

கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்தில், அறிவுசார் மையத்தின் பின்புறம் உள்ள பகுதி, பல நாட்களாக திறந்தவெளி மலம் கழித்தல், நெகிழி மற்றும் இதர குப்பைகள் கொட்டி சுகாதாரமற்ற இடமாக இருந்து வந்தது.

அந்த இடத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, சில திட்டங்கள் வகுத்து, இறுதியில் மூங்கில் வனம் அமைக்க இறுதிசெய்யப்பட்டது.

அதன்படி , இரும்பு வேலி அமைத்து அதனுள்ளே மூங்கில் குருத்துகளும், சுற்றுச்சுவர் ஓரமாக நாவல் மரங்களும் நடவு செய்யப்பட்டது. இவை நன்கு வளர்ந்ததும், கார்பன் சேர்த்து வைக்கக்கூடிய சிறந்த குறு வனமாக இருக்கும். நாங்கள் பெரிதும் நேசிக்கும் எங்கள் ஊருக்கு இது ஒரு சிறு அர்ப்பணிப்பு.

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய கிருஷ்ணகிரி நகராட்சி, கிருஷ்ணகிரி வனச்சரகம் மற்றும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் உணர்வுகளின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

- உணர்வுகள்

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் மரம் வளர்ப்பு குறித்த ஆய்வு. கிருஷ்ணகிரி நகர்ப் பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கை...
01/06/2025

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் மரம் வளர்ப்பு குறித்த ஆய்வு.

கிருஷ்ணகிரி நகர்ப் பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கை குறைவே. மேலும் சமீபத்தில் அடித்த பலத்த காற்றில் பல மரங்கள் வேருடன் சாய்ந்தது.

மீண்டும் நம் நகரை பசுமையாக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சில இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து கொடுத்தால் போதும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என மக்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

இன்று பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஆய்வு செய்யப்பட்டு மரக்கன்றுகள் நட திட்டமிடப்படுகிறது.

இதேபோல் தங்கள் பகுதியில் இடம் இருந்தால், தெரிவிக்கவும்.

நன்றி

உணர்வுகள்.

30/05/2025

இவ்வளவு அழகான மலையின் அடிவாரத்தில் ஒரு அமைதியான ஏரி. ஒரு நிமிடம் நின்று ரசிக்கக்கூட யாராலும் முடிவதில்லை. கழிப்பிடமாகவும், கழிவுகள் கொட்டவும் தானா இந்த சின்னேரி?
நமக்கு இந்த ஏரி வேண்டாமா இல்லை நாம் அதற்கு தகுதியானவர்கள் இல்லையா?
ஏரி நிரம்பியிருந்தும் நம்மால் அதை கொண்டாட முடிவதில்லை

இன்று உலக தண்ணீர் தினம்.ஒரு நாளில் குறைந்தது 2-3 லிட்டர் நீர் பருக வேண்டும். சராசரியாக ஒரு நாளில் 100 லிட்டர் நீர் நேரிட...
22/03/2025

இன்று உலக தண்ணீர் தினம்.

ஒரு நாளில் குறைந்தது 2-3 லிட்டர் நீர் பருக வேண்டும். சராசரியாக ஒரு நாளில் 100 லிட்டர் நீர் நேரிடையாக உபயோகப்படுத்திக் கொள்கிறோம்.

அந்த தண்ணீர் பற்றி நமக்குள்ள அறிவென்ன?
அந்த தண்ணீர் நன்னீர் தானா?
தாகம் தீர்க்க மட்டும் தான் அந்த நீரா?
வேறு என்ன கனிமங்கள் அதில் உள்ளன?
அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

குறிப்பாக நம் கிருஷ்ணகிரி மாவட்டம் புளோரைடு பாதிப்பு உள்ள மாவட்டம்.
பற்களில் கரைபடியச் செய்யும், எலும்பு கடினமாகி முடங்கச் செய்யும். சிறுநீரகம், மூளை, தைராய்டு, கல்லீரல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

R.O பயன்பாட்டினால், உடலுக்கு சேர வேண்டிய கனிமங்கள் கிடைக்காமலே போகின்றன. அப்போ என்ன தான் செய்வது?

சமீபத்தில் சென்னையை சேர்ந்த Watsan Envirotech pvt ltd, இயற்கை முறையில் வடிகட்டிகள் தயாரிப்பதாகவும், புளோரைடு பாதிப்புகளை கட்டுக்குள் வைக்கும் என்றும் தெரிவித்ததோடு, நமது மாவட்ட பள்ளிகளுக்கு உதவ, 20 வடிகட்டிகள் வழங்கியது. அந்த 20 வடிகட்டிகள், அரசு தொடக்க பள்ளிகளுக்கு சேர உணர்வுகள் குழுவை தொடர்பு கொண்டது. முதற்கட்டமாக 20 பள்ளிகளை கண்டறிந்து இந்த வடிகட்டிகள் வழங்கப்பட்டது.

இதற்கு மின்சாரம் தேவையில்லை. நீர் விரயமும் இல்லை. பராமரிப்பும் குறைவு.

நிச்சயம் Watsan குழுமத்தின் இந்த முயற்சி, புளோரைடு பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்.

இன்று 20 பள்ளிகளுக்கும் இந்த இயற்கை வடிகட்டிகள் கொண்டு சேர்த்துவிட்டோம்.

20 பள்ளிகளோடு இருந்துவிடாமல், புளோரைடு பாதிப்பு உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த வடிகட்டிகள் சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.. வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வளர வேண்டும்.

- உணர்வுகள்

மகளிர் தின கொண்டாட்டம். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி. கடந்த மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, உணர்வுகள் குழு...
10/03/2025

மகளிர் தின கொண்டாட்டம். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

கடந்த மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, உணர்வுகள் குழுவுடன் கிருஷ்ணகிரியை சேர்ந்த மகளிர் குழு, கட்டிகானபள்ளி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மைதானத்தில் மரக் கன்றுகள் நடவு செய்தனர்.

இந்த இடம் இதற்கு முன்பு உணர்வுகள் சார்பில் 2020இல் சுத்தம் செய்யப்பட்டு விளையாட்டு மைதானம் ஆனது. தொடர்ந்து பெண்கள் நடை பெயர்ச்சி மேற்கொள்வதும், சிறுவர்கள் விளையாடுவது என முழுமையாக பயன்பாட்டில் உள்ள இந்த மைதானத்தைச் சுற்றி, கடந்த மார்ச் 8 சனிக்கிழமை அன்று 16 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நன்கு வளர்ந்தபின், பலருக்கு இந்த இடம் நல்ல சூழலைத் தரும் என்று நம்புகிறோம்.

திறந்த வெளியில் ஏற்கனவே பேருந்து நிலைய பின்புறம் உள்ள சின்னேரிக் கரையில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் நன்கு வளர்ந்திருப்பதைத் தொடர்ந்து, இனி வீட்டு வசதி வாரிய மைதானத்தில் நடப்பட்ட மரங்களை உணர்வுகள் குழு தொடர்ந்து பராமரிக்கும்.

இந்த நிகழ்ச்சிக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும் உணர்வுகள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

- உணர்வுகள்

02/12/2024

உணர்வுகள் ஏன் எப்பொழுதும் ஏரிகளை விட கால்வாய்களுக்கு முக்கியத்துவம் தருகிறது? சில வாரங்களுக்கு முன் பெத்தனப்பள்ளி ஊராட்சியில் அடைப்பட்டிருந்த கால்வாய்களை சீரமைத்தப்பின் , இயற்கையின் கருணையினால் பெத்தனப்பள்ளி எட்டிக்குட்டை ஏரி நீர் வரத்து பெறுகிறது..

நான்கு வருடங்களுக்கு முன் இதே ஏரியை சுத்தம் செய்து கால்வாய்களை தூர் வாரினோம். அதைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு வறண்டு கிடந்த எட்டிக்குட்டை ஏரி நீர் வரத்து பெற்றது. இந்த வருடம் மீண்டும் கால்வாய்கள் அடைபட்டிருந்ததால் அதனை சீரமைத்து, ஏரி தூர்வாரி கொள்ளளவு அதிகப்படுத்தி கரை அமைக்கப்பட்டது. இயற்கையின் கருணையினால் எட்டிக்குட்டை ஏரி வேகமாக நிரம்புகிறது. இந்த கால்வாய்கள் இல்லையென்றால் , இந்த ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் இருப்பது மட்டுமில்லாமல், மற்றொரு பகுதியில் இதே நீர் வெள்ள பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. ஏரிகளை காப்போம். முக்கியமாக நீர் வழங்கும் கால்வாய்களையும் காப்போம்.

-உணர்வுகள்

கிருஷ்ணகிரி வட்டம், பெத்தனப்பள்ளி ஊராட்சியில் உள்ள எட்டிக்குட்டை ஏரி  தூர் வாரும் பணி தொடங்கப்பட்டது. பெத்தனப்பள்ளி ஏரி ...
04/10/2024

கிருஷ்ணகிரி வட்டம், பெத்தனப்பள்ளி ஊராட்சியில் உள்ள எட்டிக்குட்டை ஏரி தூர் வாரும் பணி தொடங்கப்பட்டது.

பெத்தனப்பள்ளி ஏரி பல வருடங்களாக தூர்ந்து போய் நீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடந்தது. நீர் வறட்சிக்கு உள்ளான இந்தப்பகுதியில் நீர்வளம் பெருக்க 2020இல் நாம், கால்வாய்களைக் கண்டறிந்து தூர் வாரினோம். ஏரிக்கு நீர் வரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்ததால் 10 வருடங்களுக்கு மேலாக நிரம்பாத ஏரி கால்வாய்கள் வெட்டியதும், கடந்த 2023ஆம் ஆண்டு நிரம்பியது. வறட்சியான இந்தப் பகுதியில் நீரை அதிகம் சேமிக்க நம் அடுத்த கட்ட பணிகளாக மீண்டும் கால்வாய்களை சீரமைப்பதுடன் ஏரியின் கொள்ளளவை அதிகரிக்க தூர் வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகளை இன்று தொடங்கினோம். பணிகள் முடிந்ததும் எதிர்வரும் மழைக்காலங்களில் அதிக நீர் சேமிக்கப்படும் என்று ஊர்மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் உணர்வுகள் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

இந்தப் பணி இன்னும் மூன்று நாட்களுக்கு தொடரும். முதல் நாளாக டிராக்டர்கள் சென்று வர கரை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
நாளை முதல் தூர்வாரப்படும்.

இந்த சேவை தொடங்கி நல்வழியாக நடைபெற உறுதுணையாக இருக்கும் அத்தனை நல்லுள்ளம் கொண்டவர்க்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

-உணர்வுகள்

Address

Krishnagiri
635001

Telephone

+919742320876

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unarvugal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Unarvugal:

Share