17/04/2025
அய்யா வைகுண்டசுவாமியின் #ஐம்பதி_களில் அகிலத்திரட்டு அம்மானைத்தந்த மூலப்பதியான #தாமரைகுளம்_பதியில் #சித்திரைத்திருவிழா வருகிற 18-ம்தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் காலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை அதனைத்தொடர்ந்து உகப்படிப்பு நடைபெறுகிறது 6 மணிக்கு திருக்கொடியேற்றும் நிகழ்ச்சியை பதியின் தலைமை குரு சௌ.இராஜசேகரன் நடத்துகிறார். பின்னர் காலை சிற்றுண்டி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடைகள், உச்சிப்படிப்பு நடைபெறுகிறது .
முதல் நாள் இரவு 7 மணிக்கு அய்யா #சிம்மாசன__வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
இரண்டாம் நாள் அய்யா #தாமரை_பூ வாகன பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
மூன்றாவது நாள் அய்யா # அனுமன் வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
நான்காவது நாள் அய்யா #சர்ப்ப_வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
ஐந்தாம் நாள் அய்யா #கருட__வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
ஆறாவது நாள் அய்யா #மயில்_வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
ஏழாவது நாள் அய்யா #பூஞ்சப்பர__வாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
எட்டாம் நாளான 25ம் தேதி இரவு அய்யா #வெள்ளைகுதிரை வாகனத்திற்கு எழுந்தருளி #கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒன்பதாம் நாள் அய்யா #அன்னவாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
பத்தாவது நாள் அய்யா #இந்திரவாகனத்தில் பவனியும் அதனைத்தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது
நிறைவு நாளான 29ம் தேதி திங்கள்கிழமை காலையில் பணிவிடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு மற்றும் காலை 9.30 மணிக்கு அய்யா #திருத்தேர் பவனியும்(தேரோட்டம்) நடைபெற இருக்கிறது அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறுகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு அய்யா #நந்திவாகன பவனி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு திருக்கொடி அமர்த்துதல் நிகழ்ச் சியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடைகள், #உகப்படிப்பு, #உச்சப்படிப்பு, #அன்னதர்மங்கள், வாகனப்பவனிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குருபரம்பரையினர் செய்துவருகின்றனர். அனைவரும் கலந்து கொண்டு அய்யாவின் அருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.