����தெய்வீக மக்கள் இயக்கத்தின் ஆன்மீக,சமுக,தேசப் பணிகள்
மக்கள் தொண்டே!மகேசன் தொண்டு!!
*நமது தெய்வீக மக்கள் இயக்கம்,ஆன்மீகத்தின் மூலம் நமது கலை,கலாச்சாரம்,மற்றும் பண்பாட்டின் வாயிலாக நல்லொழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளம் பெறச் செய்கிறது .
*இளைய சமுதாயத்தை வலிமைமிக்கவராக வழிநடத்திட விவேக இளைஞர் படையை உருவாக்கி செயல்பட்டு வருகிறது.
*தேசியமே தெய்வீகம் என்ற சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளையும்
அவரின் தன்னம்பிக்கைமிக்க,எழுச்சி மிக்க கருத்துகளையும் மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கிறது.
*பாரதம் மற்றும் தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களின் மகத்துவத்தையும்,அற்புதங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.இதற்காக ஸ்ரீதரிசனா என்ற ஆன்மீக யாத்திரை நடத்தி வருகிறது
*திருவள்ளுவர்,ஸ்ரீஆதிசங்கரர்,ஸ்ரீமத் ராமானுஜர் மற்றும் 12ஆழ்வார்கள்,63நாயன்மார்கள்,திருவருட்பிரகாசவள்ளலார், பகவான் ஸ்ரீராம கிருஷ்ணர்,சுவாமி விவேகானந்தர்,பகவான் ஸ்ரீரமணர்,ஷீரடி சாய்பாபா,ஸ்ரீ ராகவேந்திரர் ,ஸ்ரீஅரவிந்தர், காஞ்சி மகான்,வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி மற்றும் நமது மகான்கள்,சித்தர்கள், மகரிஷிகள் ஆகியோரின் தெய்வீக கருத்துக்கள்,செய்திகள்,கருவூலங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது
*நமது தெய்வீக மக்கள் இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு பெளர்ணமி,அமாவாசை தினங்கள் மற்றும் திருவிழா காலங்களில் திருவண்ணாமலை,மேல்மலையனூர்,திருவக்கரை போன்ற ஆன்மீகத் திருத்தலங்களில் ஆன்மீகப் பிரசாரம் மற்றும் முகாம்களை நடத்தி வருகிறது.
* தெய்வீக மக்கள் இயக்கத்தின் மூலம் வேள்விகள்,பூசைகள்,யாகங்கள்,சொற்பொழிவுகள்,பக்தி திருவிழாக்கள்,
கோசாலை மற்றும் கல்வி மருத்துவ பண்பாட்டு கருத்தரங்குகள் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
*தெய்வீக மக்கள் இயக்கத்தின் விற்பனை சேவைப் பிரிவான ஸ்ரீ பூஜா,மையம் மூலம் ஆன்மீகம் சம்பந்தமான புத்தகங்கள்,பூசைப் பொருட்கள்,
மற்றும் திருவழிப்பாட்டுக்கு தேவையான பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது
*நமது பண்டைக் கால விழுமியங்களான தியானம்,யோகா போன்றவைகளைத் தகுதி வாய்ந்தவர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.தியானம்,யோகா பயிற்றுவிக்கப ஸ்ரீ சர்வசித்தி தியானம்,யோகா மையம் செயல்படுகிறது.
*நமது பண்டைய தெய்வீக மருத்துவங்களான சித்தா,ஆயுர்வேதம்,இயற்கை வைத்தியம்,வர்மக்கலை மருத்துவம்,யுனானி,மாற்றுமுறை மருத்துவ முறைகள் போன்றவற்றின் சிறப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.
*சுற்றுச்சூழல் பாதுகாப்பு,புவி வெப்பமடைவதைத் தடுக்கும் நோக்கில் பசுமை தேசம் என்ற அமைப்பின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மரங்களை,காடுகளை,சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட வலியுறுத்துகிறது.இலவச மரக்கன்றுகள் வழங்கியும்,பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தையும் மாணவர்களிடமும் , மக்களிடமும் கொண்டு சேர்க்கிறது
*விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு இயற்கை விவசாயம் மற்றும் வேளாண் பயிற்சிகளையும் கருத்தரங்குகள், விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறது.விவசாயிகளின் வாழ்வுரிமைகளைக் காத்திட அவர்களுடன் இணைந்து உழவர் மக்கள் பாசறையை நடத்தி வருகிறது.
*தெய்வீக மக்கள் இயக்கம் உலக தமிழர்கள் மற்றும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் ,போராட்டங்கள் நடத்தியும் வருகிறது.இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணையை நடத்துமாறு ஐ.நா வையும் ,சர்வதேச சமுகத்தையும் வலியுறுத்துகிறது .தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களின் பாதுகாப்பையும் ,வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்திட இந்திய அரசாங்கத்தை வலியுறுத்துகிறது
*நதிநீர் பிரச்சனைகளான காவிரி,முல்லை பெரியாறு,பாலாறு நதிகளின் உரிமைக்காகவும் ,நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்றும் தொடர்ந்து போராடி வருகிறது.
*போதைக்கு அடிமையாகாத இளைஞர்களை உருவாக்குவதன் மூலம் வளம்மிக்க சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது .
தெய்வீக மக்கள் இயக்கத்தின் துணை அமைப்புகள் :
1.திருமலை திருப்பதி பக்த ஜனா சபா
2.நால்வர் அருட்பணி மையம்
3.ஆன்மீக மக்கள் சேவா மையம்
4.கலை கலாச்சார பண்பாட்டு மையம்
5.விவேக இளைஞர் படை & மாணவர் சக்திப் பாசறை
6.மகளிர் சக்தி பாசறை
7.பசுமை தேசம் மற்றும்
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு)
8.உழவர் மக்கள் பாசறை, உழவர் சங்கமம்
9.தமிழ்நாடு அனைத்துப் பொறியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பு
www.deiveegamakkaliyakkam.blogspot.com
தொடர்புக்கு:-96000 14670
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!