Atchayam Trust

Atchayam Trust "The ultimate vision is to ‘Create a Beggar Free India’. A nation in which no citizen seeks for alms"

Atchayam Trust addresses the grassroot reasons for begging and so focuses on eliminating poverty and detent beggary thereby contributing to the achievement of sustainable development goals. Its mission is to rescue and rehabilitate marginalized individuals through admission in rehabilitation homes, ensuring sustainable livelihood through skill development programs to rebuild their lives, reintegrating the service users with one’s family in possible cases and periodical follow up.

தமிழக அரசின் சார்பில் சமூக சேவைக்காக தமிழ்நாட்டின் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதிற்கு அட்சயம் அறக்கட்டளை தேர்வுதமி...
13/08/2026

தமிழக அரசின் சார்பில் சமூக சேவைக்காக தமிழ்நாட்டின் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதிற்கு அட்சயம் அறக்கட்டளை தேர்வு

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் கரங்களால் அட்சயம் அறக்கட்டளையின் Atchayam Trust சமூகசேவைக்காக தமிழ்நாட்டின் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதினை வழங்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் கரங்களால் பெற உள்ள இந்த விருதுக்கு எங்களுடன் உழைத்த அனைத்து அட்சயம் அறக்கட்டளை தன்னார்வலர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கருதுகின்றோம் .

மேலும் அட்சயம் அறக்கட்டளைக்கு தொடர்ந்து 13 ஆண்டுகளாக உதவிகள் செய்த அனைத்து நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் அட்சயம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Naveen Kumar Atchayam

10/08/2026

ஆதரவற்ற‌ உறவுகளுக்கு உதவிடுங்கள்

தெரிந்த உறவினர்களின் நிகழ்ச்சிக்கு மொய் வைத்து உதவுகின்றோம்.
தெரியாத ஆதரவற்றோர்களும் நமது உறவுகளே - அவர்களுக்கும் மொய் வைத்து உதவுங்கள்.

தாங்கள் வைத்த மொய் மூலம், அட்சயம் அறக்கட்டளை தன்னார்வலர்களால் சாலையோரம் யாசகம் பெற்றுவரும் யாசகர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்களை மீட்டு மறுவாழ்க்கை வழங்க நசியனுர் எருக்காட்டுவலசு பகுதியில் ஓர் இடம் வாங்கி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. உதவிசெய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

200 ஆதரவற்ற நபர்களை பராமரிக்கும் அளவிர்க்கு உருவாகிவரும் இந்த இல்லம் தற்போது 75% கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஆதரவற்ற நபர்கள் அங்கே தங்கி பயன்பெற தங்களின் உதவியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். தங்களின் சிறிய உதவி பலரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

Gpay: 9787800288

Contact: 9787800288, 9787800772

சமூக சேவை விருது! 🏆இன்று ஈரோடு TVS வீதி வியாபாரிகள் சங்கம் சார்பில், நமது 'அட்சயம் அறக்கட்டளை'யின் நிறுவனர் திரு. பெ. நவ...
09/08/2026

சமூக சேவை விருது! 🏆

இன்று ஈரோடு TVS வீதி வியாபாரிகள் சங்கம் சார்பில், நமது 'அட்சயம் அறக்கட்டளை'யின் நிறுவனர் திரு. பெ. நவீன்குமார் மற்றும் நமது குழுவினருக்கு "சமூக சேவை விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகத்தின் மீதான நமது அக்கறையையும், உழைப்பையும் அங்கீகரித்து இந்த உயரிய விருதினை வழங்கிய ஈரோடு TVS வீதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

இந்த விருது, நாம் சமூகத்திற்காக இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற பொறுப்பையும், ஊக்கத்தையும் எங்களுக்கு அளித்துள்ளது. இந்த பயணத்தில் தொடர்ந்து ஆதரவளிக்கும் நல்உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி!
தொடர்ந்து இணைந்திருப்போம், மாற்றத்தை உருவாக்குவோம்! 💪✨

Naveen Kumar Atchayam

07/08/2026

ஆதரவற்ற உள்ளங்களுக்கு உதவிடுங்கள்

2014 ஆம் ஆண்டிலிருந்து யாசகம் அற்ற தாயகம் படைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது அட்சயம் அறக்கட்டளை..
சாலையோரங்களில் உள்ள யாசகர்கள், ஆதரவற்றவர்கள், வயதான முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என அவர்களை மீட்டு மறுவாழ்க்கை வழங்கியும் அவர்களுக்கான காப்பகமும் நடத்தி வருகின்றோம். இதுவரை 1600 க்கும் மேற்பட்ட நபர்களை மீட்டு மறு வாழ்க்கை வழங்கியும் வழங்கியுள்ளோம்.

ஈரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியின் நல்ல உள்ளங்களின் உதவியால் செயல்பட்டு வரும் "அட்சயம் அறக்கட்டளையானது 200 ஆதரவற்ற நபர்கள் தங்கும் அளவிற்கு யாசகர்கள், ஆதரவற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதான முதியவர்கள், ஆகியோருக்கான அட்சயம் இல்லம் ஈரோட்டில் நசியனூர் பகுதியில் கட்டி வருகின்றோம். தற்போது 80% கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள கட்டுமான பணி நிறைவடைந்து பல ஆதரவற்ற நபர்கள் அங்கு தங்கி பயன்பெற தங்களால் இயன்ற உதவிகளை அளித்தால் நன்றாக இருக்கும்.

தனி மனித முயற்சியால் இன்று 800 தன்னார்வளர்களை ஒன்றினைந்து இந்திய அளவில் சிறப்பாக சேவைக்கு தேசிய விருதும், மாநில விருதும், மாவட்ட விருதும் பெற்ற ஒரே அமைப்பு நமது அட்சயம் அறக்கட்டளையே.

Contact: 9787800288, 9787800772

Gpay:9787800288

ஈரோடு டெக்ஸ்வேலியில் நடைபெற்ற ஆடி கொண்டாட்டம் Sparkling Events & Entertainment விழாவில் அமைச்சர் திரு.விஜய் பாலாஜி மற்று...
03/08/2026

ஈரோடு டெக்ஸ்வேலியில் நடைபெற்ற ஆடி கொண்டாட்டம் Sparkling Events & Entertainment விழாவில் அமைச்சர் திரு.விஜய் பாலாஜி மற்றும் திரு.KPY பாலா அவர்களின் கையால் நமது அட்சயம் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.நவீன்குமார் மற்றும் குழுவினருக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.

தொலைகாட்சி பிரபலங்கள் பலர் முன்னிலையில் நமது குழுவின் சேவையை பாராட்டும் வகையில் கிடைத்த விருது. மேலும் KPY பாலா நமது குழுவினருடன் உரையாடி சேவையை பாராட்டினார்.

பலர் நமது அட்சயம் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.நவீன்குமார் அவர்களை Roll Model ஆக எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Aadi kondattam 2026 Erode
Naveenkumar

Address

Rehabilitation Home For Beggars And Homeless , Https://maps. App. Goo. Gl/nJWcUDHZ46JNtnFi 8
Erode
638002

Alerts

Be the first to know and let us send you an email when Atchayam Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Atchayam Trust:

Shortcuts

Share