12/04/2026
49 வயதிலும் மாறாத மழலை மனம்.. கை கால்களில் மண் பூசிக்கொண்டு விளையாட்டு
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் கவிதாவும் அவரது பெற்றோரும் ஒரு அழகான கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். 49 வயதான கவிதாவுக்கு உலகம் என்பது அவரது அம்மாவும் அப்பாவும் மட்டும்தான். அவருக்குள் இருந்த மழலைத்தனம் மாறாமல் மனநிலை பாதிக்கப்பட்டு, அந்தப் பெற்றோருக்கு அவர் எப்போதும் ஒரு கைக்குழந்தையாகவே இருக்கச் செய்தது.
காலம் மிகக் கொடூரமானது. நிழலாக இருந்த பெற்றோரை காலம் பறித்துக் கொண்டது. உறவுகள் இருந்தும், கவிதாவின் நிலையை உணர்ந்து கரம் நீட்ட யாரும் முன்வரவில்லை. ஒரு சிறிய அறைக்குள் அன்பால் சூழப்பட்டிருந்த ஜீவன், திடீரென வீதிக்குத் தள்ளப்பட்டது.
வீதியில் நின்ற கவிதாவுக்கு பசி என்றால் என்னவென்று தெரியும், ஆனால் அதை யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. தன்னைத் தேடி வரும் அப்பாவின் குரல் கேட்காததால், சாலையோர மண்ணையே தன் வீடாக மாற்றிக்கொண்டார்.
சிறு குழந்தையைப் போல மண்ணை அள்ளி தலையில் போட்டுக்கொண்டு விளையாடினார்.
கை, கால்களில் மண் பூசிக்கொண்டு, ஆதரவற்ற நிலையில் அந்தச் சாலையோரமே கவிதாவின் தஞ்சமானது.
இந்த அவல நிலையை கண்ட நமது தன்னார்வலர்கள், துயரத்தின் பிடியில் இருந்த கவிதாவை மீட்டனர். தற்போது அவர் அட்சயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குத் தேவையான உணவும், மருந்தும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தாயின் அரவணைப்பும் அங்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிருங்கள். உங்கள் ஒரு 'ஷேர்' கவிதாவின் உறவினர்களைக் கண்டறியும் ஒரு வெளிச்சமாக மாறக்கூடும்.
மண்ணில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு அபலைப் பெண்ணின் வாழ்வில், மீண்டும் மகிழ்ச்சி மலர ஒன்றிணைவோம்.
இவரைப்பற்றிய மேலும் தகவல் தெரிந்தவர்கள் அட்சயம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும் அல்லது உங்களின் ஒரு ஷேர் மூலம் உறவினர்களை கண்டறிந்து சேர்த்து வைக்க வாய்ப்பு உண்டு.
Contact: 9787800288, 9787800772