Atchayam Trust

Atchayam Trust "The ultimate vision is to ‘Create a Beggar Free India’. A nation in which no citizen seeks for alms"

Atchayam Trust addresses the grassroot reasons for begging and so focuses on eliminating poverty and detent beggary thereby contributing to the achievement of sustainable development goals. Its mission is to rescue and rehabilitate marginalized individuals through admission in rehabilitation homes, ensuring sustainable livelihood through skill development programs to rebuild their lives, reintegrating the service users with one’s family in possible cases and periodical follow up.

17/04/2026

நம்பிக்கையின் விதை🌱

நமது அட்சயம் அறக்கட்டளை சோலார் இல்லத்தின் முன் முட்புதர்கள் நிறைந்த இடத்தை சுத்தம் செய்து, தாத்தா பாட்டிகள் அந்த இடத்தில் விதைகள், கன்றுகள் நட்டு வைத்து பராமரித்து வந்தனர். தினந்தோறும் களை எடுப்பது, தண்ணீர் விடுவதென்று நன்றாக பராமரித்து வந்தனர். பாதுகாப்பிற்காக சுற்றிலும் துணிகளால் ஆன வேளி அமைத்தனர்.

செடிகள் நன்றாக வளர்ந்து வெண்டைக்காய், கொத்தமல்லி, மிளகாய் இவை மூன்றும் நன்றாக வளர்ந்து அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும் அறுவடை செய்த காய்களை இல்லத்தில் சமையல் செய்து அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டனர்.

ஒரு காலத்தில் யாசகம் பெற்றவர்கள் இன்று தோட்டக்கலையில் சிறப்பாக செயலாற்றுகின்றனர்.

❤️

தமிழ் புத்தாண்டு தினத்தில் நமது அட்சயம் அறக்கட்டளை ECRC மனநல காப்பகத்தில் உள்ளவர்கள் மற்று சோலார் புதூர் இல்லத்தில் உள்ள...
16/04/2026

தமிழ் புத்தாண்டு தினத்தில் நமது அட்சயம் அறக்கட்டளை ECRC மனநல காப்பகத்தில் உள்ளவர்கள் மற்று சோலார் புதூர் இல்லத்தில் உள்ள தாத்தா பாட்டியுடன் பெருந்துறை சோழீஸ்வரம் கோவில் மற்றும் சிவன் கோவிலுக்கு சென்று வந்தோம். மேலும் நவீன்குமார் அவர்கள் "தாத்தா பாட்டியுடன் இனைத்து இறைவனை வழிபட்டது மிகுந்த மகிழ்ச்சி" என்று கூறினார்.

We’re Hiring – Social Worker 🌍Atchayam Trust is looking for a passionate Social Worker (Community Development) to empowe...
13/04/2026

We’re Hiring – Social Worker 🌍

Atchayam Trust is looking for a passionate Social Worker (Community Development) to empower communities and create meaningful impact. If you have a degree in Social Work/Sociology/Psychology and a heart for service, apply now!

Email: [email protected]
Contact: 8838190897

We’re Hiring – Staff Nurse 🩺Atchayam Trust is looking for a compassionate and qualified Staff Nurse to join our team. If...
13/04/2026

We’re Hiring – Staff Nurse 🩺

Atchayam Trust is looking for a compassionate and qualified Staff Nurse to join our team. If you have a valid nursing license, minimum 1 year experience, and a passion for patient care, apply now and be part of a mission to create a beggar-free India.

Email: [email protected]
Contact: 8838190897

13/04/2026

உறவுகளின் முக்கியத்துவம்..

சாலையோரம் ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு உயிரும் அன்பு, பாசம், அக்கரை என ஒரு காலத்தில் குடும்பமாக வாழ்ந்தவர்களே...

ஒவ்வொருவரும் தனது உறவினர்களை அரவணைத்து வாழ்ந்தாலே ஆதரவற்ற நபர்கள் இருக்கமாட்டார்கள்..

உறவுகள் விலைமதிப்பற்றது...
Thanks to Voice of Erode

Naveen Kumar Atchayam

12/04/2026

49 வயதிலும் மாறாத மழலை மனம்.. கை கால்களில் மண் பூசிக்கொண்டு விளையாட்டு

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் கவிதாவும் அவரது பெற்றோரும் ஒரு அழகான கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். 49 வயதான கவிதாவுக்கு உலகம் என்பது அவரது அம்மாவும் அப்பாவும் மட்டும்தான். அவருக்குள் இருந்த மழலைத்தனம் மாறாமல் மனநிலை பாதிக்கப்பட்டு, அந்தப் பெற்றோருக்கு அவர் எப்போதும் ஒரு கைக்குழந்தையாகவே இருக்கச் செய்தது.

காலம் மிகக் கொடூரமானது. நிழலாக இருந்த பெற்றோரை காலம் பறித்துக் கொண்டது. உறவுகள் இருந்தும், கவிதாவின் நிலையை உணர்ந்து கரம் நீட்ட யாரும் முன்வரவில்லை. ஒரு சிறிய அறைக்குள் அன்பால் சூழப்பட்டிருந்த ஜீவன், திடீரென வீதிக்குத் தள்ளப்பட்டது.

வீதியில் நின்ற கவிதாவுக்கு பசி என்றால் என்னவென்று தெரியும், ஆனால் அதை யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. தன்னைத் தேடி வரும் அப்பாவின் குரல் கேட்காததால், சாலையோர மண்ணையே தன் வீடாக மாற்றிக்கொண்டார்.

சிறு குழந்தையைப் போல மண்ணை அள்ளி தலையில் போட்டுக்கொண்டு விளையாடினார்.

கை, கால்களில் மண் பூசிக்கொண்டு, ஆதரவற்ற நிலையில் அந்தச் சாலையோரமே கவிதாவின் தஞ்சமானது.

இந்த அவல நிலையை கண்ட நமது தன்னார்வலர்கள், துயரத்தின் பிடியில் இருந்த கவிதாவை மீட்டனர். தற்போது அவர் அட்சயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குத் தேவையான உணவும், மருந்தும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தாயின் அரவணைப்பும் அங்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிருங்கள். உங்கள் ஒரு 'ஷேர்' கவிதாவின் உறவினர்களைக் கண்டறியும் ஒரு வெளிச்சமாக மாறக்கூடும்.

மண்ணில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு அபலைப் பெண்ணின் வாழ்வில், மீண்டும் மகிழ்ச்சி மலர ஒன்றிணைவோம்.

இவரைப்பற்றிய மேலும் தகவல் தெரிந்தவர்கள் அட்சயம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும் அல்லது உங்களின் ஒரு ஷேர் மூலம் உறவினர்களை கண்டறிந்து சேர்த்து வைக்க வாய்ப்பு உண்டு.

Contact: 9787800288, 9787800772

08/04/2026

ஆதரவற்றோர் இல்லம் கட்ட உதவிடுங்கள்..🙏

கடந்த 10 வருடங்களில் அட்சயம் அறக்கட்டளையின் மூலம் யாசகர்கள், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என 1500 க்கும் மேற்பட்ட நபர்களை மீட்டு மறுவாழ்வு வழங்கியுள்ளோம்.

இருப்பினும் நிறைய நபர்களை மீட்டு மறுவாழ்வு வழங்க போதிய இட வசதி இல்லாததால், ஈரோடு நசியனுர் பகுதியில் 200 ஆதரவற்ற நபர்களை பராமரிக்கும் அளவிற்கு இல்லம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். தங்கள் அனைவரின் உதவியால் 70% கட்டுமான பணி முடிவடைந்துள்ளது.

விரைவில் கட்டுமானப்பணி முடிவடைந்து பல ஆதரவற்ற உறவுகளுக்கு மறுவாழ்வு வழங்க தங்களின் நிதி உதவி மிகவும் அவசியமானது. தங்களின் சிறிய உதவி பலரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தொடர்புக்கு: 9787800288, 9787800772

Account Details:
Name: Atchayam trust,
Account No: 510101002434791
Bank Name: Union Bank, Komarapalayam.
IFSC code : UBIN0908762
Gpay & PhonePe:9787800288
UPI ID:9943908424@sbi

80G மற்றும் CSR வரிவிலக்கு சான்றிதழ் உட்பட்டது.

08/04/2026

காதல் தோல்வியா? குடும்ப இழப்பா? காரணங்கள் எதுவானாலும் இனி கார்த்தி பாதுகாப்பான கைகளில்!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் கடந்த 3 மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு யாசகம் பெற்றுவந்த கார்த்தி அண்ணாவை மீட்டு பெருந்துறை அட்சயம் ECRC மனநல காப்பகத்தில் சேர்த்து மறுவாழ்வு வழங்கினோம். ஒரு பாலடைந்து இடிந்திருந்த வீட்டில் மிகவும் குப்பைகள் நிறைந்த இடத்தில் தங்கியிருந்தார். மேலும் கிழிந்த வேட்டியும், ஜாக்கெட்டும் அணிந்து கொண்டு, கீழே கிடந்த துண்டு சிகரட்டை பயன்படுத்திக் கொண்டும் இருந்தார்.

இவரின் தாய், தந்தை இருவரும் இறைவனடி சேர்ந்துவிட்டனர். மாற்றுத்திறன் கொண்ட தங்கை ஒருவர் இருந்ததாகவும் அவரும் இறந்து விட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். மேலும் குடும்ப உறுப்பினர்கள் இறந்துவிட்டதால் மன அழுத்தத்தால் மனநலம் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர், இவர் காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர். முதலில் பயத்தில் நமது தன்னார்வளர்களை பார்த்து சத்தம் போட்டவர், குளிக்க வைத்த பிறகு சமாதானமாகி ஒத்துழைத்தார். இவரின் உறவினர்களின் தகவல் தெரிந்தவர்கள் அட்சயம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

இவரைப் போன்ற ஆதரவற்ற நபர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த உதவிடுங்கள்.

Contact: 9787800288, 9787800772

Gpay: 9787800288
UPI ID:9943908424@sbi

Naveen Kumar Atchayam

04/04/2026

பெற்றோரை பேணி பாதுகாப்போம்

Address

Rehabilitation Home For Beggars And Homeless , Https://maps. App. Goo. Gl/nJWcUDHZ46JNtnFi 8
Erode
638002

Alerts

Be the first to know and let us send you an email when Atchayam Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Atchayam Trust:

Share