24/11/2023
நேற்று (23.11.23) இராஜபாளையம் , பி.ஏ .சி.எம். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 'யானைகள் திருவிழா' நிகழ்ச்சியில் "காலநிலை மாற்றமும் யானைகளும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினேன். மழை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றது மகிழ்ச்சியைத் தந்தது. காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மனிதர்களை மட்டுமல்ல எல்லா உயிர்களையும் பாதிப்புக்குள்ளாக்கும். தனித்துவமான உடல் அமைப்பு கொண்ட யானைகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும். காடுகளின் ஆதார உயிரினமான யானைகளை காப்பாற்றுவது கானகத்தை காப்பதாகும். என்பதை மையமாக வைத்து உரை நிகழ்த்தினேன். ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு தங்கபாண்டியன், ராம்கோ நிறுவனத்தின் தலைவர் திருமதி நிர்மலா, இராஜபாளையம் நகராட்சித் தலைவர், பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் திரு ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர் . இராஜபாளையம் காட்டுயிர் அறக்கட்டளையின் நண்பர் திரு டி.எஸ் சுப்பிரமணியம் அவர்கள் மிகுந்த அக்கறையோடு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்