01/03/2026
நமது அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தனி வகுப்புகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் நேற்று 28.02.2026 ஆம் தேதி மதுக்கரை மார்க்கெட்டில் உள்ள நகராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இதில் ஓவியப்போட்டி, கவிதை, கட்டுரை, குழு விவாதம், பேச்சுப்போட்டி மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கு நமது மதிப்பிற்குரிய ஆசிரியைகள் K.முர்ஷிதா, M.சண்முகப்பிரியா, N.நசீரா பானு, J.ஷமிதா ஆகியோர் மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தி, அவர்களை ஆயத்தப்படுத்தி போட்டிகளில் கலந்து கொள்ள அழைத்து வந்தனர். இந்த போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளரும், மூத்த வழக்குரைஞருமான தோழர்.ச.பாலமுருகன் அவர்களும், பூ.ச.கோ தொடக்கப்பள்ளி தமிழ் ஆசிரியர் திரு.இல.சிவசக்தி வடிவேல் அவர்களும், பூ.ச.கோ சர்வஜன மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் திரு.சா.குமாரசாமி ஐயா அவர்களும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்கள். இந்தப் போட்டிகளில் நடுவர் குழுவாக செயல்பட்ட வழக்குரைஞர்கள் தோழர்.S.சோபியா, தோழர்.D.ஜீவா, தோழர்.T.ரஞ்சித், தோழர்.P.தன்யா மற்றும் தோழர்.T.புவனேஸ்வரி ஆகியோர் போட்டிகளை முன்னின்று நடத்தியதுடன், வெற்றியாளர்களையும் தேர்வு செய்தனர். இந்த கலை இலக்கிய போட்டி நிகழ்ச்சியை தோழர்.M.திருமூர்த்தி, தோழர்.K.மாறன், தோழர்.K.செல்வராஜ் உள்ளிட்ட தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும், பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் போலோ சைக்கிள் விளையாட்டு போட்டியில் இந்திய தேசிய அணிக்கு தேர்வாகியுள்ள வி.எல்.பி அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி சிவதர்ஷினிக்கு ஊக்கத்தொகையாக ரூ.2000/- வழங்கப்பட்டது.
முழு நிகழ்ச்சியையும் தோழர்.சுந்தர் சிங் நேர்த்தியுடன் ஒளிப்பதிவு செய்தார்.
இந்தக் கலை இலக்கியப் போட்டிகளை நடத்திட நன்கொடை அளித்து, போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்திட முழு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நமது அறக்கட்டளையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்