18/07/2026
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு பாரம்பரிய பழவகை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனரும் சமூக ஆர்வலருமான திரு. CSK சித்திரை செல்வகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாரம்பரிய பழவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் திரு. அண்ணாதுரை, திரு. உதயா, திரு. ஜெய்சங்கர், திரு. ரெங்கசாமி, திரு. கார்த்திக், திரு. செந்தில், திரு. தியாகு, திரு. பழனி, திரு. ரவி, திரு. VL. சங்கர் (CSK), திரு. L. பாலகுமார் (CSK), திரு. N. அரவிந்தன் (CSK), திரு. M. வெங்கடேஸ்வரன் (CSK), ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், குழு நிர்வாகிகளாகவும் கலந்து கொண்டனர்.
மேலும், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
📅 தேதி: 17.07.2026
📍 இடம்: பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்
🌱 வழங்கப்பட்ட மரக்கன்றுகள்: 1,630
இந்த நிகழ்வு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய பழவகை மரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.