10/05/2026
இன்று தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள
திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள்
சார்பாக
மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையுடன் தாங்கள் ஏற்றுள்ள இந்த உயரிய பொறுப்பில், தமிழ்நாடு சமூக நீதி, நல்லாட்சி, இளைஞர் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் நலன் ஆகிய அனைத்துத் துறைகளிலும் புதிய முன்னேற்றப் பாதையை அடையும் என நம்புகிறோம்.
குறிப்பாக, மருத்துவ துறையில் சமூக நீதி மற்றும் சமத்துவம்,பிசியோதெரபி மருத்துவர்களின் நலன், தொழில்முறை உரிமைகள், தரமான மருத்துவ சேவைகள் மற்றும் “அனைவருக்கும் பிசியோதெரபி” என்ற உயரிய இலக்கை செயல்படுத்துவதற்கான அரசின் ஆதரவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழக மக்களின் ஆரோக்கியமான மற்றும் செயல்திறன் மிக்க வாழ்க்கைக்காக தங்களின் தலைமையில் சுகாதாரத் துறை மேலும் சிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Dr.ரா.ராஜேஸ் கண்ணா.(PT)
பொது செயலாளர்,
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் - TPDA