கௌசிகா நீர்கரங்கள்

கௌசிகா நீர்கரங்கள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கௌசிகா நீர்கரங்கள், Non-Governmental Organization (NGO), Kousika Neerkarangal, Coimbatore.

சமூக பொறுப்புணர்ந்த குடிமக்கள், அடுத்த தலைமுறைகா(க்)க பல்லுயிர் சூழல் மற்றும் நீர்நிலைகளை புனரமைத்து பராமரிக்க ஒன்றிணைந்த கரங்கள் 🤝

Socially responsible citizen's united
to preserve water resources & promote biodiversity for the generations to come ❤️

இன்று கௌசிகா நீர்கரங்கள் சார்பில் "கௌசிகா நதி தண்ணீர் பந்தல் வனம்" துவக்க நிகழ்வு, கோவை அத்திப்பாளையம் பகுதியில் சிறப்பா...
21/07/2026

இன்று கௌசிகா நீர்கரங்கள் சார்பில் "கௌசிகா நதி தண்ணீர் பந்தல் வனம்" துவக்க நிகழ்வு, கோவை அத்திப்பாளையம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முயற்சி, கௌசிகா நதிக்கரையை பசுமையாக்கும் எங்கள் நீண்டகால பயணத்தின் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

கௌசிகா நதி பாதுகாப்பு முயற்சியில் Rappit மென்பொருள் நிறுவனம் இணைந்து, தனது ஊழியர்களுடன் ஆர்வமுடன் பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் பணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியது பாராட்டுக்குரியது.

ஒரு மரக்கன்று என்பது வெறும் செடி அல்ல...

அது எதிர்கால தலைமுறைகளுக்கான நம்பிக்கை.
இயற்கையை மீட்டெடுக்கும் ஒரு உறுதி.
நம் நதிகளையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் ஒரு பொறுப்பு.

இந்த நிகழ்வில் பங்கேற்ற Rappit நிறுவன நிர்வாகத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும், எங்களது தன்னார்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இயற்கையை காப்போம்...
நதிகளை மீட்டெடுப்போம்...

*உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கணுவாய் தடுப்பணை பசுமை பணிகள் துவக்க நிகழ்வு* - ஞாயிறு  (07/06/2026) மாலை 4 மணிகணு...
07/06/2026

*உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கணுவாய் தடுப்பணை பசுமை பணிகள் துவக்க நிகழ்வு* - ஞாயிறு (07/06/2026) மாலை 4 மணி

கணுவாய் தடுப்பணை பாதுகாப்பு அமைப்பு மற்றும் கெளசிகா நீர்கரங்கள் மூலமாக கோவையை சேர்ந்த லக்ஷ்மி ரிங் டராவலர்ஸ் கோயம்புத்தூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதிப்பங்களிப்புடன் இப்பணிகள்
முன்னெடுக்கப்படுகிறது. இத்துடன் இந்நிகழ்வில் கோவையை சேர்ந்த நியு பிரிட்ஜ் மையத்தில் இருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்குபெற உள்ளனர்.

இந்த நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻

இடம்: கணுவாய் தடுப்பணை கிழக்குப்பகுதி
நேரம்: மாலை 4 மணி

✍🏽 *கெளசிகா நீர்கரங்கள், கோவை & கணுவாய் தடுப்பணை பாதுகாப்பு அமைப்பு*
தொடர்புக்கு : 9942973196, 9344402368 & 9894319381

*சின்னவேடம்பட்டி ஏரி ராஜவாய்க்கால் புனரமைப்பு துவக்க நிகழ்வு* *இன்று சனிக்கிழமை  (21/02/2026) காலை 9 மணியளவில்  வெள்ளக்க...
25/02/2026

*சின்னவேடம்பட்டி ஏரி ராஜவாய்க்கால் புனரமைப்பு துவக்க நிகழ்வு* *இன்று சனிக்கிழமை (21/02/2026) காலை 9 மணியளவில் வெள்ளக்கிணறு ராஜவாய்க்கால் பகுதியில் நடைபெற்றது*

கோவை வடக்கு பகுதிக்கு உட்பட்ட மிகவும் பிரதானமாக உள்ளதும் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரிக்கான கணுவாய் முதல் 8 கிலோமீட்டர் ராஜவாய்க்கால் சீரமைப்பு செய்யும் பணிகளானது
கெளசிகா நீர்கரங்கள் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு மூலமாக அபெக்சான் இக்னைட் இந்தியா என்ற நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் கோவை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முன்னிலையில் இன்று காலை வெள்ளக்கிணறு ராஜவாய்க்கால் பகுதியில் துவக்க நிகழ்வு இனிதே நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்நிலை வகித்த நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு.M.சிவகுமார் அவர்கள் பேசும்போது இந்த ஏரியானது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் இந்த ஏரி மற்றும் இதன் நீர்வழிப்பாதைகள் பல விவசாயிகள் நிலம் வழங்கி உருவானது என்றும் இந்த ஏரி மற்றும் இதன் நீர்வழிப்பாதை காப்பாற்றப்பட்டால் தற்போது மாங்கரை தடாகம் பகுதியில் நல்ல மழைபொழிவு ஏற்பட்டு வருகிற நிலையில் இந்த ஏரிக்கு தண்ணீர் கிடைத்து சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட வெகுவாக பயன் அளிக்கும் என்றும் இந்தப் பணிகளுக்காக நீர்வளத்துறை சார்பில் தொடர்ந்து ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அபெக்சான் இக்னைட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் பொறுப்பாளர்கள் பேசுகையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் சி.எஸ்.ஆர் பணிகள் மூலம் பல நலத்திட்ட உதவிகளை குறிப்பாக கல்வி சார்ந்த உதவிகளை வழங்கி வருவதாகவும் இது போன்ற நீர்நிலைப் பணிகளுக்காக தமிழக அளவில் முதல் முறையாக பங்களிப்பு வழங்கியுள்ளதாகவும் இப்பணிகள் சிறப்பாக நடைபெற தங்களது நிறுவனத்தின் சார்பில் தகுந்த ஒத்துழைப்பும் நிதி பங்களிப்பும் வழங்கப்படும் என தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய கௌசிகா நீர்கரங்கள் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் திரு.பி.கே.செல்வராஜ் அவர்கள் பேசுகையில் தற்போது உள்ள வறட்சியான நிலையில் ஒவ்வொரு பகுதிகளிலும் நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருவதாகவும் இது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது எனவும் இந்த நிலையில் கோவையை பொறுத்தவரை மீட்சி ஏற்பட வேண்டி பல முயற்சிகளை கெளசிகா நீர்கரங்கள் அமைப்பு மேற்கொண்டு வருவதாகவும் இத்தகைய சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தண்ணீர் அகதிகளாக மக்கள் ஒவ்வொரு பகுதியிலும் இடப்பெயர வேண்டிய மோசமான சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார், எனவே இதனை கருத்தில் கொண்டு தான் கெளசிகா நீர்கரங்கள் அமைப்பு அறம் சார்ந்து கோவை மாவட்டம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை சீரமைத்து உள்ளதாகவும் பல பகுதிகளில் மக்களுக்கு பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நீர் நிலைக்கான தன்னார்வலர்களை உருவாக்கி வருவதாகவும் மக்கள் அமைப்பாக தொடர்ந்து செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் முன்னிலை வகித்த உதவி செயற்பொறியாளர் அவர்களுக்கும் அபெக்சான் இக்னைட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் பொறுப்பாளர்களுக்கும் கெளசிகா நீர்கரங்கள் அமைப்பின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்வின் ஒருபகுதியாக அபெக்சான் இக்னைட் நிறுவனத்தின் தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டு ராஜவாய்க்கால் பகுதியில் இருந்த குப்பைகளை அகற்றினர். இந்த நிகழ்வில் கெளசிகா நீர்கரங்கள் அமைப்பு உறுப்பினர்கள் அபெக்சான் இக்னைட் நிறுவனத்தின் சார்பில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

✍🏽 *கெளசிகா நீர்கரங்கள், கோவை* தொடர்புக்கு : 9360723312, 98943 19381, 9894660410

🫶 கௌசிகா நதி காக்கும் நீருக்காக இணைந்த கரங்கள்…🫶 Hands joined to save our Kousika river…🌊 கௌசிகா நதி புனரமைப்பு பணிகள் த...
11/11/2025

🫶 கௌசிகா நதி காக்கும் நீருக்காக இணைந்த கரங்கள்…
🫶 Hands joined to save our Kousika river…

🌊 கௌசிகா நதி புனரமைப்பு பணிகள் தற்போது கோவை – கோவில் பாளையம் பகுதியில் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.
🌊 The rejuvenation of the Kowsika River is actively progressing in the Coimbatore–Kovilpalayam region.

🌀 பெரும் குப்பை மலைகளை அகற்றி, தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுக்கும் பணியில் நமது தன்னார்வலர்கள் உழைத்து வருகின்றனர்.
🌀 Volunteers are tirelessly clearing large heaps of waste to restore the natural flow of water.

🌱 கரைகளில் மரநடுகையும் உற்சாகமாக தொடங்கப்பட்டுள்ளது.
🌱 Tree planting along the riverbanks has also begun with great enthusiasm.

🗓️ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை களப்பணிகள் நடைபெறும்.
🗓️ Field work continues every Sunday from 7.00 a.m. to 9.00 a.m.

🤝 கௌசிகா நதி – கோவில் பாளையம் ஒருங்கிணைப்பாளர்கள்
திரு. சரவணன் (தொல்லியல் நிபுணர்), திரு. மணிகண்டன், செல்வி. சம்யுக்த்தா ஆகியோர் பொறுப்புடன் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
🤝 Coordinators Mr. Saravanan (Archaeologist), Mr. Manikandan, and Ms. Samyuktha are leading the efforts with dedication.

🙏 கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற களப்பணிகளில்,
ரோட்டரி சங்கம் 3206 தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
குமரன் மருத்துவமனை நிறுவனர் மற்றும் பணியாளர்கள்,
CRI நிறுவன ஊழியர்கள், மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
🙏 Last Sunday, members of Rotary Club 3206, the team from Kumaran Hospital, CRI employees, and volunteers from many areas joined hands in the restoration work.

💐 அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
💐 Our heartfelt thanks to everyone who contributed to this noble cause.

✍️ கௌசிகா நீர் கரங்கள்
அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம்
✍️ Kowsika Neer Karangal – Athikadavu Kowsika River Development Association

📞 தொடர்புக்கு | Contact:
📱 99449 21271 | 98943 19381 | 93623 62114.
#கௌசிகா_நதி

🌴💧 இளம் இதயங்களின் இயற்கை பயணம் – மூன்றாம் நாள்! 💧🌴கோயம்புத்தூரின் பிரபலமான YELLOW TRAIN பள்ளி மாணவ–மாணவியர் சுமார் 40 ப...
29/10/2025

🌴💧 இளம் இதயங்களின் இயற்கை பயணம் – மூன்றாம் நாள்! 💧🌴

கோயம்புத்தூரின் பிரபலமான YELLOW TRAIN பள்ளி மாணவ–மாணவியர் சுமார் 40 பேர், இன்று மூன்றாவது நாளாக நமது அக்ரஹார சாமக்குளம் ஏரியில் தங்கள் சிறிய கைகளால் பெரிய மாற்றத்தை உருவாக்க வருகிறார்கள்! 💚🌴

🕤 29-10-2025 புதன்
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த களப்பணி –
பசுமை பணிகள், தூய்மை முயற்சிகள், மற்றும் இயற்கை விழிப்புணர்வு செயல்களால் ஏரிக்கு ஒரு புத்துயிர் ஊட்டும்! 💦💚

🌴இயற்கையை நேசிக்கும் அனைத்து நண்பர்களையும்
இந்த அரிய தருணத்தில் கலந்து கொண்டு
இளம் தலைமுறையுடன் இணைந்து பசுமை பணியில் பங்கெடுக்க அன்புடன் அழைக்கிறது – அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பு.
கௌசிகா நீர்க்கரங்கள். 9363226237,9944921271,9894319381🌴💚

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் பயன்பெறும் குளம் குட்டைகளை நேரடியாக பார்வையிட்டு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஆய்...
28/10/2025

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் பயன்பெறும் குளம் குட்டைகளை நேரடியாக பார்வையிட்டு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் ஊராட்சி குளத்துபாளையம் சாலை கெளசிகா நதி புங்காடு தடுப்பணை.

அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்கம்

கௌசிகா நீர் கரங்கள்

*கோவையின் தொன்மையான  கெளசிகா நதி புனரமைப்பு துவக்க நிகழ்வு - மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பணிகள் இன்று துவக்கம்*கோவை மாவ...
27/10/2025

*கோவையின் தொன்மையான கெளசிகா நதி புனரமைப்பு துவக்க நிகழ்வு - மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பணிகள் இன்று துவக்கம்*

கோவை மாவட்டம் வடக்கு பகுதியில் மிகவும் பழமையான நதி என அறியப்படுகிறது கௌசிகா நதி. இந்த நதி பெரியநாயக்கன்பாளையம் குருடிமலையில் இருந்து திருப்பூர் மாவட்டம் மங்களம் வரை சுமார் 51 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பின்பு நொய்யலில் கலக்கிறது. பல வருடங்களாக இந்த நதி முட்புதர்களாலும், ஆங்காங்கே குப்பைகளும் கொண்ட வறண்ட நதியாகத்தான் காணப்படுகிறது. இந்த நதியை உயிர்பிக்கும் முயற்சியில் அத்திக்கடவு கெளசிகா நதி மேம்பாட்டு சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக அரசுடன் இணைந்து பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடுத்த படியாக கோவை ரோட்டரி சங்கம் 3206 நிதி உதவியுடன் கௌசிகா நீர்கரங்கள் அமைப்பு சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட வையம்பாளையம் முதல் பச்சாபாளையம் வரை சுமார் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு நதியை புனரமைப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதையடுத்து அதற்கான துவக்க நிகழ்வு இன்று 25.10.2025 கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கௌசிகா நதியை புனரமைப்புதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரம் என்று முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, இந்த முயற்சிக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து உறுதுணையாக நிற்கும் எனவும், இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறினார்.

இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்த அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் திரு.செல்வராஜ் கூறுகையில் தமிழக அரசு ஒத்துழைப்பில் இந்த நதியானது அமைப்பின் முயற்சியில் அவிநாசி அத்திக்கடவு நிலத்தில் நீர்செறிவூட்டும் திட்டத்தில் இணைக்கப்பட்டு தற்போது பணிகள் மேற்கொள்ளப்படும் 3 தடுப்பணைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் எனவும் மேலும் இந்த
நதியில் நடைபெறும் புனரமைப்பு பின்வரும் வேலைகள் பற்றி எடுத்துரைத்தார்...
1. சீமை கருவேல மரங்கள் அகற்றப்படவுள்ளது.
2. நதியின் இருபுற கரைகளும் சீரமைக்கப்பட உள்ளது.
3. கரை ஓரங்களில் மரம் நட்டு வளர்க்கப்பட உள்ளது.
4. நதியில் உள்ள குப்பைகளை அகற்ற திடக்கழிவு மற்றும் கழிவு நீர் மேலாண்மை மேற்கொள்ளப்படவுள்ளது.
5. கௌசிகா நதியில் அமைந்துள்ள தடுப்பணைகளை சீரமைப்பது. போன்ற வேலைகளை முன்னெடுக்க உள்ளதாக கூறினார். ஏற்கனவே கெளசிகா நீர்கரங்கள் அமைப்பு மூலமாக இந்த நதிக்கு இடையே கடந்த 3 ஆண்டுகளில் இரண்டு தடுப்பணைகள் சீரமைப்ப்பட்டு பல வருடங்களுக்கு பிறகு தண்ணீர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கோவை ரோட்டரி அமைப்பின் முன்னாள் கவர்னர் திரு.N. சுந்தரவடிவேலு
மற்றும் திரு.R.செந்தில்குமார் ராஜகோபால் கலந்துகொண்டு கௌசிகா நதியை 51 கிலோமீட்டர் முழுவதுமாக சீரமைப்பு செய்ய தாங்கள் துணை நிற்பதாக கூறியுள்ளனர்.

மேலும் சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் பேசும்போது கௌசிகா நதியை புனரமைப்பு செய்வது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. இந்த செயல் மிகவும் அர்ப்பணிப்பான செயல் என்று வாழ்த்தினார்.

மேலும் இந்த நிகழ்வில் கௌசிகா நதிப்பகுதியில் கிடைத்த மிகவும் தொன்மையான மண்பாண்ட தொல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் இந்நிகழ்வில் நீர்வளத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், விவசாய பெருமக்கள், கௌசிகா நீர் கரங்கள் அமைப்பினர், ஊடக நண்பர்கள், கோவை மாவட்ட நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

✍🏽 *அத்திக்கடவு கெளசிகா நதி மேம்பாட்டு சங்கம், கோயம்புத்தூர்*

💚A Natural Wonder at Agrahara Samakulam Lake! 🦋A mesmerizing discovery unfolded at the serene Agrahara Samakulam Lake is...
13/10/2025

💚A Natural Wonder at Agrahara Samakulam Lake! 🦋

A mesmerizing discovery unfolded at the serene Agrahara Samakulam Lake island during the recent “Butterfly Walk” organized by The Nature and Butterfly Society (TNBS) on 12th October 2025.

From early morning to late evening, nature enthusiasts — Sadheeskumar K, Saraswathi, Makeshkumar, and Nagaraj — recorded the presence of 28 butterfly species fluttering freely across the island ecosystem.

Among the vibrant species sighted were the Common Rose, Crimson Rose, Blue Pansy, Common Emigrant, Lemon Pansy, Common Banded Peacock, and Indian Palm Bob, each adding a splash of color and grace to the lake’s lush surroundings.

This remarkable count highlights the rich biodiversity of Agrahara Samakulam, proving that the lake’s natural habitat remains a thriving home for countless life forms.

“These butterflies are nature’s own indicators of a healthy environment. Their presence shows how well-balanced and alive this ecosystem is,” said the TNBS members after completing the survey.

The sight of 28 distinct butterfly species coexisting in one location is not just a scientific observation — it’s a gift of nature and a reminder of why conservation matters.

💚 Agrahara Samakulam Lake continues to be a symbol of harmony between people and nature — a living canvas painted with the wings of butterflies.

Address

Kousika Neerkarangal
Coimbatore
641035

Alerts

Be the first to know and let us send you an email when கௌசிகா நீர்கரங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share