11/04/2026
காத்திருப்பின் ஆசுவாசம்: வாழ்வின் ஆதாரப் பிடிமானம்
வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு எதற்கு துணை தேவை என்பதற்கு ஒரு காட்சி உண்டு. "ஊரெல்லாம் சுத்திட்டு வீட்டுக்கு போறப்ப நானே கதவ திறக்காம, என் மனைவி வந்து கதவ திறக்கனும்" என்று ஒரு ஆதங்கம் கலந்த ஆசை உண்டு. இதைக் கேட்கும்போதே ப்ரிம்யா க்ராஸ்வினின் வரிகள் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன. "வீடு வந்தால் நீ இருப்பாய் என்பது எவ்வளவு ஆசுவாசம்?! நானே தாழ் திறந்து என்னை பூட்டிக்கொள்ளும் தண்டனை நீ இல்லாத இவ்வீடு" என்கிறார் அவர்.
எழுத்தாளர் வண்ணதாசன் இதனை இன்னும் ஆழமாகப் பார்க்கிறார். "யாராவது வழியனுப்பவும் துணையிருக்கவுமாக இருந்தால் இந்த வாழ்க்கை எவ்வளவு அடர்த்தியாகி விடுகிறது" என்பார். உண்மைதான், நமக்காக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருக்கும்போது இந்த வாழ்வின் பாரம் பாதியாகக் குறைந்துவிடுகிறது.
"போய்வருகிறேன் என்று விடைபெற்றுச் செல்ல, திரும்பி வரும்போது காத்திருக்க, தனக்கே தனக்கென இருக்கும் யாரோதான் இக்கொடும் வாழ்வின் ஆதாரப் பிடிமானம்." நம்மை வழி அனுப்ப ஒரு கையும், வரவேற்க ஒரு புன்னகையும் இருக்கும் வரை இந்த வாழ்க்கை என்றும் சலிப்பதில்லை. அந்த அன்பின் பிடிமானமே நம்மை இயக்கும் மகா சக்தி.
Shared Karthik