We The Leaders Foundation

We The Leaders Foundation We The Leaders | Lead the Change
(3)

14/08/2026

தேசிய உணர்வோடு இணைந்த பசுமைப்பணிகள்!

நமது We The Leaders அமைப்பின் சார்பில், 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நமது தமிழகத்திற்கு பெருமை சேர்த்த 80 வரலாற்று நாயகர்களின் நினைவாக, மதுரை மாநகரில் 80 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

தலைவர்களின் பெயரை தாங்கி வளரும் ஒவ்வொரு மரக்கன்றும், எதிர்கால தலைமுறைக்குக் தூய்மையான காற்றை வழங்குவதோடு, நமது வரலாற்று பெருமைகளை எடுத்து கூறும்!

13/08/2026

நமது தாய் தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நாளைய தலைமுறையினர் மாசற்ற சுற்றுசூழலில் வாழ்வதை உறுதி செய்யவும் நமது 'We The Leaders' அமைப்பின் சார்பாக, தலைமை சேவகர் திரு. கே. அண்ணாமலை அவர்களின் தலைமையில் மாபெரும் "சென்னை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி" நடைபெறுகிறது.

நாள்: 16-08-2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மாலை 3:00 மணி
இடம்: ராஜரத்தினம் அரங்கம் அருகில், சென்னை

இயற்கையைக் காப்போம்! பசுமைப் புரட்சி படைப்போம்!

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாநிலமெங்கும் கொண்டு சேர்க்கும் இந்த நற்பணியில் பெருந்திரளாக பங்கேற்குமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

மாறுவோம்! மாற்றுவோம்!

12/08/2026

நமது 'We The Leaders' அமைப்பின் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நாடும் இலக்கோடு மாபெரும் பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் தொலைநோக்கு பார்வையையும், சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் இயற்கை சேவையையும் நெஞ்சில் ஏந்தி இந்த பசுமைப் பயணத்தை நாம் முன்னெடுக்கிறோம்.

ஒவ்வொரு தன்னார்வலரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, பராமரித்து வளர்க்க முன்வர வேண்டும்.

மரம் நடுவோம்! இயற்கையை காப்போம்!

சொல்லல்ல... செயல்! தமிழகம் முழுவதும் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் தூய்மை இயக்கம் மூலம் இதுவரை 52.07 டன் கழிவுகள் அகற்றப்...
11/08/2026

சொல்லல்ல... செயல்!

தமிழகம் முழுவதும் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் தூய்மை இயக்கம் மூலம் இதுவரை 52.07 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன!

18 மாவட்டங்களில் தீவிரமாகக் களம் கண்டுள்ளோம். அவற்றில், முதல் மூன்று மாவட்டங்களாக

🥇 மதுரை – 30.13 டன்
🥈 தூத்துக்குடி – 4.30 டன்
🥉 தேனி – 3.00 டன்

என அதிகளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதே வேகத்தோடு, தூய்மையான, பசுமையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற மேலும் உறுதியோடு களப்பணியாற்றுவோம்.

நமது ஒரே இலக்கு! தூய்மையான தமிழ்நாடு!

11/08/2026

தூய்மையான, பசுமையான தமிழகத்தை உருவாக்கவேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் பலகட்ட தூய்மை மற்றும் பசுமை பணிகளை முன்னெடுத்து செயல்படுத்துகிறது நமது வீ தி லீடர்ஸ் அமைப்பு.

நமது தமிழகத்தின் ஐந்திணை நிலப்பரப்புகளையும், 1,076 கிமீ நீல கடல் பகுதியையும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நீர் நிலைகளையும் தூய்மைப்படுத்தி மீட்டெடுக்கும் கொள்கையோடு களப்பணிகளை மேற்கொள்கிறோம். தமிழகம் முழுவதும் 20,00,000 மரக்கன்றுகளை நடும் இலக்குடன் நடைபோடுகிறோம். இந்த மாபெரும் இயக்கத்தில் மக்களாகிய உங்களின் பங்களிப்பு மகத்துவமானது. நம்மால் முடிந்த தூய்மை மற்றும் பசுமை பணிகளை முன்னெடுப்போம். தமிழகத்தின் பசுமையை காப்போம்.

இயற்கையை காப்பது, நம்மை நாமே பாதுகாப்பதாகும்!

மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்! தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!

07/08/2026

தமிழகத்தின் பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்ட தூங்கா நகரமான மதுரை மண்ணில் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தூய்மை மற்றும் பசுமை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மதுரை மாவட்டத்தின் முக்கிய நீராதாரணமான வைகை நதி பாய்ந்து ஓடும் பகுதிகளிலும், கரையோரப் பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மதுரையில் பல பகுதிகளில் நமது அமைப்பின் சார்பில் மரம் நடும் நிகழ்வுகளும் நடைபெற்றன. மிகுந்த உற்சாகத்தோடு பெருந்திரளாக நமது இயக்கத்தில் பங்கேற்று களப்பணியாற்றிய அனைத்து மக்களுக்கும் நமது இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை நோக்கி ஒன்றாக அடியெடுத்து வைப்போம்!

மாறுவோம்… மாற்றுவோம்!

கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான 175 கிமீ நீள கடற்கரையை 365 நாட்களில் தூய்மையாக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் ...
06/08/2026

கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான 175 கிமீ நீள கடற்கரையை 365 நாட்களில் தூய்மையாக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் களத்தில் இறங்கியுள்ள நமது We The Leaders அமைப்பின் சார்பாக கன்னியாகுமரி அருகே சொத்தவிளை, தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி ஆகிய கடற்கரை பகுதிகளில் மாபெரும் தூய்மை இயக்கம் வரும் ஆகஸ்ட் 9 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

கடலோடும் மீனவர்களையும், கடலோடு வாழும் உயிர்களையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு நடைபெறும் இந்த இயக்கத்தில் பங்கெடுங்கள்.

மாற்றத்தை உருவாக்க கைகொடுங்கள்!

தன்னெழுச்சியோடு வாருங்கள்!
தூய்மையான தமிழகம் படைப்போம்!

04/08/2026

நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற “நம்ம குமரி தூய்மையான” குமரி நிகழ்வை நமது தலைமை சேவகர் திரு.கே.அண்ணாமலை அவர்கள் தொடங்கி வைத்து தன்னார்வலர்களோடு இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டார்.

பெருந்திரளாக கலந்து கொண்டு நமது தூய்மை இயக்கத்திற்கு ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

வாருங்கள்! சுத்தமான சூழலை உருவாக்குவோம்! தூய்மையான தமிழகம் உருவாக்க ஒன்றிணைவோம்!

Address

No 20, 50 Feet Road, Krishnaswamy Nagar, Ramanathapuram
Coimbatore
641045

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to We The Leaders Foundation:

Shortcuts

Share