08/11/2024
https://youtu.be/rqikrkI9tGY?si=VwsnmVULv_6xQm0B
NN News Network
கோவையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் வளாகம் :
கோயமுத்தூர் ஜுவல்லரி கிளஸ்டர் சார்பில் சேர்மன் திரு அஞ்சலி C. N. சீனிவாசன், மேலாண்மை இயக்குனர் ராகவேந்திரா திரு.T.செந்தில்குமார், நிதி இயக்குனர் கடம்பூர் S. சீனிவாசன் ஆகியோர்கள் கிளஸ்டர் வளாகத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழக முதல்வரை வரவேற்று பங்குதாரர்களுடன் நன்றி தெரிவித்தனர்
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
கோவை குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் தங்க நகை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், தொழிலின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காகவும் கோவையில் தங்க நகை தொழில் வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோயம்புத்தூர் ஜுவல்லரி கிளஸ்டர் சார்பில் அதன் தலைவர் சி.என் சீனிவாசன்,
மேலாண்மை இயக்குனர்
டி.செந்தில்குமார்,
நிதி இயக்குனர்
எஸ்.சீனிவாசன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். மேலும், 60 பங்குதாரர்களால் ரூபாய் 4 கோடி முதலீடு செய்யப்பட்டு மத்திய மாநில அரசுகளின் ஒப்புதல்களோடு தயார் நிலையில் உள்ள எங்களது கிளஸ்டர் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தி, பொற்கொல்லர்களின் பொது பயன்பாட்டிற்காக (CFC) மத்திய, மாநில அரசின் தங்க நகை தொழில் கூடத்தை முதல்வர் திறந்து சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொண்டோம். கோயம்புத்தூர் தங்க நகை கிளஸ்டர் திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட தொழில் மையம், கோயம்புத்தூர் சிட்கோ, சென்னை டான்சிட்கோ, எம்எஸ் எம்இ உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் ஜுவல்லரி கிளஸ்டர் இயக்குனர்கள்
பிரேம்குமார், சுப்புராஜ்,
பி. காளியப்பன், ஆர்.பி சண்முகம், எம்.ரமேஷ்,
பி.ராமமூர்த்தி, வைரவமூர்த்தி,
மற்றும் பங்குதாரர்கள்
ஆர்.அய்யாதுரை, எஸ்.தனபாலன், எம்.விஜயகுமார், ராம் பிரகாஷ், வெங்கடாசலம்,
அர்ஜுன், வெங்கடேஸ்வரன்,
ஆறுமுகம், செல்வம், சீனிவாசன்,
பாலசுப்பிரமணி,
ராஜ்ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.