Maa - நகராட்சி மக்கள் குரல்

  • Home
  • India
  • Chennai
  • Maa - நகராட்சி மக்கள் குரல்

Maa - நகராட்சி மக்கள் குரல் VOICE of people in Tambaram, Pallavaram, Chromepet, Anakaputhur, Pammal, Perungalathur, Madambakkam.

தாம்பரம் மாநகராட்சி பகுதியில், வீட்டு எண்கள் பல தெருக்களில், ஒரே எண் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டு இருப்பதை நாம் ...
18/08/2026

தாம்பரம் மாநகராட்சி பகுதியில், வீட்டு எண்கள் பல தெருக்களில், ஒரே எண் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டு இருப்பதை நாம் காண்கிறோம்.
பல தெருக்களில் இந்த ஐந்து ஆண்டுகளில் பல மனைகள் இரண்டாக பிரிக்கப்பட்டு அதே கதவு எண் A, B என்று பதிவிடப்பட்டிருப்பதை காண்கிறோம். பல மனைகள், கட்டிட விதிகளை தவிர்ப்பதற்கு மனை உட்பிரிவு மேற்கொள்ளப்பட்டு அதற்கு ஒரு கதவு எண் கொடுக்கப்படுகிறது.
பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் எந்த மனைக்கும் கதவு எண் கொடுக்கப்படவில்லை.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் விரிவாக்க பகுதி நகர்களின் தெருக்களில் கதவு எண்கள் அவரவர் விருப்பத்திற்கு பதிவு செய்து கொள்கின்றனர்.
தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்த முறைப்படுத்தப்படாத வீட்டு எங்களினால் பல குளறுபடிகள் நேரிட வாய்ப்புகள் அதிகம்.
தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலை, தெருக்களின் மனை, வீட்டு எண்களை முறையாக வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

15/08/2026

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 2, பழைய பல்லாவரம், வார்டு 21 இல் உள்ளது பெருமாள் நகர் ஐந்தாவது குறுக்கு தெரு.
இங்கு உள்ள பூங்கா, பராமரிப்பின்றி, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடப்பதை காணமுடிகிறது.
மாநகராட்சி பகுதியில் பல பூங்காக்கள் இதே நிலைமையில் உள்ளது. ஆனால் சில பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு நல்ல நிலையில் இருந்தும் தேவையில்லாமல் அந்த பூங்காக்களுக்கு, மறு சீரமைப்பு என்ற பெயரில் பெரும் தொகை ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கொடுத்து வேலை மேற்கொள்ளப்படுகிறது. (மண்டலம் 2, வார்டு 26, மறுசீரமைப்புத் தொகை 21.5 லட்சம்).
அதே சமயம் மாநகராட்சி பல இடங்களில் புதுப்புது பெயர்களில் (Pink Park, Sponge Park) பல லட்சங்கள் செலவில் பூங்காக்கள் அமைத்து வருவதை நாம் காண்கிறோம்.
தாம்பரம் மாநகராட்சி பராமரிப்பின்றி, உபகரணங்கள் சேதமடைந்து இருக்கும் பூங்காக்கள் மீது தன் பார்வையை திருப்பி அவ்வப்போது சிறு தொகைகளை செலவு செய்து அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Chief Minister of Tamil Nadu
TN_maws
TN Municipal Administration
Tambaram Corporation

14/08/2026

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 2, குரோம்பேட்டை, வார்டு 26 இல், ராதா நகர் பிரதான சாலை உள்ளது.
தற்பொழுது இங்கு ஒரு புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் நிலையில் உள்ளது இந்த கட்டிடத்தின் முன்பக்கத்தில்
8-10 அடி இடம் விடப்பட்டுள்ளது.‌
தரைத்தளத்தில் ஒரு கடை வருவதாக தெரிகிறது.
இந்த கட்டிடம் ஒரு மருத்துவமனை என்று சொல்லப்படுகிறது. மருத்துவமனை என்றால் அங்கு வரும் நபர்களுக்கு வாகன நிருத்தம் எங்கே?
வாகன நிறுத்தம் இல்லாமல் வணிக பயன்பாட்டுக்கான கட்டிடங்களுக்கு அனுமதி கொடுப்பது யார்?
மாநகராட்சியின் நகரமைப்பு அலுவலர் மற்றும் நகரமைபு ஆய்வர்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
நடவடிக்கை எடுக்காததனால், நகர அமைப்பு அலுவலர்/ஆய்வர் ஏதேனும் ஆதாயம் பெறுகிறார்களா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.
இந்த இடத்தில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை நாம் காண்கிறோம், ஆகையால் இந்த கட்டிடத்திற்கு வாகனம் நிறுத்த இடம் ஒதுக்கப்படுவது அவசியம்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் தொடர்ந்து விதி மீறிய கட்டிடங்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்.
இந்தப் பதிவு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் செயலாளர் மற்றும் மாநகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அவர்களின் பார்வைக்கு, மேல் நடவடிக்கைக்கு.

Chief Minister of Tamil Nadu
TN_maws
TN Municipal Administration
CMDA Chennai
Tambaram Corporation
Chengalpattu District

Cop Tambaram

13/08/2026

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 3, நெமிலிச்சேரி, வார்டு 22, ஓம் சக்தி நகர், இங்கிலீஷ் எலக்ட்ரிக் நகர் அருகில் உள்ளது இந்த இடம்.
வடமாநில கட்டிடத் தொழிலாளர்கள் குடியிருக்கும் இந்த குடியிருப்பு பகுதியை சுற்றி குப்பைகள், அருகிலுள்ள வாய்க்காலில் கழிவு நீர், ஆங்காங்கே பள்ளங்களில் கழிவு நீர் கலந்த மழை நீர் தேங்கி கிடக்கிறது.
இந்த இடத்தை உடனடியாக மாநகராட்சியின் சுகாதார அதிகாரி ஆய்வு மேற்கொண்டு, மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் அல்லது, அந்தக் கட்டுமான நிறுவனமான இந்த இடத்தை சுத்தம் செய்ய மாநகராட்சி உத்தரவிட வேண்டும்.

Chief Minister of Tamil Nadu
TN_maws
TN Municipal Administration
Tambaram Corporation
Chengalpattu District
Prestige Group

09/08/2026

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, மண்டலம் 3, நெமிலிச்சேரி, வார்டு 22 இல், ஓம் சக்தி நகர், இங்கிலீஷ் எலக்ட்ரிக் நகர் உள்ளது.
இங்கு உள்ள விளையாட்டு திடலில் தாம்பரம் மாநகராட்சி, அப்பகுதி மக்களுக்கு எந்த அறிவிப்பும் இன்றி, விளையாட்டு திடலில் அறிவிப்பு பலகை அமைக்காமல் கட்டுமான வேலைகளை நடத்தி வருகிறார்கள்.
அப்பகுதி மக்கள் எந்த கட்டுமானமும் வேண்டாம் எங்களுக்கு அது விளையாட்டு மைதானமாக, (தங்கள் குழந்தைகள் ஓடி விளையாட) வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து, ஒப்பந்ததாரர்கள் லாபம் அடையும் நோக்கோடு, கட்டுமானங்கள் அமைத்து மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்ய/கொள்ளை அடிக்க துடிக்கிறது தாம்பரம் மாநகராட்சி.
மாநகராட்சி ஆணையர் உடனடியாக, மைதானத்தில் நடைபெறும் கட்டுமான வேலைகளை தவிர்த்து, அப்பகுதிவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

(Area Sabha/பகுதி சபைகள் முறையாக செயல்பட்டு/ கூட்டப்பட்டு இருந்தால் இத்தகைய பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டிருக்கும்)

https://www.facebook.com/share/v/1DTZsJhfnW/

Chief Minister of Tamil Nadu
TN_maws
TN Municipal Administration
Tambaram Corporation
Chengalpattu District

03/08/2026

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 3, அஸ்தினாபுரம், சரஸ்வதி நகர் பகுதியில் 24 மணி நேரமும், மாநகராட்சியின் மழை நீர் வடிகால் வழியாக கழிவுநீர் ,நன்மங்கலம் ஏரியில் கலக்கும் காட்சிதான் இது.

01/08/2026

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில், எங்கெல்லாம் சிமெண்ட் கான்கிரீட் வேலைகள் மேற்கொள்ளப்படுகிறதோ அங்கெல்லாம் அந்த கான்கிரீடின் தரம் குறைவாக உள்ளது, அதாவது சிமிண்டின் விகிதம் குறைவாகவும்,
மலைமண் தூசி (Quarry Dust) கலந்த M சாண்ட் உபயோகிப்பதால் சிறு பாலங்களின் (Culvert) மேல் பகுதி சிறிது காலத்தில் தேய்ந்து, தூசியாக பறந்து மாசு ஏற்படுத்தி, மழையில் கரைந்து மேடும் பள்ளமும் ஆக உள்ளது. சிமெண்ட் சாலைகள் பேட்ச் ஒர்க் வேலைகளிலும் இதே நிலைதான்.
கீழே உள்ள காணொளியில் காணப்படும் கல்வெட்டு மண்டலம் 2, வார்டு 26 உள்ளது.
இதுபோன்று சமீப காலங்களில் தேவையில்லாமல் பல தெருக்களில், உயர்த்தி கட்டமைக்கப்பட்ட சிறுபாலங்களின் நிலை இதுதான்.
ஆகையால் மாநகராட்சி ஆணையர் ஒப்பந்த வேலைகள் நடைபெறும் பொழுது ஆய்வு மேற்கொள்வதை போல் வேலைகள் மேற்கொண்ட பின் அவற்றின் தரத்தை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Chief Minister of Tamil Nadu
TN_maws
TN Municipal Administration
Tambaram Corporation
Chengalpattu District

31/07/2026

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 அஸ்தினாபுரம், வார்டு 22, பொன்னியம்மன் கோவில் தெரு, மழை நீர் வடிகால் பாலம் அருகே கடந்த 3 மாதங்களாக, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாகி வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகள்/ஊழியர்கள் யார் கண்களிலும் இது படவில்லையா?
தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இங்கு உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால், இப்படி குடிநீர் வீணாகிறது.
இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

TN_maws
TN Municipal Administration
Tambaram Corporation

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, மண்டலம் 2, பழைய பல்லாவரம் வார்டு 14, 15, 21 இல் உள்ளது தர்கா சாலை மற்றும் பி.வி. வைத்தி...
30/07/2026

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, மண்டலம் 2, பழைய பல்லாவரம் வார்டு 14, 15, 21 இல் உள்ளது தர்கா சாலை மற்றும் பி.வி. வைத்தியங்கள் சாலை.
40 அடி அகலம் உள்ள பி.வி. வைத்தியலிங்கம் சாலை
தற்பொழுது வெறும் 18 அடி அளவிலேயே உள்ளது. அப்பகுதி மக்கள் இதனால் பல இன்னல்களுக்குள் ஆளாகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சியின், மண்டலம் 3, வார்டு 23 இல்‌, பல்லாவரம் தாலுக்கா அலுவலகம் அருகே அமைந்துள்ளது புத்தேரி.இந்த ஏரி தொட...
28/07/2026

தாம்பரம் மாநகராட்சியின், மண்டலம் 3, வார்டு 23 இல்‌, பல்லாவரம் தாலுக்கா அலுவலகம் அருகே அமைந்துள்ளது புத்தேரி.
இந்த ஏரி தொடர்பாக 2020 (O.A. 55 of 2020) இல் இருந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தென்மண்டலத்தில் வழக்கு(M.A. 7 of 2024) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
2022இல் ஏரியின் அளவு மேற்கொண்ட பட்டு, எல்கை வரையருக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பின்பு ஏரியை சீரமைக்க வேண்டும் என்று தேசிய பசுவை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை மறைத்து தாம்பரம் மாநகராட்சி CMDA வுக்கு ஏரியை சீரமைக்க தடையில்லா சான்று (NOC) வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
NGT தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி, மறைத்து, தாம்பரம் மாநகராட்சி, முக்கியமாக ஆணையர்
திரு சி பாலச்சந்தர் இ.ஆ.ப. அவர்கள் செயல்பட்டார் என்பது நம் குற்றச்சாட்டு.

Chief Minister of Tamil Nadu
CMDA Chennai
TN_maws
TN Municipal Administration
Tambaram Corporation
Chengalpattu District

Address

Chennai
600044

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maa - நகராட்சி மக்கள் குரல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share