03/08/2026
துளிர் ஃபவுண்டேஷன் டிரஸ்டின் முதலாம் ஆண்டு விழா 2026 ஆகஸ்ட் 2 அன்று சென்னை தி ரெசிடென்சி டவர்ஸ் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாண்புமிகு சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, துளிர் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் கடந்த ஓராண்டாக கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைகளில் மேற்கொண்டு வரும் சேவைகளைப் பாராட்டி சிறப்புரையாற்றினார். மேலும், சமூக நலனுக்காக இளைஞர்கள் அதிகளவில் தன்னார்வப் பணிகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, துளிர் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் அமைப்பின் குழந்தைகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரித்த கைவினைப் பொருட்கள் இடம்பெற்றிருந்த "Green by Thulir" அரங்கினை அமைச்சர் பார்வையிட்டு, அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் தயாரித்த பொருட்களை வாங்கி ஊக்குவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான 'துளிர் சிறப்பு கல்வி உதவித்தொகைகளை' மாண்புமிகு அமைச்சர் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார். மேலும், துளிர் ஃபவுண்டேஷன் டிரஸ்டின் சமூகப் பணிகளில் சிறப்பாக பங்காற்றிய "Star Volunteers" -களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வில் சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு. ஜி. சுந்தர்ராஜன், முன்னாள் மாவட்ட நீதிபதி திரு. மு. கருணாநிதி , மூத்த பத்திரிகையாளர் திரு. ஷபீர் அகமது, சமூக ஊடகப் பிரபலம் திரு. மதன் கௌரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.
கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாடு உள்ளிட்ட சமூக நலப் பணிகளைத் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்போவதாக துளிர் ஃபவுண்டேஷன் டிரஸ்டின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
CTR.Nirmalkumar