அத்திக்குழு பசுமை அறக்கட்டளை AthiKuzhu Green Trust

  • Home
  • India
  • Chennai
  • அத்திக்குழு பசுமை அறக்கட்டளை AthiKuzhu Green Trust

அத்திக்குழு பசுமை அறக்கட்டளை AthiKuzhu Green Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அத்திக்குழு பசுமை அறக்கட்டளை AthiKuzhu Green Trust, Nonprofit Organization, Door No. 3/6 (1), Thiruvenkadam Street, , , Edapalayam, Manali, Chennai.

பசுமை பரப்பை அதிகரிக்க மரம் நடுதல்

அடர்வனங்களை தொடர்ந்து உருவாக்குதல்

உரிய காலங்களில் அரிய வகை விதைகளை சேகரித்தல்

பனை விதைகள் சேகரித்து உரிய நேரத்தில் நடவு செய்தல்

இயற்கை வேளாண்மை

மரபு விளையாட்டுகளையும்

நெகிழி மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கும்

நாள்:-22.05.26. தமிழக அரசின் அரசின் முதன்மைச் செயலாளர் டாக்டர்.P. செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்  அவர்கள் உயர்திரு  முதன்மை தலை...
22/05/2026

நாள்:-22.05.26.
தமிழக அரசின் அரசின் முதன்மைச் செயலாளர் டாக்டர்.P. செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் அவர்கள் உயர்திரு முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் வனத்துறைகளின் வனப்படை தலைமை அலுவலர் அவர்களுக்கு வழங்கிய கடித எண். 13/நாள்.11.01.25 ன் படி மாநிலத்தில் பரவலாக காணப்படக்கூடிய கோனோகார்பஸ் வகை மரங்களை (அவை மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் தன்மைகளின் காரணமாக) நீக்கி விட்டு , அதற்குப் பதிலாக வேறு நாட்டு மரபு ரக மர கன்றுகளை நடவு செய்திட அறிவுறுத்திய கடித நகல் காண்க.
ஆயிரம் நாளில் பசுமை வடசென்னை என்பதை இலக்காக கொண்டு இதுவரை கடந்த 738 நாளில் (21.05.26) 12010 மரக்கன்றுகளை வடசென்னை பகுதிகளில் நடவு செய்து வருவதுடன் , கோரிக்கை அடிப்படையில் தமிழகம் எங்கும் மரக்கன்றுகளையும், பனை விதைகளையும் இலவசமாக அனுப்பி பசுமை பரவலை உயர்த்தி வருகிறோம்.

மேலும் சமீபத்தில் 2024-2025 ஆண்டுக்கான பசுமை முன்னவர் விருதினை சென்னை மாவட்டத்தில் எங்கள் பங்களிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்றுள்ளதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.

தவிர்க்கப்பட வேண்டிய கோனோகார்பஸ் வகை மரங்கள் அதன் தன்மையும், பொதுமக்களுக்கு பெயரும் தெரியாமலேயே தலைநகரில் பல இடங்களிலும் (குறிப்பாக சென்னை-தினத்தந்தி அலுவலகம் இருந்து வேப்பேரி காவல் நிலையம் செல்லும் சாலை ஓரம், மாதவரம் தோட்டக்கலை பூங்கா பின்புற சாலை, எர்ணாவூர் மேம்பாலம் அருகே, திருவள்ளூர் -மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை காம்பவுண்ட், மணலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பல தொழிற்சாலைகள், திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் ஆலய வெளிவட்ட பாதை, விருதுநகர் என) இவ்வகை மரங்கள் பல இடங்களிலும் வளர்வதை காண முடிகிறது.

அரசின் அறிவிப்பும், மரத்தை பற்றிய படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் மண்டலம் 1,2,3 அலுவலகங்களுக்கும் மற்றும் திருச்செந்தூர் ஆகிய உரிய விபரங்களுடன் கடிதம் வழங்கியும் உள்ளோம்.

நாம் செல்லும் இடங்களில் இந்த மரங்கள் இருப்பதை தொடர்ச்சியாக அறிந்தவுடன், இயற்கை ஆர்வலர் என்ற முறையில் இது பற்றியஅச்சம் ஊட்டுவதாக அமைகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று (21.05.26) சென்னையில் இருந்து ரயில் மூலம் பயணிக்கையில் ஆண்டிபட்டி ரயில் நிலைய நடைமேடை பகுதி முழுவதம் இதே வகை கோனோகார்பஸ் வகை மரங்கள் புதிதாக நடவு செய்து வளர்ந்து வருவதை அறிகிறோம்.

எனவே மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் இது சம்பந்தமான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல் தருவதுடன், வளர்ந்து வரும் கோனோகார்ப்பஸ் மரங்களை வேரோடு களைந்து நமது நாட்டு ரக மரங்களை வளர செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

இனியும் காலம் கடத்தாமல் மக்கள் நலனில் பொறுப்புள்ள புதிய அரசு, தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள அன்புடனும் நம்பிக்கையுடனும் வேண்டுகிறோம்.
இயற்கைய மீட்போம்.

21/05/2026
26/04/2026

மனித இனம் இல்லை என்றால், இந்த பூமி என்னவாகும்?

07/04/2026

அத்திக்குழுவில் பயணிக்கும் அனுபவத்தை பகிரும் துணைத் தலைவர் திருமதி.யோகநந்தினி.

07/03/2026

வாய்ப்புகளுக்காக ஏங்கும் உள்ளங்கள் எத்தனையோ!!.. முதல் முறை பேச்சாளர்கள் என்பது நம்மால் ஊகிக்க முடியாது.. ஒவ்வொருவருக்குள்ளும் மிகப்பெரிய பேச்சாளரும் இருப்பதை இவரது பேச்சில் உணர முடிகிறது. கடந்த 01.03.26 ஞாயிறன்று மணலி புத்தர் கோயிலில் குழுவின் சார்பாக நடைபெற்ற மகளிர் தின விழாவில் 100% பெண்களே. ஆம்,நிகழ்வு துவக்கம் முதல் நன்றி கூறும் வரை பெண்களே பங்கெடுத்த அருமையான நிகழ்வு.

சிறப்பு வாய்ப்பாக இன்றைய களப்பணியில் (07.03.26) சனிக்கிழமை மணலி அத்தி நாற்றுப் பண்ணையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டத...
07/03/2026

சிறப்பு வாய்ப்பாக இன்றைய களப்பணியில் (07.03.26) சனிக்கிழமை மணலி அத்தி நாற்றுப் பண்ணையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. (1) சுமார் 30க்கும் மேலான மகிழம் மரக்கன்றுகள் தனித்தனியே நெகிழிப் பைகளில் பதிக்கப்பட்டு , நீரிடப்பட்டது. (2) சுமார் 120க்கு மேலான மரக்கன்றுகள் திறந்தவெளி அறையில் இருந்து நாற்றங்கால் பகுதிக்கு தரை விரிப்புடன் இடமாற்றப்பட்டது. (3) கடந்த வாரம் அறுவடையான மஞ்சள் வகை கிழங்குகள் பாதிக்கு மேலாக சீர் செய்யப்பட்டு எடுத்து வைக்கப்பட்டுள்ளது. (4) நெகிழிப் பைகளில் உள்ள நாற்றுக்கள், மற்றும் மேட்டுப்பாத்தி தோட்டத்திற்கு நீர் விடப்பட்டது. (5) வருகை தந்தவர்களுக்கு சுண்டைக்காய் செடி, கரு ஊமத்தை, தும்பை, கறிவேப்பிலை, குரோட்டன்ஸ், மற்றும் அழகு செடிகள் வழங்கப்பட்டது. இயற்கை இனிது. நன்றி.

ஒவ்வொரு குடும்பத்தின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உண்டு. அதேபோல நமது அத்திக்குழு  ஒரு பெரிய குடும்பம். அதன் வெற்றிக்க...
01/03/2026

ஒவ்வொரு குடும்பத்தின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உண்டு. அதேபோல நமது அத்திக்குழு ஒரு பெரிய குடும்பம். அதன் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும், களப்பணி முதல் குழுவின் அனைத்து நிகழ்வுகளுக்கும் பக்கபலமானவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களே. ஆம், குழுவின் சார்பில் கொண்டாடப்பட்ட இன்றைய மகளிர் தினம் கொண்டாட்டத்தில் தலைமை ஏற்பது முதல் நன்றி கூறுவது வரை முழுமையும் குழுவில் பயணிக்கும் பெண்களே.. பெண் குழந்தைகளே.. உற்சாகமாக மேடை கண்ட முதல் முறை பேச்சாளர்களும் மிகச் சிறப்பாக பேசியது நாளை முதல் பதிவேற்றப்படும். இயற்கை இனிது. நன்றி.

23/02/2026
அனைவரும் வருக 🙏🌳
03/01/2026

அனைவரும் வருக 🙏🌳

இன்று (14~12~25) காலை மிகச் சரியாக 10 மணிக்கு , கோடம்பாக்கம் R 2 காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள  படைப்பு அரங்கத்தில்,இரா...
14/12/2025

இன்று (14~12~25) காலை மிகச் சரியாக 10 மணிக்கு , கோடம்பாக்கம் R 2 காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள படைப்பு அரங்கத்தில்,

இராம. செ சுப்பையா நினைவு அறக்கட்டளை மூலம் நடத்திய நாவல் போட்டியில் வென்ற 5 படைப்பாளிகளின் நாவல்கள் வெளியிடு மற்றும் பரிசளிப்பு விழா.

எனது போத்து நாவல் சிறப்பு பரிசு பிரிவில் தேர்வாகியுள்ளது.

மரபு விவசாயத்தை லாபகரமாகச் செய்யத் தேவையான மரபு விதைகள், ஒரக்குழி, உயிர்வேலி, மதிப்புக்கூட்டல், ஒருங்கிணைந்த பண்ணையம், மூடாக்கு, கிராமப்புற முன்னேற்றம், பெண்களின் சுயசார்பு, வேளாண் சுற்றுலா, இன்னும் பல விஷயங்களை முன்னெடுத்து 'கொழிஞ்சி' எனும் கூட்டமைப்பு மேற்கொள்ளும் முயற்சி, அதன் ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்துவின் வழிகாட்டுதல், கிடைக்கும் வெற்றி, இவற்றைப் புனைவாகக் கொண்டு செய்த முயற்சியே இந்த நாவல்.

திரு அமிர்தம் சூர்யா துவக்க உரையாற்றுகிறார்.

திரு தேவ சுப்பையா நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார்.

எழுத்தாளர் அ.வெண்ணிலா பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

திரு லார்க் பாஸ்கரனின் அட்டை வடிவமைப்பில் தம்பி நல்லு இரா.லிங்கம் அவர்களின் நாற்கரம் பதிப்பகம் நாவல்களை சிறப்பாக உருவாக்கியிருக்கிறது.

நடுவர்கள் திரு ரிஷபன்,

திரு கோமதிசங்கர்,

திரு கோவை பிரசன்னா,

திரு சோ.பாலகுமார்,

ஆகியோர் தேர்வுரை வழங்குகிறார்கள்.

சகபடைப்பாளர்களான நாவலாசிரியர்கள்,

திரு.வி. ஜீவகுமாரன்

திரு.அண்டனூர் சுரா.

திரு.மீனாசுந்தர்.

திரு முஹம்மது மஹ்ரூப். ஆகியோரின் ஏற்புரையுடன் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

தோழமை எழுத்தாளர், நடிகை ரேகா அவர்கள் சிறப்பாக நிகழ்வை தொகுத்து வழங்கவிருக்கிறார்.

மதிய உணவுடன் விழா நிறைவடையும்.

மரபுகாய்கறி விதைகள் பகிர்வோடு, மாயன்கீரை, தவசிமுருங்கை, ஆடுதொடா, வாதநாராயணன், திப்பிலி மற்றும் ட்ராகன் ப்ரூட் பதியன்கள் பகிர்வும் உண்டு.

சிறப்பான விழாவில் கலந்துகொள்ள உங்களையும் அழைக்கிறோம்.

இயற்கை இனிது.
வானவன்.

Address

Door No. 3/6 (1), Thiruvenkadam Street, , , Edapalayam, Manali
Chennai
600068

Website

Alerts

Be the first to know and let us send you an email when அத்திக்குழு பசுமை அறக்கட்டளை AthiKuzhu Green Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share