Arappor - அறப்போர் இயக்கம்

Arappor - அறப்போர் இயக்கம் நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்.
(591)

வருகிற ஞாயிறு காலை 10.30 மணிக்கு ஈரோடு அறப்போர் தன்னார்வலர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. ஊழலுக்கு எதிரான அறப்போர் குர...
16/07/2026

வருகிற ஞாயிறு காலை 10.30 மணிக்கு ஈரோடு அறப்போர் தன்னார்வலர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. ஊழலுக்கு எதிரான அறப்போர் குரல் மேலும் வலுவடைய உங்களுடைய பங்களிப்பு அவசியம். திரண்டு வாருங்கள்.
Location - https://maps.app.goo.gl/nk6LuLaL13XCYtwL7

பொள்ளாச்சியில் 28 டெண்டர்களுக்கு விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரர்களை நேரில் வரவழைக்கும் வகையில் கொடுக்கப்பட்டிருந்த கண்டிஷன்...
16/07/2026

பொள்ளாச்சியில் 28 டெண்டர்களுக்கு விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரர்களை நேரில் வரவழைக்கும் வகையில் கொடுக்கப்பட்டிருந்த கண்டிஷன் அறப்போர் புகாரை அடுத்து நீக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். டெண்டர் விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரர்களை நேரில் வரவழைக்கும் திமுக அதிமுக ஆட்சி காலத்து செட்டிங் டெக்னிக்குக்கு நிரந்தர முடிவு கட்டுங்கள். மேலும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் வகையில் போடப்படும் லிமிடெட் டெண்டர்களை ஓபன் டென்டர்களாக மாற்றி போட்டியை பரவலாக்குங்கள். இதன் மூலம் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் அதிக விலைக்கு டெண்டர் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவது தடுக்கப்படும்.

அறப்போர் தொடரும். Chief Minister of Tamil Nadu

15/07/2026

திருநெல்வேலி, இருக்கன்துறை ஊராட்சியில் ரூ43 இலட்சம் மதிப்பிலான ஒப்பந்த அறிவிப்பில் (Tender ID:2026_RDTN_684085_1 & 2026_RDTN_684085_2) விதி மீறல் அறிவிப்பு உள்ளது.

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில், 06.07.2026 அன்று வெளியிடப்பட்டு இன்று (15.07.2026) நிறைவுற இருக்கும் அந்த அறிவிப்பில் இருக்கும் நிபந்தனைகள், அரசாணை எண் G.O.(Ms.) No.115, Rural Development and Panchayat Raj Department - Date 30.06.2026 இக்கு முரணான வகையில், குறிப்பிட்ட பகுதியை சார்ந்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் வகையில் நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளது.

எனவே, டெண்டர் செயல்முறையை இரத்து செய்து, நிபந்தனை விதிகளை மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்பு வெளியிடவேண்டும்.

இது குறித்த கடிதம் இன்று முதலமைச்சர் திரு.C.விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அமைச்சர் திரு.N.ஆனந்த், செயலாளர், திரு. பிரசாந்த் மு. வடநெரே,IAS, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், IAS அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு முறை நடந்தால் திருத்திக் கொள்ள சொல்லலாம். மீண்டும் மீண்டும் நடந்தால்..? தமிழக அரசின் உத்தரவை மீறும் தைரியம் பொள்ளாச்...
15/07/2026

ஒரு முறை நடந்தால் திருத்திக் கொள்ள சொல்லலாம். மீண்டும் மீண்டும் நடந்தால்..?
தமிழக அரசின் உத்தரவை மீறும் தைரியம் பொள்ளாச்சி நீர்வளத்துறை பொறியாளருக்கு எப்படி வந்தது?

ஒப்பந்ததாரர்களை நேரில் சந்திப்பதை தடுக்கவும், குறிப்பிட்ட சிலர் மட்டும் பங்கேற்கும் லிமிட்டெட் டெண்டர்களை தடை செய்தும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்படுகிறதா? என்ன செய்ய போகிறார் WRD அமைச்சர் ஆனந்த் அவர்கள்?

இந்த 28 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு இனியும் இந்த திருட்டு தொடராமல் இருக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் விஜய் அவர்கள் உத்தரவிடுவாரா?

Chief Minister of Tamil Nadu TVK Vijay

சோனம் வாங்க்சுக் 18 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கிறார். இந்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கல்வி...
15/07/2026

சோனம் வாங்க்சுக் 18 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கிறார். இந்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கல்வி துறையில் நடந்த CBSE , NEET, CUET தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தன் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்பட வேண்டும் என்று கோரியும் உண்ணாவிரதம் இருக்கிறார்.

அவரிடம் ஒன்றிய பாஜக அரசு பேச்சுவார்த்தை கூட செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மோடி அரசின் இந்த முறைகேடுகளால் பல்வேறு மாணவர்கள் இறந்துள்ளனர். மாணவர்கள் மீது துளி அக்கறை இருந்தால் கூட மோடி அரசு இப்படி மௌனம் காக்காமல் மாணவர்களுடன் பேசி இருக்கும். பேச்சுவார்த்தை கூட நடத்தாத இவ்வளவு கொடூரமான ஆட்சியாளர்களை நாம் இதுவரை சந்தித்தது இல்லை.

சோனம் வாங்க்சுக் மற்றும் ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. உடனடியாக கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். சோனம் வாங்க்சுக் மற்றும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு அறப்போர் இயக்கம் துணை நிற்கிறது!

Sonam Wangchuk has been on a hunger strike for 18 days. He is fasting to demand that India's Education Minister, Dharmendra Pradhan, take responsibility for the irregularities in the CBSE, NEET, and CUET exam systems, and that he be removed from his position as Education Minister.

It is highly condemnable that the Union BJP government has not even held talks with him. Due to these irregularities by the MODI government, several students have lost their lives. If the MODI government had even a shred of concern for the students, they would not have remained silent like this and would have spoken with them instead. We have never encountered such cruel rulers who refuse to even hold a dialogue.

The demands of Sonam Wangchuk and the students protesting at Jantar Mantar are just. Education Minister Dharmendra Pradhan must be removed from his post immediately. The government must listen to the demands of the students. Arappor Iyakkam stands in support of this protest by Sonam Wangchuk and the students!

பேராசிரியர் மோசடியில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மோசடியாக அங்கீகா...
13/07/2026

பேராசிரியர் மோசடியில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மோசடியாக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒரு வருடம் நிறுத்தி வைப்போம் என்று சொன்னது என்னாச்சு? ஒருவர் 11 தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிவதாக பட்டியலில் இருந்தாரே அவர் எங்கே இருக்கிறார்? அவரை ஏன் இது வரை கைது செய்யவில்லை? அவரை போல மோசடி பேராசிரியர்கள் பலர் இன்னும் எந்த நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் சுதந்திரமாக சுற்றித் திரிவது எப்படி?

பழைய கதை இப்படி இருக்க இந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற ஆய்வுகளின் விவரங்கள் எப்பொழுது வெளியிடப்படும்? கடந்த திமுக ஆட்சியில் மாணவர்கள் கல்வியில் காட்டிய அதே அலட்சியத்தை தற்பொழுதும் காட்டாமல் மோசடி செய்த தனியார் கல்லூரிகள், பேராசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போன அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி தருமா தவெக அரசு?

13/07/2026

சோழிங்கநல்லூர் MLA சரவணன் அவர்களே,
சாலைகளில் பேனர் வைப்பது உங்கள் தலைவருக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது இங்கே பிரச்சனை இல்லை. சாலை மற்றும் நடைபாதைகளில் பேனர் வைப்பது சட்ட விரோத செயல். பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான சமூக விரோத செயல். உங்கள் கட்சியினர் சாலை, நடைபாதைகளில் வைக்கும் அனைத்து பேனர்களும் பொது மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவை தான். காரணம் அந்த பேனர்கள் வைப்பதற்கு எந்த விதமான எழுத்துப்பூர்வ அனுமதியும் உங்கள் கட்சியினர் வாங்குவதில்லை.

பேனர் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக அந்த பகுதி காவல்நிலையத்தில் அந்த பேனர் வைக்கும் இடம், அந்த பேனர் அளவு, பேனர் வைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டும்.

போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவோ, நடைபாதையை பயன்படுத்த தடையாகவோ, ஓட்டுநர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாகவோ வைக்கப்படும் பேனர்களுக்கு காவல்துறையால் அனுமதி தர முடியாது.

சாலையின் நடுவே மீடியனில் மற்றும் சாலை சந்திப்பு போன்ற இடங்களில் பேனர் அல்லது கொடி கம்பங்கள் வைக்க காவல்துறையால் அனுமதி கொடுக்க முடியாது.

நீங்கள் வைக்கும் பேனர் அல்லது கொடி கம்பங்கள் காற்றிலோ அல்லது கவனக்குறைவிலோ கீழே விழுந்தாலும் அது சாலை மற்றும் நடைபாதையில் விழாத வகையில் வைக்கப்படும் பேனர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும்.

காவல்துறையின் எழுத்துப்பூர்வ அனுமதி வாங்காமல் வைக்கப்படும் பேனர்களுக்கு 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும். சமீபத்திய நீதிமன்ற உத்தரவில் சாலைகளில் வைக்கப்படும் ஒவ்வொரு கொடி கம்பத்திற்கும் 1000 ரூபாய் வசூல் செய்யலாம் என்று நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பேனர்களை தடுக்க வேண்டும் என்று உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் உங்கள் கட்சி சார்பாக பேனர் வைப்பவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவு கொடுங்களேன். காவல்துறை உங்கள் கட்சியினர் வைக்கும் சட்ட விரோத பேனர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நீங்களோ உங்கள் கட்சியினரோ அதில் தலையிட மாட்டோம் என்று பொது மேடையில் ஒரு அறிவிப்பு கொடுங்களேன்.

TVK Vijay Tamil Nadu Police

12/07/2026

பழைய சாலைக்கும் புதிய சாலைக்கும் இருக்கும் உயர வித்தியாசத்தை இந்த காணொளியில் பார்க்கலாம். அரசாங்கம் இப்படித்தான் சாலையை உயர்த்துவார்கள் என்ற பயத்தில் புதிய வீடுகளை அதிக உயரத்தில் கட்டி இருப்பதையும் காணலாம். பழைய சாலை மட்டத்தில் இருக்கும் வீடுகள் இனி குழிக்குள் சென்று விடும். ஒவ்வொரு மழைக்கும் அவர்கள் வீட்டு உள்ளே தண்ணீர் வரும். அதை அவர்கள் பம்ப் வைத்து வெளியேற்ற வேண்டும். மக்களுக்காக போடப்படும் சாலைகள் இது போல மக்களை பல இன்னல்களுக்குள்ளாக்குவது இனியாவது தடுக்கப்படுமா? Chief Minister of Tamil Nadu
பாரதியார் முதல் தெரு | மேடவாக்கம்

தமிழகம் முழுவதும் மக்களை பயம் காட்டும் இந்த சாலை உயர பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளின் புகைப்படங்களை இந்த இணைப்பில் arappor.org/TN-Roads-Height-Audit பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாலை உயர பிரச்சனைக்காக அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறப்போர் வாட்சப் குழுவில் https://arappor.org/Join-TN-Road-Height-Audit-WhatsApp-Gp இணைந்து கொள்ளுங்கள்.

12/07/2026

Brigade ரியல் எஸ்டேட் கட்ட திட்டம் போட்ட ராம்சார் உள்ளே உள்ள நிலத்திற்கும் ராம்சார் வெளியே உள்ள Zone of Influence நிலத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Video courtesy: 4th Estate Tamil

ஒரு வீடு கட்ட துவங்கும் போது அதன் பேஸ்மென்ட் உயரத்தை சாலையில் இருந்து கணக்கிட்டு கட்டுவார்கள். கார் நிறுத்தும் பகுதியை ச...
12/07/2026

ஒரு வீடு கட்ட துவங்கும் போது அதன் பேஸ்மென்ட் உயரத்தை சாலையில் இருந்து கணக்கிட்டு கட்டுவார்கள். கார் நிறுத்தும் பகுதியை சாலையில் இருந்து சுமார் 1’6” உயரத்திலும் அதில் இருந்து 1’ உயரத்தில் வீட்டின் தரையையும் கட்டுவார்கள். ஒரு வேளை சாலை அமைக்காத பகுதியாக இருந்தால் இன்னும் சற்று உயரத்தை அதிகரிப்பார்கள்.

ஆனால் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சாலை உயரங்களை தமிழக அரசுகள் முட்டாள்தனமாக உயர்த்திக் கொண்டே வருவதால் அதற்கு பயந்து வீடுகளின் பேஸ்மென்ட் உயரத்தை 6’ வரை வைத்து கட்டுகிறார்கள். இதனால் வீடுகளுக்கு உள்ளே செல்லும் படி மற்றும் ramp ஆகியவை சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படுகிறது. இது போல சாலையில் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் வீடுகளும் சாலையை ஆக்கிரமித்து ramp அமைப்பதால் சாலையின் அகலம் குறைகிறது. நடந்து செல்பவர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

சாலை உயரங்கள் மீதான் மக்களின் பயம் தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம். இந்த பயத்தை போக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. பழைய சாலை உயரத்தை விட புதிய சாலைகள் உயரத்தை அதிகரித்தால் அந்த சாலை ஒப்பந்ததாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களால் பாதிக்கப்படும் வீடுகளுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தரவேண்டும். சாலை உயரங்களால் குழிக்குள் தள்ளப்பட்ட வீடுகளை உயர்த்த முழு செலவையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். இந்த செலவுகள் அனைத்தையும் அந்த ஒப்பந்ததாரர்களிடம் அரசாங்கம் வசூலித்துக் கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் மக்களை பயம் காட்டும் இந்த சாலை உயர பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளின் புகைப்படங்களை இந்த இணைப்பில் arappor.org/TN-Roads-Height-Audit பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாலை உயர பிரச்சனைக்காக வேலை செய்ய விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறப்போர் வாட்சப் குழுவில் https://arappor.org/Join-TN-Road-Height-Audit-WhatsApp-Gp இணைந்து கொள்ளுங்கள்.

மக்களின் பயத்தை போக்குவீர்களா?
Chief Minister of Tamil Nadu

Address

Satya Plaza, 2nd Floor, No. 7, Drive Thirumoorthy Nagar Main Road, Nungambakkam
Chennai
600034

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Telephone

+917200020099

Alerts

Be the first to know and let us send you an email when Arappor - அறப்போர் இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Arappor - அறப்போர் இயக்கம்:

Shortcuts

Share