India Thowheed Jamaath - INTJ

India Thowheed Jamaath - INTJ இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
(3:104)

நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் -இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.3:104

திருக்குரானையும்,நபிவழியையும் மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும் சமுதாய பேரியக்கம்.

தென் சென்னை மாவட்ட நிர்வாக குழு கூட்டம்  இன்று MGR நகர் மர்க்கஸில்,மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.மாவட்...
02/08/2026

தென் சென்னை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று MGR நகர் மர்க்கஸில்,
மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தின் சென்ற மாத பணிகள் குறித்தும் இம்மாதம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்ஷா அல்லாஹ் இம்மாதம் ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் மாநில தலைவர் பங்கேற்கும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி.

நடத்திட முடிவு செய்யப்பட்டது.

மாநில தலைமையகத்தில் வட சென்னை மாவட்டம் சார்பில் நடக்க இருக்கும் கட்டுரை போட்டி நிகழ்ச்சியில் மக்களை திரட்டி பங்கேற்க செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது..

இன்ஷா அல்லாஹ்
ஆகஸ்ட் 22 ம் தேதி சென்னை சூளைமேட்டில் மாபெரும் ரத்ததான முகாம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

திட்டப் பணிகளை விவாதித்ததுடன், சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

வல்ல இறைவன் பணிகளை பொருந்தி கொண்டு சிறப்பாக்கி வெற்றியாக்கி தருவானாக.!

- இந்திய தவ்ஹீத் ஜமாஅத் - தென்சென்னை மாவட்டம்..

புது வட்டார கிளை சந்தித்து நிர்வாகிகள் மத்தியில் மாநில தலைவர் உரையாற்றினார். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் புது ...
02/08/2026

புது வட்டார கிளை சந்தித்து நிர்வாகிகள் மத்தியில் மாநில தலைவர் உரையாற்றினார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் புது வட்டார கிளை சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் முஹம்மது சித்திக் அவர்கள் நிர்வாகிகள் சகோதரர்கள் மத்தியில் ஜமாஅத் பணிகள் குறித்து உரையாற்றினார்.

இதில் மாநில துணை பொதுச் செயலாளர் சையத் அலி மாநில செயலாளர் சுக்கு அலி காஞ்சி மாவட்டம் தலைவர் கானத்தூர் யூசுப் மாவட்ட செயலாளர் அசன் அலி மாவட்ட பொருளாளர் அணஸ் ரஹ்மான் மாவட்ட துணை தலைவர் முஹம்மது அலி மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மைதீன் மற்றும் நிர்வாகிகள் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஏற்கனவே மிக பெரிய அளவில் பணிகளை செய்த சகோதரர்கள் கலந்து கொண்டனர் அடுத்த கட்ட பணிகள் குறித்து சகோதரர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடைபெற்றது.

ிரிவு

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகன...
02/08/2026

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகனார், மருத்துவர் கே.எம்.கே. கலீலுர் ரஹ்மான் அவர்களின் மறைவு என்பது வேதனையை தருகிறது..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேதனையை பகிர்ந்து கொள்கிறது..

அவரை இழந்து வாடும் பேராசிரியர் அவர்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் இறைவன் மன அமைதியை தந்தருள்வானாக.

அவர் மறுமை வாழ்வு சிறக்க, உயர்ந்த சொர்க்கத்தை தந்தருள எல்லாம் வல்ல இறைவன் இடத்தில் பிரார்த்திப்போம்.

இப்படிக்கு.
I.முஹம்மது முனீர்
மாநில துணை தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..

ிரிவு

SDPI தமிழ்ச்சுடர் விருதுகள் 2026புரட்சியாளர் பழனிபாபா விருதினை மறைந்த சமுதாய தலைவர்  மர்ஹும் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் சார...
01/08/2026

SDPI தமிழ்ச்சுடர் விருதுகள் 2026

புரட்சியாளர் பழனிபாபா விருதினை மறைந்த சமுதாய தலைவர் மர்ஹும் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் சார்பாக விருதினை..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத் தலைவர் ஐ. முனீர் அவர்கள் மாநில பொருளாளர் பிர்தௌஸ் அவர்கள் பெற்று கொண்டனர்..

ிரிவு #தமிழ்ச்சுடர்2026

திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்பு பரப்புரைக்கு விஜய் அரசு தடை விதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.நீட் தேர்வுக்கு...
30/07/2026

திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்பு பரப்புரைக்கு விஜய் அரசு தடை விதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான போக்காகும்.

கருத்துரிமை,பேச்சுரிமை மற்றும் அமைதியான முறையில் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் உரிமையை பறிக்கும் வகையில் அரசு செயல்படுவது எந்த வகையிலும் ஏற்க முடியாது.

அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பவர்களின் குரலை அடக்குவது ஒரு ஜனநாயக அரசின் பண்பாக இருக்க முடியாது.கருத்து வேறுபாடுகளை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர,தடை உத்தரவுகள் மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் எதிர்க்க முயல்வது மிகவும் கண்டனத்திற்குரியது.

கருத்துரிமை,பேச்சுரிமைக்கு எதிராக தவெக அரசு ஒருபோதும் செயல்படக் கூடாது.ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களான கருத்துச் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் மதித்து,விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாற்றுக் கருத்துக்களை ஒடுக்க நினைப்பதை கைவிட்டு,ஜனநாயக மரபுகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் மதித்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இப்படிக்கு.
A.முஹம்மது ஷிப்லி
பொதுச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

ிரிவு

நேதாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார...
30/07/2026

நேதாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக நேத்தாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் வாராந்திர பெண்கள் பயான் நிகழ்ச்சி 29.07.2026 நேற்று புதன் கிழமை மாலை நடைபெற்றது..

இதில் சகோதரர் பெளமி அவர்கள் உரையாற்றினார்..

அல்ஹம்துலில்லாஹ்.

ிரிவு

T22 மேடவாக்கம் காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும்  காவல் ஆய்வாளர் உயிர் திரு, சதீஷ் அவர்களே மரியாதை நிமி...
30/07/2026

T22 மேடவாக்கம் காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் காவல் ஆய்வாளர் உயிர் திரு, சதீஷ் அவர்களே மரியாதை நிமித்தமாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ )

காஞ்சி மாவட்ட துணைத் தலைவர் S, முகமது அலி மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் S, முகமது மைதீன் ஆகியோர் சந்தித்தார்கள்..

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள்.

ிரிவு

எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தமிழ் சுடர் 2026 விருது வழங்கும் நிகழ்ச்சியில் சமுதாய தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்களுக்கு..சம...
29/07/2026

எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தமிழ் சுடர் 2026 விருது வழங்கும் நிகழ்ச்சியில்

சமுதாய தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்களுக்கு..

சமுதாய போராளி பழனி பாபா விருது வழங்கப்பட உள்ளது..

இன்ஷா அல்லாஹ் ஆகஸ்ட் 1 ம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை புரசைவாக்கம் YMCA ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது..

ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க போராடி, சிறையில் இருந்தவர்களை மீட்க களமாடி, சிறை கொட்டடியில் அடைபட்டு,தஃவா பணிகள் செய்து , சமுகத்திற்காக தன் வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த சமுதாய தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்களுக்கு..

விருதை வழங்கும் எஸ்டிபிஐ மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
மாநில ஊடக பிரிவு..

ிரிவு

எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் சுடர் விருது 2026 ஷஹீத் பழனி பாபா விருது மறைந்த சமுதாய போராளி சமுதாய தலைவர்  மர்ஹும் எஸ் எம் பா...
28/07/2026

எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் சுடர் விருது 2026 ஷஹீத் பழனி பாபா விருது மறைந்த சமுதாய போராளி சமுதாய தலைவர் மர்ஹும் எஸ் எம் பாக்கர் அவர்களுக்கு.

இன்ஷா அல்லாஹ் வழங்கப்பட உள்ளது.

அதற்கான அழைப்பிதழை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத்தலைவர் i. முஹம்மது முனீர், பொருளாளர் ஃபிர்தௌஸ்.

மேனாள் ISF ஒருங்கிணைப்பாளர்
எஸ் எம் பி முஸ்ஹப் ஆகியோரிடம்

எஸ்டிபிஐ மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் & மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் SV ராஜா, மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யாசர் கனி,சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சபீர் அஹமத், அம்பத்தூர் தொகுதி தலைவர் முகமது அலி,அம்பத்தூர் தொகுதி துணைத் தலைவர் இஷாக் உசேன்
ஆகியோர் வழங்கினார்கள்.

ிரிவு

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் குறித்து..மாநில பொதுச் செயலாளர் அவர்கள் அறிவிப்பு..    ிரிவு
28/07/2026

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் குறித்து..

மாநில பொதுச் செயலாளர் அவர்கள் அறிவிப்பு..

ிரிவு

Address

No: 5/3 Post Office Street Mannady
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when India Thowheed Jamaath - INTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share