D4V is started by the the group of common people who helped in rescue and relief activities in Chennai and Cuddalore floods 2015
D4V vision is to be the primary platform that enables volunteers to bond with public for a social cause leading to a better world, a world of economic and social justice.
நாம் வாழும் சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம், அந்த விதை எல்லோர் மனதிலும் இருக்கும்
. 2015 ஆண்டு ஏற்பட்ட பெருமழையில் விதை முளைத்தது, பெருவெள்ளத்தில் துளிர்விட்டது. பல துளிர்கள் ஒன்று சேர்ந்து D4V என்ற தோட்டம் உருவானது. இங்கு உள்ள ஒருவருக்கும் தனி குடும்பம், தனி வேலை என்று இருந்தாலும், தற்போது D4V தான் அவர்களின் முதல் குடும்பம், முதல் வேலை என்றானது.
தகவல் தொடர்பு துறையை எவ்வளவுக்கு எவ்வளவு நல்வழியில் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்துகிறோம், எதற்கு? சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க. பார்வையற்ற படிக்கும் சகோதரர்களுக்கு பார்வையாய் இருக்கிறோம், மிக அவசரமாக எங்கு குருதி தேவைப்பட்டாலும் சற்று நேரத்தில் குருதி கொடையாளிகளை அனுப்பி வைக்கிறோம், தமிழகத்தை மீண்டும் பசுமையாய் மாற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறோம். வேலைவாய்ப்புகள் எங்கெங்கு இருக்கிறது என்பதை அறிந்து அதை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கிறோம், பண உதவி இன்றி பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி பாதிக்கபடாமல் இருக்க அவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்கிறோம், அதுமட்டும் இல்லாமல் பெண்களை ஆண்களுக்கு ஒருபடி மேலே கொண்டு செல்லும் எண்ணத்துடன் அவர்களை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இது போன்ற எண்ணற்ற சேவைகளை தன்னார்வத்துடன் அளிக்கும் அமைப்பே எங்கள் D4V.
நாளுக்கு நாள் எங்கள் D4V தோட்டத்தில் செடிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது காரணம், சமூகத்தின் மீது உள்ள மக்களின் அக்கறை நாளுக்கு நாள் உயர்கிறது, மனிதாபிமானம் தழைக்கிறது. இத்தனை மாற்றங்களில் D4V-யும் சிறிதளவு பங்களிப்பு செய்கிறது என்று எண்ணிபார்க்கையில் புது நம்பிக்கை பிறக்கிறது.