18/03/2024
தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி மற்றும் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் உலகப் பெண்கள் தின நிகழ்ச்சி 17.03.2024 ஞாயிற்று கிழமை அன்று திருவள்ளூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. குறிப்பாக பறையடித்தல் சிலம்பம் போன்ற சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடந்தேறியது. அதன் பின்னர் பெண்கள் மாநாடு தொடங்கியது. வரவேற்புரையாக மாநில மகளிரணி துணைத் தலைவர் ஜி.தனலட்சுமி, திருவள்ளூர் மாவட்ட அமைப்புசாரா மாவட்டத் தலைவர் செல்வமலர் ஆகியோர் வரவேற்று பேசினர். மாநாட்டிற்கு கே.பூங்கோதை தலைமை தாங்கினார். மாநாட்டில் இணை பொதுச் செயலாளர் ஆர்.மகேஸ்வரி, துணைப் பொதுச் செயலாளர் எஸ்.இந்துமதி, மகளிர் அணி செயலாளர் வி.சித்ரா, மகளிர் அணி துணைத்தலைவர் எஸ் ஆனந்த ஜோதி, மகளிர் அணி துணைச் செயலாளர் இ.மணிமேகலை ஆகியோர் உரையாற்றினர். இந்த நிலையில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சந்திரன், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மேடைக்கு வந்தனர். தலைவர் பொன்குமார் அவர்கள் அமைச்சரை வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றார் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களிடம் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர். காவல் துறை ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த போதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் அலுவலரிடம் முன்னரே அனுமதி பெற்று இருக்க வேண்டும். இல்லை எனில் இது தேர்தல் விதிகளின் படி தவறானதாகும் என்று தெரிவித்ததால் நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி தலைவர் வினோத் பொன்குமார், பொதுச் செயலாளர்கள் என்.சுந்தராஜ், எஸ்.ஜெகதீசன், வி.சுப்புராயலு, ஜெகமுருகன், மாநில பொருளாளர் ஆர்.சேகர், தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கவிஞர் குரு நாகலிங்கம், மாநில துணைத்தலைவர் என்.லட்சுமணன், இணை பொது செயலாளர் ஏ.பாலகிருஷ்ணன், துணைப் பொதுச் செயலாளர் ஜி.புருஷோத்தமன், தகவல் தொழில்நுட்ப செயலாளர் எம்.சி.வசந்தகுமார், துணை செயலாளர் ராஜன், அமைப்புச் செயலாளர்கள் பி.சுதர்சன் ஏ.ஜே.நாகராஜ், இளைஞரணி செயலாளர் என்.சமைய செல்வம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 600-க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருவாயாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்