20/05/2026
நீரே, நீரே (நீயே) என் தெய்வம். நங்கநல்லூர் J K சிவன்
மூச்சுவிட காற்று வேண்டும், உயிர்வாழ பூமி வேண்டும், சூரிய ஒளி வேண்டும், உள்ளேயும் வெளியேயும் தண் ணீர் வேண்டும், இதெல்லாம் தந்த இறைவா உன்னைத் தொழ, எங்கும் பரவி உள்ள ஆகாசம் வேண்டும்.
தண்ணீர் வருணன் எனும் கடவுளாக வழிபடப்படுகிறது. புண்ணிய தீர்த்தமாக வணங்கப்படுகிறது. அதில் ஸ்னானம் செய்தல் உடலும் உள்ளமும் தூய்மையாகி றது.
நான் சொல்லவேண்டிய அவசியமேயில்லை. உலகில் ஜீவராசிகள் உயிர்வாழ நீர் இன்றியமையாதது.
மஹான்கள், திருவள்ளுவர் போன்றவர்கள் நமக்கு அழகாக எடுத்துச் சொன்னது ஞாபகம் இருக்கிறதா?
''நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு.” (குறள் 20)
இந்த உலகத்தில் ஜலம் இல்லாமல் எதுவுமே இயங் காது, மழை இல்லாமல் ஒழுக்கமும், வாழ்க்கையும் நிச்சயம் நிலைக்காது. சகல ஜீவன்களும் உயிர் வாழ பஞ்சபூதங்களும் ரொம்ப ரொம்ப அவசியம். பூமி இல்லையேல் இருக்க இடம் இல்லை, சூரியன் வெப்பம் இல்லையேல் நீர் ஆவியானது, காற்று இல்லையெனில் ஆவியாக நீர் மேலே மேகமாகாது. மேகம் அசைய மழை பொழிய காற்றும் சூரிய வெப்பமும் வேண்டும் அதை தாங்க பூமி வேண்டும். எல்லாம் இயக்கம் உள்ளும் வெளியேயும் எங்கும் இருக்கும் இறைவன் ஆகாசமாக இருக்க வேண்டும்.
உலகம் உள்ளவரை நீர் இருக்கும். தவிர்க்க முடியாதது, காலத்தால் அழியாதது. வேத காலத்திலேயே இந்த உண்மை அறியப்பட்டு, இயற்கையின் ஐந்து முக்கிய தத்துவங்களில் (பஞ்சபூதங்கள்) நீருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டது. நீரின் அதிபதி “வருணன்” (Varuna)
தினந்தோறும் உச்சரிக்கும் சந்த்யாவந்தன மந்திரங்களில் முக்கியமான ஒன்று ஜலத்தை பற்றியது.
'ॐ आपो हिष्ठा मयोभुवः। ता न ऊर्जे दधातन। महेरणाय चक्षसे॥ यो वः शिवतमो रसः। तस्य भाजयतेह नः। उशतीरिव मातरः॥ तस्मा अरं गमाम वः। यस्य क्षयाय जिन्वथ। आपो जनयथा च नः॥
*Om āpo hi ṣṭhā mayobhuvaḥ tā na ūrje dadhātana maheraṇāya cakṣase yo vaḥ śivatamo rasaḥ tasya bhājayateha naḥ uśatīr iva mātaraḥ tasmā aram gamāma vaḥ yasya kṣayāya jinvatha āpo janayathā ca naḥ**
*ஓம் ஆபோ ஹிஷ்டா மயோபுவஹ தா ந ஊர்ஜே ததாதன மஹேரணாய சக்ஷசே யோ வஃ சிவதமோ ரஸஹ தஸ்ய பாஜயதேஹ நஹ உஷதீரிவ மாதரஹ தஸ்மா அரம் கமாம வஹ யஸ்ய க்ஷயாய ஜின்வத ஆபோ ஜனயதா ச நஹ**
ஹே , வருண தேவனாகிய ஜலமே, நீரே! நீ ஆனந்தத்தை வழங்குபவன், எங்களுக்கு சக்தியையும் ஆரோக்
யத்தையும் வழங்குகிறவன். உயர்ந்த ஞானத்தையும் தெளிவான பார்வையையும் கொடுப்பவன், ஜலத்தில் இருக்கும் மிகப் புனிதமான சாரமாகிய கருணையை, தாய் அன்பை, மனமார அருள்பவரே, எங்களை சேய்போல் பாதுகாப்பவரே, வளர்ப்பவரே , என்றும் நாங்கள் உங்களை விட்டு அகலாமல் இருக்க அருள் புரிவீர். உள்ளும் புறமும் உள்ள எங்கள் பாபங்கள் அனைத்தையும் அழித்து பரிசுத்தமாக்குங்கள். உங்களால் தான் நாங்கள் புத்துயிர், புத்துணர்ச்சி பெறுகிறோம். எங்கள் நமஸ்காரங்கள்.
எவ்வளவு அர்த்தமுள்ள மந்திரம். இது தெரியாமலேயே இதை உச்சரிப்பது, ஏதோ ஒரு கிராமபோன் பிளேட், TAPE ரெகார்டர், ராகம் அருமை, இனிமை தெரியாமல் அருமையான கீர்த்தனையை பாடுவது போல தான்.
ஜலம் தான் நமக்கு சுத்தம், சக்தி, ஆரோக்கியம், ஞானம் எல்லாமே தருவது.
நமது உடலில் நீர் இல்லாமல் உயிர் தங்காது. சுமார் 60–70% நமது உடல் நீரால் நிரம்பியது. இரத்தம், செல்கள், திசுக்கள் அனைத்தும் நீரால் செயல்படுகின்றன. வியர்வையாக உடல் வெப்பநிலையை கட்டுப்படுத் துகிறது.ஊட்டச்சத்துகளை செல்களுக்கு கொண்டு செல்கிறது. கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மூளை செயல்பாடு மற்றும் நரம்பு செயல்பாட்டை சீராக வைத்திருக்கிறது. விலங்குகள், தாவரங்கள், மண்—சகலத்துக்கும் நீர் மூலம் ஒளிச்சேர்க்கை (photosynthesis) செய்து உணவு தயாராகிறது.
பூமியின் ஆரம்பத்தில், எரிமலை வாயுக்கள் மற்றும் நீராவி குளிர்ந்து மழையாக விழுந்து கடல்கள் உருவா னது என்று விஞ்ஞானம் சொல்கிறது. ஹைட்ரஜன் (Hydrogen) மற்றும் ஆக்ஸிஜன் (Oxygen) இணைந்து H₂O ஆக நீர் உருவாகிறது.காற்று தான் நீர் புரிகிறதா?