29/05/2021
இன்றும் இந்திய ஜனத்தொகையில் 65 - 75% மக்கள் whatsapp,fb போன்ற சமூக வலைதளங்களை(social media) பயன்படுத்துவதில்லை.
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பல கிராமங்களில் எண்ணிக்கை கூடியுள்ளது.
இந்த இக்கட்டான நோய்கிருமி தாக்கி வரும் சூழலில் இன்றும் பல கிராமத்தில் வாழும் மக்களுக்கு விழுப்புணர்வு முழுமையாக சென்று சேரவில்லை. நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களை ஒரு கருவியாக பயன்படுத்தலாமே தவிர இது அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வாய்ப்பு குறைவு.
தாங்கள் எந்த ஊரின் பின்புலத்தில் இருக்கிறீர்களோ அல்லது அங்கு உள்ள சமூக ஆர்வம் கொண்டவர்களை அணுகி அங்கு உள்ள மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது மிகவும் அவசியம்.
இங்கு சென்னையில் பல விழிப்புணர்வுகளும் மற்றும் மருத்துவ வசதிகள் அருகாமையில் உள்ளது , அப்படி இருக்கும் சூழலில் கூட நாம் பல உயிர்களை இழந்து இருக்கிறோம்.
இதுவே கிராமத்தில் இப்படி பட்ட சூழல் இருக்க வாய்ப்பே இல்லை என்பது நாம் அறிந்தது. சமூக பொறுப்புடன் உள்ள அனைவரும் அவர் அவர் கிராமத்தில் அல்லது கிராமங்களில் உள்ள குழுகளுடன் இணைந்து செயல்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது மிகவும் அவசியம்.
அதற்கான செயல்பாடுகளை துவங்குவோம்.
வீட்டில் சரி செய்துகொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று வேண்டுகிறோம்.
மருத்துவர்களின் பரிந்துரையோடு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் நம் சுற்றத்தை அழைப்பு கொடுத்து விசாரித்து அவர்களையும் தற்காப்பு எடுத்து இந்த நோயில் இருந்து பாதிப்புக்குள்ளாவதை தடுப்போம்.
#களம் #கிராமங்கள் #கொரோன #தடுப்பூசி