Poovulagin Nanbargal

Poovulagin Nanbargal Environment, Ecology, Biodiversity, Nature, Sustainable Living

பூவுலகின் நண்பர்கள் இயக்கம்

ஒரு சுயேச்சையான, மக்கள் நலன் அமைப்பு. சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அறிவியல் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாள வலியுறுத்துவோம். உலகமயமாக்கம் மற்றும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடை

க்கச் செய்வது இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம்.

பொருளாதார லாபங்களை மட்டுமே முன்வைக்கும் வளர்ச்சி , கட்டுமீறிய நிலச் சீரழிவு, கட்டுப்படுத்தப்படாத தொழில்மயமாக்கம் வெளியிடும் நச்சு போன்றவற்றால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறது. வறுமை, எழுத்தறிவின்மை, ஏற்றத்தாழ்வு போன்ற சிக்கல்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்குகின்றன.

இன்றைய சூழ்நிலையில் . . .

தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க முயற்சிப்பது, அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்வது; சுற்றுச்சூழலை புரிந்து கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வை பெறுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது; இயற்கை ஆதாரங்கள் சந்தைப்படுத்தப்படும் சூழ்நிலையில், இயற்கை மற்றும் இயற்கை வளங்களை (நிலம், நீர் உள்ளிட்டவை) சூழலியல் பாதுகாப்பு பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு வளங்குன்றாத வகையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாக்கும் பண்பை ஊக்குவிப்பது; மாசுபடுத்துதல் மற்றும் வீண் நுகர்வை குறைக்க வலியுறுத்துவது; தமிழகத்தில் அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள்-தாவரங்கள் மற்றும் உறைவிடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது; இயற்கையை அழித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கூருணர்வை ஏற்படுத்துவது ஆகியவை எங்களது விரிவான நோக்கங்கள்.

பல்லுயிரியத்துக்கு எதிரான ஆபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் . . .

இயற்கையுடன் மனிதர்கள் இசைந்து வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, செயல்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்கு இயற்கை வளமும்,இயற்கை அற்புதங்களும் செழித்துள்ள உலகை விட்டுச்செல்ல வலியுறுத்துவோம்.

எங்கள் பணிகள்

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் தகவல்களை ஆவணப்படுத்துதல்

பதிப்பித்தல்-பரப்புதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பரிந்துரைத்தல்-ஆதரவை திரட்டுதல், தொடர்பியல் கருவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், சட்ட ஆலோசனை வழங்குதல், ஒத்துணர்வுள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் - இவை மூலம் அனைத்து வர்க்க மக்களிடமும் விழிப்புணர்வை உருவாக்குதல்.

அதிகரிக்கும் வெப்பம்; பள்ளிச் சீருடைகளில் மாற்றம் தேவை!நாம் நினைப்பது போல குடுவைகள் (bottles), பைகள் போன்றவற்றில் மட்டும...
10/06/2026

அதிகரிக்கும் வெப்பம்; பள்ளிச் சீருடைகளில் மாற்றம் தேவை!

நாம் நினைப்பது போல குடுவைகள் (bottles), பைகள் போன்றவற்றில் மட்டும் நெகிழி இல்லை; நாம் அணியும் பாலியஸ்டர் போன்ற செயற்கைத் துணி வகைகளும் அதே நெகிழி வகையைச் சேர்ந்தவையே.

இதில் நிறமூட்டும் ரசாயனங்கள் (Dyes), துணி சுருக்கம் வராமல் இருக்க பயன்படுத்தப்படும் ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), வெள்ளைப்படுத்தும் ரசாயனங்கள், நீர் தடுக்க பூசும் ரசாயனங்கள், அதே நிறத்தைப் நிலைநிறுத்த பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், அதே நெகிழியின் ஆயுளை அதிகரிக்கச் சேர்க்கப்படும் BPA, Phthalates போன்ற வேதிப்பொருட்கள், நாம் பெயரிட்டுச் சொல்ல முடியாத அளவிற்குப் பல்வேறு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆம், பாலியஸ்டர் என்பது பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்கையாக உருவாக்கப்படும் பாலிமர் ஆகும்.

இந்நெகிழி வகைத் துணிகளைக் குழந்தைகள் ஒரு ஆண்டில் சராசரியாக 210-220 நாட்கள் 8  மணி நேரத்துக்கும் மேலாக அணிகின்றார்கள்.

இது உடலில் வெப்பத்தைத் தக்க வைத்து, வியர்வையை வெளியேற்றாமல் தடுக்கும். அதனால் வெப்ப அழுத்தம், தோல் எரிச்சல் போன்ற உடலியல் சிக்கல்களை அதிகமாக உருவாக்கும்.
– ஜென்னி மரியதாஸ்

முழு கட்டுரையை வாசிக்க: https://poovulagu.org/climate/பள்ளிச்-சீருடை-heat-school-uniform/

காலநிலையும் ஒருங்கிணைந்த நலனும் கருத்தரங்கம்.எந்திரகதியிலான நம் வாழ்வில் இதனை அவதானிக்க மறந்தாலும்கூட நம் வாழ்வின் நலன் ...
10/06/2026

காலநிலையும் ஒருங்கிணைந்த நலனும் கருத்தரங்கம்.

எந்திரகதியிலான நம் வாழ்வில் இதனை அவதானிக்க மறந்தாலும்கூட நம் வாழ்வின் நலன் இவ்வுலகின் நலனோடு இறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வுலகின் 850 கோடி மக்களும் ஒரே சிலந்தி வலையைப் போல பின்னிப் பிணைந்த வாழிடத்தில் இருக்கிறோம். ஆகவேதான், அதன் ஏதோவொரு மூலையில் நிகழும் அதிர்வு நம் சமையலறைகளிலும் அடிவயிற்றிலும்கூட எதிரொலிக்கிறது.

ஏதோவொரு தொழிற்சாலையின் உமிழ்வு, எங்கோ கொட்டப்படும் குப்பை, ஏதோவொரு காட்டில் எரியும் நெருப்பு, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உருகும் பனி, ஊருக்கு வெளியே கொட்டப்படும் குப்பை இவை எல்லாமே நம் வாழ்வில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில் அவை மரண அடியாய் நம்மீது விழுகின்றன.

கடும் வெப்பம் மனிதர்களின் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது; வாழ்வாதாரங்களையும் பொருளாதாரத்தையும் முடக்குகிறது; செல்வந்தர்களை விடவும் எளிய மக்களை அதிகமாகப் பாதிக்கிறது. பருவம் தவறிய மழையோ நிலத்தின் உற்பத்தியைக் குறைத்து விவசாயிகளையும் உணவுப் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது. கடல்மட்ட உயர்வு கடலோர கிராமங்களைக் அரித்துச் செல்கிறது. கடல் நீரோட்டங்களின் சீர்குலைவும், புயல்களும் மீனவர் வாழ்வை கண்ணீரில் கரையச் செய்கின்றன. காலநிலை மாற்றம் இனிமேலும் சுற்றுச்சூழல் பிரச்சினை அல்ல; மாறாக, நீதியை மையமாகக் கொண்ட சமூக – அரசியல் – பொருளாதாரப் பிரச்சினையாக இது தன்னை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்து. இது நமது பிழைத்திருத்தல் சார்ந்த பிரச்சினையும்கூட.

உறுப்புகள் பலவாக இருப்பினும் உயிர் ஒன்று; எந்தவொரு உறுப்பின் செயலிழப்பும்கூட உயிரிழப்பாக மாறலாம். இங்கு பொருளாதார நலன், சமூக நலன், விலங்கு நலன், சூழல் நலன் என்று தனித்தனியான நலன்கள் எதுவும் இல்லை; மாறாக, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒரே பூவுலகும் அதன் பகிரப்பட்ட ஒரே நலனும் மட்டுமே இருக்கின்றது.

இந்த ஒருங்கிணைந்த நலனைப் பேசுபொருளாக மாற்ற முயலும் பூவுலகின் நண்பர்களின் இந்த முழுநாள் நிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ள கீழே உள்ள இணைப்பில் ப‌திவு செய்யவும்: 👇🏾
https://forms.gle/ct8YUqZVdFZ2WUmR8

அதிகரிக்கும் வெப்பம்; பள்ளிச் சீருடைகளில் மாற்றம் தேவை!முழு விவரம்:
10/06/2026

அதிகரிக்கும் வெப்பம்; பள்ளிச் சீருடைகளில் மாற்றம் தேவை!

முழு விவரம்:

இந்நெகிழி வகைத் துணியிலான பள்ளிச் சீருடைகளைக் குழந்தைகள் ஒரு ஆண்டில் சராசரியாக 210-220 நாட்கள் 8 மணி நேரத்துக்கும்...

10/06/2026

பேரிடர் உருவாகும்!

உலகம் முழுவதிலும் பெரும் இயற்கைப் பேரிடர்கள் உருவாகும். அதீத வெப்பம், கடுமையான வறட்சி, அதிகப்படியான மழைப்பொழிவு, புயல்கள் ஏற்படும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

–சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

| | | | | Poovulagin Nanbargal

10/06/2026

வெப்பத்தால் உலகம் முழுதும் ஆண்டுக்கு 5.46 லட்சம் பேர் மரணம்; அதில் 1.5 லட்சம் பேர் இந்தியர்கள். ஆனால் முறையான தரவுகள் இல்லை.

–நிகழ், பூவுலகின் நண்பர்கள்

| | | |

10/06/2026

இந்தியாவின் Heatwave Monitoring and Warning system மாடலை மாற்றியமைக்க வேண்டும். Humidity, Temperature, Green Cover areaஐ கணக்கிட்டு அதற்கேற்ப அறிவிப்புகள் வெளியிட வேண்டும்.

-வெற்றிச்செல்வன், சூழலியலாளர்

| | | | vetriselvan

தகவல் மையங்கள் வளர்ச்சியின் அங்கமாக வரவேற்கப்படுபவையாக அன்றி கட்டுப்படுத்தப்பட வேண்டிய அச்சுறுத்தலாக அணுகப்பட வேண்டும் எ...
09/06/2026

தகவல் மையங்கள் வளர்ச்சியின் அங்கமாக வரவேற்கப்படுபவையாக அன்றி கட்டுப்படுத்தப்பட வேண்டிய அச்சுறுத்தலாக அணுகப்பட வேண்டும் எனக் கருதுகிறேன்.

முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இவற்றுக்கு ஒருபோதும் மக்களின் வரிப்பணம் மானியங்கள் என்ற பெயரில் வீணடிக்கப்படக் கூடாது.

மரபான தொழிற்சாலைகளைப்போலன்றி இவை வேலை வாய்ப்புகள் என்று எதையும் உருவாக்குவதில்லை என்பதும் இங்குக் கருத்தில் கொள்ள வேண்டியது.

வெறும் இலாபத்திற்காக இயங்கும் சந்தை ஒருபோதும் தன்னைத்தானே சரி செய்து கொள்ளாது. இக்கண்ணோட்டத்தோடு தகவல் மையங்களுக்கான கடுமையான சட்ட திட்டங்களையும் நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும். 
– ம. ஜீயோ டாமின்

முழு கட்டுரையை வாசிக்க: https://poovulagu.org/statements/ecological-impact-of-data-centresதகவல்/

09/06/2026

Address

Old No: 54, New No: 72, , 1st Floor, CRP Gdn 3rd Street, Anjugam Nagar, , West Jafferkhanpet
Chennai
600083

Alerts

Be the first to know and let us send you an email when Poovulagin Nanbargal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Poovulagin Nanbargal:

Share