10/06/2026
அதிகரிக்கும் வெப்பம்; பள்ளிச் சீருடைகளில் மாற்றம் தேவை!
நாம் நினைப்பது போல குடுவைகள் (bottles), பைகள் போன்றவற்றில் மட்டும் நெகிழி இல்லை; நாம் அணியும் பாலியஸ்டர் போன்ற செயற்கைத் துணி வகைகளும் அதே நெகிழி வகையைச் சேர்ந்தவையே.
இதில் நிறமூட்டும் ரசாயனங்கள் (Dyes), துணி சுருக்கம் வராமல் இருக்க பயன்படுத்தப்படும் ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), வெள்ளைப்படுத்தும் ரசாயனங்கள், நீர் தடுக்க பூசும் ரசாயனங்கள், அதே நிறத்தைப் நிலைநிறுத்த பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், அதே நெகிழியின் ஆயுளை அதிகரிக்கச் சேர்க்கப்படும் BPA, Phthalates போன்ற வேதிப்பொருட்கள், நாம் பெயரிட்டுச் சொல்ல முடியாத அளவிற்குப் பல்வேறு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆம், பாலியஸ்டர் என்பது பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்கையாக உருவாக்கப்படும் பாலிமர் ஆகும்.
இந்நெகிழி வகைத் துணிகளைக் குழந்தைகள் ஒரு ஆண்டில் சராசரியாக 210-220 நாட்கள் 8 மணி நேரத்துக்கும் மேலாக அணிகின்றார்கள்.
இது உடலில் வெப்பத்தைத் தக்க வைத்து, வியர்வையை வெளியேற்றாமல் தடுக்கும். அதனால் வெப்ப அழுத்தம், தோல் எரிச்சல் போன்ற உடலியல் சிக்கல்களை அதிகமாக உருவாக்கும்.
– ஜென்னி மரியதாஸ்
முழு கட்டுரையை வாசிக்க: https://poovulagu.org/climate/பள்ளிச்-சீருடை-heat-school-uniform/