29/07/2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவதாக ஜன கண மன பாடலும், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான தமிழுக்கு உரிய மரியாதையையும் முன்னுரிமையையும் வழங்காமல், தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தமிழகத்தில் நடைபெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில், குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய இடமும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் தமிழ்நாடு இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு.
தமிழின் பெருமையை உலகறியச் செய்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரால் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை மறுக்கப்படுவது மிகுந்த வேதனைக்குரியது.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் அல்ல; அது தமிழ்நாட்டின் மொழி மரியாதையின் அடையாளம்!
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, இனிவரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமையும் மரியாதையும் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிக்கும் அல்லது அதன் மரியாதையை குறைக்கும் எந்த நடவடிக்கையையும்
“எங்கள் தமிழ்நாடு இயக்கம்” வன்மையாகக் கண்டிக்கிறது!
எங்கள் தமிழ்நாடு இயக்கம்
தமிழ்நாடு