KCGC - Kayalpatnam Chennai Guidance Centre

KCGC - Kayalpatnam Chennai Guidance Centre Kayalpatnam Chennai Guidance Centre

சென்னை கோட்டூரில் மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம்.சென்னை கிரவுன் அரிமா சங்கம், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம்...
23/02/2025

சென்னை கோட்டூரில் மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம்.

சென்னை கிரவுன் அரிமா சங்கம், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம் (KCGC) மற்றும் முகில் டிரஸ்ட்

ஆகிய அமைப்புகள் சார்பாக
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை , காவேரி மருத்துவமனை , சென்னை பிஸியோ கேர் , மற்றும் Dr.குப்தாஸ் பல் மருத்துவமனை
ஆகிய மருத்துவமனைகளின் ஒத்துழைப்புடன் சென்னை, கோட்டுர்புரத்தில் அமைந்துள்ள யூனிட்டி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் வைத்து 23-02-2025 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவ பரிசோதனைக்காக 110 நபர்களும், கண் பரிசோதனைக்காக 155 நபர்களும், பல் பரிசோதனைக்காக 101 நபர்களும், பிஸியோதெரபி சிகிச்சைக்காக 38 நபர்களும் பயன்பெற்றார்கள்.

மேலும் 11 நபர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஈ.சி.ஸி எடுக்கப்பட்டது. 23 நபர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அவர்களுக்கு கட்டணமில்லா கண் புரை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமில் கலந்து கொண்ட பயணாளிகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின்படி கட்டணமில்லா மருந்துகள் வழங்கப்பட்டது.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை சென்னை கிரவுன் அரிமா சங்கம், முகில் அறக்கட்டளை மற்றும் காயல்பட்டிணம் சென்னை வழிகாட்டி மையம் (KCGC) ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

🩺 மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம் 🏥சென்னை கிரவுன் அரிமா சங்கம், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம் (KCGC) மற்றும்...
16/02/2025

🩺 மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம் 🏥

சென்னை கிரவுன் அரிமா சங்கம், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம் (KCGC) மற்றும் முகில் டிரஸ்ட்

ஆகிய அமைப்புகள் இணைந்து,

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை 👁️‍, காவேரி மருத்துவமனை 🏥, சென்னை பிஸியோ கேர் 🏋️‍♀️ , மற்றும் Dr.குப்தாஸ் பல் மருத்துவமனை
ஆகிய மருத்துவமனைகளின் ஒத்துழைப்புடன் நடத்தும்

🩺 மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம் 🏥

🗓️ தேதி: 23 பிப்ரவரி 2025 (ஞாயிற்றுக் கிழமை)

🕘 நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

📍 இடம்: யூனிட்டி பப்ளிக் ஸ்கூல், லேக் வியூ ரோடு (ரயில் நிலையம் அருகில்) கோட்டூர்புரம், சென்னை - 85.

முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள்:

🩺 பொது மருத்துவ பரிசோதனை.

👁️ கண் பரிசோதனை.

📈 E.C.G.

🏥 கண் புரை அறுவை சிகிச்சை.

🏋️ பிஸியோதெரபி சிகிச்சை.

🧘‍♂️ பல் பரிசோதனைகள்.

🎯 சிறப்பு சேவைகள்:

💊 கட்டணமில்லா மருந்துகள்.

👓 கட்டணமில்லா கண் புரை அறுவை சிகிச்சை.

மேலும் பல மருத்துவ சேவைகள்.

📌இந்த முகாமில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்!

சென்னை, மண்ணடியில் மருத்துவ முகாம் - 242 நபர்கள் பயன் பெற்றார்கள்➖➖➖➖➖➖➖எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!!!சென்னை கிரவு...
07/01/2024

சென்னை, மண்ணடியில் மருத்துவ முகாம் - 242 நபர்கள் பயன் பெற்றார்கள்
➖➖➖➖➖➖➖

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!!!

சென்னை கிரவுன் அரிமா சங்கம், முகில் டிரஸ்ட், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம்(KCGC) ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் சென்னை, மண்ணடியில் அமைந்துள்ள மியாசி மெட்ரிக் பள்ளியில் வைத்து 07-01-2024 - ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது.

இந்த முகாமில் பொது மருத்துவ பரிசோதனைக்கு 124 நபர்களும், கண் பரிசோதனைக்கு 118 நபர்களும் , என மொத்தம் 242 நபர்கள் பயன்பெற்றார்கள்.

பொது மருத்துவ ஆலோசனைக்கு வந்திருந்தவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் GLAD DRUGS & PHARMA கம்பெனியின் சுமார் 11,400 ரூபாய் மதிப்பிலான மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் 14 நபர்களுக்கு ஈ.சி.ஜி யும் எடுக்கப்பட்டது.

கண் பரிசோதனைக்கு வந்த நபர்களில் 18 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னை, ஆலந்தூரில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் வரும் வியாழன் அன்று நபர் ஒருவருக்கு ரூ.25,000 மதிப்பிலான கண்புரை அறுவை சிகிச்சக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.

இந்த முகாமிற்கான இட வசதி ஏற்பாடுகளை மியாசி மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர்
மிகவும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.

முகாம் ஏற்பாடுகளை சென்னை கிரவுன் அரிமா சங்கம், முகில் டிரஸ்ட், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம்(KCGC) ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை செய்த எல்லோருக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்!!!.

05/01/2024
சென்னை வாழ் காயலர்கள், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருடன் சந்திப்புசென்னை வாழ் காயலர்கள் - தமிழ்நாடு அரசின் தலைமை செயலாள...
20/12/2023

சென்னை வாழ் காயலர்கள், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருடன் சந்திப்பு

சென்னை வாழ் காயலர்கள் - தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் திரு ஷிவ் தாஸ் மீனா IAS அவர்களை இன்று 20-12-2023 புதன் கிழமை மாலை 4.00 மணி அளவில் சந்தித்து வரலாறு காணாத மழையினால் காயல்பட்டினம் சந்தித்து வரும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்

தொடர்ந்து, காயலர்கள், முதலமைச்சரின் செயலாளர் - 1 திரு முருகானந்தன் IAS அவர்களையும் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தார்கள்.

கோரிக்கைகள்:-

1.காயல்பட்டினம் முழுவதும் உடனடியாக மின் வினியோகம் செய்ய வேண்டும்.

2. காயல்பட்டிணத்தை இணைக்கும் வெளியூர் சாலைகளை போர் கால அடிப்படையில் சரி செய்து நமதூருக்கு சாலை போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

3. துண்டிக்கப்பட்ட தொலை தொடர்பு சிக்னல்கள் உடனே சரி செய்யப்பட்டு தொலை தொடர்பு சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.

4.மக்களுக்கு பால் மற்றும் பலசரக்கு சாமான்கள் தங்கு தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.

5.வெள்ள நிவாரண நிதி மற்றும் மக்களுக்கு தேவையான சமையல் சாமான்களை அரசு உடனே கொடுக்க முன் வர வேண்டும்.

6.இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பும் வகையில் தெருக்களிலும், வீடுகளை சுற்றியும் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்ற தேவையான மின் மோட்டார்களை உடனே ஏற்பாடு செய்ய வேண்டும்.

7.தமிழ்நாடு அரசின் குடிசை மாற்றி வாரியம் சார்பாக சேதமடைந்த குடிசைகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் அமைத்து தர வேண்டும்.

8.சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட மழை நீர் வடிகால் அமைப்பை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும்.

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட தலைமை செயலாளர் அவர்கள் உடனையாக உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்கள்.

மின் இணைப்பு கருவிகளில் தற்போதுள்ள 4 கருவிகளில் 3 கருவிகள் சரி செய்யபட்டுவிட்டதாகவும், எஞ்சிய 1 கருவி இன்று சரி செய்யபட்டு, மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்தார்

இன்றிரவுக்குள் ஆவின் பால் வண்டி காயல்பட்டினம் செல்ல அவர் உத்தரவிட்டார்.

மேலும், காயல்பட்டினத்தை கவனிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ஹாஜி.அபூபக்கர் , அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியில் மாநில செயலாளர் ஜனாப்.காயல் மகபூப், காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை நிர்வாகி ஜனாப்.நவாஸ், KCGC அமைப்பின் நிர்வாகிகளான ஜனாப்.இப்னு சவூத், ஜனாப்.ஆடிட்டர் ரிபாய், ஜனாப்.சொளுக்கு முஹம்மது நூஹ், மெகா- நடப்பது என்ன? அமைப்பின் நிர்வாகி M.S.சாலிஹ், ஹாங்காங் - காயல்பட்டினம் ஐக்கிய பேரவை தலைவர் ஜனாப் VMT ஹசன் மற்றும் சென்னை வாழ் காயலர்களான ஜனாப்
டயமண்ட் செய்யது, ஜனாப் சதக்கதுல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்:-

சொளுக்கு முஹம்மது நூஹ்.
சென்னை.

20-12-2023 : இரவு 11.30 மணி

காயல்பட்டிணம்  வெள்ள நிவாரண சம்பந்தமாக சென்னை வாழ் காயலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது டிசம்பர் 17 & 18 ஆம் தேதிகளில் ...
20/12/2023

காயல்பட்டிணம் வெள்ள நிவாரண சம்பந்தமாக சென்னை வாழ் காயலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

டிசம்பர் 17 & 18 ஆம் தேதிகளில் காயல்பட்டினத்தில் சுமார் 126 செ.மீ மழை பொழிந்து இந்தியாவையே நமதூர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

இந்த கன மழையால் நமதூரில் உள்ள எல்லா சாலைகளும் வெள்ளத்தில் மிதந்தது, மேலும் பல தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது, இதனால் அவர்கள் இருக்க இடமில்லாமலும், உண்ண உணவில்லாமலும் மிகவும் சிரமப்பட்டார்கள். பலரின் வீடுகளில் உள்ள லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின, பலரின் வாழ்வாதாரங்கள் கேள்விக் குறியாகின.
இந்த மோசமான நிலையை சரி செய்யும் பொருட்டு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் நமதூரில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னை வாழ் காயலர்களின் அமைப்பான காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம் (KCGC) மற்றும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் சென்னையில், சென்னை வாழ் காயலர்களின் ஆலோசனை கூட்டம் 19 டிசம்பர் 2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரஸ்டன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் நமதூரை சார்ந்த காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகளும், KCGC அமைப்பின் நிர்வாகிகளும், மெகா/நடப்பது என்ன? அமைப்பின் நிர்வாகிகளும், முஸ்லீம் லிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் சென்னை வாழ் காயலர்கள் பலரும் கலந்து கொண்டு அவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டம் ஆரம்பித்த உடன் நமதூரில் நிலவி வரும் மின்சார நிறுத்தத்தை சரி செய்யும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழு தலைவர் திரு.பிரபாகரன் .IAS., அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக நமதூருக்கு மின் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட உடனே அவர் சில நிமிடங்களிலேயே நமது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஊரின் சில பகுதிகளில் மின் விநியோகம் துவங்கப்பட்டது என்ற நல்ல செய்தியை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து நமதூருக்கு உடனடியாக மற்றும் தொலை நோக்கு பார்வையில் செய்யப்பட வேண்டிய விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அதனை தமிழக முதல்வர் மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு மனுவாக கொடுக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் 20 டிசம்பர் புதன் கிழமை சென்னை, தமிழ்நாடு தலைமை செயலகம் சென்று நம் கோரிக்கை மனுவை கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள்:-

1.காயல்பட்டினம் முழுவதும் உடனடியாக மின் வினியோகம் செய்ய வேண்டும்.

2. காயல்பட்டிணத்தை இணைக்கும் வெளியூர் சாலைகளை போர் கால அடிப்படையில் சரி செய்து நமதூருக்கு சாலை போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

3. துண்டிக்கப்பட்ட தொலை தொடர்பு சிக்னல்கள் உடனே சரி செய்யப்பட்டு தொலை தொடர்பு சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.

4.மக்களுக்கு பால் மற்றும் பலசரக்கு சாமான்கள் தங்கு தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.

5.வெள்ள நிவாரண நிதி மற்றும் மக்களுக்கு தேவையான சமையல் சாமான்களை அரசு உடனே கொடுக்க முன் வர வேண்டும்.

6.இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பும் வகையில் தெருக்களிலும், வீடுகளை சுற்றியும் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்ற தேவையான மின் மோட்டார்களை உடனே ஏற்பாடு செய்ய வேண்டும்.

7.தமிழ்நாடு அரசின் குடிசை மாற்றி வாரியம் சார்பாக சேதமடைந்த குடிசைகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் அமைத்து தர வேண்டும்.

8.சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட மழை நீர் வடிகால் அமைப்பை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும்.

தகவல் :

சொளுக்கு முஹம்மது நூஹ்.
சென்னை.

20-12-2023 : இரவு 11.00 மணி.

19/12/2023

காயல்பட்டிணம் சென்னை வழிகாட்டி மையம்(KCGC)

மற்றும்

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின்

ஏற்பாட்டில் சென்னையில் இன்று செவ்வாய் கிழமை

காயல்பட்டிணம் வெள்ள பாதிப்பு நிவாவரண அவசர ஆலோசனை கூட்டம்
➖➖➖➖➖➖
பேரன்புடையீர்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் !!

📌நமதூரில் வரலாறு காணாத மழை பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி, பல வீடுகளில் தண்ணீர் புகுந்து , உணவு, உறைவிடம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையில் உள்ளர்கள்.

📌நம் மக்களின் துயர் துடைக்க, நம் மக்களின் நலன் கருதி சென்னை வாழ் காயலர்களின் கலந்தாலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது.

➖➖➖➖➖➖➖
இடம் : பிரஸ்டன் கல்லூரி - கவிஞர் பாரதிதாசன் சாலை (K.B Dasan Road), SIET கல்லூரி அருகில், ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.

Location Map :

https://maps.app.goo.gl/TP9zo3trcLD1qW148

நேரம் : 19-12-2023 : (செவ்வாய் கிழமை) இரவு 6.15 மணிக்கு
➖➖➖➖➖➖➖

சென்னையில் வசிக்கும் காயலர்கள் அனைவரும் தவறாமல் இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த கூட்ட சம்பந்தப்பட்ட செய்திகள் மற்றும் செயல்பாடுகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து எங்களின் வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ளவும்.

https://chat.whatsapp.com/FWVMCWS9LSTEDylnjDb2nJ

➖➖➖➖➖➖
மேலும் விபரங்களுக்கு, கீழ்கண்ட சகோதரர்களை தொடர்பு கொள்ளவும் :

இப்னு சவுத் :
94443 80600

LKK. லெப்பை தம்பி :
94425 94425

குளம். இபுறாஹீம் :
9840075531

ஆடிட்டர் அஹமது ரிபாய் :
96000 34635

மருத்துவ முகாம் - 408 நபர்கள் பயன் பெற்றார்கள்➖➖➖➖➖➖➖எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!!!சென்னை கிரவுன் அரிமா சங்கம், மு...
15/10/2023

மருத்துவ முகாம் - 408 நபர்கள் பயன் பெற்றார்கள்
➖➖➖➖➖➖➖

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!!!

சென்னை கிரவுன் அரிமா சங்கம், முகில் டிரஸ்ட், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம்(KCGC) ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் சென்னை, கோட்டூரில் அமைந்துள்ள யூனிட்டி பப்ளிக் ஸ்கூலில் வைத்து 15-10-2023 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

இந்த முகாமில் பொது மருத்துவ பரிசோதனைக்கு 112 நபர்களும், கண் பரிசோதனைக்கு 200 நபர்களும் , பல் மருத்துவ ஆலோசனைக்கு 65 நபர்களும், அக்குபஞ்சர் சிகிச்சை ஆலோசனைக்கு 31 நபர்களும் என மொத்தம் 408 நபர்கள் பயன்பெற்றார்கள்.

பொது மருத்துவ ஆலோசனைக்கு வந்திருந்தவர்களில் சுமார் 170 நபர்களுக்கு மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகள் கொடுக்கப்பட்டது மேலும் 19 நபர்களுக்கு ஈ.சி.ஜி யும் எடுக்கப்பட்டது.

கண் பரிசோதனைக்கு வந்த நபர்களில் 19 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னை, ஆலந்தூரில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் வரும் வியாழன் அன்று கண்புரை அறுவை சிகிச்சக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.

இந்த முகாமிற்கான இட வசதி ஏற்பாடுகளை யூனிட்டி பப்ளிக் ஸ்கூல் நிர்வாகத்தினர்
மிகவும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.

முகாம் ஏற்பாடுகளை சென்னை கிரவுன் அரிமா சங்கம், முகில் டிரஸ்ட், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம்(KCGC) ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை செய்த எல்லோருக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்!!!.

Address

Chennai

Telephone

9382808007

Alerts

Be the first to know and let us send you an email when KCGC - Kayalpatnam Chennai Guidance Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share