Nansei Educational and Public Charitable Trust

Nansei Educational and Public Charitable Trust கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி மற்

🌿 *“தூய்மைத் தோழரோடு ஒரு நாள்”* 🌿நன்செய் அறக்கட்டளை சார்பில் 18-05-2026 அன்று ஆவடியில் “தூய்மைத் தோழரோடு ஒரு நாள்” நிகழ்...
22/05/2026

🌿 *“தூய்மைத் தோழரோடு ஒரு நாள்”* 🌿

நன்செய் அறக்கட்டளை சார்பில் 18-05-2026 அன்று ஆவடியில் “தூய்மைத் தோழரோடு ஒரு நாள்” நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், சமூகத்தின் நாயகர்களான 63 தூய்மைத் தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சிறப்பு விருந்தினராக
R. சரண்யா, ஆவடி மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக
P.K. மூர்த்தி முன்னாள் செயலாளர் HVFEU அவர்களும், மருத்துவர்N.இளங்கோவன்,பிரமிளா பல் மருத்துவமனை ஆகியோர் பங்கேற்று தூய்மைத் தொழிலாளர்களின் பணியை பாராட்டினர்.

நிகழ்ச்சியில் மக்கள் பாடகி
கண்ணம்மா ஜோதி
அவர்கள் இன்னிசைப் பாடல்களால் அனைவரையும் மகிழ்வித்தார்.

நன்செய் அமைப்பின் அனைத்து சமூக சேவை பணிகளுக்கும் தொடர்ந்து உதவிகள் வழங்கி வழிகாட்டி வரும்
Udhavum Ullangal Public Charitable Trust
அமைப்பிற்கும்,

புத்தாடைகள் வழங்கி உதவிய
Thirupathi Raja Muthulakshmi Ammal Trust
மற்றும் A2B நிறுவன நிர்வாகிகளுக்கும்
நன்செய் அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏✨

#நன்செய்அறக்கட்டளை #தூய்மைதோழர்கள்

குலால்பாடி கிராமத்தைச் சார்ந்த 10 முதியோர்களுக்கு தலா ரூ.1000/ மதிப்பிலான மாதாந்திர  மளிகை பொருட்கள்  வழங்கப்பட்டன.திட்ட...
18/04/2026

குலால்பாடி கிராமத்தைச் சார்ந்த 10 முதியோர்களுக்கு தலா ரூ.1000/ மதிப்பிலான மாதாந்திர மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
திட்டம் நிதி ஏற்பாடு மற்றும் வழிகாட்டுதல் *அறம் பொருள் பவுண்டேஷன்* சென்னை.

தந்தையை இழந்தபின், தாயும் மகளும் மன அழுத்தத்தில் தவித்தார்கள்—யாரிடமும் பேச முடியாமல், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூட ப...
18/03/2026

தந்தையை இழந்தபின், தாயும் மகளும் மன அழுத்தத்தில் தவித்தார்கள்—யாரிடமும் பேச முடியாமல், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூட பயந்து. அந்த இருண்ட நேரத்தில் நன்செய் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதுடன் அவ்வபோது ஆலோசனை வழங்கியும் துணை நின்றது —நம்பிக்கையின் சிறு விளக்காக.

இன்று, அந்த மகள்—கீதா, B.Sc Nursing—கல்லூரியில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, தன் மதிப்பெண் பட்டியலை நன்செய் அலுவலகம் கொண்டு வந்து காட்டினார்.

கீதாவை வாழ்த்துகிறோம்—அவரது தைரியத்தையும் கடின உழைப்பையும்.
இந்த வெற்றிக்குப் பின்னால் துணை நின்ற கொடையாளர்களுக்கு நன்செய் அமைப்பின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

கீதாவை நம்மிடம் ஒப்படைத்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் திருமதி. சித்ர பிரியா அவர்களை நன்றியோடு நினைவு கூறுகின்றது நன்செய்.

#நன்செய் #கல்வி_என்னும்_விடியல்

இனிதான துவக்கம்.......குலால்பாடி கிராமத்தைச் சார்ந்த 10 முதியோர்களுக்கு தலா ரூ.1000/ மதிப்பிலான மளிகை பொருட்கள்  வழங்கப்...
15/03/2026

இனிதான துவக்கம்.......
குலால்பாடி கிராமத்தைச் சார்ந்த 10 முதியோர்களுக்கு தலா ரூ.1000/ மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

திட்டம் நிதி ஏற்பாடு மற்றும் வழிகாட்டுதல் *அறம் பொருள் பவுண்டேஷன்* சென்னை.

நன்செய்  மாணவி அஸ்விதா அவர்களின் செவிலியர் பட்டயப் படிப்பிற்கான இறுதி ஆண்டு கல்விக் கட்டணம்  செலுத்தப்பட்டன
22/02/2026

நன்செய் மாணவி அஸ்விதா அவர்களின் செவிலியர் பட்டயப் படிப்பிற்கான இறுதி ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டன

04-01-2026 அன்று திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 15 கிராமங்களைச் சேர்ந்த 300 விவசாயக் கூலித் தொழிலாள...
12/01/2026

04-01-2026 அன்று திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 15 கிராமங்களைச் சேர்ந்த 300 விவசாயக் கூலித் தொழிலாளர்களுடன் உழவருடன் மகிழ்வோம் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றன தலைமை விருந்தினராக லிங்கன் இரா.பிரபாகரன் , நிறுவனர் ப்ராவ்டா லா அசோசியேட்ஸ் அவர்களும் ,
சிறப்பு விருந்தினர்களாக திரு பா.சங்கர் மகாதேவன், நிறுவனர் ,உதவும் உள்ளங்கள் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் சென்னை,
முனைவர் திரு.பா.சிம்மச்சந்திரன் , தலைவர் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு,
திரு.இரா.சந்தானம் அறங்காவலர் உதவும் உள்ளங்கள் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் ,
திரு .சி .சி .துரை , உரிமையாளர் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், திருவண்ணாமலை திருமதி . மு.கீதா லட்சுமி , ரிலக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை, திரு ஜா.கென்னடி தென்னை உற்பத்தி/ ஆராய்ச்சியாளர், தலைவர் அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம் கிருஷ்ணகிரி ,
திரு சுபம்.மா .பழனி உரிமையாளர் சுபம் பிரின்டர்ஸ் திருவண்ணாமலை, திரு சுப்ரமணியம் தலைமை கணக்கு அலுவலர்( ஓய்வு) BSNL சென்னை, ஆகியோர்கள் கலந்து கொண்டு விவசாய தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் , மண்வெட்டி , இனிப்பு , தென்னங்கன்று , ஆகியவைகளும் , நான்கு சிறந்த இயற்கை விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்கி
சிறப்பித்தனர் , பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பாரம்பரிய இயற்கை உணவு விருந்துகளுடன் இனிதாக நிறைவு பெற்றன .

உழவருடன் மகிழ்வோம் -04-01-2026
11/01/2026

உழவருடன் மகிழ்வோம் -04-01-2026

11/01/2026
உழவருடன் மகிழ்வோம் 2026
03/01/2026

உழவருடன் மகிழ்வோம் 2026

30/11/2025

தங்களிடம் மகளிர்
இருசக்கர வாகனம் பயன்படாமல் இருப்பின் அவை நன்செய் கிராமப்புற சேவை பணிகளுக்கு பயன்படும்
தொடர்புக்கு 7200043425

சென்னை உதவும் உள்ளங்கள் நிதி உதவி மூலம் ஆறாவது கோவிட்-19 நிவாரணம்,  26 மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகை வழங்கும் விழா 23-...
25/11/2025

சென்னை உதவும் உள்ளங்கள் நிதி உதவி மூலம் ஆறாவது கோவிட்-19 நிவாரணம், 26 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா 23-11-2025 அன்று திருவண்ணாமலை யில் நடைபெற்றன, 2021 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை தங்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை பெற்றோர்கள், மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்,அவர்களின் பகிர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு நன்செய் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகளையும் வெளிப்படுத்தியது , கடந்த ஆண்டுகளில் சராசரியாக 5 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு இரண்டு லட்சத்து 60 ஆயிரம் மட்டுமே வழங்க முடிந்தது, நிதி நெருக்கடியான சூழலிலும் நிதி உதவி வழங்கிய உதவும் உள்ளங்கள் அமைப்பின் அறங்காவலர்கள் போற்றுதலுக்குரியவர்கள், கல்விக் கொடை விழாவில் திருவண்ணாமலை
திரு பாலசுந்தர்ராஜன் வி பி சி ஜூவல்லர்ஸ், திரு ஜனகராஜ், உதவி இயக்குனர் குடிநீர் வடிகால் வாரியம் ,
திரு பச்சையப்பன் பேங்க் ஆப் பரோடா பொது மேலாளர் (ஓய்வு) , திரு ராஜசேகர் தலைமை ஆசிரியர் (ஓய்வு) ,
திரு சுப்பிரமணி அருணாச்சலேஸ்வரர் ஏஜென்சிஸ், ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Address

Chennai
600054

Alerts

Be the first to know and let us send you an email when Nansei Educational and Public Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nansei Educational and Public Charitable Trust:

Share