President:S.Dinesh Kumar.M.Sc.,MBA(HR),PGD.,NGO
General Secretary:R.Sivagnanam
Vice Chairman&State Joint General Sec(ED)-S.Dhayalan.,B.E.MBA(HR),PGD • மனித உரிமைகள் கழகம் கடந்த 2000-ஆம் ஆண்டு
டாக்டர் S. சுரேஷ் கண்ணன் தலைவராகப் பொறுப்பேற்றுத் தொடங்கப்பட்டு 2008-ல் மனித உரிமைகள் கழகம் ஐ.நா சபையில் அங்கீகாரம் பெற்று உலகளாவிய சர்வதேச அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது.
• சென்னை உயர்நீத
ிமன்ற நடவடிக்கைக்குப் பிறகு 2015ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பானது "சர்வதேச உரிமைகள் கழகம்” என்ற பெயரில் இயங்கி வருகிறது.
அமைப்பின் குறிக்கோள், நோக்கம் மற்றும் செயல்பாடுகள்:-
• இவ்வமைப்பானது எண்ணிலடங்கா வழக்குகளை எடுத்துத் தீர்வு கண்டு கொடுத்திருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் வேலை பார்க்க அழைத்துச் சென்று அங்கு கைவிடப்பட்டு ஆதரவின்றி இருந்த 13,000-த்திற்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்டு வந்திருக்கிறது.
• வெளிநாடுகளில் பணிபுரியும் போது அங்கு இறந்துவிட்ட நபர்களின் ,1000- த்திற்கும் மேற்பட்ட பூத உடல்களை அவர்கள் உறவினர்களிடம் உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்கப்பட்டது.
• பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறது.
• இவ்வியக்கத்தின் சார்பாக ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான வழக்குகளை சந்தித்து மனித உரிமை மீறலால் பாதித்த நபர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றுக் கொடுத்தும், பாதிப்பு அடையச் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளோம்.
• பெண் சிசுவதை தடுப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, கொத்தடிமைகள் மீட்பு, வரதட்சணை கொடுமை, பாலியல் பலாத்காரம், காவல்துறையில் மனித உரிமை மீறல், அரசு துறையில் மனித உரிமை மீறல், மருத்துவத் துறையில் மனித உரிமை மீறல், தனியார் துறையில் மனித உரிமை மீறல் மற்றும் பலதரப்பட்ட சமுதாயப் பிரச்சனைகளை கையில் எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
• ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பிலும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்திக் கொண்டு வருகிறோம்.