Islamic Research info

Islamic Research info Creating and Creativity of Islamic Knowledge
(5)

16/05/2026

#அபாபீல்_பறவை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் நடந்த அற்புத வரலாற்றை இங்கே இறைவன் குறிப்பிடுகிறான். உலகில் முதன் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட ஆலயம் கஃபாவாகும். அதனைத் தகர்க்கும் எண்ணத்துடன் புறப்பட்டு வந்த யானைப் படையினரை இறைவன் அழித்தொழித்த இந்த வரலாற்றை அறியாத முஸ்லிம்கள் இருக்க முடியாது.

அவர்கள் அந்த வரலாற்றை மட்டும் அறிந்தார்களே தவிர புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரியவில்லை. இல்லையென்றால் இந்தியாவில் ஒரு இறையில்லம் மதவெறி பிடித்த ரவுடிக் கும்பலால் தரைமட்டமாக்கப்படும் போதும் இவர்கள் அபாபீல் பறவைகளைத் தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அபாபீல் பறவைகளை அனுப்பி தனது ஆலயத்தை இறைவன் காத்தது உண்மை. இதில் எள்ளளவும் ஐயமில்லை. உலகில் இருக்கும் எல்லாப் பள்ளிவாசல்களையும் காக்க அபாபீல் பறவைகள் வந்து விடும் என்பது இதன் அர்த்தமா? உலகில் எந்தப் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட முடியாது என்று இந்த அத்தியாயம் உத்திரவாதம் தருகின்றதா? முஸ்லிம்கள் இதற்காக எந்தத் தியாகமும் செய்யத் தேவையில்லை என்பது தான் இதன் பொருளா? இல்லை! நிச்சயமாக இல்லை!

கஃபா எனும் ஆலயத்திற்கு மட்டும் இறைவன் வழங்கிய பிரத்தியோகமான சலுகையே இது. முஸ்லிம்கள் முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிவாயில்கள் அனைத்தும் இறைவனது இல்லங்கள்தான் என்றாலும் கஃபாவுக்கு என்று விசேஷமான தகுதிகள் உள்ளன.
முஸ்லிம்கள் தொழும் திசையாகவும், இணைவைப்பவர்கள் அனுமதிக்கப்படாத புனிதத் தலமாகவும், போர் செய்வது விலக்கப்பட்ட இடமாகவும், தவாப் எனும் பிரத்தியோகமான வணக்கம் நடைபெறும் ஆலயமாகவும், உலக முஸ்லிம்கள் குழுமி ஹஜ் எனும் வணக்கம் புரியும் தளமாகவும் அது அமைந்துள்ளது. கஃபாவுக்கு என்று சிப்புத் தகுதிகள் உள்ளன என்பதற்கு இவை சான்றுகள்.

மேலும் கஃபாவை அபய பூமியாகவும் இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.
“புனிதமான ஆலயமான கஅபாவையும் மனிதர்களுக்கு நிலையானதாகவும் அல்லாஹ் ஆக்கிவிட்டான்”
(அல்குர்ஆன் 5:97)

“இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?”
(அல்குர்ஆன் 29:67)

“அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்கு வசிப்படமாக நாம் ஆக்கவில்லையா?”
(அல்குர்ஆன் 28:57)

இந்த வசனங்கள் யாவும் கஃபா ஆலயத்துக்கு இறைவன் தனி உத்திரவாதம் வழங்கியிருப்பதைக் குறிப்பிடுகின்றன. ஆரம்பம் முதலே அந்த ஆலயத்தை மானிடாரின் அபய பூமியாகவும், பாதுகாக்கப்பட்ட புனிதத் தளமாகவும் இறைவன் ஏற்படுத்தியுள்ள காரணத்தினால் அதைக் காக்கும் பொறுப்பை நேரடியாக அவன் ஏற்றுக் கொண்டான்.

உலகில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தையும் காக்க அவன் அபாபீல் பறவைகளை அனுப்பி வைப்பான் என்பது இதன் அர்த்தமில்லை.
இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். கஃபாவை அழிக்க யானைப் படையினர் வந்தபோது கஃபா ஒரே இறைவனை மட்டும் வணங்கும் தூய வழிபாட்டுத் தலமாக இருக்கவில்லை.

இறைவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் ஏராளமான கற்சிலைகள் அங்கே நிறுத்தப்பட்டிருந்தன. அவை கடவுள்களாக நம்பப்பட்டு வணங்கப்பட்டு வந்தன. ஏக இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயமாக அது இருந்தும் மாசுபடுத்தப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் அதை இறைவன் பாதுகாத்தான்.

அல்லாஹ்வின் இல்லமாக இருக்க வேண்டிய விதத்தில் அது இல்லாமலிருந்தும் அதை இறைவன் பாதுகாத்தது “அந்த இடம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட புனித பூமி” என்பதைக் காட்டுகின்றது. அதில் எவ்வளவு மோசமான காரியங்கள் நிகழ்ந்த போதும் அவன் அதை அழிந்து போக விட மாட்டான். இதைத்தான் அந்த 105- ஆவது அத்தியாயம் விளக்குகின்றது.

அப்படியானால் மற்ற பள்ளிவாசல்களின் நிலை? அதற்கு எந்த உத்திரவாதத்தையும் இறைவன் வழங்கவில்லை. மனிதர்கள்தான் அதைக் காக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் எனத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.

மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப் பட்டிருக்கும்.
(அல்குர்ஆன் 22:40)

16/05/2026

இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்ற தொடங்கிய நடிகர் ஜெய் கூறிய காரணம்.

  | ம.பி: இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த மசூதியை, சரஸ்வதி கோயில் என அறிவித்த உயர்நீதிமன்றம்  |   |
16/05/2026

| ம.பி: இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த மசூதியை, சரஸ்வதி கோயில் என அறிவித்த உயர்நீதிமன்றம்

| |

அப்போ இதுவரை நல்ல காலம் பிறக்கலையா?
12/05/2026

அப்போ இதுவரை நல்ல காலம் பிறக்கலையா?

வரவேற்கப்பட கூடிய ஒன்று....
12/05/2026

வரவேற்கப்பட கூடிய ஒன்று....

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்...
11/05/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சற்று முன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கட்சி தொடங்கிய நாள் முதலே இருப்பவர் தாகிரா பானு.! ஆனால் ஸ்லீப்பர் செல்லுக்கு அமைச்சர் பதவி😡😡😡
11/05/2026

கட்சி தொடங்கிய நாள் முதலே இருப்பவர் தாகிரா பானு.!

ஆனால் ஸ்லீப்பர் செல்லுக்கு அமைச்சர் பதவி😡😡😡

முதல்வர் திரு விஜய் அவர்கள் திராவிடர் கழக தலைவர் திரு கீ. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.உங்களின் மேலான கருத...
10/05/2026

முதல்வர் திரு விஜய் அவர்கள் திராவிடர் கழக தலைவர் திரு கீ. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உங்களின் மேலான கருத்துகளை இங்கு நாகரிகமாக பதிவிடுங்கள்.....

 #அரசியல்Post | இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல் புகாரி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்  |   |
07/05/2026

#அரசியல்Post | இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல் புகாரி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்

| |

  | தவெகவுக்கு ஆதரவு தர முடியாது - IUML  |   |   |
06/05/2026

| தவெகவுக்கு ஆதரவு தர முடியாது - IUML

| | |

சாதி இந்துக்களும், பட்டியல் சமூக வாக்குகளும் பெருவாரியாக விஜயின் பக்கம் சென்றுள்ளது ஆனால் அதைக் குறித்து பேசுவதற்கு இணைய...
05/05/2026

சாதி இந்துக்களும், பட்டியல் சமூக வாக்குகளும் பெருவாரியாக விஜயின் பக்கம் சென்றுள்ளது ஆனால் அதைக் குறித்து பேசுவதற்கு இணைய திமுக கும்பலுக்கு தைரியம் இல்லை.

ஆனால் நாம் பேசுவோம்...!

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்ப்பாராத தோல்வியை சந்தித்துள்ளது அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் சில திமுகவின் இணைய கும்பல் முஸ்லிம்கள் பெருவாரியாக தவெகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்து விட்டார்கள் என்று குமுறி கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"நிஜம் அதுவல்ல"

விஜய் அலையிலும் முஸ்லிம்கள் திமுகவை கைவிடவில்லை.

13 முஸ்லிம்களை தனது கட்சியின் வேட்பாளர்களாக விஜய் நிறுத்தியிருந்தாலும் அவர்களில் மூவர் மட்டுமே சட்ட மன்றம் செல்கின்றனர்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மக்களுக்காக எப்போதும் களம் கண்டு கொண்டிருக்கும் K M ஷெரீப் என்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர் போட்டியிட்ட போதும் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை, பாபநாசம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், கடையநல்லூர், ஆம்பூர், திண்டுக்கல் போன்ற தொகுதிகளில் தவெகவின் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற வில்லை அங்கெல்லாம் திமுக அணியே வெற்றி பெற்றுள்ளது.

சென்னையில் ஒட்டு மொத்தமாக தவெக வெற்றி பெற்ற நிலையில் துறைமுகம்,சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதற்கு முஸ்லிம்களின் வாக்குகளே காரணம்.

முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் தொகுதிகளான வாணியம்பாடி, ஆம்பூர், விழுப்புரம், விருத்தாசலம், கூடலூர், கோவை தெற்கு, உடுமலைப்பேட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், அரவக்குறிச்சி, திருச்சி மேற்கு, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், பாபநாசம், திருவையாறு, திருவிடைமருதூர், பூம்புகார், மயிலாடுதுறை, சிதம்பரம், கடையநல்லூர், தென்காசி, பாளையங்கோட்டை, திருச்செந்தூர், ராமநாதபுரம், முதுகுளத்தூர், வந்தவாசி உள்ளிட்ட தொகுதிகளை திமுக கூட்டணி கொத்தாக அள்ளியுள்ளது.

குறிப்பாக தஞ்சை, ராம்நாடு, நெல்லை மண்டலங்களில் உள்ள தொகுதிகள் திமுக கூட்டணியை கைவிடவில்லை.

அதற்கு காரணம் முஸ்லிம் வாக்குகளே.

முஸ்லிம்கள் கணிசமாக உள்ள மேட்டுப்பாளையம், அறந்தாங்கி, இராணிப்பேட்டை ஆகிய மூன்று தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. மேட்டுப்பாளையத்தில் தவெக வேட்பாளர் சுனில் ஆனந்த் வெற்றி பெற்றதற்கு காரணம் திமுகவின் போட்டி வேட்பாளர் தான்.

முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக உள்ள திமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள்:

1. துறைமுகம் - சேகர்பாபு
2. சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்
3. ஆம்பூர் - வில்வநாதன்
4. கூடலூர் - திராவிட மணி
5. கோவை தெற்கு - செந்தில் பாலாஜி
6. பொள்ளாச்சி - நித்தியானந்தம்
7. மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்
8. உடுமலைப்பேட்டை - ஜெயகுமார் எம்.
9. திண்டுக்கல் - செந்தில்குமார் ஐ பி
10. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி
11. அரவக்குறிச்சி - இளங்கோ ஆர்
12. திருச்சி மேற்கு - கே என் நேரு
13. சிதம்பரம் - தமிமுன் அன்சாரி
14. சீர்காழி - செந்தில்செல்வன்.ஆர்
15. நாகப்பட்டினம் ஜவாஹிருல்லாஹ்
16. பூம்புகார் - நிவேதா எம் முருகன்
17. திருவாரூர் - கலைவாணன் பூண்டி கே
18. திருவிடைமருதூர் - கோவி செழியன்
19. ராமநாதபுரம் - காதர் மைதீன் என்கின்ற முத்துராமலிங்கம்
20. புதுக்கோட்டை - வி முத்துராஜா
21. பட்டுக்கோட்டை - அண்ணாதுரை கே
22. முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்
23. கடையநல்லூர் - ராஜேந்திரன்
24. வாசுதேவநல்லூர் - E ராஜா
25. தென்காசி - Dr கலை கதிரவன்
26. பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்
27. திருச்செந்தூர் - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
28. விழுப்புரம் - லட்சுமணன் ஆர்

காங்கிரஸ் வென்ற தொகுதிகள்
1. மயிலாடுதுறை - ஜமால் முகமது யூனுஸ்
2. குளச்சல் - தாராஹாய் கத்ஹார்ட்

முஸ்லிம் லீக் வென்ற தொகுதிகள்
1. வாணியம்பாடி - SSB ஃபாரூக்
2. பாபநாசம் - ஷாஜகான்

VCK வென்ற தொகுதி
1. காட்டுமன்னார்குடி - ஜோதிமணி

உண்மை இவ்வாறு இருக்க திமுகவின் இணைய கும்பல் முஸ்லிம்கள் மீது பழியை சுமத்துவது நன்றி கெட்டத்தனம்.

- K.S.அப்துல் ரஹ்மான்
See less

Address

T. Nagar
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Research info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share