AITUC Tamilnadu

AITUC Tamilnadu நன்று கருது! நாளெல்லாம் வினை செய்!!

21/06/2026
20.06.20206தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும்!அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும...
20/06/2026

20.06.20206
தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும்!
அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!
தமிழ்நாடு ஏஐடியூசி வலியுறுத்தல்
ஆவடி, தாம்பரம், வேலூர், ஓசூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளில் திடக்கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்து பணிகளை PPP (Public Private Partnership) முறையில் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்தை நியமிக்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகள் என்பது இலாப நோக்கமற்ற அத்தியாவசிய பொதுச் சேவையாகும். நகரங்களின் சுகாதாரம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய இப்பணிகளை தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கு உட்படுத்துவது பொதுநலனுக்கும் தொழிலாளர் நலனுக்கும் எதிரானதாகும்.
கடந்த காலங்களில் ஒப்பந்தம், அவுட்சோர்சிங் மற்றும் PPP உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தூய்மைப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட அனுபவம் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம், வேலைப் பாதுகாப்பின்மை, சமூகப் பாதுகாப்பு மறுப்பு மற்றும் தொழிற்சங்க உரிமை மீறல்களை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. எனவே தற்போதைய PPP முயற்சியும் அதே பாதையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.
பொதுச் சேவைகளை வலுப்படுத்த வேண்டிய அரசு, அவற்றை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பாதையில் செல்வது தனது சமூகப் பொறுப்பிலிருந்து விலகுவதாகும். எனவே திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை PPP முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
அதே நேரத்தில் தற்போது ஒப்பந்தம், அவுட்சோர்சிங், தினக்கூலி, சுய உதவிக்குழு அல்லது வேறு எந்த பெயரில் பணியாற்றி வந்தாலும், தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் தமிழ்நாட்டின் பணி நிரந்தரச் சட்டத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக நிரந்தரப் பணிகளை நிரந்தரமற்ற தொழிலாளர்களைக் கொண்டு நடத்துவது சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் முரணானதாகும்.
மேலும், உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 2017 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பதோடு, அதன் பின்னர் சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டிய காலமுறை திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே தற்போதைய விலைவாசி மற்றும் குடும்ப வாழ்வாதாரச் செலவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக புதிய குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவான ஊதியம் வழங்குவது வெறும் நிர்வாகக் குறைபாடு அல்ல; அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணிகளில் இத்தகைய சட்ட மீறல்கள் நீண்டகாலமாக தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க வேண்டிய நிர்வாகங்களும், அமலாக்க அமைப்புகளும், ஆய்வு அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியிருப்பது மிகுந்த கவலைக்குரியதாகும்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களும், அவற்றை அமல்படுத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் சட்ட மீறல்களைத் தடுக்கத் தவறினால், அது சட்டத்தின் நோக்கத்தையே அர்த்தமற்றதாக மாற்றிவிடும். எனவே குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மீறும் ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் மற்றும் பொறுப்புடைய நிர்வாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் ஊதிய உரிமையை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், தூய்மைப் பணிகளை PPP முறையில் தனியார்மயமாக்குவது குறித்து ஆலோசனை வழங்கும் எந்தக் குழுவும், எந்த அதிகாரியும் முதலில் தற்போதைய தூய்மைப் பணியாளர்களின் வேலைப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் மனிதக் கண்ணியத்தை எவ்வாறு உறுதி செய்யப் போகிறார்கள் என்பதற்கு பதிலளிக்க வேண்டும். தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவிட்டு தனியார்மயத் திட்டங்களை முன்னெடுப்பது சமூக நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே எதிரானதாகும்.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தலைமுறைகளாக ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியை ஒப்பந்தமயமாக்கி, நிரந்தர வேலைவாய்ப்பை மறுத்து, பாதுகாப்பற்ற சூழலில் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற கட்டாயப்படுத்தும் கொள்கைகள் சமூக நீதியின் நோக்கங்களையே மறுக்கும் செயலாகும். மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் இந்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டியது ஒப்பந்த வேலை அல்ல; கண்ணியமான நிரந்தர வேலை, வாழ்வாதார ஊதியம் மற்றும் முழுமையான சமூகப் பாதுகாப்பாகும்.
தூய்மைப் பணியாளர்களின் உழைப்பின் மீது தான் நமது நகரங்கள் இயங்குகின்றன. நகரங்களின் சுகாதாரத்தையும் மக்களின் வாழ்வையும் பாதுகாக்கும் இந்த தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக அல்ல, உள்ளாட்சி நிர்வாகத்தின் நிரந்தர ஊழியர்களாக அங்கீகரிப்பதே நாகரிகமான சமூகத்தின் அடையாளமாகும்.
எனவே தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் எந்த முயற்சியையும் தமிழ்நாடு அரசு கைவிட்டு, அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம், வாழ்வாதார ஊதியம், சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியூசி வலியுறுத்துகிறது. See less

18.06.20206முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும் உறுதி தேவை!ஆளுநர் உரை குறித்து தமிழ்நாடு ஏஐடியூசி அறிக்கைஇத...
18/06/2026

18.06.20206

முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும் உறுதி தேவை!
ஆளுநர் உரை குறித்து தமிழ்நாடு ஏஐடியூசி அறிக்கை

இது குறித்து தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச்செயலாளர் ம. இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு ஈர்ப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதிய தொழில் கொள்கை குறித்த பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், தொழில் மற்றும் வணிகம் மேலும் எளிமையாக்கப்படும் (Ease of Doing Business) என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கும் தொழில் வளர்ச்சி அவசியமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தொழில் வளர்ச்சி என்பது முதலீட்டாளர்களின் நலன்களை மட்டும் மையப்படுத்தியதாக இருக்க முடியாது.

தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும், சேவைத் துறைகளையும் இயக்கும் உழைக்கும் மக்களின் உழைப்பே அந்த வளர்ச்சியின் அடித்தளமாகும். எனவே தொழில் வளர்ச்சியுடன் தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பும் இணைந்து முன்னேற வேண்டும். ஆனால் ஆளுநர் உரையில் தொழிலாளர் நலன், மற்றும் தொழிற்சங்க உரிமைகள் குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தொழிலாளர் இயக்கங்கள் நாடு முழுவதும் கடுமையாக எதிர்த்து வரும் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகள் (Labour Codes) குறித்தும் ஆளுநர் உரை முழுமையான அமைதியை கடைப்பிடித்துள்ளது. எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை, வேலைப் பாதுகாப்பு, தொழில் தகராறு தீர்வு நடைமுறைகள், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட தொழிலாளர் வர்க்கம் பல தலைமுறைகளாக போராடி வென்ற உரிமைகளை பலவீனப்படுத்தும் அபாயம் கொண்ட இந்த சட்டத் தொகுப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது அவசியமாகும்.

இன்று “Ease of Doing Business” என்ற பெயரில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் “Ease of Living for Workers” – அதாவது தொழிலாளர்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான சூழல் – அதே அளவு முக்கியத்துவம் பெற வேண்டும்.

கடந்த காலங்களில் முதலீட்டு ஈர்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட போதிலும், தொழிலாளர் நலன் மற்றும் தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டன. அதன் விளைவாக வருமான மற்றும் சொத்து அசமத்துவம் அதிகரித்ததோடு, நிரந்தர வேலைவாய்ப்புகள் குறைந்து, ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் வேலைமுறைகள் விரிவடைந்தன. பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் சமமாக பகிர்ந்தளிக்கப்படாதபோது அது சமூக அதிருப்தியையும் அரசியல் விளைவுகளையும் உருவாக்கும் என்பதை சமீபத்திய அரசியல் மாற்றங்கள் மீண்டும் உணர்த்தியுள்ளன.

அசமத்துவத்தை குறைத்து, தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்து, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தற்போதைய அரசின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த முக்கிய காரணிகளில் ஒன்றாகும் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் வெறும் தேர்தல் முழக்கங்கள் அல்ல; அவை மக்களிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளாகும். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

தொழில் கொள்கை எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு தொழிலாளர் கொள்கையும் அவசியமானது. முதலீட்டு இலக்குகளை நிர்ணயிக்கும் அரசு, தொழிலாளர் நல இலக்குகளையும் நிர்ணயிக்க வேண்டும். வேலைவாய்ப்பின் தரம், ஊதிய உயர்வு, சமூகப் பாதுகாப்பு, பெண்களின் வேலைவாய்ப்பு, அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய விரிவான தொழிலாளர் கொள்கையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக உறுதிமொழிகளை வழங்கும் மாண்புமிகு முதல்வர், அதேபோன்று தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் நேரடியாக சந்தித்து தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை பாதுகாக்க அரசு உறுதியுடன் செயல்படும் என்பதை அறிவிக்க வேண்டும். தொழில் அமைதி என்பது தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் இன்றி சாத்தியமல்ல.

மேலும், தொழிலாளர் நலன் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முத்தரப்பு அமைப்பான மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் (State Labour Advisory Board) கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டப்படாமல் இருப்பது மிகுந்த கவலைக்குரியது. தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் தொழில் உறவுகள் தொடர்பான விவகாரங்களில் அரசு, முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களை ஒருங்கிணைக்கும் முக்கிய ஜனநாயக அமைப்பான இந்த வாரியத்தை உடனடியாக கூட்டி, தொழிற்சங்கங்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டு, அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில் முதலீட்டு மாநாடுகள் நடத்தப்படுவது போல, தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம், ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பின் தரம் தொடர்பாக விவாதிக்க மாநில அளவிலான “தொழிலாளர் நலன் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மாநாடு” ஒன்றை
தமிழக அரசு கூட்ட வேண்டும். அந்த மாநாட்டில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், துறைவாரியான தொழிற்சங்கங்களும், அமைப்புசாரா தொழிலாளர் அமைப்புகளும், பெண்தொழிலாளர் பிரதிநிதிகளும், தொழிலாளர் நல நிபுணர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை உருவாக்குவது முதலீடுகள் மட்டுமல்ல; உழைக்கும் மக்களின் வியர்வையும் உழைப்பும்தான். எனவே பொருளாதார வளர்ச்சியும் சமூகநீதியும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதை அரசு உணர வேண்டும். தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும் போதுதான் வளர்ச்சி நிலையானதாகவும் சமத்துவமானதாகவும் அமையும். “Ease of Doing Business” உடன் சேர்த்து “Ease of Living for Workers” என்பதையும் அரசின் அடிப்படைக் கொள்கையாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த திசையில் தொழிலாளர் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான வளர்ச்சியை மையப்படுத்திய கொள்கைகளை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியூசி வலியுறுத்துகிறது.

திருச்சூரில் ஏஐடியூசி பொதுக்குழு துவங்கியதுஜூன் 1, 2, 3 ஆகிய தேதிகளில் திருச்சூரில் நடைபெற உள்ள  ஏஐடியூசி அகில இந்திய பொ...
01/06/2026

திருச்சூரில் ஏஐடியூசி பொதுக்குழு துவங்கியது

ஜூன் 1, 2, 3 ஆகிய தேதிகளில் திருச்சூரில் நடைபெற உள்ள ஏஐடியூசி அகில இந்திய பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில், தோழர் கே.பி. ராஜேந்திரன் ஏஐடியூசி கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்விற்கு தோழர் கே. சுப்பராயன், நாடாளுமன்ற உறுப்பினர், தலைமை தாங்கினார். ஏஐடியூசியின் பொதுச் செயலாளர் தோழர் அமர்ஜித் கவுர், செங்கொடியின் வரலாறு மற்றும் அதன் போராட்டப் பாரம்பரியம் குறித்து சுருக்கமாக விளக்கமளித்தார்.

தொடர்ந்து பொது அமர்வு தோழர் கே. சுப்பராயன் எம். பி. தலைமையில் நடைபெற்றது. வரவேற்பு உரையை தொடர்ந்து ஏஐடியூசி பொதுச்செயலாளர் தோழர் அமர்ஜித் கவுர் இன்றைய அரசியல் பொருளாதார நிலை குறித்தும், தொழிலாளி வர்க்கத்தின் கடமைகள் குறித்தும் உரையாற்றினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழர்கள் கே. சுப்பராயன், எம்.பி., வஹிதா நிஜாம், டி. எம். மூர்த்தி, சி. எச். வெங்கடாசலம் (வங்கி) ,ஸ்ரீகுமார் (பாதுகாப்புத்துறை), எஸ். காசிவிஸ்வநாதன், எம். ராதாகிருஷ்ணன், எஸ். சந்திரகுமார், எம். ஆறுமுகம், ஆர். ஆறுமுகம், என். சேகர், ஏ. பாஸ்கர், பீட்டர் துரைராஜ், என். செல்வராஜ், மீனாள் சேதுராமன், சி. தங்கவேலு, கே. எம். செல்வராஜ்,எம்.ஜஹாங்கீர், நாராயண சிங்,டாக்டர் சாந்தி,எம்.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெயில் தாக்குதலிலிருந்து பொது வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுத்திடுக!வெயிலில் உழைக்கும்...
31/05/2026

வெயில் தாக்குதலிலிருந்து பொது வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுத்திடுக!

வெயிலில் உழைக்கும் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை; வெப்ப அலை காலங்களில் கட்டாய ஓய்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
கேரளா, ஒடிசா, டெல்லி மாநிலங்களைப் போன்று வெப்ப அலை பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்

தமிழ்நாடு அரசை தமிழ்நாடு ஏஐடியூசி வலியுறுத்துகிறது

இது குறித்து தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் தற்போது கோடைக்கால வெப்பநிலை பல இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படுகிறது. இத்தகைய சூழலில் கட்டுமானத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மின்வாரிய களப்பணியாளர்கள், தபால் மற்றும் விநியோகப் பணியாளர்கள் உள்ளிட்ட பொது வெளியில் வேலை செய்யும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையான உடல்நல ஆபத்துகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக நீரிழப்பு, மயக்கம், வெப்பச் சோர்வு, வெப்பத் தாக்குதல், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. பல இடங்களில் மதிய நேரத்திலும் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய நிர்பந்திக்கப்படும் நிலை நிலவுகிறது. இது தொழிலாளர்களின் உடல்நலத்திற்கும் உயிர் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

உலக தொழிலாளர் அமைப்பும் (ஐஎல்ஓ), பல்வேறு பொது சுகாதார அமைப்புகளும் கடுமையான வெப்பநிலை காலங்களில் போதிய குடிநீர், நிழல் வசதி, கட்டாய ஓய்வு இடைவெளி, வெப்பநிலைக்கு ஏற்ப வேலை நேர மாற்றம் மற்றும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

மேலும், வெயில் அனைவரையும் ஒரே அளவில் பாதிப்பதில்லை. குளிர்சாதன வசதி கொண்ட அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சாலையோரங்களிலும் கட்டுமானப் பணியிடங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் வேறுபட்டது. காலநிலை மாற்றத்தின் சுமையை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சமமாகச் சுமப்பதில்லை. மிகக் குறைந்த வருமானம் பெறும் பொது வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களே தங்களது உடல்நலத்தையும் வாழ்வாதாரத்தையும் பணயம் வைத்து அதன் மிகப் பெரிய விலையைச் செலுத்துகின்றனர்.

எனவே தற்போதைய தமிழ்நாட்டு வெப்ப அலை சூழலில் இது வெறும் வானிலைப் பிரச்சினை மட்டுமல்ல; தொழிலாளர் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் சமூக நீதி சார்ந்த ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.

வெயில் தாக்குதலால் ஏற்படும் ஆபத்துகளை கருத்தில் கொண்டு கேரளா, ஒடிசா, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் வெப்ப அலை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சிறப்பு வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளன. தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மதிய நேர ஓய்வு, வேலை நேர மாற்றம், குடிநீர் மற்றும் முதலுதவி வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசும் உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்துகிறது.

1.வெயில் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்படும் நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பொது வெளியில் நடைபெறும் பணிகளை நிறுத்தி தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க வேண்டும்.

2.வெப்பத் தாக்குதலால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் உரிய இழப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

3.அனைத்து பணியிடங்களிலும் குளிர்ந்த குடிநீர், ஓஆர்எஸ், நிழல் ஓய்வு மையங்கள் மற்றும் முதலுதவி வசதிகளை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும்.
4.தொழிலாளர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியமர்த்தும் முகமைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை மிகவும் கொடூரமாக அனுபவிப்பவர்கள் பொது வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களே. நகரங்கள், கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள், மின்சாரப் பராமரிப்பு, அஞ்சல் மற்றும் விநியோகச் சேவைகள், விவசாய உற்பத்தி உள்ளிட்ட அன்றாடப் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களின் உழைப்பின் மீதே இயங்குகின்றன. எனவே அவர்களின் உயிர் மற்றும் உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் உடனடி கடமையாகும்.

வெயில் தாக்குதலால் தொழிலாளர்களின் உயிரிழப்போ, உடல்நலப் பாதிப்போ ஏற்படும் நிலையை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. கேரளா, ஒடிசா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாடு அரசும் உடனடியாக சிறப்பு வழிகாட்டுதல்களையும் பாதுகாப்பு உத்தரவுகளையும் வெளியிட வேண்டும்.

எனவே தமிழ்நாடு அரசு தாமதமின்றி அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு பொது வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களை வெப்பத் தாக்குதலிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்நாடு ஏஐடியூசி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபா தனியாக இல்லை உலகின் தொழிலாளி வர்க்கம் உங்களோடு என்னும் முழக்கத்துடன் உலக தொழிற்சங்க சம்மேளனம் WFTU  உலகளாவிய கையெ...
25/05/2026

கியூபா தனியாக இல்லை உலகின் தொழிலாளி வர்க்கம் உங்களோடு என்னும் முழக்கத்துடன் உலக தொழிற்சங்க சம்மேளனம் WFTU உலகளாவிய கையெழுத்து இயக்கம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது.

அதன் படி இன்று சென்னையில் தமிழ்நாடு ஏஐடியூசி போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் ஏஐடியூசி நிர்வாகக் குழு கூட்டத்தின் போது கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் கியூபாவிற்கு ஆதரவாக கையெழுத்து இட்டு அனுப்பிய படிவத்தை பெற்று புகைப்படத்தை கியூப தோழர்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கீழ்க்கண்ட வாறு நன்றி தெரிவித்து உள்ளனர்.

Thank you comrades for the support.

We are aiming to reach millions of workers worldwide. We appreciate your continuing efforts and sharing this broadly to all your members, social media and traditional platforms.

தொழிலாளி வர்க்கத்தின் கடமையை தொடர்ந்து நிறைவேற்றுவோம்.

https://www.facebook.com/share/p/1Dst9KXpCo/

இந்தியா: 9,000 மைல்கள் தொலைவில் இருந்தாலும் மக்களுக்கிடையேயான ஒற்றுமையை தடுக்க முடியாது.

2026 மே 25 அன்று சென்னை நகரில் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் (AITUC) செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. “கியூபா தனியாக இல்லை! – FIRMO POR CUBA” என்ற உலகளாவிய கையெழுத்து சேகரிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கியூபாவுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சேகரிக்கப்பட்ட கையெழுத்துப் படிவங்கள் AITUC தேசிய செயலாளர் தோழர் டி. எம். மூர்த்தி மற்றும் மாநில பொதுச்செயலாளர் எம். ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

கையெழுத்திடுங்கள்: www.firmoporcuba.com

INDIA: 9,000 miles away yet the solidarity between the people cannot be stopped.

A meeting of the Executive Committee of the Tamil Nadu State Transport Corporation Employees Federation (AITUC) was held in Chennai on May 25, 2026. A Global Campaign for Signature Collection: “CUBA IS NOT ALONE! – FIRMO POR CUBA”
signature campaign in support of Cuba was conducted, and the collected form were submitted to AITUC National Secretary Comrade T.M. Murthi and State General Secretary M. Radhakrishnan. In the meeting decided to conduct a state wide Signature campaign.

24.05.2026 கியூபா தனியாக இல்லை! கியூபாவுக்காக  உலகளாவிய கையெழுத்து இயக்கம்அன்புள்ள தோழர்களே,கியூபா மீது அமெரிக்கா   பொரு...
24/05/2026

24.05.2026

கியூபா தனியாக இல்லை!
கியூபாவுக்காக உலகளாவிய கையெழுத்து இயக்கம்

அன்புள்ள தோழர்களே,

கியூபா மீது அமெரிக்கா பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது கியூப புரட்சியின் தளபதிகளில் ஒருவரும், தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்களின் தம்பியும், முன்னாள் அதிபர், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான தோழர் ராவுல் காஸ்ட்ரோ (வயது 94) அவர்கள் மீது அமெரிக்கா குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளது. 1996-ல் மியாமியை அடிப்படையாகக் கொண்ட கியூபா எதிர்ப்பு அமைப்பான Brothers to the Rescue இயக்கிய இரண்டு சிறிய விமானங்களை கியூபா விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அந்தச் சம்பவத்தில் நால்வர் உயிரிழந்தனர்; அவர்களில் மூவர் அமெரிக்கர்கள் என்று அமெரிக்கா கூறுகிறது. அந்நேரத்தில் ரவுல் காஸ்ட்ரோ கியூபாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்ததால், அமெரிக்க குடிமக்களை கொல்ல சதி செய்தது, கொலை குற்றச்சாட்டு, விமானங்களை அழித்தது என்று அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளது.

அத்து மீறி ஈரானுக்குள் புகுந்து அந்நாட்டின் உச்ச தலைவர் கொமேனியை படுகொலை செய்தது. வெனிசுலாவிற்குள் நுழைந்து அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை கைது செய்தது. இது போன்ற ஒரு கொடுஞ்செயலுக்கு கியூபைவை ஆட்படுத்தி கியூபாவின் இறையான்மையை சீரழிக்கும் நோக்கத்தில் தோழர் ராவுல் காஸ்ட்ரோ அவர்களை குறிவைத்துள்ளது.

இந்நிலையில் கியூபாவுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உலக தொழிற்சங்க சம்மேளனம் WFTU, கையெழுத்து இயக்கத்திற்கான அழைப்பை விடுத்துள்ளது. மின்னஞ்சல் மூலமாக கையொப்பமிட இயல்பவர்கள்
கீழ்க்கண்ட இணைப்பு வழியாக அனுப்பவும், அந்த இணைப்பை பகிரவும் வேண்டுகிறோம்.
https://www.firmoporcuba.com/print

தோழமையுள்ள,

(ம.இராதாகிருஷ்ணன்)
பொதுச்செயலாளர்

Cuba is not alone · Cuba no está sola · Cuba n'est pas seule · كوبا ليست وحدها — Sign the global petition.

Address

KTK Thangamani Illam, 2/1, Kovur Vaithiyanatham Street , Chinthadripet, Chennai/
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when AITUC Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AITUC Tamilnadu:

Share