25/08/2026
சாமி நாகப்பன் படையாட்சி சிலை அவமதிப்பு — வன்மையான கண்டனம்!
சாமி நாகப்பன் படையாட்சி அவர்களின் வெண்கலச் சிலை குப்பைக் கிடங்கு போல மாற்றப்பட்டது ஏன்?
மயிலாடுதுறை நகராட்சியின் நிர்வாக முடிவா? அல்லது புதிய அரசியல் நிர்வாகத்தின் நவீன அணுகுமுறையா?
தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியுடன் இணைந்து போராடிய முன்னோடி சத்தியாகிரகப் போராளியான சாமி நாகப்பன் படையாட்சி அவர்களின் நினைவைப் போற்ற வேண்டிய நிலையில், அவரது வெண்கலச் சிலையை குப்பைக் கிடங்காக வைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும், வரலாற்றை அவமதிக்கும் செயலுமாகும்.
சிலையை உடனடியாக உரிய மரியாதையுடன் பாதுகாக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மயிலாடுதுறை நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், ஜனநாயக ரீதியிலும் சட்டப்பூர்வமான வழிகளிலும் எங்களது அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சாமி நாகப்பன் படையாட்சி அவர்களின் வரலாற்றையும் தியாகத்தையும் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகளும் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்மையாகக் கண்டிக்கிறோம்!
வரலாற்றை மதிப்போம் — தியாகிகளைப் போற்றுவோம்!
Mayiladuthurai
District Police
படங்கள் மற்றும் பதிவு : kshatriyas