புதிய தொழிலாளி

புதிய தொழிலாளி உலக தொழிலாளர்களே... ஒன்று சேருங்கள்..!
முதலாளித்துவம் ஏமாற்று!
சோசலிசமே மாற்று!

*MASA பத்திரிக்கை* *செய்தி!* *மாநேசர் தொழிலாளர் போராட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குருகிராம் மாவட்ட நீதிமன்...
18/05/2026

*MASA பத்திரிக்கை* *செய்தி!*

*மாநேசர் தொழிலாளர் போராட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குருகிராம் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது : அரசு-முதலாளித்துவ கூட்டுச் சதிக்கு (State-Capitalist nexus) ஒரு பாடம்!*

*மாநேசர், நொய்டா பகுதிகளில் வர்க்கப் போராட்டத்துக்காக கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க! ஹரித்வாரில் தொழிற்சங்க உறுப்பினர்கள்மீது நடைபெறும் அடக்குமுறையை நிறுத்துக!*

2026 மே 18 அன்று, குருகிராம் மாவட்ட நீதிமன்றம், 17 தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான தோழர் அஜித்திற்கு ஜாமீன் வழங்கியது. இவர் *Bellsonica Auto Component India Employees' Union* அமைப்பின் பொதுச் செயலாளர் ஆவார். ஏப்ரல் 12–13 நள்ளிரவில் ஹரியானா போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர்கள், ஒரு மாதத்திற்கும் மேலாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவிதமான “குற்றச்சாட்டு நிரூபிக்கும் ஆதாரங்களையும்” (incriminating material) ஹரியானா போலீசார் சமர்ப்பிக்க முடியவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் *பிருந்தா குரோவர்,* கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும், கைது செய்யப்பட்டதை உறவினர்கள் அல்லது நெருங்கியவர்களுக்கு உரிய நடைமுறைகளின்படி அறிவிக்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.

2026 ஏப்ரல் 9 அன்று நடந்ததாகக் கூறப்படும் வன்முறை சம்பவம் நடந்த இடத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இல்லை என்றும், ஏப்ரல் 12–13 இரவு அவரது தொழிற்சங்க அலுவலக அறையிலிருந்து கைது செய்யப்பட்டார் என்றும் ஹரியானா போலீசார் ஒப்புக்கொண்டனர். மேலும், நீதிமன்றத்தில் இருந்தபோது அவரது வழக்கறிஞருக்கு ஒரு “மிஸ்ட் கால்” செய்ததைத் தவிர, உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்பட்டதாக ஆதாரம் காட்ட முடியவில்லை. இதே FIR-இல் கைது செய்யப்பட்ட மற்றொரு தொழிலாளியான அங்கித் குமாருக்கும் மே 12 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீன் வழங்கிய கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி Gagan Geet Kaur, “அப்ஹி தோ யே அங்கடை ஹை, ஆகே ஓர் லடாய் ஹை, இன்குலாப் ஜிந்தாபாத்" என்று சொல்வது குற்றமெனில், இந்த (அரசியல் )அமைப்பே வெட்கப்பட வேண்டும்*” என்று குறிப்பிட்டார். இது, இந்திய குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் — குறிப்பாக கூடுகை நடத்தும் உரிமை, சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை அமைக்கும் அடிப்படை உரிமை — மீது அதிகரித்து வரும் கட்டுப்பாடுகளை பிரதிபலிக்கிறது. இணைக் குற்றச்சாட்டுக்குட்பட்ட ஷ்யாம்பிர், ஹரீஷ், ராஜு, பிண்டு மற்றும் ஆகாஷ் ஆகியோருக்கான ஜாமீன் மனுக்களும் தாக்கல் செய்யப்படவுள்ளன.

2026 ஏப்ரல் 9 அன்று மாநேசர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIR எண் 94/2026-ல் குற்றச் சதி, கொலை முயற்சி, அரசுப் பணியாளரைத் தாக்குதல், சட்டவிரோதக் கூடுகை மற்றும் கலவரம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கக்கூடிய வழக்காக இது அமைந்துள்ளது.

இந்த FIR, ஏப்ரல் தொடக்கத்திலிருந்து மாநேசர் பகுதியில் நடைபெற்ற கூலி உயர்வு, 8 மணி நேர வேலைநாள், இரட்டிப்பு ஓவர்டைம் ஊதியம் மற்றும் மனிதாபிமானமான வேலைநிலைகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற வேலைநிறுத்தங்களுடன் தொடர்புடையது. இதில் முக்கிய ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனமான *Richa Global Exports* நிறுவனத் தொழிலாளர்களும் பங்கேற்றனர். இந்தப் போராட்டம் நொய்டா (உத்தரப் பிரதேசம்) மற்றும் பிற மாநிலங்களுக்கும் பரவியது. மாநேசரில், 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக தனியான FIR பதிவு செய்யப்பட்டது. அதேபோல் நொய்டாவில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிராக FIR எண்கள் 163, 164 மற்றும் 165/2026 பதிவு செய்யப்பட்டுள்ளன.

அடிப்படை கோரிக்கைகளுக்காக தொழிலாளர் போராட்டங்கள் Bhiwadi, உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் ஹரித்துவார், ருத்ராபூர் பகுதிகளுக்கும் பரவி வரும் நிலையில், மாநிலம்–முதலாளித்துவ கூட்டுச் சதி இதை தொழிலாளர் பிரச்சினையாக அல்லாமல் “சட்டம் மற்றும் ஒழுங்கு” பிரச்சினையாக, குற்றவியல் கோணத்தில் கையாள்கிறது. உத்தரப் பிரதேச போலீசார் தொழிற்சாலைகள் கண்காணிப்புகென காவல் துணை ஆணையர் (DCP-Industries) என்ற தனிப் பதவியையும் உருவாக்கியுள்ளனர்.
மேலும், “பாகிஸ்தான் தொடர்புடைய சதி” மற்றும் “நக்சலிசத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சி” குறித்த விசாரணைகளும் நடத்தப்படுகின்றன. இதனுடன், புரட்சிகர தொழிலாளர் மையம் ( Inquilabi Mazdoor Kendra ) தொழிலாளர் அமைப்பின் தலைவர்களுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பங்கஜ் பாவாடி மற்றும் போபால் ராவத் ஆகியோர் மே 18 அன்று காலை ஹரித்வாரின் SIDCUL பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்தூர் அதிகார் சங்கர்ஷ் அபியான் (MASA), குருகிராம் மாவட்ட நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை வரவேற்கிறது. தொழிலாளர் இயக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைக்கிறது. மாநில அமைப்புகள் கார்ப்பரேட் மேலாண்மையின் முகவர்களாக செயல்படாமல், தொழிலாளர் சட்ட மீறல்கள் — குறிப்பாக சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கூலி திருத்தம் செய்யாதது போன்றவற்றை — விசாரித்து, தொழிலாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளைத் தீர்க்க வேண்டும்.

Sd/-
மஸ்தூர் அதிகார் சங்கர்ஷ் அபியான் (MASA)

போராடும் தொழிலாளர்களுக்கு துணை நிற்போம்! தொழிலாளர் வர்க்க உரிமைகளை மீட்டெடுப்போம்!
12/05/2026

போராடும் தொழிலாளர்களுக்கு துணை நிற்போம்!

தொழிலாளர் வர்க்க உரிமைகளை மீட்டெடுப்போம்!

நாடு முழுவதும் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகஅனைத்து தொழிற்சங்கங்கள் 2026 மே 12 – தேசிய கோரிக்கை நாள்மத்திய தொழிற்சங்க...
08/05/2026

நாடு முழுவதும் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக
அனைத்து தொழிற்சங்கங்கள்
2026 மே 12 – தேசிய கோரிக்கை நாள்

மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் துறை ரீதியான சங்கங்கள் 6 மே 2026 வெளியிட்ட அறிக்கை:

மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் துறை ரீதியான சங்கங்கள்/சம்மேளனங்கள், சமீப காலமாக வட மற்றும் மத்திய இந்தியாவில் எழுந்து வரும் தொழிலாளர் போராட்ட அலையுடன் இணைந்து ஒற்றுமையை தெரிவித்து, மே 12, 2026 அன்று “தேசிய கோரிக்கை நாள்” ஆகக் கடைப்பிடிக்க அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைக்கின்றன.

நொய்டா, கிரேட்டர் நொய்டா, மனேசர், குருகிராம், பரிதாபாத் மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் பல பகுதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்மீது உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் போலீசார் மேற்கொண்ட கொடூரமான அடக்குமுறையை மத்திய தொழிற்சங்கங்கள் கடுமையாக கண்டிக்கின்றன. இது குற்றமற்ற தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதலாகும். அரசு இயந்திரம் வெளிப்படையாக கார்ப்பரேட் நலன்களுக்காக செயல்படுகிறது. இது தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான, கார்ப்பரேட் ஆதரவு கொண்ட அரசுகளின் தாக்குதலாகும்.

கடந்த மூன்று மாதங்களில் வட மற்றும் மத்திய இந்தியாவின் பெரும்பகுதிகளில் தொழிற்துறை தொழிலாளர்களின் தீவிரமான போராட்ட எழுச்சி காணப்பட்டது. இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள குறிப்பாக ஒப்பந்த மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை முன்வைத்து போராடும் தொழிலாளர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்துவதோடு, அவர்கள்மீது நடைபெறும் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து தொழிலாளர்களையும், குறிப்பாக தொழிற்துறை தொழிலாளர்களை, தொழிற்சாலை வாயில்கள் மற்றும் தொழில் மையங்களில் பிரச்சாரங்களை நடத்தி, 2026 மே 12 அன்று நாடு முழுவதும் “கோரிக்கை நாள்” கடைப்பிடிக்க கேட்டுக்கொள்கிறோம்.

இது மனிதநேயமற்ற சுரண்டலுக்கு எதிரான போராட்டமாகும். இது பிப்ரவரி 12 நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தின் தொடர்ச்சியாகும்.

ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச அரசுகள் அவசரமாக (தேவைக்கு மிகவும் குறைவாக இருந்தாலும்) ஊதிய திருத்தம் செய்திருப்பது, போராட்டங்களே முடிவுகளை பெற்றுத் தரும் என்பதை நிரூபிக்கிறது. எனினும் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு ஒரு ஏமாற்று நாடகம் மட்டுமே ஆகும். வாழ்வாதாரச் செலவுகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் ஊதியம், டெல்லியை விட மிகவும் குறைவாகவே உள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தின் சூழலில், தொழிலாளர்கள் மாதத்திற்கு ₹26,000 குறைந்தபட்ச ஊதியத்தை கோருகின்றனர்.

2023–24 ஆம் ஆண்டில் இந்திய உற்பத்தித் துறையில் 42% தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்தனர். கடந்த 25 ஆண்டுகளில் அதிகபட்சம். இவர்கள் 10–13 மணி நேர வேலைக்கு மாதம் ₹10,000–₹12,000 மட்டுமே சம்பாதிக்கின்றனர். ஓவர்டைம் வேலைக்கு இரட்டை ஊதியம் இல்லை; வாராந்திர ஓய்வு இல்லை; ESI, PF, போனஸ், பாதுகாப்பு, வேலை உறுதி எதுவும் இல்லை. நிரந்தர தொழிலாளர்களுக்கு சமமான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் வேலை நேரத்தை நீட்டித்து, ஒப்பந்த முறையை சட்டபூர்வமாக்குகின்றன. பெண் தொழிலாளர்கள் பல்வேறு வகையான தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர்.

எல்பிஜி விலை உயர்வே ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் கட்ட போராட்டங்களுக்கு காரணமாக இருந்தாலும், அதன் அடிப்படை காரணம் ஒப்பந்த முறையின் மூலம் அதிகரிக்கப்பட்ட சுரண்டலே ஆகும்.

பிரச்சினைகளை தீர்க்க பேச்சுவார்த்தையைத் தொடங்காமல், அரசுகள் அடக்குமுறையை மேற்கொள்ளும் வழியைத் தேர்ந்தெடுத்துள்ளன. 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் சோதனைகள், கண்காணிப்பு மற்றும் அடக்குமுறைகளின் மூலம் அச்சத்தை உருவாக்கியுள்ளனர். பல தொழிற்சங்க தலைவர்கள் பொய்யான வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை “வெளியிலிருந்து தூண்டப்பட்டவை” அல்லது “தேச விரோதம்” என்று அவதூறு பரப்பப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நிலையான தொழில் அமைதியை உருவாக்க முடியாது என்பது தெளிவாகிறது.

இந்த சூழலில், மே 12 அன்று நாடு முழுவதும் அனைத்து பணியிடங்களிலும் “தேசிய கோரிக்கை நாள்” கடைப்பிடிக்க வேண்டும். மதிய நேர முழக்கப் போராட்டங்கள், தர்ணாக்கள், பேரணிகள், சைக்கிள்/மோட்டார் சைக்கிள் பிரச்சாரங்கள் மற்றும் பிற புதுமையான முறைகள் மூலம் இது நடத்தப்பட வேண்டும்.

கோரிக்கைகள்:
• கைது செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும்; பொய்யான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்; அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்.

• தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் திரும்ப பெறப்பட வேண்டும்; தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க வேண்டும்; இந்திய தொழிலாளர் மாநாடு அவசரமாக கூட்டப்பட வேண்டும்.

• மாதத்திற்கு ₹26,000 குறைந்தபட்ச ஊதியம்.
• 8 மணி நேர வேலைநாள், மிகைநேர வேலைக்கு இரட்டை ஊதியம், பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ நலன்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

• ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம ஊதியம் மற்றும் நலன்கள்; நிரந்தர பணிகளில் ஒப்பந்த முறையை ஒழித்து, நிரந்தரப்படுத்தல் செய்ய வேண்டும்.

• எல்பிஜி ( சமையல் எரிவாயு) மலிவு விலையில் கிடைக்க வேண்டும்; அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

மத்திய தொழிற்சங்கங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க அழைப்பு விடுக்கின்றன. மனிதநேயமற்ற சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்தவும், தொழிலாளர் இயக்கத்துக்கு எதிரான அரசுகளின் அடக்குமுறையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் அனைவரும் இணைவோம் வாரீர்!

INTUC | AITUC | HMS | CITU | AIUTUC | TUCC | SEWA | AICCTU | LPF | UTUC
மற்றும் துறை ரீதியான சங்கங்கள் / சம்மேளனங்கள்

மேற்கு வங்கத்தில் ஆசான் லெனின் நிலையை உடைத்த  பாசிச பா.ஜ.க கும்பலை கண்டிக்கிறோம்!
07/05/2026

மேற்கு வங்கத்தில் ஆசான் லெனின் நிலையை உடைத்த பாசிச பா.ஜ.க கும்பலை கண்டிக்கிறோம்!

 #மே_05:  #பேராசன்_காரல்_மார்க்ஸ்_பிறந்த_நாள்!
05/05/2026

#மே_05:
#பேராசன்_காரல்_மார்க்ஸ்_பிறந்த_நாள்!

 ு_மேதின_நிகழ்ச்சி!தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி சென்னையின் ஆவடி மாநகர காவல்துறை மேதின பேரணி - ஆர்ப்பாட்டத்துக்...
01/05/2026

ு_மேதின_நிகழ்ச்சி!

தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி சென்னையின் ஆவடி மாநகர காவல்துறை மேதின பேரணி - ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த நிலையில் " மேதின வரலாற்றை பின் தொடர்வோம்! " என்கிற அறைகூவலோடு மேதின தொடர்முழக்க கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ( மாநில ஒருங்கிணைப்புக்குழு ) சார்பில் வடக்கு மண்டல தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு ஆவடி மாநகர உழைக்கும் மக்களும், பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் உணர்வுபூர்வமாக பங்கேற்று முழக்கமிட்ட நிகழ்வாக பதிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு வடக்கு மண்டல பொருளாளர் தோழர் ப.சக்திவேல் தலைமையேற்றார். அவரது தலைமை உரையில் பாசிச மோடி அரசு தொழிலாளர்களை நவீன கொத்தடிமையாக்கும் சட்டத்தொகுப்புகளின் தாக்குதல்களை கோடிட்டு காட்டினார்.

புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் உரையாற்றிய தோழர் அறிவு தனது உரையில், தற்போதைய சர்வதேச அரசியல் நெருக்கடி , டிரம்ப் - மஸ்க் கும்பல் தலைமையிலான அமெரிக்க மேலாதிக்கம் உலகம் முழுவதும் நடத்துக்கின்ற பேரழிவுகள், அதன் விளைவாக நடக்கும் கொத்துகொத்தான வேலை பறிப்புகள், இவற்றால் கேள்விக்குறியாகும் மாணவர் - இளைஞர்களது எதிர்காலம், தொழிலாளி வர்க்கத்தோடு மாணவர் - இளைஞர் இயக்கம் கைகோர்க்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை பதிவு செய்தார்.
மக்கள் அதிகாரக்கழகம் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் சி.வெற்றிவேல் செழியனது உரை ஏகாதிபத்திய உலகமாக்கல் சதி வலையை விரித்த அமெரிக்கா தானே அதில் சிக்கிக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தினார். பின் தங்கிய நாடுகளுக்கு வெட்டிய குழியில் வீழ்ந்து கிடக்கும் அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை இழந்து வரும் சூழலில், சீனா ஒரு புதிய - பலமான போட்டியாக உருவெடுத்து வருவதைக் கண்டஞ்சி காப்புவாதம் என்கிற தற்காப்பு நிலையில் பதுங்கிக் கொண்டு,பாலஸ்தீனம், வெனிசூலா துவங்கி ஈரான் வரை தன்னுடைய கொடுங்கரத்தை நீட்டி ஒரு அறிவிக்கப்படாத உலகப்போரை துவக்கி உள்ள நிலையில் சின்னஞ்சிறு நாடுகள் தமது எதிர்ப்பை காட்டுகின்றன. ஆனால், இந்தியாவில் அம்பானி - அதானி கார்ப்பரேட் கும்பலின் ஏஜண்ட்டாக இயங்கும் மோடி அரசோ இந்த நாட்டின் நலன்களை அமெரிக்காவுக்கு அடகு வைக்கும் மறுகாலனியாக்கத்தை தீவிரப்படுத்துகிறது. உலக அரசியல் நிலையும், இந்திய நாட்டின் மறுகாலனியாக்க துயரமும் அரசியல் போராட்டத்தைக் கோருகின்றன...அந்த அரசியல் போராட்டத்தை உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் மூலம் சாத்தியமாக்க அறைகூவல் விடுத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தோழர் பெ.மோசஸ் தன்னுடைய உரையில் இந்த நாட்டின் அரசியலமைப்புச்சட்டத்தை பாசிச மோடி அரசு சிதைத்து வருவதாக குற்றம் சாட்டினார். அரசியலமைப்பு சட்டம் சொல்லுகின்ற " இறையாண்மை " அர்த்தமற்றதாகியுள்ளது எனவும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளைச் சார்ந்து அவர்களது நலன்களுக்காக இந்திய தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற சட்ட உரிமைகளை பறித்து அப்பட்டமான கார்ப்பரேட் அரசாக இயங்குவதை முறியடிக்க அரசியல்- கட்சி வேறுபாடுகள் கடந்து ஒன்றுபடுவதன் தேவையை வலியுறுத்தினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநகர செயலாளர் தோழர் ஆவடி நாஜராஜன் தன்னுடைய உரையில் பாசிச ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல் தொகுதி வரையறை, பெண்கள் இடஒதுக்கீடு என பல வழிகளில் தன்னுடைய இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைக் முன்னிலைப்படுத்துகிறது. அவற்றை அங்குலம் அங்குலமாக உடைத்தெறிய வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.

இறுதியாக, வடக்கு மண்டல பு ஜ தொ மு - வின் பொதுச்செயலாளர் தோழர் ம.சரவணன் சிறப்புரையாற்றினார்.
1886- ல் மேதினத் தியாகிகள் எந்த முழக்க்கத்தோடு தொழிலாளர்களை ஒன்றுதிரட்டினார்களோ அதே ஒன்றுபடல் தேவை இன்றைக்கும் நீடிக்கிறது என்பதை சமகால நிகழ்வுகளோடு எடுத்துக் காட்டினார். குறிப்பாக, வடமாநிலங்களில் - குறிப்பாக உத்திரப்பிரதேசம், அரியானா,ராஜஸ்தான் மற்றும் NCR தொழிற்பிராந்தியத்தில் - கடந்த பிப்ரவரி 2026 முதல் தொடர்ச்சியாக நடந்து வருகின்ற தொழிலாளர் போராட்டங்களையும், சங்கமாக திரட்டப்படாவிட்டாலும், போராடினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்கிற நெருக்கடி சூழலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் - குறிப்பாக பெண் தொழிலாளர்கள் - வீதியில் இறங்கிப் போராடுவதையும், போலீசு கார்ப்பரேட்டுகளின் அடியாள் படையாக போராடும் தொழிலாளர்களை தாக்குவது, கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளில் சிறையில் அடைப்பது போன்ற அயோக்கியத்தனத்தையும் திரைகிழித்தார். அரசு எந்திரமானது கார்ப்பரேட் முதலாளிகளின் நிர்வாகக்குழுவாக இயங்கிறது என்பதை முத்தாய்ப்பாகச் சொல்லி அரசு எந்திரத்தின் வர்க்கச் சார்பை அம்பலப்படுத்தினார். இந்திய தொழிலாளி வர்க்கம் ஏனைய ஒடுக்கப்படும் வர்க்கங்கங்களுடன் இணைந்தும், உலகம் முழுவதும் நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கு தனது ஒருமைப்பாட்டை அறிவித்தும் முன்னணிப்பாத்திரம் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையை அழுத்தமாக பதிய வைத்து மேதினத்தின் வரலாற்றுச் சுவடுககின் வழியே பயணிக்க அறைகூவல் விடுத்தார்.
வடக்கு மண்டல பு.ஜ.தொ.மு வின் இணைச்செயலாளர் தோழர் து.லெட்சுமணன் நன்றியுரையை பதிவு செய்து மேதின முழக்கத்துடன் கூட்டம் முடிவுற்றது.
இந்த மேதின இயக்கத்தில் பு.ஜ.தொ.மு தோழர்களோடு, தோழமை அமைப்புகளான மக்கள் அதிகாரக்கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் செஞ்சட்டை அணிந்து ,செங்கொடி ஏந்தி எழுச்சியோடு முழக்கமிட்டனர்.

தகவல் :
வடக்கு மண்டல பு.ஜ தொ.மு ( இணைப்பு : பு.ஜ.தொ மு - மாநில ஒருங்கிணைப்புக்குழு )

01/05/2026

மேநாள் வாழ்க!
டிரம்ப் - மாஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!

நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!

என்ற தலைப்பில் கூட்டம் நடக்கின்றது

நேரலை ஆவடி, சென்னை

30/04/2026
 #மேநாள்_வாழ்க!
30/04/2026

#மேநாள்_வாழ்க!

Address

Chennai
600072

Alerts

Be the first to know and let us send you an email when புதிய தொழிலாளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to புதிய தொழிலாளி:

Share

Category