18/05/2026
*MASA பத்திரிக்கை* *செய்தி!*
*மாநேசர் தொழிலாளர் போராட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குருகிராம் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது : அரசு-முதலாளித்துவ கூட்டுச் சதிக்கு (State-Capitalist nexus) ஒரு பாடம்!*
*மாநேசர், நொய்டா பகுதிகளில் வர்க்கப் போராட்டத்துக்காக கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க! ஹரித்வாரில் தொழிற்சங்க உறுப்பினர்கள்மீது நடைபெறும் அடக்குமுறையை நிறுத்துக!*
2026 மே 18 அன்று, குருகிராம் மாவட்ட நீதிமன்றம், 17 தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான தோழர் அஜித்திற்கு ஜாமீன் வழங்கியது. இவர் *Bellsonica Auto Component India Employees' Union* அமைப்பின் பொதுச் செயலாளர் ஆவார். ஏப்ரல் 12–13 நள்ளிரவில் ஹரியானா போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர்கள், ஒரு மாதத்திற்கும் மேலாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவிதமான “குற்றச்சாட்டு நிரூபிக்கும் ஆதாரங்களையும்” (incriminating material) ஹரியானா போலீசார் சமர்ப்பிக்க முடியவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் *பிருந்தா குரோவர்,* கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும், கைது செய்யப்பட்டதை உறவினர்கள் அல்லது நெருங்கியவர்களுக்கு உரிய நடைமுறைகளின்படி அறிவிக்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.
2026 ஏப்ரல் 9 அன்று நடந்ததாகக் கூறப்படும் வன்முறை சம்பவம் நடந்த இடத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இல்லை என்றும், ஏப்ரல் 12–13 இரவு அவரது தொழிற்சங்க அலுவலக அறையிலிருந்து கைது செய்யப்பட்டார் என்றும் ஹரியானா போலீசார் ஒப்புக்கொண்டனர். மேலும், நீதிமன்றத்தில் இருந்தபோது அவரது வழக்கறிஞருக்கு ஒரு “மிஸ்ட் கால்” செய்ததைத் தவிர, உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்பட்டதாக ஆதாரம் காட்ட முடியவில்லை. இதே FIR-இல் கைது செய்யப்பட்ட மற்றொரு தொழிலாளியான அங்கித் குமாருக்கும் மே 12 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் வழங்கிய கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி Gagan Geet Kaur, “அப்ஹி தோ யே அங்கடை ஹை, ஆகே ஓர் லடாய் ஹை, இன்குலாப் ஜிந்தாபாத்" என்று சொல்வது குற்றமெனில், இந்த (அரசியல் )அமைப்பே வெட்கப்பட வேண்டும்*” என்று குறிப்பிட்டார். இது, இந்திய குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் — குறிப்பாக கூடுகை நடத்தும் உரிமை, சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை அமைக்கும் அடிப்படை உரிமை — மீது அதிகரித்து வரும் கட்டுப்பாடுகளை பிரதிபலிக்கிறது. இணைக் குற்றச்சாட்டுக்குட்பட்ட ஷ்யாம்பிர், ஹரீஷ், ராஜு, பிண்டு மற்றும் ஆகாஷ் ஆகியோருக்கான ஜாமீன் மனுக்களும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
2026 ஏப்ரல் 9 அன்று மாநேசர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIR எண் 94/2026-ல் குற்றச் சதி, கொலை முயற்சி, அரசுப் பணியாளரைத் தாக்குதல், சட்டவிரோதக் கூடுகை மற்றும் கலவரம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கக்கூடிய வழக்காக இது அமைந்துள்ளது.
இந்த FIR, ஏப்ரல் தொடக்கத்திலிருந்து மாநேசர் பகுதியில் நடைபெற்ற கூலி உயர்வு, 8 மணி நேர வேலைநாள், இரட்டிப்பு ஓவர்டைம் ஊதியம் மற்றும் மனிதாபிமானமான வேலைநிலைகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற வேலைநிறுத்தங்களுடன் தொடர்புடையது. இதில் முக்கிய ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனமான *Richa Global Exports* நிறுவனத் தொழிலாளர்களும் பங்கேற்றனர். இந்தப் போராட்டம் நொய்டா (உத்தரப் பிரதேசம்) மற்றும் பிற மாநிலங்களுக்கும் பரவியது. மாநேசரில், 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக தனியான FIR பதிவு செய்யப்பட்டது. அதேபோல் நொய்டாவில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிராக FIR எண்கள் 163, 164 மற்றும் 165/2026 பதிவு செய்யப்பட்டுள்ளன.
அடிப்படை கோரிக்கைகளுக்காக தொழிலாளர் போராட்டங்கள் Bhiwadi, உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் ஹரித்துவார், ருத்ராபூர் பகுதிகளுக்கும் பரவி வரும் நிலையில், மாநிலம்–முதலாளித்துவ கூட்டுச் சதி இதை தொழிலாளர் பிரச்சினையாக அல்லாமல் “சட்டம் மற்றும் ஒழுங்கு” பிரச்சினையாக, குற்றவியல் கோணத்தில் கையாள்கிறது. உத்தரப் பிரதேச போலீசார் தொழிற்சாலைகள் கண்காணிப்புகென காவல் துணை ஆணையர் (DCP-Industries) என்ற தனிப் பதவியையும் உருவாக்கியுள்ளனர்.
மேலும், “பாகிஸ்தான் தொடர்புடைய சதி” மற்றும் “நக்சலிசத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சி” குறித்த விசாரணைகளும் நடத்தப்படுகின்றன. இதனுடன், புரட்சிகர தொழிலாளர் மையம் ( Inquilabi Mazdoor Kendra ) தொழிலாளர் அமைப்பின் தலைவர்களுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பங்கஜ் பாவாடி மற்றும் போபால் ராவத் ஆகியோர் மே 18 அன்று காலை ஹரித்வாரின் SIDCUL பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்தூர் அதிகார் சங்கர்ஷ் அபியான் (MASA), குருகிராம் மாவட்ட நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை வரவேற்கிறது. தொழிலாளர் இயக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைக்கிறது. மாநில அமைப்புகள் கார்ப்பரேட் மேலாண்மையின் முகவர்களாக செயல்படாமல், தொழிலாளர் சட்ட மீறல்கள் — குறிப்பாக சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கூலி திருத்தம் செய்யாதது போன்றவற்றை — விசாரித்து, தொழிலாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளைத் தீர்க்க வேண்டும்.
Sd/-
மஸ்தூர் அதிகார் சங்கர்ஷ் அபியான் (MASA)