29/03/2026
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருநர் திருத்த சட்டம் 2026 ஐ திரும்ப பெற வலியுறுத்தி DYFI -SFI - AIDWA விருகம்பாக்கம் பகுதி சார்பாக கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை DYFI விருகம்பாக்கம் பகுதி செயலாளர் தோழர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதி தலைவர் தோழர் சுந்தர்ராஜ், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஆனந்தகுமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் என்.குமரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பகுதி செயலாளர் தோழர் விஜயகுமாரி மற்றும் திருநர் மக்களின் செயற்பாட்டாளர் தோழர் விஸ்வராணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக இந்திய மாணவர் சங்க தோழர் ஆகாஷ் நன்றி உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் DYFI -SFI - AIDWA தோழர்கள் மற்றும் கோயம்பேடு பகுதி திருநர் மக்கள் ஆகியோர் பங்கேற்றனர்