27/08/2025
| மதிப்பிற்குரிய அண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் மாண்புமிகு இந்திய மக்களவை உறுப்பினர் திரு. முனைவர் Thol.Thirumavalavan அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
நன்றியுடன்..
TNEB Apprenticeship Trainees Official
Tneb apprenticeship trainees
மின்வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆவன செய்யுமாறு இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் M. K. Stalin அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்!
~~~~~~~~
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் Chief Minister of Tamil Nadu அவர்களிடம் விசிக சார்பில் இன்று வழங்கிய கோரிக்கை மனு:
பெறல்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம், சென்னை.
வணக்கம்,
தங்களின் மேலான நிர்வாகத்தின்கீழ் இயங்கி வரும் மின்சாரத்துறை, தமிழ்நாடு மின்வாரியத்தில் பொறியியல் பட்டம் (B.E), பட்டயப்படிப்பு (Diploma) மற்றும் தொழிற் பயிற்சி பட்டயப்படிப்பு (ITI) முடித்து, தொழில் பழகுநர் பயிற்சி (Apprentice) முடித்து, தேர்ச்சிப்பெற்றுள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மேனாள் முதல்வர் மறைந்த சமத்துவப் பெரியார் தலைவர் கலைஞர் அவர்களால் அரசாணை-142, Dt.1011.1998 Labour and Employment (R2) Department | தொழில் பழகுநருக்கு வேலைவாய்ப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் ஆட்தேர்வின்போது நேரடி நேர்காணல் மூலம் பணி நியமனம் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டது. பின்னர் வந்த அரசு மேற்கண்ட அரசாணையை கருத்திற் கொள்ளாமல், 2006ம் ஆண்டு எழுத்துத் தேர்வு மூலம் பணியாளர்களை தேர்வு செய்தனர். தற்போது, ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட Apprentice Amendment Act 2014 (Sec22 (1)-ல் அந்தந்த நிறுவனத்திலுள்ள தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு ஆட்தேர்வின் போது கொள்கை ரீதியாக குறைந்தபட்சம் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கூறியுள்ளது.
ஆகவே, தங்களின் மேலான பரிந்துரையில், சமத்துவப்பெரியார் தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்த அரசாணையின்படி மின்வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
முனைவர்.தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விசிக