MSV Vizhuthukal Foundation

MSV Vizhuthukal Foundation This is a foundation (trust) run by the group of old students of Sri Ramakrishna Vivekananda Higher Secondary School,Thiruppunavasal.

அனைவருக்கும் வணக்கம்..  கடந்த 2024-2025 கல்வி ஆண்டில் திருவாடானை வட்டம் சின்னக்கீரமங்கலம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள...
07/08/2026

அனைவருக்கும் வணக்கம்..

கடந்த 2024-2025 கல்வி ஆண்டில் திருவாடானை வட்டம் சின்னக்கீரமங்கலம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் உரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பொருளாதார சூழ்நிலை காரணமாக மேல்படிப்பு படிக்க இயலாத சூழ்நிலையை அறிந்து நண்பர் திரு ஆர். ஶ்ரீதர் VAO மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியில் திருச்சியில் செயல்பட்டு வந்த அறக்கட்டளையின் உதவியுடன் மேல்படிப்பு படிப்பதற்கான உதவிகள் செய்து வந்தார்கள் .

தற்பொழுது மூன்றாம் ஆண்டு படித்து வரும் அம்மாணவனுக்கு தங்கும் அறைக்கும் (விடுதி)மற்றும் சிற்றுண்டிக்கு இந்த வருடம் செலுத்த வேண்டிய தொகையில் பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக மேற்படி மாணவன் தினந்தோறும் சுமார் 50+50 கிலோமீட்டர் தூரம் தினமும் சென்று வரும் நிலையில் உள்ளதை அறிந்த
நண்பர் திரு ஆர். ஶ்ரீதர் அவர்கள் நமது MSV விழுதுகள் அறக்கட்டளைக்கு திரு. சரவணன் ச தலைமையாசிரியர் அவர்களிடம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.

பின்பு MSV விழுதுகள் அறக்கட்டளையின் நண்பர் திரு போ. சேமாங்கோட்டை இராஜமாகேந்திரன் அறந்தை வைகோதாசன் அவர்கள் அந்த மாணவனை தொடர்புகொண்டு உண்மைநிலையை ஆராய்ந்து மாணவனுக்கு தேவையான நிதியுதவியை ஏற்பாடு செய்து ஏற்கனவே உதவி செய்த நண்பர் ஆர்.ஸ்ரீதர் VAO அவர்களுடன் MSV விழுதுகள் அறக்கட்டளையின் நாகுடி Kamal Kannan , புதுவயல் அன்புக்கரசன் இவர்களுடன் இணைந்து நண்பர் மருத்துவர் திரு அறிவழகன் அவர்களின் மருத்துவமனையில் அந்த மாணவனுக்கு ரூபாய் 17,000 காண காசோலை 04/08/2026 அன்று வழங்கப்பட்டு மாணவனின் உயர்கல்வி தொடர வழிவகை செய்யப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ச்சியாக MSV விழுதுகள் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டி MSV விழுதுகள் அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற உறுதுணையாக இருக்கும் கொடைஉள்ளங் கொண்டவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

#திருவாடானை

#சிவகங்கை

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா செக்காந்திடல் கிராமத்தில் வசித்துவரும்  மாணவி ஒருவர் பொருளாதார சூழ்நிலைகாரமாக தன...
29/07/2026

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா செக்காந்திடல் கிராமத்தில் வசித்துவரும் மாணவி ஒருவர் பொருளாதார சூழ்நிலைகாரமாக தனது கல்லூரி படிப்பை தொடர முடியாமல் அவதிக்குள்ளாகிருந்தார்.

அவரின் தந்தை கடந்த 2006 ம் ஆண்டு காலமான நிலையில் கூலி வேலை செய்து வரும் தனது தாயாரின் உதவியுடன் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் படித்து வருகிறார்..

12ம் வகுப்பில்அதிக மதிப்பெண் பெற்று சிறந்த தகுதியின் அடிப்படையில் சகோதரிக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் B.sc physician assistant நான்கு வருட இளநிலை பட்டப்படிப்பை படித்து வருகிறார். கல்லூரியில் இலவசமாக படிப்பை தொடர்ந்தாலும் தங்குவதற்கான விடுதி,சாப்பாடு மற்றும் தேவையான புத்தகங்களை வாங்குவதற்கும் தனது தாயாரின் கூலித் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் போதாத நிலையில் படிப்பை தொடர முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருந்தார்.. சென்ற ஆண்டு நமது MSV விழுதுகள் அறக்கட்டளைக்கு தொடர்பு கொண்டு உதவி கோரிருந்த நிலையில் அவர்களுக்கு
ரூபாய் 32,000/ - கான காசோலையை 03/07/2025 அன்று அவரின் தாயாரிடம் வழங்கப்பட்டது...

இந்தாண்டும் அதன் தொடர்ச்சியாக 25/07/2026 அன்று அவரின் கல்வி செலவிற்காக ரூபாய் 50,000 /- காண காசோலை அவரின் தாயாரிடம் வழங்கப்பட்டது

நாம் செய்யும் சிறு உதவி ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையை மாற்றிவிடலாம்... நிதியளித்து ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும்
MSV விழுதுகள் அறக்கட்டளை சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் 🙏🏼

MSV விழுதுகள் அறக்கட்டளை தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்திடும் என்ற நம்பிக்கையோடு அறம் செய்யக் கரம் கோர்த்து செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம். 🙏🏼🙏🏼🙏🏼


#திருவாடானை

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஊரணிக்கோட்டையில் தற்காலிகமாக தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வரும் சகோதரர் ...
20/06/2026

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஊரணிக்கோட்டையில் தற்காலிகமாக தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வரும் சகோதரர் ...அவர்கள் மிகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சூழ்நிலையில் தனது இரண்டு மகள்களும் சிறந்த முறையில் படித்து வருகிறார்கள் அதில் அவரின் மூத்த மகள் காரைக்குடி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை கணிதம் படித்து வருகிறார்.

அவர் ஓர் அரசு கல்லூரியில் பயின்று வந்தாலும், கல்லூரிக்குச் சென்று வருவதிலும், அதற்கான வருடாந்திரக் கட்டணத்தைச் செலுத்துவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார், இதனால் அவரது கல்லூரிப் படிப்பு பாதியில் நிற்கும் அபாயம் ஏற்பட்டது. மங்களக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியரும் (அவரது முன்னாள் பள்ளி ஆசிரியருமான) திரு. கணேசன் அவர்களின் பரிந்துரையின் பேரில், அவர் மார்ச் 3, 2026 அன்று 'MSV விழுதுகள் அறக்கட்டளை'க்கு (MSV Vizhudhugal Foundation) விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை ஏற்று, நமது பிரதிநிதிகளான திரு. ராஜமகேந்திரன் மற்றும் திரு. சரவணன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து, அவரது பின்னணி மற்றும் கல்விச் சான்றுகளைச் சரிபார்த்தனர்.

அதனைத் தொடர்ந்து நிதி திரட்டப்பட்டு, 2026-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி மாலை சுமார் 4:00 மணியளவில், அந்தச் சகோதரியின் கல்விச் செலவுகளுக்காக ₹30,000 மதிப்பிலான காசோலை ஒன்று அவரது இல்லத்தில் அவரது தந்தையிடம் வழங்கப்பட்டது.

இந்த சகோதரிக்காக கரம்கோர்த்த விழுதுகள் நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் MSV விழுதுகள் அறக்கட்டளையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏼

நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் சிறு உதவி ஒருவரின் வாழ்வாதாரத்தை மாற்ற பேருதவியாக இருக்கிறது...

MSV விழுதுகள் அறக்கட்டளை அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்திடும் என்ற நம்பிக்கையோடு அறம் செய்யக் கரம் கோர்த்து செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம்.🙏🙏🙏

#ராமநாதபுரம்
#திருவாடானை

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரா என்ற சிறுவன் ஶ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந...
22/01/2026

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரா என்ற சிறுவன் ஶ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, திருப்புனவாசல் பள்ளியில் படித்து வரும் இந்த மாணவர் கடந்த மாதம் சாலை
விபத்துக்குள்ளாகி இரு கால்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்

பொருளாதார சூழ்நிலைகாரணமாக மருத்துவ உதவி வேண்டி MSV விழுதுகள் அறக்கட்டளைக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்.

நண்பர்கள் திரு.ராஜமகேந்திரன் மற்றும் திரு.சரவணன் அவர்கள் நேரில் சென்று ஆய்வுகள் செய்துள்ளனர்

பின்பு நிதி திரட்டப்பட்டு 20/01/2026 அன்று மாலை 6 மணியளவில் மாணவனின் மேல் சிகிச்சைக்காக அவரின் தாயாரிடம் அவர்களின் இல்லத்தில் ரூபாய் 30,000 க்கான காசோலை வழங்கப்பட்டது.


இந்த மாணவனுக்காக கரம்கோர்த்த ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் MSV விழுதுகள் அறக்கட்டளையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏼

நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் சிறு உதவி ஒருவரின் உயிரை காக்கும் பேருதவியாக இருக்கிறது...

MSV விழுதுகள் அறக்கட்டளை தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்திடும் என்ற நம்பிக்கையோடு அறம் செய்யக் கரம் கோர்த்து செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம். 🙏🏼🙏🏼🙏🏼

புதுக்கோட்டை மாவட்டம் , மணல்மேல்குடி வட்டம், பாலக்குடி கிராமத்தில் வசித்து வரும் 37 வயதான உஷாமேரி (திருமணம் ஆகாதவர் )என்...
17/12/2025

புதுக்கோட்டை மாவட்டம் , மணல்மேல்குடி வட்டம், பாலக்குடி கிராமத்தில் வசித்து வரும் 37 வயதான உஷாமேரி (திருமணம் ஆகாதவர் )என்பவர் இருதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இவரின் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு தனது 1 வயது முதல் சிகிச்சை பெற்று வருகிறார்...

பொருளாதார சூழ்நிலைகாரணமாக மருத்துவ உதவி வேண்டி MSV விழுதுகள் அறக்கட்டளைக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்.

நண்பர் வினோத்குமார் (VAO) அவர்கள் நேரில் சென்று ஆய்வுகள் செய்துள்ளார்..

மருத்துவ அறிக்கைகள் நண்பர் Dr.சிவராஜா அவர்களிடமும்

சகோதரி சரண்யா (செவிலியர்) அவர்களிடமும் மருத்துவ அறிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டு

சகோதரிக்கு மருத்துவ நண்பர்கள் மூலமாக மேல் சிகிச்சைக்கான உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது
பின்பு நிதி திரட்டப்பட்டு 12/12/2025 அன்று காலை 11 மணியளவில் சகோதரியின் மேல் சிகிச்சைக்காக அவரின் சகோதரரிடம் ரூபாய் 50,500 க்கான காசோலை வழங்கப்பட்டது.

சகோதரிக்கு தற்பொழுது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவமனையில் Sree Chitra thirunal institute for Medical science and technology (SCTIMST) மேல் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டு நண்பர்கள் வினோத் குமார் மற்றும் ராஜமகேந்திரன் இருவரும் மருத்துமனைக்கு அழைத்து சென்று சகோதரிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்துள்ளார்கள்

இந்த சகோதரிக்காக கரம்கோர்த்த ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் MSV விழுதுகள் அறக்கட்டளையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏼

நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் சிறு உதவி ஒருவரின் உயிரை காக்கும் பேருதவியாக இருக்கிறது...

MSV விழுதுகள் அறக்கட்டளை தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்திடும் என்ற நம்பிக்கையோடு அறம் செய்யக் கரம் கோர்த்து செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம். 🙏🏼🙏🏼🙏🏼

Address

Srvhss Thiruppunavasal
Aranthangi
614629

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSV Vizhuthukal Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share