MSV Vizhuthukal Foundation

MSV Vizhuthukal Foundation This is a foundation (trust) run by the group of old students of Sri Ramakrishna Vivekananda Higher Secondary School,Thiruppunavasal.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரா என்ற சிறுவன் ஶ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந...
22/01/2026

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரா என்ற சிறுவன் ஶ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, திருப்புனவாசல் பள்ளியில் படித்து வரும் இந்த மாணவர் கடந்த மாதம் சாலை
விபத்துக்குள்ளாகி இரு கால்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்

பொருளாதார சூழ்நிலைகாரணமாக மருத்துவ உதவி வேண்டி MSV விழுதுகள் அறக்கட்டளைக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்.

நண்பர்கள் திரு.ராஜமகேந்திரன் மற்றும் திரு.சரவணன் அவர்கள் நேரில் சென்று ஆய்வுகள் செய்துள்ளனர்

பின்பு நிதி திரட்டப்பட்டு 20/01/2026 அன்று மாலை 6 மணியளவில் மாணவனின் மேல் சிகிச்சைக்காக அவரின் தாயாரிடம் அவர்களின் இல்லத்தில் ரூபாய் 30,000 க்கான காசோலை வழங்கப்பட்டது.


இந்த மாணவனுக்காக கரம்கோர்த்த ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் MSV விழுதுகள் அறக்கட்டளையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏼

நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் சிறு உதவி ஒருவரின் உயிரை காக்கும் பேருதவியாக இருக்கிறது...

MSV விழுதுகள் அறக்கட்டளை தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்திடும் என்ற நம்பிக்கையோடு அறம் செய்யக் கரம் கோர்த்து செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம். 🙏🏼🙏🏼🙏🏼

புதுக்கோட்டை மாவட்டம் , மணல்மேல்குடி வட்டம், பாலக்குடி கிராமத்தில் வசித்து வரும் 37 வயதான உஷாமேரி (திருமணம் ஆகாதவர் )என்...
17/12/2025

புதுக்கோட்டை மாவட்டம் , மணல்மேல்குடி வட்டம், பாலக்குடி கிராமத்தில் வசித்து வரும் 37 வயதான உஷாமேரி (திருமணம் ஆகாதவர் )என்பவர் இருதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இவரின் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு தனது 1 வயது முதல் சிகிச்சை பெற்று வருகிறார்...

பொருளாதார சூழ்நிலைகாரணமாக மருத்துவ உதவி வேண்டி MSV விழுதுகள் அறக்கட்டளைக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்.

நண்பர் வினோத்குமார் (VAO) அவர்கள் நேரில் சென்று ஆய்வுகள் செய்துள்ளார்..

மருத்துவ அறிக்கைகள் நண்பர் Dr.சிவராஜா அவர்களிடமும்

சகோதரி சரண்யா (செவிலியர்) அவர்களிடமும் மருத்துவ அறிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டு

சகோதரிக்கு மருத்துவ நண்பர்கள் மூலமாக மேல் சிகிச்சைக்கான உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது
பின்பு நிதி திரட்டப்பட்டு 12/12/2025 அன்று காலை 11 மணியளவில் சகோதரியின் மேல் சிகிச்சைக்காக அவரின் சகோதரரிடம் ரூபாய் 50,500 க்கான காசோலை வழங்கப்பட்டது.

சகோதரிக்கு தற்பொழுது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவமனையில் Sree Chitra thirunal institute for Medical science and technology (SCTIMST) மேல் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டு நண்பர்கள் வினோத் குமார் மற்றும் ராஜமகேந்திரன் இருவரும் மருத்துமனைக்கு அழைத்து சென்று சகோதரிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்துள்ளார்கள்

இந்த சகோதரிக்காக கரம்கோர்த்த ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் MSV விழுதுகள் அறக்கட்டளையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏼

நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் சிறு உதவி ஒருவரின் உயிரை காக்கும் பேருதவியாக இருக்கிறது...

MSV விழுதுகள் அறக்கட்டளை தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்திடும் என்ற நம்பிக்கையோடு அறம் செய்யக் கரம் கோர்த்து செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம். 🙏🏼🙏🏼🙏🏼

22/11/2025

I got over 30 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

அனைவருக்கும் வணக்கம்....புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பில்லுவலச...
24/08/2025

அனைவருக்கும் வணக்கம்....

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பில்லுவலசையில் 15/08/2024 புதன்கிழமை அன்று MSV விழுதுகள் அறக்கட்டளையின் உறுப்பினர் திரு.ரவி ( எ) கருப்பையா அவர்கள்
காலை 10 மணி அளவில் பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் கிராம முக்கியத்தார்கள் முன்னிலையில்
பள்ளியில் பயிலும் அனைத்து
மாணவர்களுக்கும் விளையாட்டு சீருடைகளை வழங்கினார்.

இதற்காக ஆகும் மொத்த செலவையும் திரு.கருப்பையா அவர்களே ஏற்றுக் கொண்டு MSV விழுதுகள் அறக்கட்டளையின் மூலம் இந்த உதவியினை செய்துள்ளார்.🙏🏼

திரு.கருப்பையா அவர்கள் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல உதவிகளை செய்து வருகிறார்... அன்னாரின் நற்செயல்கலால் MSV விழுதுகள் அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது🙏🏼🙏🏼🙏🏼

Karuppaiah Chithravel

https://youtu.be/Kc3-ufS4doQ?si=CpkOP7AaH7UhdnxF

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா செக்காந்திடல் கிராமத்தில் வசித்துவரும்  மாணவி ஒருவர் பொருளாதார சூழ்நிலைகாரமாக தன...
04/07/2025

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா செக்காந்திடல் கிராமத்தில் வசித்துவரும் மாணவி ஒருவர் பொருளாதார சூழ்நிலைகாரமாக தனது கல்லூரி படிப்பை தொடர முடியாமல் அவதிக்குள்ளாகிருந்தார்.

அவரின் தந்தை கடந்த 2006 ம் ஆண்டு காலமான நிலையில் கூலி வேலை செய்து வரும் தனது தாயாரின் உதவியுடன் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் படித்து வருகிறார்..

கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்று சிறந்த தகுதியின் அடிப்படையில் சகோதரிக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் B.sc physician assistant நான்கு வருட இளநிலை பட்டப்படிப்பை படித்து வருகிறார். கல்லூரியில் இலவசமாக படிப்பை தொடர்ந்தாலும் தங்குவதற்கான விடுதி,சாப்பாடு மற்றும் தேவையான புத்தகங்களை வாங்குவதற்கும் தனது தாயாரின் கூலித் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் போதாத நிலையில் படிப்பை தொடர முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருந்தார்..

இந்த ஆதரவற்ற பெண்ணின் கல்விக்காக MSV விழுதுகள் அறக்கட்டளையின் சார்பில் ரூபாய் 32,000/ - கான காசோலையை 03/07/2025 அன்று அவரின் தாயாரிடம் வழங்கப்பட்டது...

நாம் செய்யும் சிறு உதவி ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையை மாற்றிவிடலாம்... நிதியளித்து ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும்
MSV விழுதுகள் அறக்கட்டளை சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் 🙏🏼

MSV விழுதுகள் அறக்கட்டளை தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்திடும் என்ற நம்பிக்கையோடு அறம் செய்யக் கரம் கோர்த்து செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம். 🙏🏼🙏🏼🙏🏼

அனைவருக்கும் வணக்கம் 🙏🏼இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி கிராமத்தில் வசிக்கும் திரு.முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் இரண்டு மா...
22/05/2025

அனைவருக்கும் வணக்கம் 🙏🏼

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி கிராமத்தில் வசிக்கும் திரு.முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு திரு.அப்துல்லா அவர்களின் மூலமாக நமது MSV விழுதுகள் அறக்கட்டளைக்கு மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார்..

திரு முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தற்பொழுது 2 வது முறையாக திறந்த இதய அறுவை சிகிச்சையிணை சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை செய்துக்கொண்டு வருகிறார்.. பொருளாதார ரீதியில் உதவிசெய்யும் பொருட்டு MSV விழுதுகள் அறக்கட்டளை அவர்களுக்கு 21,000 ரூபாய்க்கான காசோலையை 20-05-2025 அன்று அவரிடம் நேரில் வழங்கப்பட்டது.

சகோதரர் அவர்கள் மிக விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வரவேண்டுமென்று இறைவனிடம் பிராத்திக்கிறோம்.🙏🏼

MSV விழுதுகள் அறக்கட்டளை தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்திடும் என்ற நம்பிக்கையோடு அறம் செய்யக் கரம் கோர்த்து செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம். 🙏🏼🙏🏼🙏🏼

அனைவருக்கும் வணக்கம்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, வாட்டகுடி கிராமத்தில் வசித்துவரும் திரு. ரெங்கதுரை அவர்கள...
24/04/2025

அனைவருக்கும் வணக்கம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, வாட்டகுடி கிராமத்தில் வசித்துவரும் திரு. ரெங்கதுரை அவர்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு MSV விழுதுகள் அறக்கட்டளையிடம் மருத்துவ உதவிகேட்டு விண்ணப்பித்திருந்தார்..

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சீறுநீரகம் முழுமையாக செயலிழந்து சீறுநீரக சுத்திகரிப்பு மருத்துவத்தின் மூலம் உயிர்வாழ்ந்து வருகிறார்.

அதன்படி MSV விழுதுகள் அறக்கட்டளையின் நிதியிலிருந்து 31,000 ரூபாய் மருத்துவ உதவி தொகையாக 21-04-2025 அன்று அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துமனையில் அவரிடம் காசோலையாக வழங்கப்பட்டது...

சகோதரரின் உடல்நலம் தேறி மீண்டுவரவேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறோம்.🙏🏼

MSV விழுதுகள் அறக்கட்டளை தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்திடும் என்ற நம்பிக்கையோடு அறம் செய்யக் கரம் கோர்த்து செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம். 🙏🏼🙏🏼🙏🏼

அனைவருக்கும் வணக்கம்... புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, பொன்னகரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் உயர்நிலைப் ...
25/03/2025

அனைவருக்கும் வணக்கம்...

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, பொன்னகரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு.. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 60 மாணவ மாணவியர்களுக்கு நமது MSV அறக்கட்டளையின் உறுப்பினரான பில்லுவலசை திரு கருப்பையா அவர்கள் மாணவர்களுக்கு தேர்வெழுத தேவையான பொருட்களை 23-03-2025 அன்று காலை 10 மணி அளவில் பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பழனி அவர்களின் முன்னிலையில் மாணவர்களுக்கு தேர்வு எழுத ஊக்கப்படுத்தும் வகையில் வழங்கி உள்ளார்.

இதற்காக ஆகும் மொத்த செலவையும் திரு.கருப்பையா அவர்களே ஏற்றுக் கொண்டு MSV விழுதுகள் அறக்கட்டளையின் மூலம் இந்த உதவியினை செய்துள்ளார்.🙏🏼🙏🏼🙏🏼

Karuppaiah Chithravel
Palaniraja Palani

அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ஒன்றியம் திருப்புனவாசலில் வசிக்கும் .. SRVHSS திருப்புனவாசல்...
10/03/2025

அனைவருக்கும் வணக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ஒன்றியம் திருப்புனவாசலில் வசிக்கும் ..

SRVHSS திருப்புனவாசல் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் பணியாளர் தெய்வத்திரு சுப்பிரமணியன் அவர்களின் புதல்வியின் மருத்துவச் செலவிற்காக அன்னாரின் மகன் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் MSV விழுதுகள் அறக்கட்டளையின் உதவியை கேட்டிருந்தார். அதன்படி முதற்கட்டமாக அறக்கட்டளையின் உறுப்பினர் Dr.சிவராஜா அவர்களின் உதவியுடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு
நிதி திரட்டப்பட்டு 03/03/2025 அன்று மாலை 4 மணி அளவில் சகோதரியின் மேல் சிகிச்சைக்காக திரு.ராமகிருஷ்ணன் அவர்களிடம் ரூபாய் 77,000 க்கான காசோலை வழங்கப்பட்டது.

சகோதரிக்கு தற்பொழுது சென்னையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உடல் நலம் தேறி வருகிறார் என்பதில் மனநிறைவு அடைகிறோம்.

நம் சகோதரிக்காக கரம்கோர்த்த ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் MSV விழுதுகள் அறக்கட்டளையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏼

நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் சிறு உதவி ஒருவரின் உயிரை காக்கும் பேருதவியாக இருக்கிறது...

MSV விழுதுகள் அறக்கட்டளை தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்திடும் என்ற நம்பிக்கையோடு அறம் செய்யக் கரம் கோர்த்து செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம். 🙏🏼🙏🏼🙏🏼

அனைவருக்கும் வணக்கம்தன் வாழ்வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன் உயிரை காப்பாற்ற உ...
17/02/2025

அனைவருக்கும் வணக்கம்

தன் வாழ்வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன் உயிரை காப்பாற்ற உதவி செய்த நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼

புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி ஒன்றியம், நாகுடி அருகில் சந்தமனை என்ற கிராமத்தில் வசித்துவரும் ஒரு விவசாயின் மகன் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு கடந்த இரண்டு வருடமாக சிகிச்சை பெற்றுவருகிறார். மேற்கொண்டு சிகிச்சை பெற மருத்துமனைக்கு செல்வதற்கோ, மருந்துகள் வாங்குவதற்க்கோ நிதி ஆதாரம் இல்லாமல் கடந்த சில மாதமாக மருத்துவமனைக்கும் செல்லவில்லை, மருந்து மாத்திரைகளும் உட்கொள்ள வில்லை இதனால் மீண்டும் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

தன் மகனின் உயிர்காக்க ஏழை பெற்றோர்கள் போராடி வந்தார்கள். நண்பர்களின் மூலமாக MSV விழுதுகள் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு தங்கள் மகனின் நிலைமையை விளக்கி அவரை காப்பாற்ற நிதி உதவி வேண்டி கோரிக்கை வைத்தார்கள்.

கோரிக்கையை பரிசீலனை செய்து ஏற்றுக் கொண்டு நிர்வாக குழுவில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அச்சிறுவனுக்கு உதவிசெய்யலாம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு MSV விழுதுகள் அறக்கட்டளை நேரடி கள ஆய்வு செய்து இந்த தகவல் உண்மை என்பதை அறிந்து அவருக்கு உதவி செய்வதற்காக முடிவு எடுக்கப்பட்டு அறக்கட்டளையின் மூலம் நண்பர்கள் முன்னாள் ஆசிரியர்கள் அனைவரிடமும் கோரிக்கை வைத்து நிதியினை பெற்று முதல் கட்டமாக அச்சிறுவனை தஞ்சாவூர் ரோகிணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அவருக்கு அங்கு முதலுதவி செய்யப்பட்டு அங்கு அறக்கட்டளையின் உறுப்பினர் மருத்துவர் திரு. சிவராஜா அவர்கள் நேரில் சென்று சிறுவனை பரிசோதித்து அவரின் மருத்துவமனையின் மூலமாக ஆலோசனைகளும் இலவசமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

பின்னர் பெறப்பட்ட நிதியினை அறக்கட்டளை நிர்வாகிகள் மூலமாக 07-Feb-2025 அன்று 55,000 ரூபாய் காசோலையாக அவரின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது, அவரின் அடுத்த கட்ட சிகிச்சைக்காக அறிவுரை வழங்கப்பட்டு தற்போது உடல் நலம் தேறி வருகிறார் என்பதில் "மணநிறைவு" அடைகிறோம்🙏🏼

--

MSV விழுதுகள் அறக்கட்டளை

26/01/2025

MS வேங்கடரங்கன் என்ற (MSV ஐயா )ஆலமரத்தின் விழுதுகளாக இருந்து
அவர் காட்டிய தொண்டு வழியில் பயணம் செய்கின்ற அனைத்து முன்னாள் மாணவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து ஒர் ஆலமத்தின் விழுதுகளாய் ஒத்த மனநிலையில் பயணம் செய்யும் போது தான் MSV என்ற மெய்ப்பொருள் அழிவில்லா நிலையை அடையும் என்ற கருத்தின் படி உருவாக்கப்பட்ட அமைப்பு.
நம்மால் முடிந்ததை பிறருக்கு செய்வோம் என்ற ஒத்த மனநிலையோடு இருக்கின்ற குழுக்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக சேவை செய்வதற்கு வாய்ப்பளித்த திருப்புனவாசல் என்ற புண்ணிய பூமிக்கும் உடன் பயணித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றியை காணிக்கையாக்குகின்றோம் .

Address

Srvhss Thiruppunavasal
Aranthangi
614629

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSV Vizhuthukal Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share