22/01/2026
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரா என்ற சிறுவன் ஶ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, திருப்புனவாசல் பள்ளியில் படித்து வரும் இந்த மாணவர் கடந்த மாதம் சாலை
விபத்துக்குள்ளாகி இரு கால்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்
பொருளாதார சூழ்நிலைகாரணமாக மருத்துவ உதவி வேண்டி MSV விழுதுகள் அறக்கட்டளைக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்.
நண்பர்கள் திரு.ராஜமகேந்திரன் மற்றும் திரு.சரவணன் அவர்கள் நேரில் சென்று ஆய்வுகள் செய்துள்ளனர்
பின்பு நிதி திரட்டப்பட்டு 20/01/2026 அன்று மாலை 6 மணியளவில் மாணவனின் மேல் சிகிச்சைக்காக அவரின் தாயாரிடம் அவர்களின் இல்லத்தில் ரூபாய் 30,000 க்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்த மாணவனுக்காக கரம்கோர்த்த ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் MSV விழுதுகள் அறக்கட்டளையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏼
நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் சிறு உதவி ஒருவரின் உயிரை காக்கும் பேருதவியாக இருக்கிறது...
MSV விழுதுகள் அறக்கட்டளை தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்திடும் என்ற நம்பிக்கையோடு அறம் செய்யக் கரம் கோர்த்து செயல்படுவோம் என உறுதி அளிக்கிறோம். 🙏🏼🙏🏼🙏🏼