Moulana Abul Kalam Azad Coaching Centre

Moulana Abul Kalam Azad Coaching Centre A non-profit initiative in Adirampattinam dedicated to coaching TNPSC aspirants with discipline, clarity, and purpose. Inaugurated on 27 February 2021.

Focused on quality education, guidance, and empowerment.

12/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும்
அதிராம்பட்டினம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்களான முகமது அஜ்மல் ,முகமது ஜாஹித் மற்றும் முகமது தெளஃபிக் ஆகிய மூவரும் போட்டித் தேர்வில் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக தட்டச்சு (Typing) பயிற்சி வகுப்புகள் கலந்துகொண்டு பயிற்சி செய்து வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தட்டச்சு தேர்வில் இரு மாணவர்கள்(MOHAMED JAHID- ENGLISH Jr,MOHAMED THOWFEEK-TAMIL and ENGLISH jr) வெற்றி பெற்றுள்ளனர். தட்டச்சு தேர்வின் மூலம் தட்டச்சு சான்றிதழை பெற்றால் போட்டித் தேர்வில் எளிமையாக வென்று அரசு அதிகாரி ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது

அஸ்ஸலாமு அலைக்கும்.நான் அதிராம்பட்டினம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவனாக பயின்று வருகி...
21/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும்.

நான் அதிராம்பட்டினம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவனாக பயின்று வருகிறேன்
இந்த ரமலான் மாதத்தில் இங்கு பயிலும் வெளியூர் மாணவர்கள் நான் உட்பட 3 பேருக்கு மஸ்ஜித் தக்வா மூலம் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
ஏற்பாடு செய்து தந்த மஸ்ஜித் தக்வா ஜமாத்தார்கள் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
முகமது அனஸ்
(மௌலானா அப்துல் கலாம் ஆசாத் போட்டித் தேர்வு பயிற்சி மையம் பொறுப்பாளர் / மாணவர்)

அஸ்ஸலாமு அலைக்கும். நமது அதிராம்பட்டினம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் மாணவரான முகமது அனஸ் ...
15/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும். நமது அதிராம்பட்டினம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் மாணவரான முகமது அனஸ் அவர்கள் 2025 செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2 தேர்வின் Prelimnary (நிலை | ) வெற்றி பெற்று Mains (நிலை 2 ) எழுதுவதற்காக பிப்ரவரி 8 தேதி குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு மார்ச் 15 தேதி குறிப்பிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.தேதி குறிப்பிட்டது போன்று இன்று மெயின் (நிலை 2) தேர்வு நடைபெற்று முடிந்தது. நமது மாணவர் முஹம்மது அனஸ் தகுந்த தயாரிப்புடன் இத்தேர்வு எழுதியுள்ளார். அவர் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் துவா செய்யுமாறு மௌலானா அப்துல் கலாம் அசாத் கோச்சிங் அகாடமி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

7-வது முறை முயற்சி... வசமானது ஐ.ஏ.எஸ். கனவு: ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலக உதவியாளரின் அசத்தல் சாதனை!    ராமநாதபுரம் மாவட்ட...
11/03/2026

7-வது முறை முயற்சி... வசமானது ஐ.ஏ.எஸ். கனவு: ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலக உதவியாளரின் அசத்தல் சாதனை!

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஷேகு அப்துல் காதர் - சர்மிளா பானு. இவர்களது மகன் ஷேக் முகமது கபிசுதீன் (29). இவர் ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டே, தனது ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கப் போராடி வந்தார்.

தனது வெற்றி குறித்து கபிசுதீன் கூறுகையில், "கடந்த 7 ஆண்டுகளாக இதற்காகப் பயின்றேன். தற்போது வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். பணி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கடந்த மாதம் எனக்குப் பெண் குழந்தை பிறந்தது; மகளின் அதிர்ஷ்டமாகவே இந்த வெற்றியைப் பார்க்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
​"வேலை பார்த்துக்கொண்டே, பல தோல்விகளுக்குப் பிறகும் சிகரம் தொட்ட கபிசுதீனின் இந்த வெற்றி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பல இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது."

அஸ்ஸலாமு அலைக்கும் அதிராம்பட்டினம் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் கோச்சிங் அகாடமி சேர்ந்த மாணவர்கள் மூன்று பேர் இந்த ஆண்டு வ...
27/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் அதிராம்பட்டினம் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் கோச்சிங் அகாடமி சேர்ந்த மாணவர்கள் மூன்று பேர் இந்த ஆண்டு வரவிருக்கும் போட்டித் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் விதமாக அருகில் இருக்கும் அகாடமியில் (TAF IAS ACADEMY, PATTUKOTTAI) தங்களை தயார் படுத்திக் கொள்ளும் விதமாக TEST BATCH ல் (வாரம் இரு பயிற்ச்சி தேர்வு ) சேர்ந்தனர்.
வாரம் இரு முறை நடக்கும் இத்தேர்வு ஆறு மாத காலம் தொடரப்படும்.
இது மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வசதியாக அமையும்.
இதன் மூலம் வரவிருக்கும் செப்டம்பர் அக்டோபர் டிசம்பர் மாத தேர்வுகளில் நமது மாணவர்கள் சிறப்பாக செயல்பட உதவிகரமாக அமையும்.
அனைத்து மாணவர்களும் வரவிருக்கும் அரசு தேர்வில் வெற்றி பெறுவதற்கு துவா செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சென்னை நந்தனம் மற்றும் அரும்பாக்கம் தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ...
08/02/2026

சென்னை நந்தனம் மற்றும் அரும்பாக்கம் தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு மற்ற மாவட்டங்களில் நடந்து கொண்டிருக்கும் பொழுது நிறுத்தப்பட்டு மாற்று தேதி அறிவிக்கப்படும் என தேர்வாணையத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நமது அதிராமபட்டினம் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் கோச்சிங் அகாடமியில் பயின்று வரும் மாணவர் முஹம்மத் அனஸ் அவர்கள் 130 வினாக்கள் எழுதிய நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்து வினாத் தொகுப்பு தாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கொண்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தேர்வு நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நமது அகாடமியின் சார்பாக 08.02.2026 இன்று TNPSC Group 2A (After Passing the Prelims Examination) மெயின்ஸ்(Mains) தேர்வு எ...
08/02/2026

நமது அகாடமியின் சார்பாக 08.02.2026 இன்று
TNPSC Group 2A (After Passing the Prelims Examination) மெயின்ஸ்(Mains) தேர்வு எழுத உள்ள மாணவர் அனஸ் சகோதரருக்காக
துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 🤲
📿
அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும்
தெளிவான சிந்தனை, மன உறுதி,
முழு வெற்றி மற்றும் உயர்ந்த எதிர்காலம்
அருள்வானாக.
ஆமீன்.

அதிராம்பட்டினம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்ச...
15/12/2025

அதிராம்பட்டினம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. (13/12/2025)

இந்நிகழ்ச்சியை மௌலானா அபுல் கலாம் ஆசாத் போட்டித் தேர்வு பயிற்சி மையத் தலைவர் திரு M.A அபுபக்கர் B.E அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.

நிகழ்ச்சியின் துவக்கமாக வழக்கறிஞர் Z . முகமது தம்பி B.A.B.L அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் A.L MATRICULATION SCHOOL,CORRESPONDENT திரு. M.U இம்தியாஸ் B.E அவர்களும்
பட்டுக்கோட்டை துணை வட்டாட்சியர் ஷேக் உமர் ஷா அவர்களும் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு
திரு. R. கமலேஷ் B.TECH துணை ஆட்சியர்

திரு. DR .K தர்மேந்திரா
M SC.,M.PHIL.,PH.D வட்டாட்சியர், பட்டுக்கோட்டை.

திரு .C. சுகேந்திரன் B E நகராட்சி ஆணையர், அதிராமபட்டினம்.

S. முகைதீன் அசாருதீன் சமூக நலத்துறை, தூத்துக்குடி
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கியதோடு போட்டித் தேர்வு குறித்து சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் செயலாளர் திரு நியாஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ,ஜமாத்தார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

15/12/2025

Address

Baithulmal First Floor
Adirampattinam
614701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulana Abul Kalam Azad Coaching Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share