11/04/2026
வாழ்வாதார செயற்திட்டம் – 44
"சுயதொழில் வாய்ப்பின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்வை ஒளிரச் செய்தல்"
திருமதி ஜெயதா மணிவண்ணன் அவர்களின் பிறந்தநாளில் அவரது நிதி பங்களிப்புடன், இமயம் அமைப்பின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் புளியடிச்சேனை எனும் கிராமத்தைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட ஒரு பிள்ளையின் தாயாரான அழகுராணி அவர்களுக்கு சுயதொழிலான கைக்குத்தரிசி விற்பனைக்காக நெல் மூட்டைகள் உதவியாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வை இமயம் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினரான திரு. ரஜீதன் அவர்கள் வழங்கி வைத்தார்.
இத்தகைய உதவிகள் மூலம் தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இமயம் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
நன்றி.
சமூகவலைத்தள பிரிவு
Imayam