26/05/2026
வாழ்வாதார செயற்திட்டம் - 46
"சுயதொழில் முயற்சி மூலம் ஒரு தாயின் பொருளாதார வாழ்வை பலப்படுத்துதல்"
அம்பாறை மாவட்டம், சொறிக்கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் கணவனை இழந்த ஒரு தாய், தனது குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இடியாப்ப வியாபாரத்தை சுயதொழிலாக மேற்கொண்டு வந்தார். எனினும், போதிய உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் இல்லாத காரணத்தினால் அவரது தொழில் முயற்சி பெரும் சவால்களைச் சந்தித்திருந்தது.
இவ்விடயம் தொடர்பாக எமக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து, இமயம் அமைப்பு தனது 46-வது வாழ்வாதாரத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
வழங்கப்பட்ட உதவிகள்:
அக்குடும்பத்தின் இடியாப்ப வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தி, நிலையான வருமானத்தை ஈட்டும் பொருட்டு பின்வரும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன:
இடியாப்ப உரல் மற்றும் பிழியும் உபகரணங்கள்
பெரிய அளவிலான இடியாப்பத் தட்டுகள் (தட்டு அடுக்குகள்)
இடியாப்பம் அவிப்பதற்கான பெரிய அலுமினியப் பானைகள் மற்றும் கரண்டிகள்
இடியாப்பத் தயாரிப்பிற்குத் தேவையான மா மூட்டைகள்
கள ஒருங்கிணைப்பு:
இமயம் அமைப்பின் தன்னார்வல உறுப்பினர் திரு ரஜிதன்
நிதியுதவி: அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் சேகரிக்கப்பட்டு, நிதியுதவியைக் கொண்டு, (லண்டனில்) வாழும் எமது சமூகப்பற்றுள்ள தமிழ் உறவுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தாயகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மற்றும் போரினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் இமயம் அமைப்பு தொடர்ச்சியான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடுத்த கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திலும் மற்றுமொரு வாழ்வாதார உதவித் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த உன்னதப் பணிக்கு நிதியுதவி வழங்கி வரும் அனைத்து நல்வுள்ளங்களுக்கும், களத்தில் நின்று உழைக்கும் எமது தன்னார்வலர்களுக்கும், இமயம் அமைப்பின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நன்றி,
✍️ சமூகவலைத்தள பிரிவு,
இமயம் (Imayam)