24/02/2026
நாமுண்டு, நம் குடும்பமுண்டு, நம்தொழிலுண்டென்று எல்லாரையும் போல ஒதுங்கிவிடாமல்..நம்மில் நாம் எப்படி அன்பு செலுத்துகிறோமோ, அதேபோல் மற்றவர்களிடத்திலும் அன்பு செலுத்தி வாழ்வோம்.
ஜெர்மனியின் Mörfelden-Walldorf நகரில் வசிக்கும் திரு.பாக்கியநாதன் அகிலன் அவர்கள் 09.02.2026ல் தனது 50வது பிறந்த தினத்தையிட்டும் ,அவரது மகனான அகிலன் சந்தோஷ் மற்றும் அகிலன் சஞ்சேய் ஆகியோரின் முறையே 22,02.2026ல் 19வதுபிறந்ததினத்தையிட்டும் 23.02.2026ல் 17வதுபிறந்ததினத்தையிட்டும் எமது மன்றத்திற்கு அன்பளிப்பு செய்திருந்த 300 யூரோ களில் இருந்து 23.02.2026 திங்கற்கிழமையன்று 18மூதாதையர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 5432ரூபா பெறுமதியிலான உலருணவுப் பொதிகள் வழங்கிவைத்ததுடன்,அன்றையதினம் அவர்களுக்கு மதியஉணவும் வழங்கிவைத்து மகிழ்வித்தோம்.அகிலன் அவர்களுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் மன்றம் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை கூறிக்கொள்வதுடன் தனதும் ,தனது பிள்ளைகளினதும் பிறந்த தினத்தை முன்னிட்டு இவ் நற்தொண்டு செய்ய பணஉதவி செய்த திரு,பா.அகிலன் அவர்களுக்கு எமது மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் .