Drop Charitable Foundation

Drop Charitable Foundation மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்.

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லைமனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை. - கண்ணதாசன் எவரின்  உதவிகளுமின்றி ...
21/04/2026

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை.
- கண்ணதாசன்
எவரின் உதவிகளுமின்றி தனிமையில் வாழும் 5முதியவர்களுக்கு எமது மன்ற காரியாலயத்தில் வைத்து ஒவ்வொருவருக்கும் தலா 5432 ரூபா பெறுமதியிலான உலருணவு பொதிகள் 19.04.2026 ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கியிருந்தோம். இவ் வழங்களுக்கு உதவி புரிந்த அனைவருக்கும் மன்றம் சார்பில் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.   (குறள் 102)கிளி/உருத்திரபுரத்தில்  வசித்துவரும் ஒரு குடும்...
31/03/2026

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (குறள் 102)
கிளி/உருத்திரபுரத்தில் வசித்துவரும் ஒரு குடும்பத்தில் இரண்டு மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளைகளை தொடர்ந்து பராமரித்து வந்த மனைவியாரும் அதேநிலைக்கு மாறிவிட்டார்.குடும்பத்தின் முதியவர் வயோதிபநிலையிலும் தன்னால் இயன்ற வேலைகளை செய்து தனது குடுபம்பத்தை பராமரித்து வந்த இந்த முதியவர் பல தடவைகள் எமது காரியாலயத்துக்கு துவிச்சக்கர வண்டியில் வந்து உலருணவு பொருட்களை பெற்றுச்சென்றிருக்கின்றார்.தற்போது முதுமையடைந்து இயலாத நிலமையில் இருப்பதனால் 02.03.2026 திங்கற்கிழமையன்று நாமே நேரில் சென்று 5800ரூபா பெறுமதியிலான உலருணவுப் பொருட்களை வழங்கியதுடன்,6300பெறுமதியிலான அவர்களுக்கு தேவையான உடைகளையும் வழங்கியிருந்தோம்.அன்றைய தினம் மற்றுமொரு உதவிசெயலாக, எதிர்பாராத விதமாக அகாலமரணமடைந்த இளம்குடும்பஸ்தரின் மூன்று பிள்ளைகளின் கல்விவளர்ச்சிக்காக 10000ரூபா பெறுமதியிலான கற்றலுபகரணங்கள் வழங்கியிருந்தோம்.உதவிபுரிந்த அனைவருக்கும் மன்றம் சார்பில் உளமார்ந்த நன்றிகள்.

எமது பிள்ளைகளை வளர்தெடுக்க பாடசாலை கல்வி போன்று அறநெறிக்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.அறநெறி கல்விமூலம் பி...
25/03/2026

எமது பிள்ளைகளை வளர்தெடுக்க பாடசாலை கல்வி போன்று அறநெறிக்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.அறநெறி கல்விமூலம் பிள்ளைகளுக்கு சிறு வயது முதல் சமய விழுமியங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை போதித்து அவர்களை சமூகத்தில் சிறந்த நற்பிரஜைகளாக உருவாக்கமுடியும்,எமது மன்றமானது கல்வியை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலை மாணவர்களுக்கு உதவிவருவதுபோல்,அறநெறி கல்வியையும் ஊக்கிவிக்கவேண்டும் என்ற நோக்கில் அறநெறி பாடசாலைகளுக்கும் எம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றோம் அந்தவகையில்
பரந்தன் குமரபுரம் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் இயங்கிவரும் அறநெறி பாடசாலையில் கல்விபயிலும் 80 மாணவர்களுக்கான சீருடைகள் 01.03.2026 ஞாயிற்றுகிழமை அன்று வழங்கிவைத்ததுடன்,அன்றைய தின மதிய உணவிற்கான செலவான 15000ரூபாவும் வழங்கியிருந்தோம் .அன்றைய தினம் திருமதி கேதீஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலில் அறநெறி பாடசாலை மாணவிகள் சீருடையணிந்து இரு நடனநிகழ்வினை வழங்கியிருந்தனர் இந் நடனநிகழ்வு அனைவராலும் பாராட் டப்பட்டது. நிகழ்வின்போது அறநெறி பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலசபையினர் என அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர். கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

நாமுண்டு, நம்  குடும்பமுண்டு, நம்தொழிலுண்டென்று எல்லாரையும் போல ஒதுங்கிவிடாமல்..நம்மில் நாம் எப்படி அன்பு செலுத்துகிறோமோ...
24/02/2026

நாமுண்டு, நம் குடும்பமுண்டு, நம்தொழிலுண்டென்று எல்லாரையும் போல ஒதுங்கிவிடாமல்..நம்மில் நாம் எப்படி அன்பு செலுத்துகிறோமோ, அதேபோல் மற்றவர்களிடத்திலும் அன்பு செலுத்தி வாழ்வோம்.

ஜெர்மனியின் Mörfelden-Walldorf நகரில் வசிக்கும் திரு.பாக்கியநாதன் அகிலன் அவர்கள் 09.02.2026ல் தனது 50வது பிறந்த தினத்தையிட்டும் ,அவரது மகனான அகிலன் சந்தோஷ் மற்றும் அகிலன் சஞ்சேய் ஆகியோரின் முறையே 22,02.2026ல் 19வதுபிறந்ததினத்தையிட்டும் 23.02.2026ல் 17வதுபிறந்ததினத்தையிட்டும் எமது மன்றத்திற்கு அன்பளிப்பு செய்திருந்த 300 யூரோ களில் இருந்து 23.02.2026 திங்கற்கிழமையன்று 18மூதாதையர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 5432ரூபா பெறுமதியிலான உலருணவுப் பொதிகள் வழங்கிவைத்ததுடன்,அன்றையதினம் அவர்களுக்கு மதியஉணவும் வழங்கிவைத்து மகிழ்வித்தோம்.அகிலன் அவர்களுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் மன்றம் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை கூறிக்கொள்வதுடன் தனதும் ,தனது பிள்ளைகளினதும் பிறந்த தினத்தை முன்னிட்டு இவ் நற்தொண்டு செய்ய பணஉதவி செய்த திரு,பா.அகிலன் அவர்களுக்கு எமது மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் .

நாங்கள் வாழும் காலம் அனைவருக்கும் உதவி செய்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். மகிழ்ச்சியில் மிகப் பெரிய மகிழ்ச்சி மற்றவரை ஆன...
14/02/2026

நாங்கள் வாழும் காலம் அனைவருக்கும் உதவி செய்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். மகிழ்ச்சியில் மிகப் பெரிய மகிழ்ச்சி மற்றவரை ஆனந்தப்படுத்தி பார்ப்பது தான்.

ஜெர்மனியின் Mörfelden-Walldorf நகரில் வசிக்கும் பிரான்சிஸ், மதலினா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், எமது மன்றமான Drop Charitable Germany for Srilanaka e.V. ன் உறுப்பினர்களில் ஒருவருமாகிய செல்வன் கெவின் வலன்டையன் அவர்களின் 25
வது (14/02/2026 இன்று) பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் நிதிப்பங்களிப்பின் மூலம் 10முதியவர்களுக்கு எமது காரியாலயத்தில் வைத்து மதிய உணவு வழங்கியதுடன், ஒவ்வொருவருக்கும் தலா 5710ரூபா பெறுமதியிலான உலருணவுப்பொருள் பொதிகளும் வழங்கிவைத்தோம்.வந்த முதியவர்கள் அனைவரும் செல்வன் கெவின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும்,நன்றியினையும் தெரிவித்துக்கொண்டனர் .
செல்வன் கெவின் அவர்களுக்கு எமது மன்றம் சார்பில் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ச்சியாக ஆண்டு தோறும் தனது பிறந்தநாளுக்கு தாயக உறவுகளுக்கு தன்னால் முடிந்த எதாவது உதவிகளை செய்து வரும் நல்ல உள்ளம் கொண்ட செல்வன் கெவின் வலன்டையனுக்கும் அவரின் பெற்றோருக்கும் மன்றம் சார்பில் நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்கமுடியுமா?நெடுந்தீவு மேற்கை  பிறப்பிடமாக கொண்ட அமரர் சண்முகம் மக...
08/02/2026

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்கமுடியுமா?
நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாக கொண்ட அமரர் சண்முகம் மகேஸ்வரி அவர்களின் 49வதுமறைவு தினமான 06.02.2026 வெள்ளிக்கிழமையன்று அக்கரையான் ஸ்கந்தபுரத்திலிருந்து வருகைதந்த 10முதியவர்களுக்கு எமது மன்றக்காரியாலயத்தில் வைத்து மதியஉணவு வழங்கியதுடன், ஒவ்வொருவருக்கும் தலா 5800ரூபா பெறுமதியிலான உலருணவுப்பொருட்கள் அடங்கியபொதிகளும் வழங்கிவைத்தோம்.
"வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் முதியவர்களை சுமையாக கருதாமல் வரமாக கருத வேண்டும் "

கல்விக் கதவுதிறந்தால் கஷ்டத்தின் வழியை சிறைப்படுத்தும்அறிவுக் கதவுதிறந்தால்அறியாமையின் இருளைஅகற்றிவிடுமென்றஉன்னத பணியைஉய...
14/01/2026

கல்விக் கதவுதிறந்தால்
கஷ்டத்தின் வழியை சிறைப்படுத்தும்
அறிவுக் கதவுதிறந்தால்
அறியாமையின் இருளை
அகற்றிவிடுமென்ற
உன்னத பணியை
உயர்வாய் செய்வோம்-நாம்
புதுக்குடியிருப்பு மு/மன்னா கண்டல் அ.த.க பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 06,01,2026 செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்றது,2026ம் கல்வியாண்டுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் தொடர் நிகழ்வாக,பாடசாலையின் அதிபர் திரு செ.தினேஷ்குமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாணவர்களுக்கு இவ்வாண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தோம்.உதவிட உதவிய நல் உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

2026ம் கல்வியாண்டுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்களின் தொடர்ச்சியாக சின்னசாலம்பன் ஒட்டிசுட்டான் மு/ஈஸ்வரன் வித்தியாலய மாணவர...
12/01/2026

2026ம் கல்வியாண்டுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்களின் தொடர்ச்சியாக சின்னசாலம்பன் ஒட்டிசுட்டான் மு/ஈஸ்வரன் வித்தியாலய மாணவர்களுக்கு இவ்வாண்டுக்கு தேவையான கற்றலுபகரணங்கள் 06.01.2026 செவ்வாக்கிழமை அன்று வழங்கிவைத்தோம்.மேற்படி பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களின் தேவையிருப்பதனை பாடசாலையின் ஆசிரியர் சமூகம் கடிதமூலம் எனது மன்றத்திடம் கேட்டிருந்தனர்.பாடசாலையின் அதிபர் திருமதி.S.ஜெயசகுந்தன் தலைமையில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து மங்களவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்ததுவைத்து சிறப்பித்தமைக்கு மன்றம் சார்பில் நன்றிகள். மற்றும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வயிற்றுக்குச் சோறிடவேண்டும்- இங்குவாழும் மனிதருக்கு எல்லாம்.பயிற்றிப் பல கல்வி தந்து- இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்.(மகா...
09/01/2026

வயிற்றுக்குச் சோறிடவேண்டும்- இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்.
பயிற்றிப் பல கல்வி தந்து- இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.(மகாகவி பாரதி )

கிளி/யூனியன்குளம் அ.த.க பாடசாலையின் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து அதிபர் திருமதி குமுதா சந்திரசீலன் மூலம் தமது பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு, 2026புதிய கல்வியாண்டுக்கு
தேவையான கற்றல் உபகரணங்கள் தந்துதவுமாறு
கேட்டிருந்தனர்.எமது மன்றமானது ஒவ்வொரு ஆண்டும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகும் போது பாடசாலை அதிபர்களின் வேண்டுதற்க்கு ஏற்ப மாணவர்களுக்கு தேவையான கற்றல்உபகரணங்களை வழங்கி வருவதுவழமை.அதே போல் இவ்வாண்டும் பாடசாலைகள்ஆரம்பமான முதல் நாளான 05.01.2026 திங்கற்கிழமை அன்றுகிளி/யூனியன்குளம்அ.த.கபாடசாலையின் மாணவர்களுக்கு தேவையானகற்றல்உபகரணங்களைவழங்கிவைத்தோம்.இவ்வாண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியுதவியினை செய்தஅனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது
மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.மேற்படி நிகழ்வினை ஒழுங்குற செய்த எமதுமன்றஉறுப்பினர்களுக்கும்,அவர்களுக்குஉதவிபுரிந்த கிளி/யூனியன்குளம்அ.த.கபாடசாலசமூகத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிறருக்கு கொடுப்பதற்கு, நீ பணக்காரனாக இருக்கவேண்டுமென்பதோ, பணக்காரன் ஆகும்வரை காத்திருக்கவேண்டும் என்பதோ கிடையாது…. பிறர...
01/01/2026

பிறருக்கு கொடுப்பதற்கு, நீ பணக்காரனாக இருக்கவேண்டுமென்பதோ, பணக்காரன் ஆகும்வரை காத்திருக்கவேண்டும் என்பதோ கிடையாது…. பிறருக்கு உதவுவதற்கு நல்ல மனம்தான் வேண்டும்.

நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாக கொண்ட அமரர் ஐயம்பிள்ளை சண்முகம் அவர்களின் 86வது பிறந்த நாளினை 29.12.2025அன்று அவரின் பிள்ளைகள் நினைவு கூர்ந்தனர். அன்றைய தினம் எமது மன்றத்தினுடாக அவர்களின் நிதிபங்களிப்புடன் ஸ்கந்தபுரம்,உருத்திரபுரம் அகிய கிரா மங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 15 மூதாதையர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 6260ரூபா பெறுமதியிலான உலருணவு பொருட்கள் வழங்கியதுடன்.சிற்றுண்டியும் வழங்கி மகிழ்வித்தனர். நிதி உதவியினை வழங்கிய அமரர் ஐயம்பிள்ளை சண்முகம் அவர்களின் பிள்ளைகளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்வதுடன்,நிகழ்வினை சிறப்புற செய்துதவிய மன்ற உறுப்பினர் அனைவருக்கும் நன்றிகள்.

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.(குறள் 943)அமரர் யோகரத்தினம் கருணாகரன் (கனடா) அவர்களின் அமரத...
31/12/2025

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.(குறள் 943)
அமரர் யோகரத்தினம் கருணாகரன் (கனடா) அவர்களின் அமரத்துவமடைந்த 45ம் நாளை 22.12.2025 திங்கற்கிழமையன்று நினைவுக்கூர்ந்து அவரது துணைவியாரின் நிதியுதவியுடன்,அவரது வேண்டுகோளுக்கிணங்க 15மூதாதையர்களுக்கு மதியஉணவு வழங்கியதுடன்,ஒவ்வொரு மூதாதையர்களுக்கு தலா 5960ரூபா பெறுமதியிலான உலருணவுப்பொருட்களும் எமது மன்றக்காரியாலயத்தில் வைத்து வழங்கிவைத்தோம்.உதவி புரிந்த அனைவருக்கும்மன்றம் சார்பில் அன்பான நன்றிகள்.

Adresse

Drop Charitable Foundation
Ettlingen
76275

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Drop Charitable Foundation erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Organisation Kontaktieren

Nachricht an Drop Charitable Foundation senden:

Teilen