19/10/2025
அனைவருக்கும் வணக்கம்!
உலகத் தமிழர் இயக்கம் எனும் எமது அமைப்பின் பெயரையும் இலட்சினையையும் பயன்படுத்தி 12/02/2024 அன்று பொன். செல்வன் எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வட்சப் இலக்கத்தினால் உருவாக்கப்பட்ட இக் குழுவிற்கும் உலகத் தமிழர் இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் தெரியப்படுத்துகிறோம்.
மேலும் அக்குழுவில் பகிரப்படும் சர்ச்சைக்குரிய விடயங்களுக்கும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் உலகத் தமிழர் இயக்கம் பொறுப்பாகாது. தமது சுய இலாபங்களுக்கு எமது அமைப்பின் இலட்சினையை பெயரையும் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதோடு தொடர்ந்தும் அக்குழு அப்பெயரில் செயற்படுமாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்குமான
உலகத் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த உறவுகளினால் அப் போலி குழு தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்தே இந்த தகவலை தெரியப்படுத்துகிறோம்.
நன்றி
நிர்வாகம்
உலகத் தமிழர் இயக்கம்