TamilCNN

TamilCNN Tamilcnn
(2)

560-க்கும் மேற்பட்ட காணிப் பிரச்சினைகள் தீர்வு : 17 மாவட்டங்களை உள்ளடக்கிய சட்ட மருத்துவ முகாம் வெற்றிகரமாக நிறைவுநூருல்...
06/07/2026

560-க்கும் மேற்பட்ட காணிப் பிரச்சினைகள் தீர்வு : 17 மாவட்டங்களை உள்ளடக்கிய சட்ட மருத்துவ முகாம் வெற்றிகரமாக நிறைவு

நூருல் ஹுதா உமர்

டிட்வா (Ditwah) மீள்குடியேற்றத் திட்டங்களுக்கும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தடையாக நீண்டகாலமாக நிலவிய 560-க்கும் மேற்பட்ட காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 17 மாவட்டங்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட சட்ட மருத்துவ (Law Clinic) வேலைத்திட்டம் அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்வுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்த காணி உரிமை, எல்லை நிர்ணயம், ஆவணக் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நீண்டகால பிரச்சினைகள் இத்திட்டத்தின் ஊடாக ஆய்வு செய்யப்பட்டு தீர்வுக்குட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிறைவு நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆட்சி மற்றும் கொள்கைப் பிரிவுத் தலைவரான சந்திரிக்கா கருணாரத்ன (Chandrika Karunaratna) பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

மேலும், வேலைத்திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைக்கு பங்களிப்பு வழங்கிய வளவாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் வகையில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களின் நீண்டகால காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதப்படுத்தும் நோக்கம் வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்க நிறுவனங்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் மூலம் இத்திட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் தர அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட முக்கிய பதவிநிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஹமீடியன்ஸ் 7-A-Side கால்பந்து சுற்றுப்போட்டி 2026 தொடர்பான ஊடக சந்திப்பும், அணிகளின் உத்தியோகபூர்வ ஜெர்சி அறிமுக நிகழ்வு...
06/07/2026

ஹமீடியன்ஸ் 7-A-Side கால்பந்து சுற்றுப்போட்டி 2026 தொடர்பான ஊடக சந்திப்பும், அணிகளின் உத்தியோகபூர்வ ஜெர்சி அறிமுக நிகழ்வும் !

நூருல் ஹுதா உமர்

ஹமீடியன்ஸ் 7-A-Side கால்பந்து சுற்றுப்போட்டி 2026 தொடர்பான ஊடக சந்திப்பும், அணிகளின் உத்தியோகபூர்வ ஜெர்சி அறிமுக நிகழ்வும் கொழும்பு ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியின் அல்-ஹாஜ் ஏ.ஹெச்.எம். பௌஸி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி அதிபர், போட்டியின் அனுசரணையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், அணித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் ஹமீதியன்ஸ் எப்.சி.நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

வரவேற்புரையாற்றிய போட்டிக் குழுத் தலைவர் மொஹமட் இம்ரான் ஹுசைன், இவ்வருடாந்த போட்டியின் நோக்கங்களை விளக்கினார். பழைய மாணவர்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நட்புறவையும் விளையாட்டின் ஊடாக வலுப்படுத்துவதோடு, தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்களிடையே கால்பந்து திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான இலக்காகும் என அவர் குறிப்பிட்டார்

நிகழ்வில் உரையாற்றிய ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி அதிபர் திருமதி ஷானியாதீன், கல்லூரியில் கால்பந்தாட்ட வளர்ச்சிக்காக ஹமீதியன்ஸ் எப்.சி. மேற்கொண்டு வரும் பணிகளை பாராட்டியதுடன், பாடசாலை விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்காக பழைய மாணவர்கள் வழங்கிவரும் பங்களிப்பையும் பாராட்டினார்

பழைய மாணவர் சங்கத்தின் கல்விக் குழுத் தலைவர் அஸ்ரீன் ஸாஹித், எதிர்கால மாணவர் தலைமுறையை உருவாக்குவதில் பழைய மாணவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்

இவ்வாண்டுக்கான பிரதான அனுசரணையாளராக இணைந்துள்ள இலங்கையின் வளர்ந்து வரும் பயண சேவை நிறுவனமான TruRout, இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. இதன்போது, நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் முனாஸர் அவர்களால் உத்தியோகபூர்வ அனுசரணை காசோலை ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி அதிபருக்கும் ஹமீதியன்ஸ் எப்.சி. நிர்வாக உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது

நிகழ்வின் முக்கிய அம்சமாக, போட்டியில் பங்கேற்கும் அணிகளின் புதிய ஜெர்சிகள் அனுசரணையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், போட்டிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து அனுசரணையாளர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

பட்டிப்பளை  அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு ( வி.ரி. சகாதேவராஜா)மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்...
06/07/2026

பட்டிப்பளை அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு
( வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவிற்கு
உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாண்மைவிருத்தி செயலமர்வு, தாந்தா மலை முருகனாலய அனுசரணையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (6) சனிக்கிழமை நடைபெற்றது.

பட்டிப்பளை உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் செயலமர்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றினார்.

தாந்தா மலை முருகனாலய செயலாளர் எஸ்.சிறிதரன்( ஆசிரியர் )மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் கலந்து சிறப்பித்தனர்.

15 பாடசாலைகளைச் சேர்ந்த 46 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்நிகழ்வின், ஒருங்கிணைப்பினை பிரதேச செயலக கலை கலாசார உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

உதவி பிரதேச செயலாளர் பார்த்திபன் உரையாற்றுகையில்..
சமய நிறுவனங்கள் சமூக அபிவிருத்தியில் பிரதான பங்காளிகளாக இருக்க வேண்டும் .சமூக ஒழுக்கத்தில் அறநெறி கல்வியின் பங்கு மிக முக்கியமானது. எனவே அறநெறி ஆசிரியர்கள் தங்கள் ஆளுமை விருத்தியை வளர்த்துக் கொள்வதன் மூலம் சமூக ஒழுக்கத்தை கட்டி எழுப்ப முடியும் என்றார்.

மூன்று வளவாளர்கள் கருத்தரங்கை நடாத்தினார்.

உள்ளூராட்சி மன்ற பெண்  உறுப்பினர்களுக்காக  பரிந்துரை  (Advocacy) மற்று ஆலோசனை  தொடர்பான  பயிற்சி காரைதீவில் நேற்றைய தினம...
06/07/2026

உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்காக பரிந்துரை (Advocacy) மற்று ஆலோசனை தொடர்பான பயிற்சி காரைதீவில் நேற்றைய தினம் இடம்பெற்றது....

ஜே.கே. யதுர்சன்
தம்பிலுவில்

அம்பாறை மாவட்டம் காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில், புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்காக பரிந்துரை (Advocacy) மற்றும் ஆலோசனை தொடர்பான பயிற்சி அம்பாறை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் UNDP மற்றும் SFCG ஆகிய நிறுவனங்களின் நிதி அனுசரனையில் இடம்பெற்றது...

இவ் நிகழ்வில் வளவாளராக திரு.ஜெயபாலன் அவர்கள் கலந்து கொண்டார்..

குறித்த நிகழ்வில் பரிந்துரை மற்றும் ஆலோசனை தொடர்பான பயிற்சிகளும் விளக்கங்கள் என்பன வளவாளரினால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...

ஸ்ரீவள்ளிரபும் வள்ளியம்மன் ஆலயத்தில் சிரமதானமும் குருபூசையும் இடம்பெற்றதுஜே.கே.யதுர்ஷன்தம்பிலுவில்...அம்பாறை மாவட்டம் தி...
06/07/2026

ஸ்ரீவள்ளிரபும் வள்ளியம்மன் ஆலயத்தில் சிரமதானமும் குருபூசையும் இடம்பெற்றது

ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்...

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காஞ்சிரன் ஸ்ரீ வள்ளிபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த வள்ளி அம்மன் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது அதன் சூழலானது மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது அதனை துப்பரவு செய்யும் பணியினை இன்றைய தினம் விநாயகபுரம் முத்துமாரி அம்மன் ஆலய அறநெறி பாடசாலையினரால் முன்னெடுக்கப்பட்டதுடன் குரு பூசை நிகழ்வு கூட்டுப்பிராத்தனை என்பன இடம்பெற்றது....

இந் நிகழ்வில். திருக்கோவில் பிரதேச இந்து கலாசார உத்தியோத்தர் விநாயகபுரம் சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு, திருநாவுகரசர் நாயனார் குருகுலப்பணிப்பாளர், மற்றும். அம்பாறை மாவட்ட திரிவதிகை கலைக்கூடத்தின் உறுப்பினர்,தம்பிலுவில் கண்ணகை அம்மன் அடியார்கள் திருக்கூட்டம் அமைப்பின் உறுப்பினர், குறித்த அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் சமுகதொண்டர்கள், என பலரும் கலந்து கொண்டனர்..

அதனைத் தொடர்ந்து ஆலய நிர்வானத்தினருடன் கலந்துரையாடப்பட்டது குறித்த கலந்துரையாடலில் இவ் ஆலய ஒரு மதமாற்றம் பெற்ற சமுத்தின் நடுவில் கவனிப்பார் அற்றிகாணப்படுகின்றதுடன் அவ் ஆலய உடமைகளும் திருடுபோய் காணப்பட்டுகின்றது அதனை சீர் செய்து மற்ற ஆலயங்கள் மாதிரி மாற்றுவதற்கான எதிர்கால நடவடிக்கை பற்றியும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது...

சிவதொண்டர் திருக்கூட்டத்தினால் நிறுவப்பட்ட 12 ஆவது சிவலிங்கப்பெருமான்!(கல்லடி செய்தியாளர்)கோப்பாவெளி  கிராம மக்களின் வேண...
06/07/2026

சிவதொண்டர் திருக்கூட்டத்தினால் நிறுவப்பட்ட 12 ஆவது சிவலிங்கப்பெருமான்!
(கல்லடி செய்தியாளர்)

கோப்பாவெளி கிராம மக்களின் வேண்டுகோளுக்கமைவாக இன்று ஞாயிற்றுக்கிழமை (07) கோப்பாவெளி மதுரகணபதி ஆலயத்தில் தனியாக பீடம் அமைத்து சிவகாமி நேசர் எனும் நாமத்துடன் 12 ஆவது சிவலிங்கம் சிவதொண்டர்களினால் நிறுவப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிவதீட்சை வழங்கப்பட்டதுடன், தீட்சை பெற்றவர்களுக்கு அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் சான்றிதழ், நித்திய அனுஷ்டான விதி புத்தகம் வழங்குதல்,பயிற்சியளித்தல் என்பனவும் நடைபெற்றது.

அத்தோடு அப்பிரதேசத்தில் இயங்கும் பல அறநெறிப் பாடசாலைகளை இணைத்து திருஞானசம்பந்தர் குருபூசை நிகழ்வும் நடாத்தப்பட்டதோடு, அறநெறிப் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக கலாசார நிகழ்வுகள் நடாத்தி பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உறுகாமம் முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் கோப்பாவெளி மதுரகணபதி ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சி.நந்தகோபால குருக்கள், கரடியனாறு சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அரவிந்தன் சர்மா,
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் உபதலைவர் திருமதி ஞா.சிவானந்தஜோதி, சைவப்புலவர் திருமதி இ.விஜயலட்சுமி, மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத் தலைவி திருமதி காயத்திரி மற்றும் சிவதொண்டர் திருக்கூட்டத்தின் தலைவர் சிவதொண்டர் கே.கமல்ராஜ், சிவதொண்டர் திருக்கூட்டத்தின் இணைப்பாளர்களான திருமதி கமலேஸ்ரி, திருமதி சிரோன்மணி, கவிமுரசு திருமதி செ.வாணி, திருமதி லோகேஸ்வரி, சிவதொண்டர் ஜெயபாலன், கோப்பாவெளி மதுரகணபதி ஆலய நிர்வாகத்தினர், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், கிராமமக்கள், சிவதொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

க.கிருபாகரன்
கல்லடி செய்தியாளர்
07.06.2026

மட்டக்களப்பில் வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு பாடல் வெளியீட்டு விழா!(மட்டக்களப்பு நிருபர்)வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு ஏற்...
06/07/2026

மட்டக்களப்பில் வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு பாடல் வெளியீட்டு விழா!
(மட்டக்களப்பு நிருபர்)

வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு ஏற்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்பில் எழுச்சி மாநாடு பாடல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (06) மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.

தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வணபிதா ஜோசப்மேரி அடிகளார், அருட்தந்தை ஜெகதாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் செ.நிலாந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் எஸ்.சோபனன், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி திருமதி அ.அமலநாயகி மற்றும் அம்பாறை மாவட்டத் தலைவி த. செல்வராணி உட்பட பல்கலைக்கழக மாணவர்கள்,வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அங்கத்தவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகளால் பாடல் இறுவட்டு வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் இப்பாடலுக்கான நடன ஆற்றுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 2029 ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும், நாட்டின் நலனுக்காக அந்தச் சவாலை...
06/07/2026

இலங்கையில் 2029 ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும், நாட்டின் நலனுக்காக அந்தச் சவாலை அவர் ஏற்பார் என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை இரண்டாவது தடவையும் வங்குரோத்து நிலையை அடைந்தால், அதிலிருந்து மீண்டெழுவது மிகவும் கடினம் என ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே, அவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்படுவதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டால், அவர் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தி நாட்டுக்காகச் சிறந்த பலன்களைப் பெற்றுக்கொடுப்பார். மக்களிடம் உண்மைகளைக் கூறிக்கொண்டே ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டும்.

தம்மால் நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்பதைச் செயலில் காட்டிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே ஆவார். அவரது பொருளாதார மீட்சித் திட்டங்களைச் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள்கூடப் பாராட்டியுள்ளனர்.

வவுனியா ஓமந்தையில் கொடூரம்: ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்றதை தட்டிக்கேட்ட தாய் மீது தாக்குதல்; மகனை கத்தியால...
06/07/2026

வவுனியா ஓமந்தையில் கொடூரம்: ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்றதை தட்டிக்கேட்ட தாய் மீது தாக்குதல்; மகனை கத்தியால் குத்திக்கொலை!

வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது.

குறித்த சட்டவிரோதமான செயலை அந்த இடத்திலிருந்த கொலையுண்டவரின் தாய் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மகன் அவர்களிடம் கேட்கச் சென்றுள்ளார். இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் அக்குழுவினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும், ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஓமந்தைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தான் இனி ஒருபோதும் தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள்  அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.எத...
06/07/2026

தான் இனி ஒருபோதும் தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எத்தனை கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையா என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இல்லை, நான் இனிமேல் அரசியலுக்கு வருவதற்கு எதிர்பார்க்கவில்லை.

அதேவேளை, நான் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தையும் நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியுள்ளேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Address

89 Grosbeak Crescent
Scarborough, ON
M1X1X4

Alerts

Be the first to know and let us send you an email when TamilCNN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share