10/06/2026
இரங்கல் செய்தி
தமிழ் திரைப்பட உலகில் கிராமிய வாழ்க்கையின் மண்வாசனையை உலக அரங்கில் கொண்டு சென்ற, எண்ணற்ற கலைஞர்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவிற்கு புதிய பரிமாணத்தை அளித்த பாரதிராஜா அவர்களின் மறைவு எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
“இயக்குனர் இமயம்” என போற்றப்பட்ட அவர், தனது படைப்புகள் மூலம் தமிழ் மண்ணின் பண்பாடு, மனித உணர்வுகள் மற்றும் கிராமிய வாழ்வியலை உலகம் முழுவதும் அறியச் செய்தார். அவரது கலைப்பங்களிப்பு என்றும் அழியாத நினைவாக நிலைத்திருக்கும்.
அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகம் (TACA), சிட்னி சார்பில் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி. 🙏
#தமிழ்திரையுலகம் #பாரதிராஜா #இரங்கல் #ஓம்சாந்தி