05/05/2026
எழுகை உதவித்திட்டம்_ 16.
வண்ணாங்குளம், விளாத்திக்குளம் மன்னார் மாவட்டத்தை வதிவிடமாகக்கொண்ட திரு மகாலிங்கம் பிரபாகரன் (மாற்றுத்திறனாளி) என்பவர் ஏற்கனவே துவிச்சக்கரவண்டி திருத்தகம் ஒன்றை நடாத்திவருகின்றார். அவர் தனது துவிச்சக்கரவண்டி திருத்தகத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர் ரயர்களுக்கு காற்று நிரப்பும் இயந்திரம் (கொம்பிறேசர்) ஒன்று வாங்கித்தருமாறு TCECA அமைப்பிடம் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை சாதகமாக பரிசீலித்த TCECA அமைப்பு அவரது கோரிக்க்யை ஏற்று அவருக்கான ஒருலட்சம் இலங்கைரூபா (100.000.00) பணத்தினை வழங்கியிருந்தது.
TCECA அமைப்பிடமிருந்து குறித்த உதவியை பெற்றுக்கொண்ட பயனாளியான மகாலிங்கம் பிரபாகரன் அவர்கள் காற்று நிரப்பும் இயந்திரம் (கொம்பிறேசர்) கொள்வனவு செய்ததோடு திருத்தத்திற்கு தேவையான சில உதிரிப்பாகங்களையும் கொள்முதல் செய்திருந்தார்.
குறித்த பயனாளியின் நிழற்படம், காணொளி என்பனவும் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.