தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தமிழில் பேசுவோம் ! தமிழால் ஒன்றுபடுவோம் !

03/08/2024
அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
23/07/2024

அவசியம் கலந்து கொண்டு
சிறப்பிக்க உங்கள்
அனைவரையும் அழைக்கிறோம்.

தொண்டூழியர் ஆக விருப்பமா ?கீழே உள்ள இணைய முகவரியில் படிவத்தை நிரப்பி சமர்பிக்கவும்.https://form.jotform.com/240343572379...
29/06/2024

தொண்டூழியர் ஆக விருப்பமா ?

கீழே உள்ள இணைய முகவரியில் படிவத்தை நிரப்பி சமர்பிக்கவும்.

https://form.jotform.com/240343572379460

20/06/2024
Dear Members Canberra Tamil Toastmasters Club will be hosting a special event for the children to celebrate the summer h...
06/06/2024

Dear Members

Canberra Tamil Toastmasters Club will be hosting a special event for the children to celebrate the summer holidays together with Canberra CC IAEC.

Date: Sunday, 9 June 2024
Time: 4pm to 7pm
Venue: Canberra CC MPH
Ticket: Free

To register, you can scan the QR code on the poster or click the link below.
https://www.onepa.gov.sg/events/canberra-cc-iaec-tamil-debate-2024-what-makes-vacation-more-enjoyable-15304513

A part of that rejoicing singing and dancing that comes to beautify the celebration.
A joyous call to entertain the mind as a children's competition element to make the program colourful.
We are eagerly waiting for your arrival.

See you on Sunday❤️🙏

https://youtu.be/RyFAubBT0YM
31/05/2024

https://youtu.be/RyFAubBT0YM

இலக்கியவனம் : நிகழ்வு 17: திருமுருகாற்றுப்படை

அனைவருக்கும் வணக்கம்! வரும் ஜூன் மாதம் 23ம் தேதி கேர்ன்ஹில் சமூக மன்றத்தில்(Cairnhill Community Club) மாலை 4 மணிக்கு சோழ...
29/05/2024

அனைவருக்கும் வணக்கம்!

வரும் ஜூன் மாதம் 23ம் தேதி கேர்ன்ஹில் சமூக மன்றத்தில்(Cairnhill Community Club) மாலை 4 மணிக்கு சோழன் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் ஓர் அங்கமாக, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வழங்கும், தலைமுறை தாண்டியும் வாலி என்ற நிகழ்விற்கு தாங்களும் தங்கள் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் வருகை புரிந்து வரலாற்றில் இடம் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். தங்களின் வருகையை உறுதி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்,
அகிலா முத்து.
தலைவர்,
சோழன் தமிழ்ப் பேச்சாளர் மன்றம்.

நன்றி.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfRuNackOapgB_VaWroBxbZXLXk97i3hw_L7ib9YokL3TlcQw/viewform?usp=sf_link

இலக்கியவனம் – 19.05.2024உலகத் தமிழ் ஆர்வலர்களின் நல்லாதரவோடு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தால் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டி...
21/05/2024

இலக்கியவனம் – 19.05.2024

உலகத் தமிழ் ஆர்வலர்களின் நல்லாதரவோடு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தால் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலக்கியவனம் நிகழ்ச்சி, மே மாதம் 19 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு, கேர்ன்ஹில் சமூக மன்றத்தில் (Cairnhill Community Club), முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இது 17 - வது இலக்கியவனம் என்பது குறிப்பிடத்தக்கது. பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலாவதான திருமுருகாற்றுப்படை இந்த நிகழ்வில் அலசப்பட்டது. மொத்த அடிகள் 317 கொண்ட இந்த நூலை நடுவர் உள்ளிட்ட 5 பேச்சாளர்கள் அழகாக விளக்கினர்.

இந்தப் பெருமைமிக்க இலக்கியவன நிகழ்வு இம்முறை சோழன் பேச்சாளர் மன்ற மாதாந்திரக் கூட்டத்தின் ஒரு அங்கமாக நடைபெற்றது.

நிகழ்ச்சி நெறியாளராக ஹேமா சுவாமிநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் வரலாற்றையும், சிங்கப்பூரில் தமிழ்மொழிக்காக இவ்வமைப்புத் தொடர்ந்து நடத்தி வரும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்லி முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் அவர்களை அறிமுகம் செய்து அவையை அவரிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இலக்கியவனம் தொடங்கியது.

பெருமதிப்பிற்குரிய முனைவர் சரோஜினி அம்மையார் மிகச் சிறப்பான வகையில் திருமுருகாற்றுப்படை பற்றிய அறிமுகத்தோடு அருமையாக உரையாற்றி இலக்கியவனத்தைத் தொடங்கி வைத்தார். அவர் பேச்சாளர்களை அறிமுகம் செய்து வைக்க பேச்சாளர்கள் மேடைக்கு வந்து திருமுருகாற்றுப்படையின் பெருமைகளையும் அதன் பாடல்களையும் அந்த பாடலில் வரக்கூடிய இலக்கிய சுவைகளையும் மிகவும் திறம்பட எளிமையான முறையில் நகைச்சுவையோடும் நளினத்தோடும் விளக்கினர். 40 - க்கும் மேலாக திரளாக வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் இந்த பேச்சாளர்களின் இலக்கிய மழையில் நனைந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

மதிப்பிற்குரிய பேச்சாளர்கள் குந்தவை, கார்த்திக் சிதம்பரம், உமாசங்கர், அனுராதா, கேத்திரபாலன் ஆகியோர் தங்களின் வார்த்தைகளால் திருமுருகாற்றுப்படை பாடல்களை மலர்களைப் போல எடுத்து அதையெல்லாம் ஒரு மாலையாக தொடுத்து பார்வையாளர்களுக்கு சூட்டினர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இறுதியாக பெருமதிப்பிற்குரிய முனைவர் சரோஜினி அம்மையார் திருமுருகாற்றுப்படையின் பெருமைகளை எடுத்துக் கூறியதோடு அதில் வரும் பாடல்களை இன்னும் பல செய்யுள்களோடு இணைத்து பார்வையாளர்களுக்குப் புரியும் வண்ணமும் பயனுள்ள வகையிலும் பல எடுத்துக்காட்டுகளை கூறி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார்.

ஒரு மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஹரிகிருஷ்ணன் முத்துசாமி அவர்கள் அறிவித்தார். அழகான திருமுருகாற்றுப்படைக்கு பொழிப்புரையை முனைவர் சரோஜினி எழுதுவார்களேயானால் அந்தப் புத்தகத்தை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகமே வெளியிடும் என்னும் நற்செய்தியை அவர் அறிவித்தார்.

நிகழ்ச்சி நெறியாளர் ஹேமா சுவாமிநாதனின் நன்றியுரையோடும், இரவு விருந்தோடும் இலக்கியவனம் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. அடுத்த இலக்கியவனம் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்தனர்.

அனைவரும் வாரீர்... இலக்கியவனத்தில் இனிய மாலைப் பொழுதை கழிக்க
15/05/2024

அனைவரும் வாரீர்... இலக்கியவனத்தில் இனிய மாலைப் பொழுதை கழிக்க

அனுமதி இலவசம். கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் உங்களுக்காக.....நீங்கள் செய்யவேண்டியது: QR scan செய்து உங்கள் வருகைய...
09/05/2024

அனுமதி இலவசம். கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் உங்களுக்காக.....

நீங்கள் செய்யவேண்டியது: QR scan செய்து உங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இது நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு திட்டமிட ஏதுவாக இருக்கும். நன்றி

https://go.gov.sg/serangooniaectoastmasters

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்:

Share