11/06/2025
நேற்றைய தினம் 10.05.2025 அன்று திருகோணமலை தமிழ் சங்கத்தின் கடின உழைப்பின் மத்தியில் பல ஆண்டுகளுக்கு பின்னர், தமிழர் தம் பெருமைகளை மீட்டெடுக்கும், அடையாளப்படுத்தும் “வசந்த விழா” வெகு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது♥️
தமிழுக்கான இந்த விழா முன்னெடுப்பு முயற்சிகளில், கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் ஆகிய நாமும் எம்மால் இயன்ற பங்களிப்புகளை வழங்கி இருந்தோம்💜
நேற்று இரவு நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர், திருகோணமலை தமிழ் சங்கத்தின் தலைவரின் விசேட அழைப்பின் பேரில், யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் தலைவரை எம் மன்றம் சந்தித்திருந்தது✨
இதன் போது, திருகோணமலை தமிழ் சங்கத்தின் தலைவரின் வார்த்தைகள் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று….
“இந்த மன்ற பிள்ளைகள் எமக்கு மிகப்பெரிய பக்கபலம்…. இந்த நிகழ்வு இவ்வளவு சிறப்பாக நடந்து முடிய இந்த பிள்ளைகள் தான் மிக முக்கிய காரணம்” 😍
கடந்த நாள் நினைவுகளை மீட்டிப்பார்க்கின்றோம்….
சிறப்பு அதிதிகள் அதிகாலை 3 மணிக்கு திருகோணமலை வந்து இறங்கினாலும், அந்த அதிகாலையிலும் உடனே சென்று இன்முகத்திடன் வரவேற்றதில் இருந்து……
அத்தனை வேளை உணவுகளையும் பொறுப்பெடுத்து, உரிய நேரத்தில் பரிமாறி உபசரித்ததில் இருந்து….
நிகழ்வுக்கு வந்த பெரும்பாலானோர் ஆர்வத்துடன் வந்து புகைப்படம் எடுத்த , முதலாவது படத்தில் உள்ள வரவேற்பு பதாதை அமைத்ததில் இருந்து…..
தொழில்நுட்பம் சார் உதவிகள், மேடை துணை அலங்கரிப்பு வேலைகள், வெளி சூழல் அலங்கரிப்புகள் என்பவற்றை திறம்பட செய்து கொடுத்ததில் இருந்து…..அழைப்பிதழ்கள் நேரில் கொண்டு சென்று ஒவ்வொருவராக கொடுத்ததில் இருந்து……அழைக்கப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான விருந்தினர்களை, பெயர்கள் முதற்க்கொண்டு எழுதி ஒழுங்குபடுத்தியதில் இருந்து……..
சொல்லிக்கொண்டே போக ஏராளம் ஏராளம்……
ஆனால்,
எங்கள் முகம் வெளியே தெரியாமல் இருப்பதில் நாங்கள் மிக கவனமாக இருந்தோம்😍
இது தமிழ் சங்கத்தின் நிகழ்வு….
அங்கே இருக்கும் பெரியோர்களின் கனவு…..
இந்த நிகழ்வின் ‘ஒவ்வொரு அங்கத்திலும்’…..
‘ஒவ்வொரு அங்கத்திலும்’ எம் மன்றம் தன்னால் ஆன அத்தனை ஒத்தாசைகளையும் நல்கியது…..
ஆனால், எந்த ஒரு புகைப்படத்திலும் எம் முகம் தெரியாதவாறாக மிக கவனமாக பார்த்துக்கொண்டோம்🤗♥️
நேற்று யாழ்ப்பாண தமிழ் சங்க தலைவர் கூறிய மிக முக்கியமான வார்த்தைகள்…..
“மிக தரமான ஒரு அணியாக, ஒரு மன்றமாக இந்த பிள்ளைகள் சேர்ந்திருக்கிறார்கள்….. தமிழ் சங்கமும், வயதில் கூடியவர்களையே மீண்டும் மீண்டும் உள்வாங்குவதை தவிர்த்து, இப்படிப்பட்ட ஆளுமை உள்ள குழந்தைகளை உள்ளுக்கு கொண்டு வரோணும்…. யாருக்கு தெரியும்???? இன்னும் 10,20 வருசத்துக்கு பிறகு இந்த குழந்தைகள் கூட தமிழ் சங்கத்தின் தலைவராக இருக்க முடியும்” 😍♥️
நாங்கள் விருதுக்கு வேட்டையாடவில்லை….
பெயர் வெளியில் வர வேண்டும், புகைப்படத்தில் முகம் வர வேண்டும் என்று எதையும் செய்யவில்லை….
ஆனால்……
ஆளுமை மிக்க பெரியோர், எம்மை அவதானித்து இருக்கிறார்கள்….
நேரில் அழைத்து பாராட்டுகிறார்கள்……😍🙏
எப்போதும் எம் மன்றத்தின் தாரக மந்திரம் இது தான்….
“கடமையை செய்♥️
பலனை எதிர்பாராதே💜”
திருகோணமலை தமிழ் சங்கம் மிகப்பெரும் விருட்சமாய் கிளை பரப்ப,,,,
“ஸ்ரீ இராமருக்கு பாலம் கட்ட உதவிய அணில் போல”
எம் மன்றத்தால் ஆன அத்தனை உதவிகளையும் நல்குவோம்♥️
வீழ்வது “நாமாயினும்”
வாழ்வது தமிழாகட்டும்♥️✨