Sammanthurai Sadaqa Welfare Fund

Sammanthurai Sadaqa Welfare Fund Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sammanthurai Sadaqa Welfare Fund, Charitable organisation, E35/2/C/1, Ampara Road, Udanga/01, Sammanthurai.

மக்களின் நன்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு, வாழ்வாதாரம் குறைந்தவர்களுக்கு மருத்துவ செலவுகள், அன்றாட தேவைகள், கல்வி மற்றும் அவசரநிலை உதவிக்கான நிதி விநியோகிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே நோக்கமாகும்

19/06/2026

மாவடிப்பள்ளி ஜும்ஆ பள்ளிவாசலில்
முஹர்ரம் மாதத்தின் முக்கியத்துவம் பற்றிய சிறப்பு பயான்
மௌலவி : ABM றம்சீன் (காசிபி)
2026.06.19

Sammanthurai Sadaqa Welfare Fund Mohammed Sathik QC

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சேகரிக்கப்பட்ட நிதி கையளிப்பு*வேலைத்திட்ட இலக்கம் - 49*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்ல...
17/06/2026

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சேகரிக்கப்பட்ட நிதி கையளிப்பு

*வேலைத்திட்ட இலக்கம் - 49*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தினால் (SSWF), கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சுகயீனமுற்றுள்ள ஆசிரியர் M I அச்சிமுஹம்மட் அவர்களுக்கு உதவும் நோக்கில் சதகா வழங்குநர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி 15.06.2026 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

சமூகத்தின் அன்புள்ள சகோதர, சகோதரிகளின் தாராளமான சதகா பங்களிப்புகளின் ஊடாக சேகரிக்கப்பட்ட இந்நிதி, ஆசிரியரின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில் சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களின் முன்னிலையில் கையளிக்கப்பட்டது.

இந்நிதி வழங்கும் நடவடிக்கைக்கு பங்களித்த அனைத்து சதகா வழங்குநர்களுக்கும், துஆ மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கிய அனைவருக்கும் சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

அல்லாஹுதஆலா இப்பங்களிப்புகளை சதகா ஜாரியாக ஏற்றுக்கொண்டு, ஆசிரியருக்கு பூரண சுகத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்குவானாக என்று பிரார்த்தனை செய்கிறோம் ஆமீன்.

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் (SSWF)
SSWF Media InfoLine

“உங்கள் சதகா – ஒருவரின் வாழ்வில் நம்பிக்கையின் ஒளி”

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் 1வது வருடாந்த பொதுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபைத் தெரிவு வெற்றிகரமாக நிறைவு...
16/06/2026

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் 1வது வருடாந்த பொதுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபைத் தெரிவு வெற்றிகரமாக நிறைவு

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் (SSWF) 1வது வருடாந்த பொதுக் கூட்டமும், 2026/2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத் தெரிவும் 2026.06.13 ஆம் திகதி (சனிக்கிழமை) சம்மாந்துறையிலுள்ள ப்ரூட்பார்க் ரெஸ்டாரண்டில் (Fruit Park Restaurant) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வை நிர்வாகத்தலைவரும் மத விவகாரங்கள் பணிப்பாளருமான மௌலவி ஏ.பி.எம். றம்ஸீன் (காஷிபி) தலைமை தாங்கினர். தொடர்ந்து தவிசாளர் , பதில் தவிசாளர் உரை பணிப்பாளர்களின் உரைகளும் இடம்பெற்றதுடன், அமைப்பின் கடந்த ஓராண்டு செயற்பாடுகளை உள்ளடக்கிய வருடாந்த அறிக்கை வாசிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணக்கறிக்கையும் நிதி நிலை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களின் அங்கீகாரமும் பெறப்பட்டது.

மேலும், சதகா நலன்புரி நிதியத்தின் ஏனைய அங்கத்தவர்கள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், சமூக நலப் பணிகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது குறித்தும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நிகழ்வின் ஒரு பகுதியாக தவிசாளர் ஏ.ஜே.எம். சாதிக் அவர்களின் ஏற்பாட்டில் பகற்போசனமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து 2026/2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றதுடன், புதிய நிர்வாக உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தங்களது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். புதிய நிர்வாகத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் சமூக சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

இதன் போது ,
தலைவர்
- *அல்ஹாஜ் , மௌலவி. ஏ.பீ.எம். றம்ஸீன் (காஷிபி)*
(Director & Commitee president)

செயலாளர்
- *ஏ.எம். றிகாஸ்*

உப செயலாளர்
- *ஐ.எல்.எம். கரீம்*

பொருளாளர்
- *டீ.எல். அன்வர்*

உப பொருளாளர்
- *எம்.டீ.எம். கதீர்*

அனைத்து பயனாளிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ( Coordinator)

ML Saleem

பயனாளிகள் குழு தலைவர்கள்
A. கல்வி
- *எம்.வை. மஹ்ரூப்*
- *ஏ.ஜே.எம். ஆசிக் முப்தி*

B. நீர் & மின் இணைப்பு
- *டீ.எல். சுபைர்*

C. வாழ்வாதாரம் & சுயதொழில்
- *ஏ.எல்.எம். றிப்கான் (நழீமி)*

D. சுகாதாரம் & மருத்துவம்
- *எம்.எப்.எம். சமீம்*

E. உட்கட்டமைப்பு
- *ஏ.ஜீ.எம். இஃப்தி*

ஊடக குழு தலைவர்
- *ஏ.பீ.எம். இம்ரான் (JP)*

திட்டமிடல் குழு (Planning Team)
- *ஏ.எல்.எம். றிப்கான் (நழீமி)*
- *எம்.டீ.எம். கதீர்*
- *ஐ.எல்.எம். கரீம்*
- *அஹ்லாக்*
- *ஏ.பீ.எம். நௌஸாத்*
- *வீ. முஹம்மட் அலீ*

Financial officer
* *ஏ.பீ.எம். நௌஸாத்*

Auditor
* *ஏ.பீ.எம். பைஷாட்*

உயர் ஆலோசனை குழு
*ஏ.ஜே.எம். ஆசிக் முப்தி* உட்பட *உலமாக்கள்*

செயலாளர் குழு
- *முக்தாத்*
- *எஃப்.எம். அன்பாஸ்*
- *ஹிக்மத்*

Standing Order Maintainance team
- *சாதிர் ஏ. ஜப்பார்*
- *எம்.ஜே. அன்சத் அஹமட்*

ஆகியோர் புதிய நிருவாக குழுவில் உட்சேர்க்கப்பட்டனர்.

அத்துடன், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையுடன் புரிந்துணர்வு ஒன்றுகூடல் ஒன்றை மிக விரைவில் ஏற்பாடு செய்து, இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட திட்டமிடலும் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

நிகழ்வின் நிறைவில் புதிய நிர்வாகத்தினரின் குழுப் புகைப்படம் மற்றும் அலுவலக ரீதியான உத்தியோகபூர்வ புகைப்பட அமர்வுகளும் நடைபெற்றன.

சமூக நலன், வெளிப்படைத் தன்மை மற்றும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் உறுதியுடன் சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் தனது புதிய நிர்வாகப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

செயலாளர்
AM றிகாஸ் ( தாதி உத்தியோகத்தர் )
சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம்

Join with us
11/06/2026

Join with us

10/06/2026

“நன்மையை நோக்கி அழைத்து, நல்லதை ஏவியும், தீமையைத் தடுத்தும் செயல்படும் ஒரு சமூகம் உங்களிடையே இருக்கட்டும். அவர்களே வெற்றியாளர்கள்.”

*வேலைத்திட்ட இலக்கம் : 52*அல் முனாதிய்யா இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான கல்லூரிக்கு மார்க்க கல்வி  வளர்ச்சிக்காக நிதி கையளி...
04/06/2026

*வேலைத்திட்ட இலக்கம் : 52*

அல் முனாதிய்யா இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான கல்லூரிக்கு மார்க்க கல்வி வளர்ச்சிக்காக நிதி கையளிப்பு

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு அமைவாக, ஜபல் பள்ளிவாசல் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அல் முனாதிய்யா இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேவையான தளபாடங்கள், புத்தகங்கள் மற்றும் கிதாபுகள் கொள்வனவு செய்வதற்காக ரூபாய் எண்பதாயிரம் (Rs. 80,000.00) சதகா நிதி உதவி இன்று 05.06.2026 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

குறித்த விண்ணப்பம் எமது நிர்வாகக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு, மாணவர்களின் மார்க்கக் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கல்லூரி ஆரம்ப விழா நிகழ்வின் போது சம்மாந்துறை ஜபல் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சதகா நிதி காசோலை மூலம் நேரடியாக கல்லூரியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் தவிசாளர், பதில் தவிசாளர், சட்டப் பணிப்பாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அஸ்-ஷெய்க் மௌலவி ஹிதாயத்துல்லாஹ் றஸீன் (ஹகிமியா அரபிக் கல்லூரி(உடத்தலவிண்ண)அதிபர்) அவர்கள் சிறப்பான மார்க்க சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார்.

வழங்கப்பட்ட இந்நிதியானது எமது சதகா வழங்குநர்களின் பங்களிப்புகள் மூலம் சேகரிக்கப்பட்ட சதகா நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி நலனையும் மார்க்க அறிவு வளர்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த உதவிக்கு ஆதரவளித்த அனைத்து சதகா வழங்குநர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹ் தஆலா இப்பணியில் பங்களித்த அனைவரையும் நன்மையின் பாதையில் நிலைநிறுத்தி, அவர்களின் இம்மை மற்றும் மறுமை வாழ்வில் வெற்றிகளையும் பரக்கத்துகளையும் வழங்குவானாக. அவர்களின் செல்வம், ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை மற்றும் அனைத்து நற்செயல்களிலும் அல்லாஹ் அருள் பொழிவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்
SSWF Media InfoLine

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் (SSWF)
“உங்கள் சதகா – சமூகத்தின் நம்பிக்கை

அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் மற்றும் வெளிநாடுகளில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும்சம்மாந்துற...
28/05/2026

அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் மற்றும் வெளிநாடுகளில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும்
சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் இனிய
🌙 ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் 🌙

இந்த புனித நாளில் அல்லாஹ் தஆலா எங்களுடைய நல்ல அமல்களை ஏற்றுக்கொண்டு, அனைவருக்கும் அமைதி, ஆரோக்கியம், பரக்கத் மற்றும் இரு உலக வெற்றிகளையும் அருள்வானாக. ஆமீன்.

SSWF Media InfoLine
Sammanthurai Sadaqa welfare Fund

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ஈதுல் அழ்ஹா ஒரு பெருநாள் மட்டும் அல்ல, அது தியாகம், மனிதநேயம...
27/05/2026

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ஈதுல் அழ்ஹா ஒரு பெருநாள் மட்டும் அல்ல, அது தியாகம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பை கற்பிக்கும் ஒரு உயர்ந்த பாடசாலை.

﴿وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ ۝ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ﴾

உழ்ஹியா என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாக கீழ்ப்படிதல், மனிதர்களின் துயரை உணர்தல், தன்னிடம் இருப்பதை பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகும் என்பதை ஈதுல் அழ்ஹா எமக்கு உணர்த்துகிறது.

இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், அல்லாஹ்வின் அன்பையும் கட்டளையையும் அனைத்திற்கும் மேலாக வைத்ததினால் உயர்ந்த நிலையை அடைந்தார்கள். அந்த தியாக உணர்வே இன்று உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகிறது.

இன்றைய சமுதாயத்தில் பல ஏழை குடும்பங்கள், ஆதரவற்றோர், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கல்விக்காக போராடும் மாணவர்கள் ஆகியோர் உதவிக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையின் ஒளி ஏற்றுவது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

இந்த ஈதுல் அழ்ஹா எமக்குக் கற்பிக்கும் பாடங்கள்:

• உயர்ந்த சமூகத்தை உருவாக்க தியாகம் அவசியம்
• மனிதநேய சேவைக்கு உண்மையான அர்ப்பணிப்பு அவசியம்
• செல்வத்தின் உண்மையான அர்த்தம் பகிர்வதில்தான் உள்ளது
• சுயநலத்தை விட சமூக நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

﴿وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ﴾

என்பது, மனிதன் பின்னால் விடும் நல்ல பெயர் பணத்தாலும் பதவியாலும் அல்ல; மக்களுக்காக செய்த சேவைகளாலும் கருணையாலும் உருவாகும் என்பதைக் கற்பிக்கிறது.

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம், இந்த தியாக உணர்வையும் மனிதநேய பண்பையும் அடிப்படையாகக் கொண்டு, ஏழை மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் உதவியையும் கொண்டு சேர்க்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

இந்த ஹஜ்ஜுப் பெருநாளில், எமது சமூகத்தில் உதவிக்காக காத்திருக்கும் மக்களை நினைவில் கொண்டு, சதகா, உழ்ஹியா மற்றும் மனிதநேய சேவைகளில் அனைவரும் பங்கெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அல்லாஹ் எங்களுடையதும் உங்களுடையதும் நல்ல செயல்கள், தியாகங்கள் மற்றும் மனிதநேய சேவைகளை ஏற்றுக்கொள்வானாக.

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியம் (SSWF)

Address

E35/2/C/1, Ampara Road, Udanga/01
Sammanthurai
32200

Alerts

Be the first to know and let us send you an email when Sammanthurai Sadaqa Welfare Fund posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share