Malaria control in Kalmunai RDHS

  • Home
  • Malaria control in Kalmunai RDHS

Malaria control in Kalmunai RDHS Control activities in Kalmunai region, malaria and dengue, public health and preventive health in srilanka

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் மலேரியா விழிப்புணர்வு மற்றும் விசேட இரத்த மாதிரி பரிசோதனை! 🩸🦟​இன்று (21.05.2026), நாவிதன்...
21/05/2026

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் மலேரியா விழிப்புணர்வு மற்றும் விசேட இரத்த மாதிரி பரிசோதனை! 🩸🦟
​இன்று (21.05.2026), நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் விதாதா (Vidatha) நிலையத்தில் தாதிய உதவியாளர் (Nursing Assistant) பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கான மலேரியா விழிப்புணர்வு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
​பிராந்திய மலேரியா தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். ஐ. எம். கபீர் அவர்களின் ஆலோசனையின் பேரிலும், பிராந்திய மலேரியா தடை இயக்க காரியாலய உத்தியோகத்தர்களின் பங்களிப்போடும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
​🌟 நிகழ்வின் முக்கிய அம்சங்கள்:
​மலேரியா விழிப்புணர்வு: தாதிய உதவியாளர் பயிற்சி மாணவர்களுக்கு மலேரியா நோய் பரவும் விதம், அறிகுறிகள் மற்றும் அதனைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்து விரிவான தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
​விசேட இரத்தப் பரிசோதனை: அண்மைக்காலத்தில் இந்தியா சென்று திரும்பியிருந்த பயிற்சி மாணவி ஒருவருக்கு, மலேரியா அச்சுறுத்தலைக் கண்டறியும் நோக்கில் உத்தியோகத்தர்களினால் விசேட இரத்த மாதிரி பரிசோதனை (Blood Sample Test) மேற்கொள்ளப்பட்டது. (ஏனைய மாணவர்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது).
​வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் மலேரியா மீண்டும் பரவாமல் தடுப்பதற்கான இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் , ஒத்துழைப்பு வழங்கிய விதாதா நிலையத்திற்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!

பிராந்திய மலேரியா தடை இயக்க காரியாலயத்தின் மாதாந்த மீளாய்வுக் கூட்டம் இன்று எமது காரியாலயத்தில் பிராந்திய மலேரியா வைத்தி...
19/05/2026

பிராந்திய மலேரியா தடை இயக்க காரியாலயத்தின் மாதாந்த மீளாய்வுக் கூட்டம் இன்று எமது காரியாலயத்தில் பிராந்திய மலேரியா வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ. முஹம்மட் கபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மலேரியா தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. காரியாலயத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக சுகாதார பூச்சியியல் அதிகாரி (H.E.O), பொதுச் சுகாதார ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (P.H.L.T), பொதுச் சுகாதார கள அதிகாரி (P.H.F.O), தெளிப்பு கருவி இயக்குநர் (S.M.O) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த மாதக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் செயற்திட்டங்களின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் பெறுபேறுகளும் பாராட்டப்பட்டன.

மேலும், இலங்கையில் மலேரியா ஒழிக்கப்பட்டிருந்தாலும், மலேரியா அபாயம் காணப்படும் நாடுகளுக்கு சென்று வருபவர்களுடனான தொடர்புகள் அதிகரித்து வருவதால், நோய் பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ப்ரொபைலாக்ஸிஸ் (Prophylaxis) வழங்குதல், இலக்கு குழுக்களுக்கான ஸ்கிரீனிங் நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இப்பிராந்தியத்தில் மலேரியா அச்சுறுத்தலற்ற ஆரோக்கியமான சூழலை நிலைநிறுத்துவதற்காக அனைத்து பணியாளர்களும் ஒருங்கிணைந்த மற்றும் அர்ப்பணிப்பான சேவையுடன் தொடர்ந்தும் செயல்பட வேண்டியது அவசியம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

25/04/2026
📢 உலக மலேரியா தின விழிப்புணர்வு அறிவிப்பு📅 ஏப்ரல் 25 – உலக மலேரியா தினம்நமது நாட்டில் உள்நாட்டு மலேரியா நோய் ஒழிக்கப்பட்...
25/04/2026

📢 உலக மலேரியா தின விழிப்புணர்வு அறிவிப்பு
📅 ஏப்ரல் 25 – உலக மலேரியா தினம்
நமது நாட்டில் உள்நாட்டு மலேரியா நோய் ஒழிக்கப்பட்டிருந்தாலும், மலேரியா நோய் காணப்படும் சில நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்கள் மூலம் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் இன்னும் நிலவுகிறது.
மேலும், மலேரியா நோயை பரப்பக்கூடிய பிரதான நுளம்பு இனங்களான Anopheles culicifacies மற்றும் Anopheles subpictus போன்றவை இலங்கையிலும், குறிப்பாக எமது கல்முனை பிரதேசத்திலும் காணப்படுகின்றன. அதேபோல் எமது கல்முனை பிரதேசத்தி நகர்ப்புற சூழல்களில் வளரும் Anopheles stephensi நுளம்பு இனங்களும் அதிகமாக உள்ளன.
இதனால், எமது பிரதேச மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பிராந்திய மலேரியா கட்டுப்பாட்டு பிரிவு மூலம் மலேரியா தொற்று காணப்படும் நாடுகளுக்கு செல்லும் நபர்களுக்கு முன்கூட்டியே தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அந்த நாடுகளிலிருந்து திரும்பி வருபவர்களுக்கான இரத்த மாதிரி பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சேவைகள் பல சந்தர்ப்பங்களில் அவர்களை நாடிச் சென்றே வழங்கப்பட்டு வருகின்றன.
⚠️ எனவே மக்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்:
✅ மலேரியா காணப்படும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன் அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது பிராந்திய மலேரியா அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள்.
✅ வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின்னர் காய்ச்சல், நடுக்கம், வியர்வை, தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
✅ வீட்டைச் சுற்றியுள்ள தேங்கிய நீரை அகற்றி கொசு பெருக்கத்தைத் தடுக்குங்கள்.
✅ கொசு வலை, புகை மருந்து, பாதுகாப்பு உடை போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.
🛡️ மலேரியாவை ஒழித்தோம்… மீண்டும் வராமல் காப்போம்!
📍 உங்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பான சமூகத்திற்கான வலிமை.

The Monthly Review Meeting of our Regional Malaria Control unit (Vector - Borne Disease Control Unit) was successfully h...
22/04/2026

The Monthly Review Meeting of our Regional Malaria Control unit (Vector - Borne Disease Control Unit) was successfully held today, 22nd April 2026, at our office.
The meeting was chaired by the Regional Medical Officer, Dr. S. I. Mohammad Kabeer. It was attended by the Health Entomologi Officers, ,Public health Laboratory Technicians , Public Health Field Officers, Spray Machine Operators, Development Officers, and other supporting staff serving in our region.
The session focused on reviewing current activities, strengthening field operations, and enhancing strategies for effective malaria prevention and control within our area.
We appreciate the dedication and active participation of all officers and staff members.

📍 Newguna– ඉරක්කාමම් ප්‍රදේශයඅද දින ඉන්දියාවට ආගමික කටයුතු සඳහා ගමන් කරන පුද්ගලයන්ට මැලේරියා වැළැක්වීමේ ඖෂධ (Prophylaxis...
11/02/2026

📍 Newguna– ඉරක්කාමම් ප්‍රදේශය
අද දින ඉන්දියාවට ආගමික කටයුතු සඳහා ගමන් කරන පුද්ගලයන්ට මැලේරියා වැළැක්වීමේ ඖෂධ (Prophylaxis) ලබාදීමේ වැඩසටහන සාර්ථකව පැවැත්විණි.
මැලේරියා ආසාදන ඇති රටවලට ගමන් කරන සියලු දෙනාම පෙර සූදානමක් ලෙස අවශ්‍ය වැළැක්වීමේ ඖෂධ ලබාගැනීම අත්‍යවශ්‍ය වේ.
ඔබගේ ආරක්ෂාව අපගේ ප්‍රමුඛතාවයයි.RMO /AMC-Kalmunai
Newguna– இறக்காமம் பிரதேசம்
இன்று இந்தியாவிற்கு சமய அனுஷ்டானத்திற்காக பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக மலேரியா தடுப்பு மாத்திரைகள் (Prophylaxis) வழங்கும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மலேரியா தொற்று காணப்படும் நாடுகளுக்கு பயணம் செய்யும் அனைவரும் முன்கூட்டியே தேவையான தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்வது மிக முக்கியமானது.
உங்கள் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை.RMO/AMC-Kalmunai

🇱🇰 78th Independence Day Celebration – Kalmunai 🇱🇰Today, the 78th Independence Day of Sri Lanka was celebrated with grea...
05/02/2026

🇱🇰 78th Independence Day Celebration – Kalmunai 🇱🇰
Today, the 78th Independence Day of Sri Lanka was celebrated with great pride and patriotism at our office premises,
Vector Borne Disease Control Unit / Regional Anti-Malaria Campaign – Kalmunai.
The programme was held in a dignified manner with the participation of officers and staff members.

Happy Independence Day! 🇱🇰✨

The Annual General Meeting of the  Welfare Association, along with a felicitation ceremony for retired members and an aw...
10/01/2026

The Annual General Meeting of the Welfare Association, along with a felicitation ceremony for retired members and an award ceremony to appreciate the children of our members who have achieved outstanding results, was held today (10.01.2026) under the chairmanship of our Regional Medical Officer, Dr. S. I. Mohammed Kabeer.
The event was graced by the participation of the Regional Director of Health Services, Dr. S. R. Issadeen, as the Chief Guest, and Deputy RDHS Dr. A. A.Masood, Monitoring and Evaluation Officer Dr. Mahir, and MO Planning Dr. Shafi as Guests of Honour.

கல்முனை ப் பிராந்திய மலேரியா தடை இயக்கத்தின் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மலேரியா தடை இயக்க வைத்திய அத...
01/01/2026

கல்முனை ப் பிராந்திய மலேரியா தடை இயக்கத்தின் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மலேரியா தடை இயக்க வைத்திய அதிகாரி டாக்டர் S. I. Mohamed Kabeer. அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிராந்திய காரியாலயத்தில் கடைமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
RMO/AMC

2025.12.26Prophylaxis Issued Ayyappa PilgrimagesKalmunai north MOH Area
27/12/2025

2025.12.26
Prophylaxis Issued Ayyappa Pilgrimages
Kalmunai north MOH Area

2025.11.11 prophylaxis was given today at the Thirukovil MOH area.
13/12/2025

2025.11.11 prophylaxis was given today at the Thirukovil MOH area.

Address


Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 12:00

Telephone

+94672220206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malaria control in Kalmunai RDHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share