25/01/2025
புத்தளம் மக்கள் மன்றம்
Puttalam People's Forum (PPF)
புத்தளம் மக்கள் மன்றத்தின் உதயதுக்குக் காரணமாக அமைந்தது வடமேல் மாகாண சபைத் தேர்தலாகும். 1999 ஜனவரி 25 ஆம் திகதியன்று இடம்பெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்தன. இது பற்றிக் கலந்துரையாடுவதற்காக மத்ரஸதுல் காஸிமிய்யாவில் ஒன்றுகூடிய சில சகோதரர்கள், தொடர்ந்தும் இம் மத்ரஸாவில் சமூக விவகாரங்கள் பற்றிக் கலந்துரையாடத் தொடங்கினர்.
காலப்போக்கில் இக்கலந்துரையாடலில் பலர் இணைந்துகொண்டனர். ஒவ்வொரு விடயத்துக்குமென உப குழுக்கள் அமைக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவே பின்னர் புத்தளம் மக்கள் மன்றமாக மாறியது. 20.06.2000 ஆம் ஆண்டு அன்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், புதிய நிருவாக சபைத் தெரிவு இடம்பெற்றது.
புத்தளம் தள வைத்தியாசாலை, மின்சார சபை, , தொழில் திணைக்களம், பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய (DPDHS) இடமாற்றம், கிராம சேவகர் பிரிவுகளின் எல்லை நிர்ணயம், IBM காணிப் பிரச்சினை, வலயக் கல்விப் பணிமனை பிரிக்கப்படல், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் அவசியம், கணினி மற்றும் தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டல், ஆசிரிய நியமனம், எமது பிரதேச செயலகங்களில் தமிப் மொழி மூல அமுலாக்கள், தமிழ் பேசும் பொலிஸார் நியமனம், பிரதான பாதைகளில் வரவேற்பு வளைவுகள் அமைத்தல் உட்பட பல விடயங்கள் தொடர்பாகக் காலத்துக்கு காலம் கலந்துரையாடப்பட்டு முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.
துண்டுப்பிரசுரங்கள் மூலமும் அவ்வப்போது சமூக விழிப்பூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. வாக்காளர் பதிவின் முக்கியத்துவம், பாராளுமன்றத் தேர்தலின்போது அமைதி காத்தல், ஈத்தம்பழ விநியோகம், குனூத்துன் நாஸிலா, குடிசன மதிப்பேடு, சுகாதார பணிப்பாளர் காரியாலய இடமாற்றம் போன்றன அவற்றுள் சிலவாகும்.
புத்தளம் மக்கள் மன்றம், 21.03.2001 இல் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகப் (NGO) பதியப்பட்டு அதன் மூலம் பல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. 13.08.2001 இல் புத்தளம் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்திலும் (Consortium) மக்கள் மன்றம் தன்னை இணைத்துக்கொண்டது.
பாலர் பாடசாலைகளுக்குக் கற்பித்தல் துனைச் சாதனங்கள் வழங்கள், புனித ரமழான் மாத பேரீத்தம்பழ விநியோகம், உள்ளூர் இடம்பெயர்ந்தோர் உறவை வலுப்படுத்தல், உலுக்காப்பள்ளம் பிரதேச மஸ்ஜிதுகள் சம்மேளனம் அமைப்பதற்கான முயற்சி, புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்தல் உட்பட போன்ற பல செயற்பாடுகளில் மக்கள் மன்றம் ஈடுபட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் இனப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்கள் உள்ளடங்கலாகப் பல உள்ளூர், தேசிய மட்டக் கலந்துரையாடல்களிலும் மக்கள் மன்றம் பங்கேற்றத்துடன் குறிப்பாக, இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வுக்கான கலந்துரையாடலில், வடபுல முஸ்லிம்களுக்குப் புகலிடம் கொடுத்த புத்தளமும் கவனத்திற்கொள்ளப்பட்டதல் வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
புத்தளம் மக்கள் மன்றத்தின் தாபகத் தலைவர் மர்ஹூம் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆவார். அத்துடன் மெளலவி அப்துர் ரஹ்மான், பொறியியலாளர் மர்ஹூம் K.M.M. சாபிர் ஆகியோரும் தாபகர்கள் வரிசையில் நினைவுகூரப்படவேண்டியோராவர். அதன் பொதுச் செயலாளராக இஸட்.ஏ. ஸன்ஹிர் பணியாற்றினார். இணைச் செயலாளர்களாக எஸ்.ஆர்.எம். முஹ்ஸி, M.O.J.M. நிஜாம் ஆகியோர் கடமையாற்றினர்.
புத்தளம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் வாலிபர் சங்கக் கட்டிடம் (தைக்காப் பள்ளி) 07.05.2000 ஆம் ஆண்டு, ஆசிரியர் M.A.M. நிஸாம், அல்ஹாஜ் A.M.M. பஸல், A.G.M. பாதிஹ், A.N.N.M. பவ்மி ஆகியோரால் கையளிக்கப்பட்டு அன்று முதல் மக்கள் மன்ற செயலகமாக இயங்கி வந்தது.
இக்கட்டிடத்தில் மன்றத்தின் மூலம் பாலர் பாடசாலை, குர்ஆன் மத்ரஸா, மருத்துவ சேவை, தாய் சேய் நல சேவை போன்றனவும் நடத்தப்பட்டன.
அலிசப்ரி றஹீம் அவர்களின் அன்பளிப்பில், குருநாகல் வீதியிலும் மன்றத்தின் காரியாலயம் சில காலம் இயங்கிவந்துள்ளது. இதில் S.A.M. மர்சூக், N.M. இன்சாப் ஆகியோர் காரியாலய உதவியாளர்களாகப் பணியாற்றினர்.
மக்கள் மன்ற உறுப்பினர்களுள், மர்ஹூம் M A.W. ஷாஜஹான், மர்ஹூம் S M முபாரக் (ஆசிரியர்) மர்ஹூம் M.L. ஹாஜா சஹாப்தீன், மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ் (Cheap Side), மர்ஹூம் S.M.A. ஹசன் (GS), மர்ஹூம் C.S.M.A. அஸீஸ் மரைக்கார், மர்ஹூம் S.A.C. யாகூப், ஆகியோருடன் S.R.M. சலீம் (ஆசிரியர்), S.M.A. அஸீஸ் (கரைத்தீவு) M.H.A. ரஷீத், Z.A.M. றஸ்மி, M.H. ஹுதைபா, A.M. S.R.M. முஸம்மில், A.M. ஜவாத், S.I.L. முஸம்மில், M.T.N. அமீன், M.S.M. யாசிர், A.A. முஹ்தார், A.S.A. ஹுதா, M.S. அபூஸாலிஹ், M.R.M. மலிக், M.A.A. லத்தீப், M.C.M. மஹ்ரூப் போன்றோரும் ஏனையோரும் பிரதான பங்களிப்பை வழங்கினர். 'புத்தளம் மக்கள் மன்றம்' என்ற பெயரை முன்மொழிந்தவர் ஷரீப் அப்பாஸ் ஆவார்.
மன்றத்தின் உதவியாளர்களாக A.J.M. இனூஸ் , M.T.M. சாப்ரான், A.L.M. ஹஸீப், M.R.M. தஸ்னீம் ஆகியோர் காலத்துக்கு காலம் பணியாற்றியுள்ளனர். 15.05.2002 இல் Puttalam People's Forum News Bulletin என்ற பெயரில் செய்திக் கையேடு ஒன்றும் வெளியிட்டுவைக்கப்பட்டது.
© Z.A. Zanhir - 22. 01. 2025
Thanks Zanhir Sir
https://www.facebook.com/share/p/18RH329KR6/?mibextid=wwXIfr