Help to Smile

Help to Smile News,cultural program,documentary,sports, cinema these are our goals stay with us and enjoy.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியே தன் தந்தை உண்ணாவிரதம் இருப்பதாய்த் தெரிவித்து இருந்தார் சுரேஷ் சாலேவின் மகன்.சு...
09/06/2026

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியே தன் தந்தை உண்ணாவிரதம் இருப்பதாய்த் தெரிவித்து இருந்தார் சுரேஷ் சாலேவின் மகன்.

சுரேஷ் சாலேவோ, தனக்கு எதிராக ஈஸ்டர் விசாரணைகளை நடத்தும் தலைமைப் பொறுப்பில் இருந்து சீ ஐ டி பணிப்பாளர் ஷானி அபேசகரவை அகற்ற வேண்டுமன்றும், தான் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அறைக்கும் பதிலாய் வேறு ஒரு அறை வழங்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

ஷானி ஏதோ இவர் வீட்டு வேலையாள் போலவும் இவர் எஜமான் போலவும் இருக்கிறது இந்த நிபந்தனை. பாருங்கள். எந்தளவுக்கு மமதை பத்திரமாய் மண்டையில் இன்னும் எஞ்சி இருக்கிறது என்று.

சத்தியாக்கிரகத்தில் இருக்கும் ஒருசிலர் சுரேஷ் சாலே விடுதலையாகும் வரை சத்தியாக்கிரகம் தொடரும் என்கிறார்கள்.

வீரவன்சவோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் அல்லாமல் வேறு ஏதேனுமொரு சட்டத்தில் சாலே விசாரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டால் தமக்குப் பிரச்னை இல்லை என்கிறார்.

ஆக, வெட்டி போய்ஸ் வீரவன்ச - கம்மன்பில ப்ரைவட் லிமிட்டட் , சுரேஷ் சாலே மகன், சுரேஷ் சாலே, கணவனை சார் என்று சொல்லிக் கூப்பிடும் சுரேஷ் சாலேவின் அபூர்வ மனைவி என்று ஆளுக்கொரு கருத்தைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

சுரேஷ் சாலே இருக்கும் அறையில் தான் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்கள் மட்டுமல்ல எத்தனையோ அப்பாவிகளின் சாபத்திற்குள்ளான சுரேஷ் சாலே இன்று அறை பற்றிப் பேசுகிறார்.முள்ளங்கிக் கிழங்கோ என்னவோ வழங்கப்பட்டது பற்றிப் பேசுகிறார்.

அப்படி என்றால் என்ன செய்வது, சினமன் லைபிலோ, சங்கிரிலாவிலோ மூன்று வேளையும் சாப்பாடு ஏற்பாடு செய்து இத்தாலி கொமட் இருக்கும் அட்டாச் பாத் ரூம் கொண்ட சொகுசு அறையா வழங்க முடியும்.

நேற்று சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்பு பொலிஸ் துறைக்குப் பொறுப்பாய் இருந்த சரத் வீரசேகரவும், டிரான் அலஸும் வந்து இருந்தார்கள்.அவர்களும் சாலேவுக்கு வசதி போதவில்லை என்றார்கள்.துன்புறுத்தப்படுவதாகச் சொன்னார்கள்.

ஏதோ , விதவிதமான பாத்திரங்களில் விதவிதமாய்க் கறி சமைத்து, விதவிதமாய்க் கரண்டிகள் வைத்து , கைகழுவ சானிட்டைஸரும், துடைக்க சேவியட்டும் வைத்து மணமணக்க சாப்பாடு பரிமாறும் சிஸ்டத்தை இவர்களும் சாலேவும் , சாலேவின் முன்னோர்களும் எஜமானர்களும் சிறைக்கூடத்தில் ஏற்படுத்திவிட்டுப் போன மாதிரியும் இப்போது மட்டும் எலி ஓடும் அறை வழங்கப்பட்டு இருப்பது போலவும் இருக்கிறது இவர்களது கதைகள்.

காலம் முழுக்க தமிழ் மக்களைச் சந்தேகத்துடன் பார்த்தவர்கள்,காலம் முழுக்க முஸ்லிம்களைப் பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லி அரசியல் செய்தவர்கள்,தமது அரசியல் கொள்கைக்குத் தொடர்ச்சியாக வலுசேர்க்கும் வகையில் இரு பெரும் சிறுபான்மை இனங்களையும் ஒடுக்கி வைக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் வீரியமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றவர்கள் இன்று தமது எஜமானர்களின் ஆஸ்தான விசுவாசியாக இருந்த சுரேஷ்சாலேவிற்கு எதிராக அந்தச்சட்டம் பாய்ந்தபோது திடீர் ஜீவ காருண்ய்ம் பீறிட்டுப்பாய சன்மார்க்கப் பிரசங்கம் நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

காலம் ஒரு விநோதமான ஜந்து.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியே தன் தந்தை உண்ணாவிரதம் இருப்பதாய்த் தெரிவித்து இருந்தார் சுரேஷ் சாலேவின் மகன்.

சுரேஷ் சாலேவோ, தனக்கு எதிராக ஈஸ்டர் விசாரணைகளை நடத்தும் தலைமைப் பொறுப்பில் இருந்து சீ ஐ டி பணிப்பாளர் ஷானி அபேசகரவை அகற்ற வேண்டுமன்றும், தான் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அறைக்கும் பதிலாய் வேறு ஒரு அறை வழங்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

ஷானி ஏதோ இவர் வீட்டு வேலையாள் போலவும் இவர் எஜமான் போலவும் இருக்கிறது இந்த நிபந்தனை. பாருங்கள். எந்தளவுக்கு மமதை பத்திரமாய் மண்டையில் இன்னும் எஞ்சி இருக்கிறது என்று.

சத்தியாக்கிரகத்தில் இருக்கும் ஒருசிலர் சுரேஷ் சாலே விடுதலையாகும் வரை சத்தியாக்கிரகம் தொடரும் என்கிறார்கள்.

வீரவன்சவோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் அல்லாமல் வேறு ஏதேனுமொரு சட்டத்தில் சாலே விசாரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டால் தமக்குப் பிரச்னை இல்லை என்கிறார்.

ஆக, வெட்டி போய்ஸ் வீரவன்ச - கம்மன்பில ப்ரைவட் லிமிட்டட் , சுரேஷ் சாலே மகன், சுரேஷ் சாலே, கணவனை சார் என்று சொல்லிக் கூப்பிடும் சுரேஷ் சாலேவின் அபூர்வ மனைவி என்று ஆளுக்கொரு கருத்தைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

சுரேஷ் சாலே இருக்கும் அறையில் தான் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்கள் மட்டுமல்ல எத்தனையோ அப்பாவிகளின் சாபத்திற்குள்ளான சுரேஷ் சாலே இன்று அறை பற்றிப் பேசுகிறார்.முள்ளங்கிக் கிழங்கோ என்னவோ வழங்கப்பட்டது பற்றிப் பேசுகிறார்.

அப்படி என்றால் என்ன செய்வது, சினமன் லைபிலோ, சங்கிரிலாவிலோ மூன்று வேளையும் சாப்பாடு ஏற்பாடு செய்து இத்தாலி கொமட் இருக்கும் அட்டாச் பாத் ரூம் கொண்ட சொகுசு அறையா வழங்க முடியும்.

நேற்று சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்பு பொலிஸ் துறைக்குப் பொறுப்பாய் இருந்த சரத் வீரசேகரவும், டிரான் அலஸும் வந்து இருந்தார்கள்.அவர்களும் சாலேவுக்கு வசதி போதவில்லை என்றார்கள்.துன்புறுத்தப்படுவதாகச் சொன்னார்கள்.

ஏதோ , விதவிதமான பாத்திரங்களில் விதவிதமாய்க் கறி சமைத்து, விதவிதமாய்க் கரண்டிகள் வைத்து , கைகழுவ சானிட்டைஸரும், துடைக்க சேவியட்டும் வைத்து மணமணக்க சாப்பாடு பரிமாறும் சிஸ்டத்தை இவர்களும் சாலேவும் , சாலேவின் முன்னோர்களும் எஜமானர்களும் சிறைக்கூடத்தில் ஏற்படுத்திவிட்டுப் போன மாதிரியும் இப்போது மட்டும் எலி ஓடும் அறை வழங்கப்பட்டு இருப்பது போலவும் இருக்கிறது இவர்களது கதைகள்.

காலம் முழுக்க தமிழ் மக்களைச் சந்தேகத்துடன் பார்த்தவர்கள்,காலம் முழுக்க முஸ்லிம்களைப் பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லி அரசியல் செய்தவர்கள்,தமது அரசியல் கொள்கைக்குத் தொடர்ச்சியாக வலுசேர்க்கும் வகையில் இரு பெரும் சிறுபான்மை இனங்களையும் ஒடுக்கி வைக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் வீரியமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றவர்கள் இன்று தமது எஜமானர்களின் ஆஸ்தான விசுவாசியாக இருந்த சுரேஷ்சாலேவிற்கு எதிராக அந்தச்சட்டம் பாய்ந்தபோது திடீர் ஜீவ காருண்ய்ம் பீறிட்டுப்பாய சன்மார்க்கப் பிரசங்கம் நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

காலம் ஒரு விநோதமான ஜந்து.
Zafar Ahamed

06/06/2026

உலகையே சோகமாக்கிய ஹஜ் கொண்டாட சென்ற 49 பேரின் ஒரு துளி நீரின்றி உயிர் பிரிந்த கதை💔

பூமிப்பந்தின் மிகக் கொடூரமான நரகமாகக் கருதப்படும் சஹாரா பாலைவனத்தின் மடியில், ஒரு சொட்டுத் தண்ணீரின்றி 49 மனித உயிர்கள் துடிதுடித்துப் பிரிந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது. அவர்கள் யார், எங்கு சென்றார்கள், எப்படி இந்த கோர மரணம் நிகழ்ந்தது?

இந்தத் துயரச் சம்பவத்தில் மடிந்துபோன 49 பேரும் நைஜர் நாட்டைச் சேர்ந்த (Nigeriens) சாதாரண குடிமக்கள். இவர்கள் மாலி (Mali) நாட்டில் உள்ள 'தல்ஹாண்டேக்' (Talhandek) என்ற நகரிலிருந்து தங்களது சொந்த நாடான நைஜருக்கு ஒரு லாரியில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

முஸ்லிம்களின் புனித விழாவான ஹஜ் பெருநாளைக் கொண்டாடுவதற்காக இவர்கள் மாலி நாட்டிற்குச் சென்றிருந்தனர். தங்களது குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் பண்டிகை காலத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு, மீண்டும் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பியபோதுதான் ஜூன் மாதத்தின் சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில் இந்த மரணப் பயணம் அமைந்தது.

மகிழ்ச்சியோடு திரும்பிய அந்தப் பயணிகளின் லாரி, துரதிர்ஷ்டவசமாக சஹாரா பாலைவனத்தின் நடுவே, நைஜர் மற்றும் அல்ஜீரியா எல்லைக்கு அருகிலுள்ள அஸாமாகா என்ற எல்லைச் சோதனைச் சாவடிக்கு மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் திடீரென பழுதடைந்து நின்றது.

ஓட்டுநர், அவரது உதவியாளர்கள் மற்றும் பயணிகள் என அனைவரும் சேர்ந்து பல நாட்களாக அந்த வாகனத்தைச் சரிசெய்யப் போராடினர். ஆனால், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. சஹாராவின் கொளுத்தும் வெயிலில், அவர்கள் வைத்திருந்த கொஞ்ச நஞ்சத் தண்ணீரும் சில நாட்களிலேயே தீர்ந்துபோனது.

உதவி கோரவோ, தப்பிக்கவோ வழியில்லாத அந்த எல்லையற்ற மணல் பரப்பில், சுற்றியும் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் அவர்களை வாட்டி வதைத்தது. குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல், தொண்டை வறண்டு, உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத் தொடங்கின.

கொளுத்தும் சூரியனிடமிருந்து தப்பிக்க அந்தப் பழுதடைந்த லாரியின் அடியிலும், அதைச் சுற்றியுள்ள மணல் பரப்பிலும் தஞ்சமடைந்த மக்கள், அங்கேயே தாகத்தால் துடிதுடித்துத் தங்களின் கடைசி மூச்சை விட்டனர்.

இந்த நரகத்திலிருந்து எப்படியாவது உதவி பெற்றுவிட வேண்டும் என்று துணிந்த இரண்டு ஆண்கள், கொதிக்கும் மணலில் தாகத்தோடு 50 கிலோமீட்டருக்கும் மேல் நடந்தே சென்றனர். அவர்கள் எப்படியோ ஒரு நீர்நிலையைக் கண்டறிந்து தாகம் தணித்து, பின்னர் அஸாமாகா நகரை அடைந்து அதிகாரிகளிடம் கதறினர்.

ஆனால், மீட்புக்குழுவினர் அந்த இடத்திற்குச் சென்றபோது அங்கே எஞ்சியிருந்தது வெறும் பிணக்குவியல் மட்டுமே. லாரியின் அடியில் அசைவற்று கிடந்த டஜன் கணக்கான உடல்களையும், சிதறிக்கிடந்த அவர்களின் ஆடைகளையும் கண்டு மீட்புக்குழுவினர் உறைந்து போயினர்.

இறுதியாக, அந்த 49 மனிதர்களின் உடல்களும் பாலைவன மணலிலேயே பிரம்மாண்டமான கூட்டுப் பிரேதக் குழிகளில் (Mass graves) கண்ணீரோடு புதைக்கப்பட்டன.

சொந்த ஊரில் தங்களைக் காணக் காத்திருந்த குடும்பத்தினரின் முகத்தைப் பார்க்கும் முன்பே, சஹாராவின் சுடுமணல் அந்த 49 பேரின் கனவுகளையும், ஆயுளையும் குடித்துவிட்டது.

பிழைப்புக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் பாலைவனங்களைக் கடக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப் பயணம், எத்தனை ஆபத்துகளும் கண்ணீரும் நிறைந்தது என்பதற்கு இந்தச் சோகம் மீண்டும் ஒரு கசப்பான சாட்சியாக மாறியுள்ளது.

゚viralシ #நிஃரியண்டேயாடின்சஹர

யாழ்ப்பாண முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியமே இந்த வெசாக் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. அதன் தலைவர் உட்பட பெரும்பான்மையான உறு...
02/06/2026

யாழ்ப்பாண முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியமே இந்த வெசாக் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. அதன் தலைவர் உட்பட பெரும்பான்மையான உறுப்பினர்கள் தமிழ் மாணவர்களே ஆவர். எனவே, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களும் தமிழ் மாணவர்களுமே.

அவர்கள் நல்லெண்ணத்துடனும் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், அந்த முயற்சி வேறு சிலரால் வேறு நோக்கங்களுக்காக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இதை தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையிலான முரண்பாடாக சித்தரித்து சிங்கள மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரம் செய்யும் இனவாத சக்திகளை நம்ப வேண்டாம்.

යාපනය කළමනාකරණ පීඨ ශිෂ්‍ය සංගමය විසින්ම මෙම වෙසක් උත්සවය සංවිධානය කර ඇත. එහි සභාපතිවරයා ඇතුළු බහුතර සාමාජිකයන් දෙමළ සිසුන් වේ. එබැවින් මෙම වැඩසටහන සංවිධානය කළේද දෙමළ සිසුන්මයි.

ඔවුන් මෙම වැඩසටහන සංවිධානය කර ඇත්තේ යහපත් චේතනාවෙන් සහ සහජීවනය ප්‍රවර්ධනය කිරීමේ අරමුණින්ය. එහෙත් එම උත්සාහය වෙනත් අරමුණු ඇති කිහිප දෙනෙකු විසින් හානි කර ඇත.

එබැවින් මෙය දෙමළ හා සිංහල සිසුන් අතර ගැටුමක් ලෙස පෙන්වා දෙමින් සිංහල ජනතාව අතර ව්‍යාජ ප්‍රචාර පතුරවන ජාතිවාදී බලවේග විශ්වාස නොකරන්න.

The Vesak event was organized by the Jaffna Faculty of Management Students' Union itself. The majority of its members, including the president, are Tamil students. Therefore, the organizers of this event were Tamil students.

The event was organized in good faith and with the intention of promoting harmony and coexistence. However, that effort has been vandalized and undermined by others for entirely different purposes.

Therefore, people should not believe the racist elements attempting to portray this as a conflict between Tamil and Sinhala students and spread false narratives among the Sinhala community.

யாழ் பொது நூலகம் எரிப்பு.----------------------------------------------------எரிந்தது ஒரு கட்டிடம் அல்ல ஒரு இனத்தின் அறி...
01/06/2026

யாழ் பொது நூலகம் எரிப்பு.
----------------------------------------------------

எரிந்தது ஒரு கட்டிடம் அல்ல ஒரு இனத்தின் அறிவுக் களஞ்சியம்.
“ஒரு மக்களின் மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் அறிவுச் செல்வங்களை திட்டமிட்டு அழிப்பதும், அந்த மக்களின் இருப்பின் அடித்தளங்களை சிதைப்பதும் இனப்படுகொலையின் ஒரு வடிவமாகும்” என்று இனப்படுகொலை (Genocide) என்ற கருத்தை உருவாக்கிய சட்டவியலாளர் ரபேல் லெம்கின் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அடிப்படையில், 1981 மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரவுகள் தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் மிக ஆழமான காயங்களில் ஒன்றை ஏற்படுத்திய நாட்களாகக் கருதப்படுகின்றன. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் அறிவுக் கோட்டையாகவும், தமிழ் பண்பாட்டு அடையாளத்தின் சின்னமாகவும் விளங்கிய யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
இது வெறும் ஒரு நூலகத்தின் அழிவாக மட்டுமல்லாமல், தமிழ் மக்களின் வரலாற்று நினைவகம், அறிவுச் செல்வம், இலக்கிய மரபு மற்றும் பண்பாட்டு அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

யாழ் பொது நூலகம் தென்னாசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அங்கு ஏறத்தாழ 97,000 நூல்கள், அரிய தமிழ் ஓலைச்சுவடிகள், நூற்றாண்டுகள் பழமையான கையெழுத்துப் பிரதிகள்,
தமிழ் இலக்கியச் செல்வங்கள், வரலாற்று ஆவணங்கள், செய்தித்தாள் காப்பகங்கள், உலகில் வேறு எங்கும் கிடைக்காத பல அரிய பதிவுகள் என இந்த நூலகம் வெறும் வாசிப்பு மையமல்ல, தமிழ் மக்களின் அறிவு, பண்பாடு, வரலாறு மற்றும் அடையாளத்தின் உயிர்ப்புமிக்க களஞ்சியமாக இருந்தது.

1977 தேர்தலுக்குப் பின்னர் தமிழர் அரசியல் உரிமைக் கோரிக்கைகள் தீவிரமடைந்திருந்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) வடக்கு மற்றும் கிழக்கில் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தது. மத்திய அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கை வேகமாகச் சிதைந்து கொண்டிருந்தது.
1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை (DDC) தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் வடக்கில் கடுமையான அரசியல் பதற்றத்தை உருவாக்கியது.
அந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தேர்தலை வெல்வதற்காக தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. முழுமையான ராணுவ, பொலிசார் முற்றுகைக்குள் யாழ்ப்பாணம் உள்ளாகியது. ஏறத்தாழ 1000 மேலதிகமாக பொலிஸார் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர். நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

UNP வேட்பாளர் தியாகராஜா மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது என அரச தரப்பால் சொல்லப்பட்டாலும்
1981 மே 31 அன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. மே31 முதல் ஜூன் 7 வரை யாழ்ப்பாணம் முழுவதும் அரச பயங்கரவாதம் ஆட்சி செய்தது. கொலைகள்,கொள்ளைகள், தீவைப்புகள், தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் என அனைத்தும் திட்டமிட்ட முறையில் இடம்பெற்றன. இந்த வன்முறைகள்:
திட்டமிடப்பட்டவை,ஒருங்கிணைக்கப்பட்டவை, உயர்மட்ட அரசியல் பாதுகாப்புடன் நடைபெற்றவை
என்பதாகும். அக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த சிறில் மேத்தியூ மற்றும் காமினி திசாநாயக்க உள்ளிட்ட உயர்மட்ட UNP அரசியல் பிரமுகர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக பல ஆவணங்களும் பின்னர் வெளிவந்த சாட்சியங்களும் குறிப்பிடுகின்றன.

மே 31இரவில்,
- தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகங்கள் தாக்கப்பட்டன.
- ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
- பூபாலசிங்கம் புத்தக நிலையம் எரிக்கப்பட்டது.
- யாழ்ப்பாண மத்திய சந்தையின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது.
- பல தமிழ் வணிக நிறுவனங்களும் வீடுகளும் தாக்கப்பட்டன.
வடக்கு முழுவதும் தகவல் பரிமாற்றம் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததால், இந்தச் செய்திகள் பல நாட்கள் வெளி உலகிற்கு சென்றடையவில்லை.

முழுமையான நீதிமன்ற விசாரணை எதுவும் இடம்பெறாததால், அன்றைய இரவு பற்றிய தகவல்கள் பெரும்பாலும் நேரடி சாட்சியங்கள், மனித உரிமை அறிக்கைகள் மற்றும் வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.
சாட்சியங்களின்படி, நள்ளிரவை அண்மித்த நேரத்தில் தாக்குதலாளர்கள் நூலகத்தை நோக்கிச் சென்றனர்.
அந்த நேரத்தில் நூலகம் மூடப்பட்டிருந்தது.
நூலகத்தின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் தீ வைக்கப்பட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன. சில நிமிடங்களில் தீ முழுக் கட்டிடத்தையும் சூழ்ந்தது. மர அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நூல்கள் தீயை வேகமாகப் பரப்பின.
அந்த இரவு யாழ்ப்பாண மக்கள் பலர் தொலைவில் நின்று தங்களுடைய நூலகம் எரிவதை கண்ணீருடன் பார்த்ததாக பின்னர் நினைவுகூர்ந்துள்ளனர்.

அந்தக் காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சினையை ஆராய்ந்த மேற்கத்திய எழுத்தாளர் நான்சி முர்ரே இவ்வாறு எழுதினார்,
“95,000 நூல்களும் பெறுமதியற்ற கையெழுத்துப் பிரதிகளும் கொண்டிருந்த யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தின் சின்னம் அழிக்கப்பட்டது. ஆனால் தேசிய பத்திரிகைகளில் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.”
அவரது கருத்துப்படி, நூலக எரிப்பு மட்டுமல்ல; அதனைச் சுற்றிய மௌனமும் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

பண்பாட்டு அழிவின் சின்னம்
பல வரலாற்றாசிரியர்கள் யாழ் நூலக எரிப்பை உலகின் முக்கியமான பண்பாட்டு அழிப்பு சம்பவங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.
ஒரு மக்களின் மொழி மீண்டும் கற்பிக்கப்படலாம். ஆனால்:
எரிந்த ஓலைச்சுவடிகள்,
அழிந்த கையெழுத்துப் பிரதிகள்,
இழந்த வரலாற்றுச் சான்றுகள்
மீண்டும் உருவாக்க முடியாது.
அதுவே தமிழ் மக்களின் மனதில் ரணமாக இன்னமும் இயல்கிறது.

யாழ் நூலக எரிப்பு, தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உறவில் ஆழமான உளவியல் முறிவை ஏற்படுத்தியது.ஏற்கனவே,
1956 தனிச் சிங்களச் சட்டம்,
1958 இன வன்முறைகள்,
பல்கலைக்கழக தரப்படுத்தல் கொள்கை,
1974 தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு உயிரிழப்புகள்
ஆகிய காரணங்களால் விரக்தியடைந்திருந்த தமிழ் சமூகத்தில், இந்தச் சம்பவம் மேலும் நம்பிக்கையிழப்பை உருவாக்கியது.
பல ஆய்வாளர்களின் கருத்துப்படி, தமிழ் இளைஞர்களிடையே அரசியல் தீர்வின் மீதான நம்பிக்கை குறைவதற்கும் ஆயுதப் போராட்ட ஆதரவு அதிகரிப்பதற்கும் இந்தச் சம்பவம் காரணமான முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது.

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாள் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் மட்டுமல்ல. இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். இது தமிழர்களுக்கான எச்சரிக்கை மிகுந்த நாள். இதனை ஏன் நினைவுகூர வேண்டும்?
ஒரு சமூகம் தனது துயரமான வரலாற்றை நினைவுகூர்வது பழிவாங்குவதற்காக அல்ல.
மாறாக,உண்மையை பாதுகாக்க,
தவறுகளை மீண்டும் நிகழ விடாமல் தடுக்க, எதிர்கால தலைமுறைகளுக்கு பாடம் கற்பிக்க. யாழ் நூலக எரிப்பு ஒரு கட்டிட அழிவு சம்பவமாக அல்லாமல், தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவுசார் வரலாற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக நினைவுகூரப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நியமித்த விசாரணைக் குழு, சில பொலிஸ் அதிகாரிகள் நூலக அழிவில் தொடர்புடையதாக முடிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது.
எனினும், முழுமையான குற்றவியல் விசாரணை நடைபெறவில்லை.
யாரும் நீதிமன்றத்தில் தண்டிக்கப்படவில்லை.
இறுதி நீதித்தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை அங்கமாக நீதியை நோக்கி காத்திருக்கிறது யாழ். பொது நூலகம்.யாழ் பொது நூலகம் எரிப்பு.
----------------------------------------------------

எரிந்தது ஒரு கட்டிடம் அல்ல ஒரு இனத்தின் அறிவுக் களஞ்சியம்.
“ஒரு மக்களின் மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் அறிவுச் செல்வங்களை திட்டமிட்டு அழிப்பதும், அந்த மக்களின் இருப்பின் அடித்தளங்களை சிதைப்பதும் இனப்படுகொலையின் ஒரு வடிவமாகும்” என்று இனப்படுகொலை (Genocide) என்ற கருத்தை உருவாக்கிய சட்டவியலாளர் ரபேல் லெம்கின் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அடிப்படையில், 1981 மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரவுகள் தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் மிக ஆழமான காயங்களில் ஒன்றை ஏற்படுத்திய நாட்களாகக் கருதப்படுகின்றன. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் அறிவுக் கோட்டையாகவும், தமிழ் பண்பாட்டு அடையாளத்தின் சின்னமாகவும் விளங்கிய யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
இது வெறும் ஒரு நூலகத்தின் அழிவாக மட்டுமல்லாமல், தமிழ் மக்களின் வரலாற்று நினைவகம், அறிவுச் செல்வம், இலக்கிய மரபு மற்றும் பண்பாட்டு அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

யாழ் பொது நூலகம் தென்னாசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அங்கு ஏறத்தாழ 97,000 நூல்கள், அரிய தமிழ் ஓலைச்சுவடிகள், நூற்றாண்டுகள் பழமையான கையெழுத்துப் பிரதிகள்,
தமிழ் இலக்கியச் செல்வங்கள், வரலாற்று ஆவணங்கள், செய்தித்தாள் காப்பகங்கள், உலகில் வேறு எங்கும் கிடைக்காத பல அரிய பதிவுகள் என இந்த நூலகம் வெறும் வாசிப்பு மையமல்ல, தமிழ் மக்களின் அறிவு, பண்பாடு, வரலாறு மற்றும் அடையாளத்தின் உயிர்ப்புமிக்க களஞ்சியமாக இருந்தது.

1977 தேர்தலுக்குப் பின்னர் தமிழர் அரசியல் உரிமைக் கோரிக்கைகள் தீவிரமடைந்திருந்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) வடக்கு மற்றும் கிழக்கில் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தது. மத்திய அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கை வேகமாகச் சிதைந்து கொண்டிருந்தது.
1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை (DDC) தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் வடக்கில் கடுமையான அரசியல் பதற்றத்தை உருவாக்கியது.
அந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தேர்தலை வெல்வதற்காக தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. முழுமையான ராணுவ, பொலிசார் முற்றுகைக்குள் யாழ்ப்பாணம் உள்ளாகியது. ஏறத்தாழ 1000 மேலதிகமாக பொலிஸார் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர். நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

UNP வேட்பாளர் தியாகராஜா மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது என அரச தரப்பால் சொல்லப்பட்டாலும்
1981 மே 31 அன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. மே31 முதல் ஜூன் 7 வரை யாழ்ப்பாணம் முழுவதும் அரச பயங்கரவாதம் ஆட்சி செய்தது. கொலைகள்,கொள்ளைகள், தீவைப்புகள், தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் என அனைத்தும் திட்டமிட்ட முறையில் இடம்பெற்றன. இந்த வன்முறைகள்:
திட்டமிடப்பட்டவை,ஒருங்கிணைக்கப்பட்டவை, உயர்மட்ட அரசியல் பாதுகாப்புடன் நடைபெற்றவை
என்பதாகும். அக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த சிறில் மேத்தியூ மற்றும் காமினி திசாநாயக்க உள்ளிட்ட உயர்மட்ட UNP அரசியல் பிரமுகர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக பல ஆவணங்களும் பின்னர் வெளிவந்த சாட்சியங்களும் குறிப்பிடுகின்றன.

மே 31இரவில்,
- தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகங்கள் தாக்கப்பட்டன.
- ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
- பூபாலசிங்கம் புத்தக நிலையம் எரிக்கப்பட்டது.
- யாழ்ப்பாண மத்திய சந்தையின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது.
- பல தமிழ் வணிக நிறுவனங்களும் வீடுகளும் தாக்கப்பட்டன.
வடக்கு முழுவதும் தகவல் பரிமாற்றம் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததால், இந்தச் செய்திகள் பல நாட்கள் வெளி உலகிற்கு சென்றடையவில்லை.

முழுமையான நீதிமன்ற விசாரணை எதுவும் இடம்பெறாததால், அன்றைய இரவு பற்றிய தகவல்கள் பெரும்பாலும் நேரடி சாட்சியங்கள், மனித உரிமை அறிக்கைகள் மற்றும் வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.
சாட்சியங்களின்படி, நள்ளிரவை அண்மித்த நேரத்தில் தாக்குதலாளர்கள் நூலகத்தை நோக்கிச் சென்றனர்.
அந்த நேரத்தில் நூலகம் மூடப்பட்டிருந்தது.
நூலகத்தின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் தீ வைக்கப்பட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன. சில நிமிடங்களில் தீ முழுக் கட்டிடத்தையும் சூழ்ந்தது. மர அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நூல்கள் தீயை வேகமாகப் பரப்பின.
அந்த இரவு யாழ்ப்பாண மக்கள் பலர் தொலைவில் நின்று தங்களுடைய நூலகம் எரிவதை கண்ணீருடன் பார்த்ததாக பின்னர் நினைவுகூர்ந்துள்ளனர்.

அந்தக் காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சினையை ஆராய்ந்த மேற்கத்திய எழுத்தாளர் நான்சி முர்ரே இவ்வாறு எழுதினார்,
“95,000 நூல்களும் பெறுமதியற்ற கையெழுத்துப் பிரதிகளும் கொண்டிருந்த யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தின் சின்னம் அழிக்கப்பட்டது. ஆனால் தேசிய பத்திரிகைகளில் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.”
அவரது கருத்துப்படி, நூலக எரிப்பு மட்டுமல்ல; அதனைச் சுற்றிய மௌனமும் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

பண்பாட்டு அழிவின் சின்னம்
பல வரலாற்றாசிரியர்கள் யாழ் நூலக எரிப்பை உலகின் முக்கியமான பண்பாட்டு அழிப்பு சம்பவங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.
ஒரு மக்களின் மொழி மீண்டும் கற்பிக்கப்படலாம். ஆனால்:
எரிந்த ஓலைச்சுவடிகள்,
அழிந்த கையெழுத்துப் பிரதிகள்,
இழந்த வரலாற்றுச் சான்றுகள்
மீண்டும் உருவாக்க முடியாது.
அதுவே தமிழ் மக்களின் மனதில் ரணமாக இன்னமும் இயல்கிறது.

யாழ் நூலக எரிப்பு, தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உறவில் ஆழமான உளவியல் முறிவை ஏற்படுத்தியது.ஏற்கனவே,
1956 தனிச் சிங்களச் சட்டம்,
1958 இன வன்முறைகள்,
பல்கலைக்கழக தரப்படுத்தல் கொள்கை,
1974 தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு உயிரிழப்புகள்
ஆகிய காரணங்களால் விரக்தியடைந்திருந்த தமிழ் சமூகத்தில், இந்தச் சம்பவம் மேலும் நம்பிக்கையிழப்பை உருவாக்கியது.
பல ஆய்வாளர்களின் கருத்துப்படி, தமிழ் இளைஞர்களிடையே அரசியல் தீர்வின் மீதான நம்பிக்கை குறைவதற்கும் ஆயுதப் போராட்ட ஆதரவு அதிகரிப்பதற்கும் இந்தச் சம்பவம் காரணமான முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது.

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாள் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் மட்டுமல்ல. இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். இது தமிழர்களுக்கான எச்சரிக்கை மிகுந்த நாள். இதனை ஏன் நினைவுகூர வேண்டும்?
ஒரு சமூகம் தனது துயரமான வரலாற்றை நினைவுகூர்வது பழிவாங்குவதற்காக அல்ல.
மாறாக,உண்மையை பாதுகாக்க,
தவறுகளை மீண்டும் நிகழ விடாமல் தடுக்க, எதிர்கால தலைமுறைகளுக்கு பாடம் கற்பிக்க. யாழ் நூலக எரிப்பு ஒரு கட்டிட அழிவு சம்பவமாக அல்லாமல், தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவுசார் வரலாற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக நினைவுகூரப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நியமித்த விசாரணைக் குழு, சில பொலிஸ் அதிகாரிகள் நூலக அழிவில் தொடர்புடையதாக முடிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது.
எனினும், முழுமையான குற்றவியல் விசாரணை நடைபெறவில்லை.
யாரும் நீதிமன்றத்தில் தண்டிக்கப்படவில்லை.
இறுதி நீதித்தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை அங்கமாக நீதியை நோக்கி காத்திருக்கிறது யாழ். பொது நூலகம்.
#ஈழம்

பதிவிடப்படும் நாள் மே மாதம் திங்கட்கிழமை 27ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு உயிர் காக்கும் அவசர உதவி வேண்டுகோள்!– ஒவ்வொரு இதயத்து...
27/05/2026

பதிவிடப்படும் நாள் மே மாதம் திங்கட்கிழமை 27ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு

உயிர் காக்கும் அவசர உதவி வேண்டுகோள்!–
ஒவ்வொரு இதயத்துடிப்பும் முக்கியமானது அன்பானவர்களே,

சமூக நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களே,
யாசிம் பாவா அப்துல் ரசாக் (முன்னாள் Sara Gold ஹவுஸ் உரிமையாளர்) அவர்கள் தற்போது கடுமையான மாரடைப்பு மற்றும் இதய அடைப்பு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது இதயத் துடிப்பு 20% ஆகக் குறைந்துள்ளதுடன், 7 பிரதான அடைப்புகள் (Blocks) கண்டறியப்பட்டுள்ளன.

அவருக்கு அவசரமாக ஓபன் ஹார்ட் சர்ஜரி (Open Heart Surgery) செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கான மொத்த மருத்துவச் செலவு 22 லட்சம் இலங்கை ரூபாய் (LKR 2.2 Million) ஆகும். வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதிக்கு முன்னதாக இந்தச் சத்திரசிகிச்சையைச் செய்து முடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் காலக்கெடு விதித்துள்ளனர்.

எங்கள் குடும்பத்தினரால் இயன்ற அளவு முயன்றும் இந்த மாபெரும் தொகையைத் திரட்ட முடியவில்லை. கால அவகாசம் மிகவும் குறைவாக உள்ளதால், உங்களின் சிறு உதவியும் அவரது உயிரைக் காக்கப் பெரிதும் உதவும்.

தயவுசெய்து உங்களால் இயன்ற நிதியுதவியைச் செய்து ஒரு குடும்பத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள். உங்களால் உதவ முடியாவிட்டாலும், இந்தப் பதிவை மற்றவர்களுடன் பகிர்ந்து உதவுங்கள்.

"அல்லாஹ்வின் அடியாரின் தேவையை ஒருவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் வரை, அல்லாஹ் அவனுடைய தேவையை நிறைவேற்றிக் கொண்டிருப்பான்." — ஸஹீஹ் முஸ்லிம் (2699)

வங்கி விபரங்கள் (இலங்கை):
வங்கி பெயர்: HNB (Hatton National Bank)
கணக்கு பெயர்: ARM. Dilshan
கணக்கு எண்: 044020110926
கிளை: போலன்னருவா

தொடர்புகளுக்கு (மகன்):
பெயர்: ARM. DILSHAN
அலைபேசி / WhatsApp: +94751637428
(பணம் அனுப்பிய பின் அதற்கான ரசீதை (Screenshot) மேற்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும். ஜசாகுல்லாஹ் ஹைரன்!)

பலஸ்தீன் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை (27) புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில், இஸ்ரேலிய விமானங்கள் இன்று (26) ந...
26/05/2026

பலஸ்தீன் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை (27) புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில், இஸ்ரேலிய விமானங்கள் இன்று (26) நடத்திய அகோரத் தாக்குதல்களில் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை படங்களில் காண்கிறீர்கள்.பலஸ்தீன் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை (27) புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில், இஸ்ரேலிய விமானங்கள் இன்று (26) நடத்திய அகோரத் தாக்குதல்களில் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை படங்களில் காண்கிறீர்கள்.

̇ne

🌙✨ Eid Mubarak ✨🌙May this blessed Eid al-Adha bring happiness to your heart, peace to your home, and success to your lif...
26/05/2026

🌙✨ Eid Mubarak ✨🌙
May this blessed Eid al-Adha bring happiness to your heart, peace to your home, and success to your life.
May Allah accept your prayers and sacrifices and shower you with endless mercy and blessings.
🤍

#ஈழம் ̇ne

///நாம் ஏன் விடுதலை புலிகளை ஆதரிக்க வேண்டும் /// ஓட்டுனர் பக்க கதவின் கண்ணாடியை ஒருவன் உடைத்தான். உள்ளே பார்த்தவன் தமிழ்...
21/05/2026

///நாம் ஏன் விடுதலை புலிகளை ஆதரிக்க வேண்டும் /// ஓட்டுனர் பக்க கதவின் கண்ணாடியை ஒருவன் உடைத்தான். உள்ளே பார்த்தவன் தமிழ்க் குடும்பம் என்பதை உறுதி செய்ததும் நான்கைந்து பேர் காரை சூழ்ந்து போத்தல் பெட்ரோலை காரில் ஊற்ற ஆரம்பித்தார்கள்.
கார் பற்ற வைக்கப்பட்டது. \\

: Neethujan Bala

வெளியே ஏதோ சத்தம் கேட்டுத்தான் நான் கண் விழித்ததே. அறைக்கதவைத் திறந்து வெளியே - கீழே ஓடிவந்தேன். லொட்ஜின் மனேஜர் வாசலின் இரும்புக் கதவைப் பூட்டிவிட்டு சாவித் துவாரத்தின் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரது தோளில் கைவைத்துத் திருப்பினேன்.

“என்ன சத்தம் ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டேன்.

“பொரளை பிரச்சனைதான். வண்டி வண்டியாக ஆட்கள் வந்து தமிழர்களின் கடைகளை தேடித் தேடிக் கொழுத்துகிறார்கள்” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன.. என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். நான் தங்கியிருந்த அந்த விடுதியிலுமே ஆறேழு தமிழர்கள் இருக்கிறார்கள். “அப்போ இங்கே இருக்கும் நவம், லக்ஸ்மன் எல்லாரும்?”

“அவர்களை விடியற் காலையிலேயே இடத்தைக் காலி பண்ணச் சொல்லிவிட்டேன். வெள்ளவத்தை பக்கமாக ஓடிப்போய் எங்காவது பாதுகாப்பாக இடம் தேடித் தங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டேன்.”

ஆசுவாசமாக இருந்தது.

“இப்போது லொட்ஜில் நாங்கள் சிங்களவர்கள் மட்டும்தான் நிற்கிறோம். இனிப் பிரச்சனையில்லை. யாரும் வரமாட்டார்கள். நீங்கள் உங்கள் அறைக்கு சென்று பூட்டிக் கொள்ளுங்கள். வெளியே ஒன்றும் போகவேண்டாம். எல்லாம் சரிவந்ததும் சாப்பாட்டுக்கு ஏதும் வழி பார்க்கிறேன்”

நான் அறைக்கு வந்து கதவை நன்கு தாளிட்டுக் கொண்டேன். கட்டிலில் வந்து அமர்ந்தேன். படபடப்பு போகவில்லை. அருகில் இருந்த மேசையை எடுத்து கதவுக்குக் குறுக்கே வைத்தேன். மேசையை அசைத்துப் பார்த்தேன். பாரம் குறைவாக இருந்தது. இரவு வீட்டுக்குப் போவதற்காக சூட்கேசை அடுக்கி வைத்திருந்திருந்தேன். அதையும் எடுத்து மேசைக்கு மேல் பாரமாக வைத்தேன். மறுபடி கட்டிலில் வந்து அமர்ந்தேன்.

வெளியே ஆரவாரமான ஒலி கேட்டுக் கொண்டே பொரளை மயானத்தில் ஆரம்பித்த பிரச்சனை இந்தளவுக்கு வரும் என்று நான் நினைக்கவில்லை. நம் ஜனாதிபதி அதை சுமுகமாக தீர்த்து விட்டதாகவே நான் எண்ணியிருந்தேன்.

ரப்பர் எரியும் நாற்றமும் புகையும் ஜன்னலின் இடுக்குகளின் வழியே வந்தபடி இருந்தது. தமிழில் கதறும் சத்தங்கள் வலுத்தன. எனக்குத் தமிழ் தெரியாது. ஜன்னலை திறந்து பார்க்கலாமா? பயமாக இருந்தது. நான் இருந்த லொட்ஜ் காலி வீதியோடே இருந்த ஒரு சிறிய லொட்ஜ்தான். நல்ல வேளை, லொட்ஜின் பெயர் அமாலி. சிங்களப் பெயர். இல்லாவிட்டால் ஒவ்வொரு கதவாக உடைத்து இருப்பது யார் என்று பார்த்துத்தான் விட்டிருப்பார்கள்.

ஜன்னலைத் திறக்கும் துணிச்சல் வரவில்லை. ஜன்னலுக்கு மேலே இருந்த கிறில் துவாரம் வழியாக எட்டிப் பார்த்தேன். வீதியே கரும் புகையால் மூடப்பட்டு இருந்தது. உற்றுப் பார்த்தால் வீதியில் பிய்ந்து போன உடல் துண்டுகள் தெரிந்தன. தமிழ் பேசிய உடல்கள். வீதியின் ஓரமாக இருந்த கடைகளில் நான்கைந்து கடைகள் பூட்டியது பூட்டியபடியே இருக்க, மீதிக் கடைகள் உடைக்கப் பட்டிருந்தன. தமிழ்க் கடைகள்.

ஒரு குழுவினர் வீதியில் போகும் வாகனங்களை மறித்து உள்ளே விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சிங்களவர் என்றால் போகவேண்டும்.தமிழர் என்றால் சாகவேண்டும். நேரம் போகப் போக, வீடுகளில் இருந்த கத்தி பொல்லு ஆயுதங்களுடன் இன்னும் இன்னும் ஆட்கள் வீதிகளுக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

ஓரத்தில் ஓர் இராணுவ வாகனம் வருவது தெரிந்தது. அப்பாடி... ஆசுவாசமாக இருந்தது. இனி நிம்மதி. விரைவில் கலவரம் செய்வோரை இராணுவத்தினர் அடக்கி விடுவார்கள். சற்று நேரத்தில் அமைதியாகி விடும். உடனடியாக பெட்டியைச் சுருட்டிக்கொண்டு ஊருக்கு ஓடிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

இராணுவ வாகனம் நின்றதும் அதிலிருந்து ஓர் வீரன் இறங்கினான். வேகமாக ஓடிப் போய், கடைகளை அடித்தும் வாகனங்களை மறித்தும் கொண்டிருந்த ஆட்களிடம் ஏதோ பேசினான். உடனே நான்கைந்து பேர் இராணுவ வாகனத்தை நோக்கி ஓடி வந்தார்கள். கமாண்டர் அவர்களுடன் பேசப் போகிறார் என்று எண்ணினேன்.

வாகனத்திலிருந்து அனைவருக்கும் பெரிய பெரிய போத்தல்கள் வழங்கப் பட்டன. அவர்கள் அதை வாங்கிக்கொண்டு மீண்டும் தத்தமது வேலைகளுக்கு விரைந்தார்கள். என்ன ஏதேனும் பானமா?

பெட்ரோல் என்பது அதை ஒரு தமிழ்க் கிழவனின் மேல் ஊற்றிக் கொழுத்தியபோதுதான் எனக்குப் புரிந்தது.

வீதியில் வந்துகொண்டிருந்த வெள்ளைக் கார் ஒன்றை மறித்தார்கள். உள்ளே ஒரு தமிழ்க் குடும்பம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.அப்பா வாகனத்தை ஓட்ட, உள்ளே பக்கத்தில் அம்மா, மடியில் ஓர் குழந்தை - நான்கைந்து வயது இருக்கலாம். பின் சீட்டை பார்த்தேன். ஒரு எட்டு - பத்து வயதுப் பெண் குழந்தையும அவளைச் சுற்றி நிறையச் சாமான்களும். வீட்டில் இருந்த பொருட்களை அவசர அவசரமாகக் காரில் எடுத்துப் போட்டுக் கொண்டு வெள்ளவத்தைப் பக்கமாக தப்பி ஓடிக் கொண்டிருந்த தமிழ்க் குடும்பம். அநியாயமாக இவர்கள் கையில் மாட்டுப் பட்டு விட்டதே என்று எண்ணினேன்.

ஓட்டுனர் பக்க கதவின் கண்ணாடியை ஒருவன் உடைத்தான். உள்ளே பார்த்தவன் தமிழ்க் குடும்பம் என்பதை உறுதி செய்ததும் நான்கைந்து பேர் காரை சூழ்ந்து போத்தல் பெட்ரோலை காரில் ஊற்ற ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவன் - திடீரென்று பின்னால் பார்த்தவன், வலுக் கட்டாயமாக காரின் பின் கதவை திறந்து பின்னால் பொருட்களுக்குள் பயத்துடன் குறுகி இருந்த பெண் குழந்தையை இழுத்து வெளியே போட்டான். மற்றவர்களுக்கு சைகை காட்ட, கார் பற்ற வைக்கப் பட்டது.

அவன் தன கால்களுக்கிடையில் பெண்குழந்தையை அழுத்திப் பிடித்திருக்க, அவன் கைகள் அவளது மார்பை வருட ஆரம்பிக்க, அவள் முன்னாலே குடும்பம் கருக ஆரம்பித்தது. எனக்கு அதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. கத்தவேண்டும் போலிருந்தது. என் தொடையில் ஓங்கிக் குத்தினேன். பற்களை இறுகக் கடித்துக்கொண்டேன்.

காருக்குள் தகப்பன் துடித்து நெளிவது தெரிந்தது. கதவை அவன் திறக்க முயல, இவர்கள் காலால் கதவைத் தள்ளிப் பிடித்தார்கள். தீயின் வெம்மை தந்த வேகமோ என்னவோ எரிந்தபடியே தகப்பன் கதவை உதறிக்கொண்டு திடீரென்று வெளியே பாய்ந்தான். ஒரு உயிருள்ள உடல் எரிந்தபடி நகர்வதைப் பார்த்ததுண்டா? அதைவிடப் பயங்கரமான காட்சி வேறு எதுவுமே இருக்கமுடியாது. வீதியில் தடக்கி விழுந்த அந்தத் தீப் பொம்மை கையை ஊன்றி எழுந்து, பெண் குழந்தையை நெருங்கியத்து. குழந்தையை இறுகிப் பிடித்து வைத்த்திருந்தவன் வெக்கை தாங்காமல் விலக, அந்தத் தகப்பன் குழந்தையைக் கட்டி இழுத்துக்கொண்டு மறுபடி காருக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டான். பெண்குழந்தையும் எரிய ஆரம்பித்தாள்.

அதற்குமேல் பார்க்க முடியவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு கட்டிலில் படுத்துக் கொண்டேன். மனதுக்கு நிம்மதியாக இருந்தது. அழத் தொடங்கினேன்.
..

1983 - கறுப்பு ஜூலை

#ஈழம்

Address

Polonnaruwa

Telephone

+94767646612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Help to Smile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Help to Smile:

Share