10/11/2025
*பொது அடக்கஸ்தலத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டமை*
இன்று (10.11.2025) திருகோணமலை நிலாவெளி கோபாலபுரத்தில் அமைந்துள்ள மும்மத மக்களும் பொதுவாக பயன்படுத்தி வரும் பொது அடக்கஸ்தலத்திற்கு (Cemetery) மின்சாரம் வழங்கும் பணிச் செயல் எங்கள் கோபாலபுரம் நிலாவெளி ஜனாஸா சங்கத்தின் முன்னெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இது எங்கள் சமூகத்தின் நலனுக்கான ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.இந்த புனிதமான பணியை எளிதாக நிறைவேற்ற உதவியவர்களான, *கெளரவ நிமலஹாசன்*
(உருப்பினர் – குச்சவெளி பிரதேச சபை), *வலீத் ஹாஜியார்*
(தலைவர் – திருகோணமலை மாவட்ட ஜனாஸா சங்கம்), *சஜித்*
(நிலாவெளி மின்சாரம் திணைக்கள மேலதிகாரி) மற்றும்Sun Star Nilaveli முகாமையாளர் வசீம், *பெளமி* நானா(CEB-Nilaveli)
மேலும் தன்னார்வத் துணையுடன் உழைத்த
கோபாலபுரம் இளைஞர்கள்,
மஹல்லா வாசிகள்,
மற்றும் அனைத்து சமூக சகோதரர்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
எங்கள் கோபாலபுரம் சமூகத்தின் நலனுக்காக
இது போன்ற மேலும் பயனுள்ள பணிகளில்
நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னேறுவோம்.
இன்ஷா அல்லாஹ்.