15/02/2026
MCF அமைப்பினால் மாவிலாறு அல்லைத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சரிடம் அறிக்கை கையளிப்பு!
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரினால் மூதூர் பிரதேசம் பல்வேறு வகையிலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
இதனையடுத்து மாவிலாறு தொடக்கம் மகாவலி கங்கை வரை சென்றடையும் நீர் வடிகாலமைப்புக்களை திட்டமிட்டு சீர்படுத்தும் தூர நோக்கில் மூதூர் சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்தோரோடு இணைந்து MCF அமைப்பு முன்னெடுத்து வரும் திட்டத்தின் அறிமுக அறிக்கையொன்று விவசாய நீர்ப்பாசனத்துறை கௌரவ அமைச்சர் K.T.லால் காந்த அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
சேதமடைந்த மாவிலாறு மகாவலி நதி வெள்ளத் தடுப்பு அணை மற்றும் அல்லைத் திட்டத்தின் நீர்ப்பாசன முறையை மீண்டும் கட்டி எழுப்பும் திட்டம் கடந்த (13.02.2026) அன்று கௌரவ அமைச்சரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின் போதே கௌரவ அமைச்சரிடம் குறித்த அறிக்கை MCF மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டு எதிர்காலத்தில் கௌரவ அமைச்சரை சந்தித்து இதன் முழுமையான திட்ட முன்மொழிவை சந்திப்பதற்கும் அனுமதி பெறப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறானதொரு வரலாற்று சிறப்பு மிக்க வேலைத்திட்டத்தினை மூதூர் சமூகம் சார்பாக MCF அமைப்பு வரவேற்பதோடு, எதிர்காலத்தில் இதற்கு தேவைப்படும் போது ஒத்துழைப்புக்களையும் MCF அமைப்பு வழங்க ஆர்வமாக உள்ளது.