06/07/2022
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை."
கல்வி என்னும் அழியாச் செல்வத்தைப் பெற இடர்ப்படும் மாணவர்களை எமது ஸ்ரீ சாய் அறக்கட்டளை இனம்கண்டு கற்றலுக்கான உதவி வழங்கி "மாணவர்களின் வளமான வாழ்வுக்கு" வழிகாட்டி நிற்கின்றது. இக்கற்றல் உதவி கிளி/பிரமந்தனாறு ம.வி இல் க.பொ.த சா/த கற்று அயல் பாடசாலையில் உயர்தரம் கற்கும் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வளரும் மாணவனுக்கு வழங்கப்பட்டது. இக்கற்றல் கொடுப்பனவு அவர்களின் உயர்தரம் வரை தொடரும். இவ்வுதவியை வழங்கிவரும் நன்கொடையாளர் திருஞானசம்பந்தர் நீதன் Neethan Thiru ( உரிமையாளர் - Sri Shai Family Supper Mart, Puttur ) அவர்களிற்கு எமது அறக்கட்டளை சார்பாக நன்றிகள் உரித்தாகட்டும்.